தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மறு உலகில் இன்பம் பெற... - திருக்குறள் கதைகள் #31

View previous topic View next topic Go down

மறு உலகில் இன்பம் பெற... - திருக்குறள் கதைகள் #31 Empty மறு உலகில் இன்பம் பெற... - திருக்குறள் கதைகள் #31

Post by ஸ்ரீராம் Fri Apr 19, 2013 12:49 pm


சிவநேசன் செட்டியார் மிகப் பெரிய தனவந்தர். வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் கவனம் செலுத்தி தனது செல்வத்தை மென்மேலும் பெருக்கி வந்தார். ஆனால் அவருக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையும், மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரங்கும் மனமும் சிறிதுங்கூட இல்லை.

தான் சம்பாதித்த பொருட்களினால் அரண்மனை போன்ற வீடும், ஏவலுக்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும், நலபுலன்களும் வாங்கிச் சேர்த்து, வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தார். அவருக்கு ஒரேயொரு மகன் உண்டு. தனது சொத்துகளெல்லாம் அவனைச் சேர வேண்டும் என்பதும், அவனும் தன்னைப் போல் சிறந்த வியாபாரியாகி செல்வத்தை இன்னும் பல மடங்குகளாகப் பெருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

ஆனால் அவர் மகனுக்கு எதிலுமே நாட்டம் இல்லை. செல்வம் சேர்ப்பதற்காக, தன் தந்தை நடந்து கொள்ளும் முறைகள் மற்றும் அவரது இரக்கமற்ற தன்மையால் மனமுடைந்தான். சிவநேசரின் முதிர்ந்த வயதில் அவன் வீட்டை விட்டு வெளியேறி காணாமற் போனான்.

தன்னுடைய சொத்துக்களின் ஒரே வாரிசான மகன் காணாமல் போனதால், சிவநேசன் துயரக்கடலில் மூழ்கினார். மன ஆறுதலுக்காக அவர் ஒரு யோகியைச் சந்தித்தார். சிவநேசரின் கதையை கேட்ட அந்த யோகி, “இதுவரை உன் வியாபாரம், உன் செல்வம் என்று சுயநல நோக்கத்தோடு பொருளை அள்ளி அள்ளிக் குவித்தாய். அவ்வாறு சேர்த்த செல்வத்தினால் இன்ப வாழ்க்கை நடத்தினாய்.

மற்றவர்களிடம் நீ கருணையே காட்டியதில்லை. மற்றவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளவில்லை. இப்போது, நீ கவலைப்படும் போது உன் செல்வங்கள் அனைத்தும் உனக்கு ஆறுதல் அளிக்கின்றனவா... இனி நீ உன் மறு உலகைப் பற்றி யோசி. இதுவரை நீ சேர்த்த செல்வம் உன் உடன் வராது. யாருக்காக சொத்து சேர்த்தாயோ, அந்த மகனும் விலகி ஓடி விட்டான். இனியாவது மற்றவர்களுக்கு தான, தருமம் செய். மற்றவர்கள் மீது இரக்கம் காட்டு. அது ஒன்றுதான் உனக்கு மறு உலகிலும் இன்பத்தை அளிக்கும். அதை உணர்த்துவதற்காகத்தான், உன் மகன் உன்னை விட்டுச் சென்று விட்டான். கவலைப்படாதே! உன் செயல் முறைகளை மாற்றிக் கொள். உன் மகன் திரும்பி வருவான்!” என்றார். மனம் தெளிந்தவராக சிவநேசன் திரும்பினார்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


விளக்கம்: செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum