Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்
Page 1 of 1 • Share
பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்
* பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரு நகரங்களான மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து சமதூரத்தில் உள்ளது இக்கோவில்.
* இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.
* தமிழ்க்கடவுளான முருகனை வழிபட கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அருகிலேயே பொள்ளாச்சி அருகே கேரள எல்லை ஆரம்பிப்பதால் கேரளாவில் இருந்து விரதம் இருந்து அதிக அளவு வருகிறார்கள்.
*முதன் முதலில் நேமங்கோவில் குமரப்பன் என்பவர்தான் பழனிக்கு காவடி எடுக்கும் வழிபாட்டை அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து காவடி தூக்கி செல்லும் பாதயாத்திரை முறையை ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திவருவது காரைக்குடி நகரத்தார்கள்தான் என்பது மறுக்க முடியாதது.
* இவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த முறையால் இன்று தென் தமிழகம் முழுவதும் பழனிக்கு காவடி எடுத்து சென்று வணங்கும் பக்தர்களை அதிகப்படுத்தியது.
* பாரம்பரியமிக்க, தெய்வீகமான இந்த பழநி பாதயாத்திரையை முருக பக்தர்கள் யாரும், சாதாரணமான விசயமாக, விளையாட்டாக எண்ணிவிடாமல் உண்மையான பக்தியோடு, உண்மையான கட்டுப்பாட்டோடு மாலையணிந்து, விரதமிருந்து கந்தனை உள்ளன்போடு நினைத்து பழநிக்கு பாதயாத்திரை வந்தால், எம்பெருமான் முருகன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு நல்வழி காட்டுவான் என்பது நம்பிக்கை.
* இங்குள்ள முருகனது சிலை 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில், குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
* முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
* பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திரு ஆவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.
* பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகலிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார்.
* பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
* பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலைச் சார்ந்த 38 - உப கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் கீழ்கண்ட கோயில்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
1. அருள்மிகு திரு ஆவினன் குடி கோயில்
2. அருள்மிகு பெரிய ஆவுடையார் கோயில்
3. அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயில்
4. அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் - ஒட்டன்சத்திரம்
5. அருள்மிகு குறிஞ்சியாண்டவர் கோயில் - கொடைக்கானல்
6. அருள்மிகு இடும்பன் மலைக் கோயில் - பழனி
* 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி பழனி மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* திருவண்ணாமலை போன்றே எண்ணற்ற மகான்கள் இந்த பழனியில் வாழ்ந்திருக்கின்றனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
நன்றி: தினேஷ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்
நல்லதொரு ஆன்மீக தகவல்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» தீ பற்றிய தகவல்கள்!!
» பறவைகள் பற்றிய தகவல்கள்
» பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
» நேய் பற்றிய சில தகவல்கள்
» தீ பற்றிய தகவல்கள்!!
» பறவைகள் பற்றிய தகவல்கள்
» பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
» நேய் பற்றிய சில தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|