தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

View previous topic View next topic Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by ஸ்ரீராம் Thu Feb 13, 2014 4:11 pm

இப்படி இருந்தா, இதே நிலை தொடர்ந்தா...  நம் நாட்டின் நிலை என்ன..?

சென்றமாதம் என்னுடைய வயல் அறுவடையானது
அதில், கதிர் அறுக்கும் எந்திரம் மூலம் அறுவடையான
வயல் போக ஒரு அரை ஏக்கர் நெற்பயிர் பச்சயா இருக்கு
பிறகுதான் அறுக்கமுடியும் என்று சென்றுவிட்டனர் .

சென்றவாரம் அந்த அரை ஏக்கர் நெற்பயிரை அறுப்பதற்கு
கதிர் அறுக்கும் எந்திரம் அனைத்தும், அறுவடை சீசன் முடிந்து
ஆந்திரா, கர்நாடகம் சென்றுவிட்டதால், ஆட்களை
கொண்டு வயலை அறுக்கும் நிலையாகிவிட்டது .

அந்த அரை ஏக்கர் நெற்பயிரை நான்குபேர் மூன்று நாள்
முழு நேர வேலையில் ஒரு ஆளுக்கு ரூபாய் 350 + சாப்பாடு
ரூபாய் 40 = ரூபாய் 390 மொத்தம் 12 ஆட்களுக்கு ரூபாய் 4680
கொடுத்து அறுத்து பண்ணிரண்டு மூட்டை நெல் கிடைத்தது .

ஒரு மூட்டைரூபாய் 700 க்கு நெல் வியாபாரி விலைக்கு வாங்கினார், அதில் எனக்கு கிடைத்தது 700 x 12 = 8400

பயிர் அறுப்பதற்கான கூலி ரூபாய் 4680 போக ரூபாய் 8400 இல்
மீதம் ரூபாய் 3720 கிடைத்தது .

அந்த அரை ஏக்கர் நெற்பயிரை உருவாக்க எனக்கு ஆன
செலவு எவ்வளவு தெரியுமா ..??

விதைநெல்.......................... ரூ. 600
நாற்றங்கால் செலவு .......... ரூ. 700
நாற்றங்கால் உரம் ...............ரூ. 150
நாத்து பறிக்க ....................... ரூ. 700
அரை ஏக்கர் புழுதி உழவு .... ரூ. 500
சேற்று உழவு ....................... ரூ. 600
வயல் நடவு கூலி .................ரூ. 1100
முதல் கலை எடுப்பு ............ரூ. 700
முதல் உரம் ..........................ரூ. 600
பூச்சி கொல்லி தெளித்தது ...ரூ. 450
இரண்டாம் கலை எடுப்பு .....ரூ. 500
இரண்டாம் உரம் ..................ரூ. 600
மூன்றாம் உரம் ....................ரூ. 400
பயிர் அறுப்பதற்கான கூலி ரூ. 4680

மொத்த செலவு ...................ரூ. 12280
நெல் விற்கப்பட்டது .......... ரூ. 8400

நஷ்டம் ................................ ரூ. 3880

ஒரு மூட்டை DAP உரத்தின் விலை .... ரூ. 1200

ரேசன் கடையில் மாதம் பத்து ரூபாய்க்கு இருபது கிலோ
அரிசி கிடைப்பதால், வயல் வேலை செய்ய யாரும்
முன்புபோல நெல்லை கூலியாக பெற மறுக்கின்றனர்
வயல் வேலை செய்ய பணம்தான் வேண்டும் என்கின்றனர்.

திருவையாறு பகுதியில் வயல் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை, சிறிய வேலைக்கு கூட வயலுக்கு உள்ளே போயிட்டு வெளியே வந்தா கூலி 350 + சாப்பாடு 40 = ரூ. 390 கொடுக்கவேண்டியுள்ளது ...

அதை அப்படியே வாங்கி கொண்டுபோய் டாஸ்மாக் கடையில்
கொடுத்து சாராயம் குடித்துவிடுகின்றனர் ...

அருகில் இருக்கும் ஆறுகளில் அதிக அளவு மணல் எடுப்பதால்
நிலத்தடி நீர் சென்ற ஆண்டு 200 அடியில் இருந்து வந்த ஆழ்குழாய் கிணற்று நீர் தற்போது 300 அடிக்கு மேல் சென்றுவிட்டது ...

விட்டு விட்டு வரும் மின்சாரத்தில் குறைந்த அளவு தண்ணீர்
மட்டுமே கிடைக்கிறது, அது நெல் விவசாயம் செய்ய
போதுமானதாக இல்லை ....

இவ்வளவு கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு நான் நெல் விவசாயம்
செய்ய வேண்டுமா ....???

இந்த வருடத்தில் இருந்து என் வீட்டுக்கு மட்டும் கொஞ்சம் நெல் பயிரிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்

எனக்கு மட்டும் அல்ல ....நெல் பயிர் செய்யும் அணைத்து
விவசாயிக்கும் இதே நிலைதான் .....

விவசாயியை பாதுகாக்காமல், எவ்வளவு நாளைக்கு பத்து ரூபாய்க்கு இருபது கிலோ அரிசி கொடுக்கமுடியும் ...?

இதே நிலை நீடித்தால் என்ன ஆகும் .... ?   

நன்றி: இன்று ஒரு தகவல் பக்கம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by ஜேக் Thu Feb 13, 2014 4:53 pm

இன்று வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டை பார்க்கவும்.

அதுவுமல்லாமல் ... தேர்தல் வர இருப்பதால் எல்லா கடன்களையும் வழக்கம் போல் தள்ளுபடி செய்து விடுவார்கள்.

நிறைய சலுகைகள் அம்மா தந்திருக்கிறார்கள்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by மகா பிரபு Thu Feb 13, 2014 4:54 pm

மிகவும் உண்மை.. உணவு சண்டை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by ஸ்ரீராம் Thu Feb 13, 2014 4:56 pm

உண்மைதான் தம்பி, ஒவ்வொரு ஆண்டும் நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கேன்...........................................
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by மகா பிரபு Thu Feb 13, 2014 4:57 pm

இதில் மழை இன்மை, மின்தட்டுபாடு ஒரு பெரிய பிரச்சனை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by mohaideen Thu Feb 13, 2014 6:30 pm

சேத்தில் கால் வைத்தால்தான் சோத்தில் கைவைக்கமுடியும் என்று பாட்டளவில் மட்டுமே அவர்களை கண்ணியம் செய்கிறோம். உண்மையில் அவர்களின் நிலை ?????????????
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by kanmani singh Fri Feb 14, 2014 12:23 pm

பதிவு படித்ததும் மனது காரணமில்லாமல் கலங்குகிறது நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by செந்தில் Fri Feb 14, 2014 3:58 pm

சோகம் சோகம் சோகம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by padmavathyveeravagu Sat Feb 15, 2014 11:26 am

இப்படி கஷ்டப்பட்டு ஏன் விவசாயம் செய்யவேண்டுமென்று நினைத்துத்தான் பல விவசாயிகள் தங்களுடைய விளை நிலத்தை விற்றுவிடுகிறார்கள்
padmavathyveeravagu
padmavathyveeravagu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by ஸ்ரீராம் Sat Feb 15, 2014 11:36 am

kanmani singh wrote:பதிவு படித்ததும் மனது காரணமில்லாமல் கலங்குகிறது நண்பா..

உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான்!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by முழுமுதலோன் Sat Feb 15, 2014 11:43 am

ஸ்ரீராம் wrote:இப்படி இருந்தா, இதே நிலை தொடர்ந்தா...  நம் நாட்டின் நிலை என்ன..?

? தான் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.  Empty Re: ஒரு விவசாய நண்பரின் ஆதங்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum