தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

முயன்றால் முடியும் !   நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .  Empty முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Thu Jun 20, 2013 8:05 am

முயன்றால் முடியும் ! 

நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . 

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . 

மணிமேகலை பிரசுரம் .4.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 13. 

"முயன்றால் முடியும் " நூலின் தலைப்பே தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து எழுதிய அற்புத நூல் .பாராட்டுக்கள் . "புலிக்குப் பிறந்தது பூனையாகாது " என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன் .அவர்களின் மகன் லேனா தமிழ்வாணன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள் . 

நூல் முழுவதும் முயற்சியின் பயனை விளக்கி உள்ளார்கள் .முயற்சியின் அவசியத்தை புரியும்படி விளக்கி உள்ளார்கள் . 

" பெரும்பாலான வெற்றியின் இலக்குகள் பல கட்டங்களைக் கொண்டவை . ஒவ்வொன்றாகத் தொட்டு உயர்ந்து படிப்படியாகத்தான் இலக்கை அடசிய முடியும்." 
இன்று இளைஞர்கள் பலர் திரைப்படம் பார்த்து விட்டு கதாநாயகன் ஒரே ஒரு பாட்டில் பணக்காரன் ஆவதைப்போல ஆக வேண்டும் என்று எண்ணுகின்றனர் .வெற்றி, சாதனை என்பதெல்லாம் நொடியில், நிமிடத்தில் வருவது அல்ல படிப்படியாக வருவதுதான் பொறுமை வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் அவர்கள் நன்கு உணர்த்தி உள்ளார்கள் 
நூலில் உள்ள அனைத்துக் கருத்துக்களும் மிகவும் பயனுள்ளவை .கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் . 

பதச் சோறாக சில வரிகள் மட்டும் . 
" ஒரு பெரிய பயணம் கூடச் சாதரணமாக ஒரு காலடி எடுத்து வைப்பதிலேயே ஆரம்பமாகிறது ." என்ற ஆங்கிலப் பழமொழியின் மூலம் தயங்காமல் முன்னோக்கி அடி எடுத்து வையுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார் . 

அமெரிக்காவில் நடந்த உண்மை நிகிழ்வு நெகிழ்வு . 
ஒரு தாய் மகனைக் காப்பாற்றிய விதம் அருமை .தன் மகன் காருக்கு அடியில் இருந்த போது 
ஜாக்கி கருவி உடைந்து விடுகிறது .மகனின் கத்தல் கேட்டு ஓடி வந்து தாய் அக்கம் பக்கம் அழைக்கிறார் .யாரும் இல்லாததால் உடன் தானே காரை தூக்க முயற்சி செய்கிறார் .முதலில் முடிய வில்லை மீண்டும் முயல்கிறார் தன் மகனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் காரை தூக்கி விடுகிறார் .மகன் பிழைத்து விடுகிறான் .அரசாங்கம் விருது தருகின்றது . 

கூச்சம் ,தயக்கம் ,பயம் இவைதான் முயற்சியின் எதிரி என்பதை பல்வேறு எளிய உதாரணங்கள் மூலம் விளக்கி உள்ளார் . 

நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் நண்பர் ஒருவருக்கு வீட்டின் சுற்றுச் சுவர் எழுப்ப விரும்பியவரை ,பக்கத்து வீட்டுக்காரரிடம் பேச தயங்கிவரை ,தயக்கம் நீக்கி கலந்து பேசி வைத்து செலவை பாதியாக பகிர்ந்து கொண்ட நிகழ்வு பயனுள்ளது ." நமக்கும் சாதனைகளுக்கும் ரொம்பத் தூரம் என்று எண்ணுகிற தாழ்வு மனப்பான்மைக் காரர்களும் முயற்சிகளைக் கண்டு விலகி ஓடுகிறவர்களே ." 

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்துவிட வேண்டும் என்று உணர்த்துகின்றார் . 

" ஒரு செயல் முடியாத செயலாக இருக்கலாம் .ஆனால் முயன்றுதான் பார்ப்போமே .முயற்சி செய்தால் என்ன தவறு ? இந்த அணுகுமுறையை ஒருவர் பின்பற்றினால் அதில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு . 

எடிசன் முயன்றதால்தான் நமக்கு மின்சாரம் கிடைத்தது .முயற்சி திருவினையாக்கும் என்பது முற்றிலும் உண்மை .இப்படி நூல் முழுவது வெற்றி சூத்திரங்கள் நிறைய உள்ளன .கையடக்க நூல் என்றாலும் படித்து முடித்ததும் மனதளவில் மிகப்பெரிய மாற்றம் உண்டாக்கும் நூல் .தன்னம்பிக்கை விதைக்கும் நூல் . 

நூலில் திருக்குறள் ,ஆங்கிலப் பொன்மொழிகள் ,முக்கிய நிகழ்வுகள் ,உதாரணங்கள் , கருத்துக்கள் யாவும் மிக எளிமையாகவும் ,இனிமையாகவும், படிக்க சுவையாகவும் உள்ளன . 

மனிதர்கள் மூன்று வகையினர் இருக்கிறார்கள் . 
1.ஏனோ தானோ மனிதர்கள் ! 
2.முன் எச்சரிக்கை மனிதர்கள் ! 
3.சாதிக்கப் பிறந்த மனிதர்கள் ! 

நம்மில் பலர் முதல் வகை ,இரண்டாம் வகை மனிதர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் .பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்பதே வாழ்க்கை .மூன்றாம் வகை சாதிக்கப் பிறந்த மனிதராக நம்மை மாற்றும் நூல் இது . 
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் முயற்சிகளை குறைவின்றி செய்து வர வேண்டும் .

சலிப்படைந்து விரக்தியில் முயற்சியை பாதியில் நிறுத்தி விடக் கூடாது .வெற்றிகளை விரும்புகிறவர்கள் ஒருபோதும் முயற்சிகளை நிறுத்துவதே இல்லை . 

ஒரு நபர் பத்து முறை முயன்று ஒரு முறை வென்றார் .பத்து முறை வெற்றி பெற வேண்டுமானால் முயற்சிகளின் எண்ணிக்கையை கூட்டினால் பத்து முறை வெற்றி பெறலாம் .முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில் .முயலுங்கள் முயலுங்கள் என்று உணர்த்தும் நூல் இது . 

பலர் வாழ்கையை ரசித்து , மகிழ்ந்து வாழாமல் நொந்து, வெந்து ,விரக்தியில் எனக்கு வாழவே பிடிக்க வில்லை, .ஒரே தோல்வி மயம் ,சோதனை ,வேதனை ,தலையெழுத்து சரியில்லை. 
இப்படியே புலம்பி வாழ்ந்துவருகின்றனர் .அவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது . 

ஒரு நூல் என்ன செய்யும் என்பதற்கு உதாரணம் இந்த நூல் .படித்துப் பாருங்கள் .முயற்சி என்னும் நெருப்பு உங்களைப் பற்றிக் கொள்ளும் .பற்றிய நெருப்பு வெற்றி என்ற சோதியாக ஒளிர்ந்திடும் .
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum