Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மரம் பேசுகிறது !
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
மரம் பேசுகிறது !
மரம் பேசுகிறது !
வாருங்கள் மானிடர்களே
வாருங்கள் ....
அடுத்தவர் அவஸ்தையில்
அமிர்தம் உண்ணும்
அன்பற்ற மானிடர்களே வாருங்கள் !
என்ன யோசிக்கிறீர்கள் !
எதற்கு அழைக்கிறான் இந்த
மரமடையன் என்றா ?
பாருங்கள் உங்கள்
பாதத்தின் அடியில்
பாதாளத்தில் பரிதவிக்கும் எம்
புதல்வர்களைப் பாருங்கள் !
அதோ யாரங்கே !
சற்று நிறுத்தப்பா ...
நீ !
அறிவில் ஆதவன் தான்
அதற்காக அந்த
அறிவில்லாதவனை
"மர மடையன்" என்று திட்டதே !
மண்ணோடு காதல் கொண்டு
மழையோடு நட்பு கொண்டு
மாலைத் தென்றலோடு உறவாடும்
நாங்கள் மடையர்களா ? - அல்லது
மண்ணுக்காக மடிந்து
மதுக்காக மானமிழந்து
மாதுக்காக மயங்கும்
நீங்கள் மடையர்களா ?
திருத்திக் கொள்ளுங்கள் உங்கள்
திருவாய் மலர்ந்த வார்த்தைதனை
அவன் 'மர மடையன்' அல்ல
"மனித மடையன்."
ஆண்டு நூறுக்குமுன்
அஸ்தமித்து விடும்
அற்ப மானிடா!
ஆண்டுக்கொரு முறை நீ
அவதரித்த நாளைக் கொண்டாடுகிறாய்.
ஆண்டாண்டு காலமாய் இந்த
அவனியை அலங்கரிக்கும் எங்களுக்கு
“பர்த்டே கேக்” எப்போது செய்யப் போகிறாய்?
தனிக்குடித்தனம் செல்லும்
வாழைகள்....
ஆலைத் தாங்க மறந்த
விழுதுகள்...
முகம் வாடிக் கிடக்கும்
மலர்கள்...
அடுத்தவர்க் குதவா
நாங்கள்...
கற்பனை செய்ய முடியுமா!
பிறகேன் நீங்கள் மட்டும்
இப்படி!
ஆறறிவு கொண்ட உனக்கு
ஐந்தறிவு கொண்ட நான் அறிவுரை சொல்வதா! - இது
இலக்கணத்திற்கு பொருந்தாத
இலக்கியம்.
இனியாவது திருந்துங்கள்.... எங்களை
இந்த உலகில் வாழ விடுங்கள்.
இவ்வளவு கூறியும் அதோ ஒருவன் வருகிறான்...
கையில் எமனோடு...
எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
http://kirukalgal100.blogspot.in/2011/04/blog-post_5.html
Photo Courtesy : Sudharshun Gopalan |
வாருங்கள் மானிடர்களே
வாருங்கள் ....
அடுத்தவர் அவஸ்தையில்
அமிர்தம் உண்ணும்
அன்பற்ற மானிடர்களே வாருங்கள் !
என்ன யோசிக்கிறீர்கள் !
எதற்கு அழைக்கிறான் இந்த
மரமடையன் என்றா ?
பாருங்கள் உங்கள்
பாதத்தின் அடியில்
பாதாளத்தில் பரிதவிக்கும் எம்
புதல்வர்களைப் பாருங்கள் !
அதோ யாரங்கே !
சற்று நிறுத்தப்பா ...
நீ !
அறிவில் ஆதவன் தான்
அதற்காக அந்த
அறிவில்லாதவனை
"மர மடையன்" என்று திட்டதே !
மண்ணோடு காதல் கொண்டு
மழையோடு நட்பு கொண்டு
மாலைத் தென்றலோடு உறவாடும்
நாங்கள் மடையர்களா ? - அல்லது
மண்ணுக்காக மடிந்து
மதுக்காக மானமிழந்து
மாதுக்காக மயங்கும்
நீங்கள் மடையர்களா ?
திருத்திக் கொள்ளுங்கள் உங்கள்
திருவாய் மலர்ந்த வார்த்தைதனை
அவன் 'மர மடையன்' அல்ல
"மனித மடையன்."
ஆண்டு நூறுக்குமுன்
அஸ்தமித்து விடும்
அற்ப மானிடா!
ஆண்டுக்கொரு முறை நீ
அவதரித்த நாளைக் கொண்டாடுகிறாய்.
ஆண்டாண்டு காலமாய் இந்த
அவனியை அலங்கரிக்கும் எங்களுக்கு
“பர்த்டே கேக்” எப்போது செய்யப் போகிறாய்?
தனிக்குடித்தனம் செல்லும்
வாழைகள்....
ஆலைத் தாங்க மறந்த
விழுதுகள்...
முகம் வாடிக் கிடக்கும்
மலர்கள்...
அடுத்தவர்க் குதவா
நாங்கள்...
கற்பனை செய்ய முடியுமா!
பிறகேன் நீங்கள் மட்டும்
இப்படி!
ஆறறிவு கொண்ட உனக்கு
ஐந்தறிவு கொண்ட நான் அறிவுரை சொல்வதா! - இது
இலக்கணத்திற்கு பொருந்தாத
இலக்கியம்.
இனியாவது திருந்துங்கள்.... எங்களை
இந்த உலகில் வாழ விடுங்கள்.
இவ்வளவு கூறியும் அதோ ஒருவன் வருகிறான்...
கையில் எமனோடு...
எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
http://kirukalgal100.blogspot.in/2011/04/blog-post_5.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|