தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு நிமிட உலகம்

View previous topic View next topic Go down

ஒரு நிமிட உலகம்  Empty ஒரு நிமிட உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 25, 2016 9:29 am

கூடு திறந்தால் காடு
-----
அந்த மரண வீட்டில் ....
அப்படி ஒரு சனக்கூட்டம் ....
ஆராவாரமான மரணவீடு ....
ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ...
சொல்பவர்கள் நிறைந்து ...
காணப்பட்டனர் .....
மூன்று நாட்களாக ...
கண்ணீர் விழா ....!!!

சடலம் இருக்கும் பெட்டி ...
அலங்காரத்தால் ஜொலிக்கிறது ....
குளிரூட்ட பட்ட ஊர்தியில் ...
சடலம் வைக்கப்படுகிறது ....
மந்திரி வந்து அஞ்சலி செலுத்த ....
வீதியெங்கும் வாகன நெரிசல் ....
வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ...
பறை சத்தம் காதை கிழித்தது ....!!!

சடலம் போகும் பாதையில் ....
விபத்தில் இறந்த எருமைமாட்டு ...
சடலத்தை நாய்களும் காகங்களும் ....
குதறி எடுத்தபடி இருந்தன ...
இறந்தபின்னும் மற்றவைக்கு ...
உதவும் அந்த எருமையின் இறப்பு ....!!!

இறப்புக்கு முன்னரே ....
மனிதனும் மிருகமும் ....
இறந்துவிட்டால் எல்லாமே ...
சடலம் தானே .....!
எல்லா உயிரினத்தின் வாழ்வும் ...
அடுத்த ஒரு நிமிடம் கூட ....
உத்தரவாதம் இல்லை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**கூடு திறந்தால் காடு **
+
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 25, 2016 10:12 am

காட்டு மரமும் வீட்டு மரமும்
-----
வேகமாக வெட்டப்பட்டு ....
வருகின்றன காட்டு மரங்கள் ...
விறக்குக்காக அல்ல ....
கோடரிக்கு பிடிகளாக ....
கூடி போராடமுடியாத ....
காட்டு மரங்கள் முடிவுக்கு ....
வீட்டு மரங்களுடன் ....
கலப்பு திருமணம் செய்வதற்கு ....!!!

காட்டு மரங்கள் கொஞ்சம் ....
வீரம் நிறைந்தவை வலிமையானவை ...
அவை வளர்க்கப்படும் வளரும் சூழலே ....
கொடிய மிருகங்கள் ஊர்வன மத்தியில் ...
வாழும் சூழலே அவற்றின் குணத்துக்கு ...
காரணமாக இருக்குமோ ....?

வீட்டு மரங்கள் மிகவும் ....
மென்மையானவை வீரமும் ...
வலிமையையும் குறைந்தவை ....
மனிதர்கள் மத்தியில் வளர்வது ....
காரணமாக இருக்குமோ ....?

காட்டு மரம் வீட்டு மரத்தை ....
பார்க்க வந்தது வீட்டு மரங்கள் ...
பயத்தால் நடுங்கின மௌனமாகின ....
நாங்கள் உங்களோடு கலப்பு ...
திருமணம் செய்ய விரும்புகிறோம் ...
எங்களை காப்பாற்ற வேறு வழியில்லை ....!!!

வீட்டு மரங்கள் கடுமையாக ....
எதிர்த்தன உங்களை மணந்தால் ...
நாங்களும் இறக்க நேரிடும் ...
முடியாது முடியவே முடியாது .....
காட்டு மரம் கவலை படவில்லை ....
மனிதர்கள் மத்தியில் வளரும் ...
வீட்டு மரங்களுக்கு எப்படி ...?
சுயநலம் இல்லாமல் போகும் ...???

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**காட்டு மரமும் வீட்டு மரமும்**
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by செந்தில் Fri Mar 25, 2016 11:40 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 28, 2016 7:36 pm

பிறப்பும் இறப்பும் சமன்
---
இறந்த பிணத்தை .....
இறக்கப்போகும் பிணங்கள் ....
ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!!

இறந்த பிணம் ...!!!
கோபத்தில் பேசத்தொடங்கியது ......
இறக்கபோகிறவர்களே....
வாருங்கள் இறக்கபோவதற்காக....?

பிறப்பு இனிமையானது ....
இறப்பு கொடுமையானது ....
என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் ....
பிறப்பு இயற்கை தந்த பரிசு ....
இறப்பு இயற்கை தந்த கொடை.....
புரிந்து கொண்டவனே ஞானி ....!!!

எல்லா உயிரும் ஒருநொடி ....
தொடக்கம் எல்லா உயிரின் ....
அடக்கமும் ஒரு நொடி தான் .....
அந்த ஒருநிமிடத்தில் தான் ....
உலகமே இயங்குகிறது ......!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
** பிறப்பும் இறப்பும் சமன் **
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 30, 2016 8:20 pm

தப்புக்கணக்கு
-----
தூரத்தில் இருப்பதிலும் ....
மறை பொருளாய் இருப்பதிலும் ....
எப்பவுமே மனித மனத்துக்கு .....
ஒரு இச்சையுண்டு....!!!

எனக்கு அது விதிவிலக்கல்ல ....
நிலாமீது ஒரு காதல் ....
விண்மீன்கள் மீது மோகம் ....
இரண்டையும் ரசிப்பதற்கு ....
கனவு விமானத்தில் ...
விண் மண்டலம் சென்றேன் .....!!!

