Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாகேஷ்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
நாகேஷ்!
தொகைசுவை மொத்தம் ஆறா?
இலையென்பேன்; ஆமாம் நாவில்
சுகம்தரும் சுவைக ளோடு
சித்தத்தை இனிக்கச் செய்யும்
நகைச்சுவை சேர்த்து ஏழு!
அச்சுவை இன்றேல் யாவும்
பகைசுவை ஆகும்; அஃதைப்
படைத்தவன் பெயரே நாகேஷ்!
நடிப்பென்ற சொல்லுக் கெந்த
நாளுமே ஒருவன் தான்!ஆம்
அடுத்தெவன் உள்ளா னென்று
அவனியே ஆர்ப்ப ரிக்க
எடுத்ததோர் முடிவு தப்பு!
என்திறம் பார்ப்பீர் என்று
துடிப்புடன் எழுந்து வந்த
தூயவன் பெயரே நாகேஷ்!
தன்முகம் அழகில்! என்று
தனைத்தானே வெறுத்த வன்தான்!
மண்முகம் படைத்த வேதன்
மாண்புறத் தனக்குள் வைத்த
பன்முகம் அறிந்த பின்னர்
பழந்துயர் பொசுக்கிப் போட்டு
பொன்முகம் காட்டி நின்றான்
பெரும்புகழ் கூட்டி நின்றான்!
சிரிப்பெனும் செல்வம் தந்தான்
சிந்திக்கும் திறனும் தந்தான்!
இறப்பென்ற சொல்லுக் குள்ளே
இறுதியில் வீழ்ந்தால் கூட
சரித்திர மாக என்றும்
சாகாமல் வாழு கின்ற
பெரும்பெற்றி மானி டர்க்கே
பெரியவன் இறைவன் தந்தான்!
பிறப்புக்கு அர்த்தம் உண்டு!
புரிந்தவர் வாழ்வ துண்டு!
இறப்புக்கும் பெருமை உண்டு!
சாட்சியம் பலபேர் உண்டு!
மரத்திற்கும் கோடை யோடு
வசந்தத்தை வைத்த தேவன்
தரப்புக்கோர் வரத்தை வாழ்வில்
மனிதர்க்கும் தருவ துண்டு!
அகத்திலே துணிச்சல் வைத்து
அச்சத்தை தூரம் வைத்தால்
வகுத்திடும் பாதை யாவும்
வளமான வாழ்வை நல்கும்!
தகுந்ததோர் எடுத்துக் காட்டு
தாரணி திசைகள் எட்டும்
திகைப்புறச் செய்து நின்ற
திண்ணியன் நாகேஷ் என்பேன்!
தன்விதி எண்ணி யெண்ணி
தனக்குளே குமைந்தி ருக்கும்
மண்வழி வாழும் மாந்தர்
மனத்துயர் மறக்க வேண்டி
நன்வழி தேர்ந்தெ டுத்தான்!
நானிலச் சிரிப்பில் என்றும்
தன்விழி சிந்தும் நீரை
தான்துடைத் திடம றந்தான்!
பாத்திரம் எதுவா னாலும்
பொலிவினைக் கூட்டு கின்ற
சூத்திரம் அறிந்தோன்; ஆனால்
சூழ்ச்சிகள் அறியோன்; என்றும்
நாத்திறம் தேவை யில்லை
நடிப்பினை நாட்டு தற்கு!
நேத்திரம் அசைந்தால் போதும்
நவரசம் அதிலே மோதும்!
அன்னவன் மறைந்தா னேனும்
அவனியைத் துறந்தா னேனும்
விண்ணவன் புக்கா னேனும்
வியத்தகு கலைஞன் எங்கள்
கண்ணகம் வாழு கின்றான்!
கனித்தமிழ் நாட்டோர் தம்மின்
புன்னகை யில்வாழ் கின்றான்
பொய்யிலை உண்மை ஆமாம்!
திரைகடல் உள்ள மட்டும்
தீநிலம் உள்ள மட்டும்
வரையிலா வானம் இங்கு
வாழுமோர் காலம் மட்டும்
பிறைநிலா தேய்ந்து மீண்டும்
பிறக்காமல் போகு மட்டும்
"திரைகடல்" வேந்தன் எங்கள்
தென்னவன் நாகேஷ் வாழ்வான்!
-------------ரௌத்திரன்
இலையென்பேன்; ஆமாம் நாவில்
சுகம்தரும் சுவைக ளோடு
சித்தத்தை இனிக்கச் செய்யும்
நகைச்சுவை சேர்த்து ஏழு!
அச்சுவை இன்றேல் யாவும்
பகைசுவை ஆகும்; அஃதைப்
படைத்தவன் பெயரே நாகேஷ்!
நடிப்பென்ற சொல்லுக் கெந்த
நாளுமே ஒருவன் தான்!ஆம்
அடுத்தெவன் உள்ளா னென்று
அவனியே ஆர்ப்ப ரிக்க
எடுத்ததோர் முடிவு தப்பு!
என்திறம் பார்ப்பீர் என்று
துடிப்புடன் எழுந்து வந்த
தூயவன் பெயரே நாகேஷ்!
தன்முகம் அழகில்! என்று
தனைத்தானே வெறுத்த வன்தான்!
மண்முகம் படைத்த வேதன்
மாண்புறத் தனக்குள் வைத்த
பன்முகம் அறிந்த பின்னர்
பழந்துயர் பொசுக்கிப் போட்டு
பொன்முகம் காட்டி நின்றான்
பெரும்புகழ் கூட்டி நின்றான்!
சிரிப்பெனும் செல்வம் தந்தான்
சிந்திக்கும் திறனும் தந்தான்!
இறப்பென்ற சொல்லுக் குள்ளே
இறுதியில் வீழ்ந்தால் கூட
சரித்திர மாக என்றும்
சாகாமல் வாழு கின்ற
பெரும்பெற்றி மானி டர்க்கே
பெரியவன் இறைவன் தந்தான்!
பிறப்புக்கு அர்த்தம் உண்டு!
புரிந்தவர் வாழ்வ துண்டு!
இறப்புக்கும் பெருமை உண்டு!
சாட்சியம் பலபேர் உண்டு!
மரத்திற்கும் கோடை யோடு
வசந்தத்தை வைத்த தேவன்
தரப்புக்கோர் வரத்தை வாழ்வில்
மனிதர்க்கும் தருவ துண்டு!
அகத்திலே துணிச்சல் வைத்து
அச்சத்தை தூரம் வைத்தால்
வகுத்திடும் பாதை யாவும்
வளமான வாழ்வை நல்கும்!
தகுந்ததோர் எடுத்துக் காட்டு
தாரணி திசைகள் எட்டும்
திகைப்புறச் செய்து நின்ற
திண்ணியன் நாகேஷ் என்பேன்!
தன்விதி எண்ணி யெண்ணி
தனக்குளே குமைந்தி ருக்கும்
மண்வழி வாழும் மாந்தர்
மனத்துயர் மறக்க வேண்டி
நன்வழி தேர்ந்தெ டுத்தான்!
நானிலச் சிரிப்பில் என்றும்
தன்விழி சிந்தும் நீரை
தான்துடைத் திடம றந்தான்!
பாத்திரம் எதுவா னாலும்
பொலிவினைக் கூட்டு கின்ற
சூத்திரம் அறிந்தோன்; ஆனால்
சூழ்ச்சிகள் அறியோன்; என்றும்
நாத்திறம் தேவை யில்லை
நடிப்பினை நாட்டு தற்கு!
நேத்திரம் அசைந்தால் போதும்
நவரசம் அதிலே மோதும்!
அன்னவன் மறைந்தா னேனும்
அவனியைத் துறந்தா னேனும்
விண்ணவன் புக்கா னேனும்
வியத்தகு கலைஞன் எங்கள்
கண்ணகம் வாழு கின்றான்!
கனித்தமிழ் நாட்டோர் தம்மின்
புன்னகை யில்வாழ் கின்றான்
பொய்யிலை உண்மை ஆமாம்!
திரைகடல் உள்ள மட்டும்
தீநிலம் உள்ள மட்டும்
வரையிலா வானம் இங்கு
வாழுமோர் காலம் மட்டும்
பிறைநிலா தேய்ந்து மீண்டும்
பிறக்காமல் போகு மட்டும்
"திரைகடல்" வேந்தன் எங்கள்
தென்னவன் நாகேஷ் வாழ்வான்!
-------------ரௌத்திரன்
Re: நாகேஷ்!
மிக சிறப்பான கவிதை
நாகேஷ்! ஒரு சகாப்தம்.
ஒரு உன்னத மனிதர்
நாகேஷ்! ஒரு சகாப்தம்.
ஒரு உன்னத மனிதர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நாகேஷ்!
நாகேஷ் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|