Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
Page 1 of 1 • Share
இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
ஹுத் ஹுத் புயல் எதிர்பார்த்தபடியே ஆந்திரத்திலும் ஒடிஸாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக உயிர்ச்சேதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. விசாகப்பட்டினத்தின் 70% முதல் 80% வரையிலான பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துவிட்டதாக தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினர் தெரிவிப்பதிலிருந்தே புயலின் தீவிரத்தை உணர முடிகிறது.
பைலின் புயல் தாக்கியபோதுதான் ஆந்திரமும் ஒடிஸாவும் முதல்முறையாகப் புயல் எச்சரிக்கைத் தகவல்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மக்களை மீட்டுப் பாதுகாக்கும் நடைமுறையை முறைப்படி பின்பற்றி உலக அளவில் பாராட்டு பெற்றன.
அதேபோல் தற்போதும் ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையின் கீழ் மாநில அதிகாரிகள் துடிப்பாகச் செயல்பட்டு, அரசு அமைத்த 370 மீட்பு, உதவி முகாம்களுக்குக் கிட்டத்தட்ட 4 லட்சம் பேரைக் கொண்டுசென்றனர். ஒடிஸாவில் முதல்வர் நவீன் பட்நாயக், 1,56,000 பேரை புயல் முகாம்களுக்குக் கொண்டுசெல்ல வெகு விரைவாக நடவடிக்கை எடுத்திருக்கிறார். புயலில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் பலமாகச் சேதம் அடைந்து, பிற பகுதிகளிலிருந்து எல்லா வகையிலும் துண்டிக்கப்பட்டுவிட்டன. கடற்படையின் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலமாக நீரால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன.
புயல் வீசுவதற்கு முன் இரண்டு மாநிலங்களிலும் மீனவர்கள் தங்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், இதர சாதனங்களை விட்டுவிட்டு வர மனமில்லாமல், நீண்ட நேரம் அவற்றின் அருகிலேயே தங்கியிருந்தனர். இனிவரும் காலங்களில் படகுகள், வலைகளை மீனவர் கள் பத்திரமாக வைத்திருக்க அரசே தக்க ஏற்பாடுகளை நிரந்தரமாகச் செய்துதர வேண்டும். மீனவர்களுடைய குடியிருப்புகளையும் புயல், மழைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுவாகக் கட்டித்தர வேண்டியது அவசியம்.
மீட்புப் பணிகள் பாராட்டும் விதத்தில் நடைபெற்றாலும் இது போன்ற பேரிடர் மேலாண்மையில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களைச் சமாளிக்க தேசிய அளவில் கொள்கை வகுக்கப்பட வேண்டியது அவசியம். மக்களுக்கும் மாணவர்களுக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்த வேண்டியது முக்கியம். இயற்கைச் சீற்றங்களுக்கு அடிக்கடி உள்ளாகும் பிரதேசங்களில் மீட்புப் பணிகளுக்குத் தேவையான கருவிகள், வாகனங்கள் போன்றவை எப்போதுமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
புயலைக் காரணமாக வைத்து மனிதாபிமானமே இல்லாமல் நடத்தப்படும் லாபக் கொள்ளை நம்மை அதிரவைக்கிறது. விசாகப்பட்டினத்தில் ஒரு லிட்டர் பால் ரூ.80-க்கும், 10 லிட்டர் தண்ணீர் கேன் ரூ.2,500-க்கும், ஒரு முட்டை ரூ. 15-க்கும் விற்கப்பட்டிருக் கிறது. இதுபோல் எல்லாப் பொருட்களும் பல மடங்கு விலையுயர்த்தி விற்கப்பட்டிருக்கின்றன. இப்படியெல்லாம் லாபக் கொள்ளை அடிப்பவர் களை அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும். உணவுப் பொருட்களையும் இதர அத்தியாவசியப் பொருட்களையும் முடிந்த அளவுக்கு எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அரசும் மக்களும் எப்போதுதான் உணரப்போகிறார்களோ?
- தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
உண்மைதான் எங்கெயெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகின்றதோ அங்கெயெல்லாம் வியாபாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் இப்படி பொருட்களுக்கு கடுமையாக விலையேற்றுவது மனதை வலிக்கத்தான் செய்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் நம்மைப்போன்றவர்கள் என்ற எண்ணமில்லாமல் சுயநலமாக இருக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் நம்மைப்போன்றவர்கள் என்ற எண்ணமில்லாமல் சுயநலமாக இருக்கின்றார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது
» பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
» மரணம் உறுதியானபின்பு ஏற்படும் பயத்தை எப்படி எதிர்கொள்வது?
» இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
» மரணம் உறுதியானபின்பு ஏற்படும் பயத்தை எப்படி எதிர்கொள்வது?
» இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|