நிலவருகே சென்றேன் ....
வா என்று அழைகவில்லை .....
அவள் மென்மை அழகில் ....
மயங்கினேன் என்னை ....
மறந்து கவிதை எழுதினேன் .....!!!

மெல்ல சொன்னது நிலா ....
அதிகம் என்னில் காதல் ....
கொள்ளாதே - எனக்கும் ...
இருட்டு உண்டு என்னுள் ...
இருளும் உண்டு .......!!!

நிலா அருகில் துடித்து ....
நடித்துகொண்டிருந்த ....
விண் மீன்கள் கண்களை ...
சிமிட்டி சிமிட்டி என்னை ....
அழைத்துக்கொண்டிருந்தன .....
அருகில் சென்றேன் .....
தள்ளி போய்விடு என்று ...
கத்தியது .....!!!

திகைத்து நின்றேன் ....
நீதானே என்னை கண்ணால்...
சிமிட்டி சிமிட்டி வா வா ...
என்றாய் இப்போ திட்டுகிறாயே ....?

போடா மூடனே ....
என் குணவியல்பு அதுவே ....
நீ தப்பாக நினைத்தது -என்
தப்பில்லையே ...???

மனித மனம் இப்படித்தான் ...
அருகில் உள்ள அழகை ரசிக்காது ...
தொலைவில் உள்ளத்துக்கு ஆசைபடும் ....
அவமானமும் படும் ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**தப்புக்கணக்கு **
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 05, 2016 7:14 pm

ஆடையே மனித குணம்
--
விதம் விதமாய் ஆடைகள் ....
வண்ண வண்ண நிறங்கள் ....
காலத்துக்கேற்ற நாகரீகங்கள் ....
ஆடைகள் வண்ணங்களை ....
மட்டும் தோற்றுவிப்பதில்லை ....
மனித எண்ணங்களையும் ....
தோற்றுவிக்கும் ......
"ஆடைகள் உடலை மட்டும் "
மறைப்பதில்லை -பிறர்
மனதையும் மறைக்க வேண்டும் ....!!!

ஆடை பாதி ஆள் பாதி ...
என்றாகள் எம் முன்னோடிகள் ....
அத்தனை உண்மை பார்த்தீர்களா ..?
ஆடை அலங்காரம் ஒருவனின் ....
எண்ணத்தை வெளிப்பதும் ...
என்பதையே அப்படி சொன்னார்கள் ....!!!

ஆடை
ஆயுளை கூட்டவேண்டும் ....
அறிவை அதிகரிக்க வேண்டும் ....
அன்பை பெருக்க வேண்டும் ....
கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் ....
ஒழுக்கத்தை பேணவேண்டும் ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**ஆடையே மனித குணம் **
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 05, 2016 7:48 pm

ஆறாம் அறிவு இதுதானா ...?
---
ஆறறிவை பெற்ற மனிதன் ....
ஆடையால் மானத்தை காக்கிறான் ....
ஆடையே போடாத மிருகத்திடம் ....
ஆறறிவு மனிதனிடம் இல்லாத ....
அற்புத பண்பு இருக்கிறதே -அவை ...
கற்பழிப்பில் ஈடுபடுவதில்லை ....!!!

மேலாடையாய் தம் தோலை ....
மறைத்து மானத்தை காக்கும் ....
மிருகங்களின் தோலை மனிதன் ....
மேலாடையாய் போடுகிறான் ....
இருந்துமென்னபயன்...?
மேலான சிந்தனைகள் இல்லையே ....
பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவை ...
மனிதனுக்கு பறித்துண்ணத்தான் ...
கொடுத்தானோ ....?

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**ஆறாம் அறிவு இதுதானா ...? **
+
கவி நாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by முரளிராஜா Thu Apr 07, 2016 10:42 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 18, 2016 8:45 pm

மரணத்தில் ஏன் அழுகிறாய்....?
-----
குழந்தை பிறந்தது ....
பேர் சூட்டும் விழா ....
உறவினர் வந்தனர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

ஆண்டு ....
ஒன்று நிறைவு ....
பிறந்தநாள் வைபவம் ....
கேக் வெட்டினர் ....
பாட்டு பாடினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

திருமண அழைப்பு ....
உறவுகள் குவிந்தன ....
ஆசீர் வாதம் வழங்கினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

மரண அறிவிப்பு ....
உறவுகள் கூடினர் ....
ஒப்பாரி வைத்தனர் ...
ஓலமிட்டனர் ....
சோகத்தில் நின்றனர் ....!!!

எல்லா நிகழ்விலும் ....
சிரித்த மனிதன் ...
மரணத்தில் மட்டும் ....
அழுவதேன் .....???

அடுத்து தனது மரணம் ...
பயத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலமும் ...
உதவிய ஓருவன் இறந்துவிட்டானே ....
ஏக்கத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலம் அத்துணை ....
இன்பத்தை தந்தவன் ....
இறந்துவிட்டானே -என்ற ...
வருத்தத்தால் அழுகின்றானா ....?

மொத்தத்தில் மரணத்தில் அழுகை ...
சுயநலத்தின் ஒன்றாய் தான்
இருக்கவேண்டும் ......
பிறப்பு இன்பமென்றால் ....
இறப்பும் இன்பம்தானே ...
உணர்ந்தவனுக்கேன் அழுகை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**மரணத்தில் ஏன் அழுகிறாய் **
+
கவி நாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு நிமிட உலகம்  Empty Re: ஒரு நிமிட உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum