Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1 • Share
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு
விசாரணையை மே 1-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம்
ஒத்திவைத்தது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி,
சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்
வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,
வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சார்பில் மூத்த
வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன் வைத்த வாதம்
வருமாறு:
இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பல்வேறு சட்டப்பூர்வ
கொள்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்த்துக்கும் சாதிக் அலி
வழக்குக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்
பத்திரங்களைச் சரிபார்க்கவோ, பிரமாணப் பத்திரங்கள்
தொடர்பாக குறுக்கு விசாரணையோ செய்யவில்லை.
எங்கள் தரப்பு வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்து
விட்டது. கட்சியின் விதிகளை மாற்றம் செய்ய பொதுக் குழுவுக்கு
அதிகாரம் இருந்தாலும், பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம்
இல்லை.
இதுபோன்ற சூழலில், எதன் அடிப்படையில் கட்சியின் பொதுச்
செயலாளர் பதவி நீக்கப்பட்டது? பொதுச் செயலாளர் பதவியை
நீக்குவது தொடர்பாக தேர்தல் நடைபெற்றதா? கட்சியின் பொதுச்
செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்
என்ற விதியில் மாற்றம் செய்யவே முடியாது.
வி.கே. சசிகலாவை கட்சியின் தாற்காலிகப் பொதுச் செயலாளராக
நியமிக்க முன்மொழிந்தவர்களே பின்னாளில் அவருக்கு எதிராக
செயல்படவும் செய்தனர். அதிமுகவின் பொதுச் செயலாளர்
வி.கே. சசிகலா என அங்கீகரிக்கும் வகையில் தேர்தல்
ஆணையக் கடிதப் போக்குவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது'
என்றார்.
இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,
வழக்கு விசாரணயை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து
உத்தரவிட்டனர். இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததையொட்டி,
தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் நீதிமன்றத்துக்கு
வந்திருந்தார்.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலைச்
சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர்
23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன்,
வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில்
தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி
விசாரணைக்கு வந்தது. அப்போது, வி.கே. சசிகலா, டிடிவி தினகரன்
ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், '
அதிமுக சட்ட விதிகளின்படி உச்சபட்ச அதிகாரம் பொதுச்
செயலாளருக்கு உள்ளது. பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு,
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய
பதவிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
கட்சியின் விதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாமே தவிர,
கட்சியின் அமைப்பு முறையை மாற்றம் செய்தது கட்சி விதிகளுக்கு
எதிரானது' என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு
விசாரணயை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து
உத்தரவிட்டிருந்தனர்.
-
---------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்: 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
» அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்: 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|