Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கடத்தூர் அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
கடத்தூர் அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
மூலவர் : அர்ச்சுனேஸ்வரர் (மருதவனஈஸ்வரர், திருமருதுடையூர், மருதீசர்)
உற்சவர் : -
அம்மன்/தாயார் : கோமதி அம்மன்
தல விருட்சம் : -
தீர்த்தம் : அமராவதி
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கடத்தூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
மகா சிவராத்திரி தான் இத்தலத்தின் மிகச்சிறந்த திருவிழா ஆகும். இது தவிர மாதாந்திர பிரதோஷம், சிவராத்திரி, மற்றும் சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
இத்தல இறைவன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணிமுதல் மதியம் 12 வரையிலும் மாலை 4மணிமுதல் 6 வரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.பிரதோஷ காலங்களில் இரவு 7.30 வரை நடை திறந்திருக்கும்.
முகவரி:
கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கடத்தூர்-642 203 கோயம்புத்தூர் மாவட்டம்.
போன்:
+91-93448 31598
பொது தகவல்:
கன்னி மூலையில் தல விநாயகரான வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதியும், வாயுமூலையில் சுப்பிரமணியருக்கும் அதனருகில் சண்டிகேசுவரருக்கும் தனி சன்னதியும் ஈசான்ய மூலையில் சண்டிகேசுவரருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.
சிவ சன்னதிக்கு முன் நந்தி அழகிய திருமேனியுடன் விமானத்துடன் கூடிய மண்டபத்தில் வீற்றிருக்கிறார். சிவ ன் கருவறையின் தெற்கு பக்கம் பளிங்கு கல்லால் ஆன தட்சிணாமூர்த்தியும், மேற்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் மகா விஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் சன்னதி முற்றத்தில் கிழக்கு வாசல் பகுதியில் 36 அடி உயர ராஜ கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது.
பிரார்த்தனை
மிகப்பெரிய சுயம்பு மூர்த்தி. சர்வ வல்லமை பொருந்தியவர். எனவே எது கேட்டாலும் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம். அத்துடன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கம். அமராவதி ஆறு மேற்கிலிருந்து வடக்கு பாகமாக வலம் வந்து கிழக்கு நோக்கி செல்கிறது. சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அமராவதி நதிக்கரையில் மொத்தம் 11 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இதில் கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியைக் கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக்கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி ஆகும். சிவன் கோயிலிலிருந்து அம்மன் கோயில் வலது பாகம் தனியாக பிரிக்கப்பட்டு மதில் சுவரும் எழுப்பப்பட்டு தனித்தனி ஆலயங்களாக அமையப் பெற்றுள்ளது. அத்துடன் இரண்டுக்கும் தனித்தனி முற்றங்கள், தனித்தனி வாசல்கள், தனித்தனி மடப்பள்ளிகள் என எல்லாமே தனித்தனியாக அமைக்கப் பட்டுள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகில் இடது பக்கம் அரளிச்செடியைப்பற்றி பெரிய புற்று லிங்கம் வளர்ந்து வருகிறது.
சைவ வைணவ பேதமின்றி கருவறையின் மேற்கு பக்கம் விஷ்ணுவிற்கும் ஒரு தனி சன்னதி உள்ளது. மதுரை மீனாட்சி கோயிலைப்போல் இத்தலத்தில் சுவாமிக்கு வலது பக்கம் அம்மனின் ஆலயம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. கடத்தூர் என்ற பெயருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் முக்கியமாக பஞ்ச பாண்டவர்கள் தங்களது வன வாச காலத்தில் இங்கு வந்து மறைந்து வாழ்ந்ததாகவும், அவர்களைக் கண்டு பிடிக்க இந்த ஊரில் உள்ள மாடுகளை கடத்திச்சென்று ஆற்றின் மறுகரையில் அடைத்து வைத்ததாகவும் அதனாலேயே இந்த இடம் காரைத் தொழுவு என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கடத்தூர் ஆனது என கூறுகிறார்கள்.
தல வரலாறு:
விக்கிரமசோழன் என்பவனது காலத்தில் காரத்தொழுவு எனும் கிராமத்திலிருந்து கொங்கேல சங்கு எனும் கிராமத்திற்கு நாள்தோறும் 60 குடம் பால் சென்று கொண்டிருந்தது. இதில் ஒவ்வொருநாளும் ஒரு குடம் பால் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிந்திக்கொண் டிருந்தது. அந்த இடத்தை தோண்டிப் பார்க்கையில் ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து ரத்த ஆறாக ஓடியது. காரணம் அங்கிருந்த சிவலிங்கத்தின் தலையில் வெட்டப்பட்டிருந்தது தான்.இந்த வெட்டப்பட்ட பகுதியை நாம் இன்றும் கூட காணலாம். உடனே தான் இந்த சுயம்பு லிங்கத்தினை வழிபடும் வழக்கம் ஏற்பட்டு, பத்தாம் நூற்றாண்டில் விக்கிரமசோழ தேவன் காலத்தில் கோயில்கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் மிகப்பெரிய சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கடத்தூர் அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
தலத்தின் பெருமையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Similar topics
» அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அனுவாவி அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அனுவாவி அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|