Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
மூலவர் : வெங்கடாசலபதி
உற்சவர் : வெங்கடாசலபதி
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : பனை மரம்
தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திம்மராஜபுரம்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி
தல சிறப்பு:
கொடிக்கம்பத்திற்கு பதிலாக தீப ஸ்தம்பம் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம் -627 353 திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
முன் மண்டபத்திலுள்ள ஆஞ்சநேயரை வியாழன், சனியில் மாணவர்கள் வழிபட்டால் அதிக மார்க் பெற அவர் உதவுவார் என்கின்றனர் பலன் அடைந்தவர்கள்.
பிரார்த்தனை
இங்கே பெருமாளை 11 சனிக்கிழமைகளில் வணங்கினால் இழந்த பொருளைப் பெறலாம் என்பதும், புதன்தோறும் பழம், வெல்லம், நெய், அரிசிமாவு சேர்த்து உருண்டை பிடித்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அவ்வரம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
பிதுர் தர்ப்பணம்: ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி விட்டு பிதுர் தர்ப்பணம் செய்து, இப்பெருமாளை வணங்கினால், முன்னோரின் அருள் பூரணமாகக் கிட்டும்
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
இக்கோயிலை தெலுங்கு மன்னர் கட்டியதால், வாசலில் கொடிக்கம்பத்திற்கு பதிலாக ஆந்திர மாடலில் தீப ஸ்தம்பம் உள்ளது.
காணாமல் போன சிலை: 28 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலின் உற்சவர் சிலை காணாமல் போய் விட்டது. அதிர்ந்து போன அர்ச்சகர் போலீசில் புகார் செய்து விட்டார். போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். எடுத்தவரை கண்டுபிடிக்க முயலவில்லை. ஒருமுறை போலீசார் கோயிலின் சுற்றுப்புறத்தை சோதனையிட்ட போது, உற்சவரின் நெற்றியில் இருந்த பட்டை நாமம் கோயில் காம்பவுண்ட் சுவரை ஒட்டிக் கிடந்ததைக் கண்டெடுத்தனர். சுறுசுறுப்பாயினர். பட்டைநாமம் கிடந்த இடத்தை ஒட்டிய கால்தடம், சுவரில் பதிந்த ரேகைகளைக் கொண்டு குற்றவாளியை நெருங்கி விட்டனர். சிலை மீட்கப்பட்டது. ஆனால், பெருமாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கோயிலுக்கு வரவில்லை. கோர்ட்டுக்கு போய் விட்டார். சிலை கோர்ட் பொறுப்பில் இருந்தது. இரண்டாண்டுகள் வரை பூஜை எதுவும் இல்லை. இதனால், அதிகாரிகளின் பார்வை இக்கோயில் மீது சென்றது. கோயில் சொத்துக்கள் பற்றி கணக்கெடுத் தனர்.அந்நேரத்தில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசாங்கம் போலீஸ் குவாட்டர்ஸ், வடிகால் வாரிய குடியிருப்பு கட்ட கேட்டது. நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு கோயிலுக்கு ஒப்படைக் கப்பட்டது. இதற்குள் விசாரணை முடிந்தது. ஒன்றுமில்லாமல் போன பெருமாள் கோயிலுக்குள் நுழையும் போது 50 லட்சத்துக்கு அதிபதியாகி விட்டார். இதன்பின் கோயில் வளர்ச்சி பெற்றது. ஒருமுறை இக்கோயிலுக்கு வந்த பக்தை ஒருவர் கோயிலை வலம் வரும் போது நெருஞ்சி முள் காலைக் குத்தியது. அவர் வீட்டுக்குச் சென்றதும், பல மூடை சிமென்டை கோயிலுக்கு அனுப்பி, சுற்றுப்பாதை அமைத்து விட்டார். இப்போது முள் குத்தாமல், பெருமாளை சுற்றி வரலாம். நேரம் வந்தால் தான் எல்லாம் நடக்கும் என்ற பதம் ஆண்டவனுக்கு கூட பொருந்தும் போலும்!
தல வரலாறு:
தெலுங்கு மொழி பேசும் திம்மராஜா என்ற குறுநில மன்னர் திருநெல்வேலியின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர். ஏழுமலையானை அடிக்கடி தரிசிப்பதற்காக தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய கோயிலைக் கட்டி, ஏராளமான நிலங்களையும் வருமானத்துக்காக எழுதி வைத்தார். கோயிலில் வெங்கடாசலபதி பிரதிஷ்டை செய்யப்பட்டார்.தன் பெயரால் கோயில் இருந்த பகுதிக்கு "திம்மராஜபுரம்' என்று பெயரிட்டார். தாமிரபரணி நதியை ஒட்டி கோயில் அமைந்தது. கோயில் அமைந்துள்ள பகுதியில் ஓடும் இந்நதி "ஜடாயு தீர்த்தம்' என பெயர் பெற்றது. அதுவே இக்கோயிலின் தீர்த்தமும் ஆகும். பிற்காலத்தில் உற்சவர் வெங்கடாசலபதி சிலை அமைக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவர் அருள்பாலிக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: கொடிக்கம்பத்திற்கு பதிலாக தீப ஸ்தம்பம் உள்ளது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கிருஷ்ணாபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
» அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,கிருஷ்ணாபுரம் ,திருநெல்வேலி
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» அருள்மிகு கஜேந்திரவரதர் திருக்கோயில், திருநெல்வேலி
» கல்லிடைக்குறிச்சி அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், திருநெல்வேலி
» அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,கிருஷ்ணாபுரம் ,திருநெல்வேலி
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» அருள்மிகு கஜேந்திரவரதர் திருக்கோயில், திருநெல்வேலி
» கல்லிடைக்குறிச்சி அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், திருநெல்வேலி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|