தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்

View previous topic View next topic Go down

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Empty ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்

Post by rammalar Mon Nov 27, 2017 9:23 pm

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் 201711111412204953_Zen-story-spiritual-stories_SECVPF
-

-
நாட்டின் எல்லையில்... காட்டின் தொடக்கத்தில் இருந்தது அந்தத்
துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
நாட்டின் மன்னனும் கூட அவரை அறிந்து வைத்திருந்தான்.

அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான்.
அப்படி வரும் போதெல்லாம், அவன் தன்னுடைய
அரண்மனையின் சிறப்பு பற்றியும், அங்கு வந்து சில காலம் தங்கிச்
செல்லும்படியும், துறவிக்கு அழைப்பு விடுத்து வந்தான்.

ஒரு நாள் துறவி அரண்மனைக்கு வந்தார். அங்கிருந்த காவலர்கள்
அவரை அறிந்தவர்கள் என்பதால், துறவியை தடுக்கவில்லை.
வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார்.
என்னவோ அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல்,
விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார்.

அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள், காவலர்கள்,
அதிகாரிகள் என யாரையும் துறவி சட்டை செய்யவில்லை.
அரசனின் பிரமாண்ட வாசல் கொண்ட அறையை அடைந்தார்.
அரசனுக்கு முன்னே போய் நின்றார்.

அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். கல்வி
கேள்விகளில் சிறந்தவன், நல்லாட்சி வழங்குபவன், தரும சிந்தனை
கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசன், எழுந்து நின்று
துறவியை வணங்கினான்.

‘வாருங்கள் குருவே.. உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை
புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள்’ என்றான்.

துறவி ஒரு இருக்கையில் அமர்ந்தார். பின் ‘என்ன வேண்டும் என்று
சொல்லுங்கள் குருவே’ என்று கேட்டான் அரசன்.

அதற்கு துறவி ‘ஒன்றுமில்லை.. இந்த விடுதியில் எனக்குத்
தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும்’ என்றார்.

விடுதி என்று துறவி சொன்னது, அரசனுக்கு வருத்தத்தையும்,
கோபத்தையும் அளித்தது. ‘இவ்வளவு பெரிய அரண்மனையை,
இந்தத் துறவி விடுதி என்கிறாரே?’ என்று நினைத்தான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘குருவே.. இது விடுதி அல்ல. என்
அரண்மனை!’ என்றான்.

‘அப்படியா.. சரி.. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்.
இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் தந்தைக்கு’ என்றான் அரசன்.

‘அவர் எங்கே?’ என்றார் துறவி.

உடனே மன்னன் ‘அவர் இறந்துவிட்டார்’ என்றான்.

“அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் பாட்டனாருக்கு’ என்றான் மன்னன்.

‘சரி.. அவர் இப்போது எங்கே?’ என்றார்

‘அவரும் இறந்துவிட்டார்’ என்று மன்னன் தெரிவித்தான்.

இப்போது துறவியிடம் சிறு புன்னகை. அப்படியானால் உன் தந்தை,
பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள்.
வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள்.
அப்படியென்றால் இது விடுதிதானே! நீ என்ன.. இதை அரண்மனை
என்கிறாய்’. என்றார்.

துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய்விட்டான்.
தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது
எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம்
தெளிந்தான்.

துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது,
வந்த வேளை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து
சென்றிருந்தார் துறவி.
-
----------------------------------------
நன்றி - மாலை மலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum