Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முன்னோர் வழங்கிய மூலிகை: நல்ல வேளை
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
முன்னோர் வழங்கிய மூலிகை: நல்ல வேளை
ஆனந்தம் பொங்கி அறிவோடு
இருப்பவர்க்கு குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி?
எந்த ஒரு செயலை செய்யும் போதும் நல்லவேளை பார்ப்பது நடைமுறை. நல்லவேளை என்பது நல்ல காலம் எனலாம். நமக்கு நல்ல காலத்தை கொடுக்கும், ஒரு மூலிகை தான் (Cleome Gynandra) நல்லவேளை. நீண்ட காம்புடன் விரல்கள் போல விரிந்து இருக்கும். கிளையில் வாசனை நிரம்பிய இலைகளை கொண்டது. சிறிய வெண்ணிற மலர்கள் பூக்கும். சில இடங்களில் வெண்மையும் கரும் சிவப்பு கலந்தும் காணப்படும். தமிழகம் முழுவதும் சாலையோரம் மற்றும் வயல் வரப்புகளில் தழைத்து கிடக்கும் குறுஞ்செடி இதுவாகும். தை வேளை எனப்பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
நல்லவேளைப்பூண்டை நாடுங்கால் வாதமும்
சொல்லுமை யத்துடனே சோபையறும்- மெல்ல மெல்ல
தக்கவன லும்பித்துந் தானெரும்புஞ் சாந்தமின்றி
அக்கரநோய் மிஞ்சுமறி என்கிறது அகத்தியர் குணபாடம்.
இதன் இலையானது தலை நோய், குடைச்சல், மார்பு வலி, சோபை நீக்கும். பசியை உண்டாக்கும். இதன் பூவானது கோழையை அகற்றி பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது.. விதைகள் இசிவு அகற்றும். குடல் வாயு அகற்றியாகவும் செயல்படும். சிலருக்கு தீராத தலைப்பாரம் இருந்து கொண்டே இருக்கும். வேதனை தாங்காமல் சுவற்றில் போய் தலையை முட்டுவார்கள். அவர்கள் நல்லவேளை செடியை கொண்டு வந்து முழுமையாக இடித்து சாறை பிழிந்து விட்டு சக்கையை தலையில் வைத்து துணியால் கட்டி கொண்டால் பாரம், தலை குடைச்சல் தீரும்.
வாழ்வில் எத்தனையோ செல்வங்கள் வந்தாலும் சந்தேகம் என்ற நோய் வந்தால் நிம்மதியாக வாழமுடியாது. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சந்தேகநோய், அவர்களை மனநோயாளியாகவே மாற்றிவிடும். இதன் இலையை பறித்து அதனுடன் அரைக்கீரையை கலந்து சாப்பிட்டு வந்தால் சந்தேகநோய் போகும். மனம் அமைதியடையும். இலையை ஒருபிடி எடுத்து சுக்கு ஒரு துண்டு 6 மிளகு, சீரகம் ஓரு சிட்டிகை எடுத்து ஓன்றிரண்டாக சிதைத்து அரைலிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக சுண்ட காய்ச்சி எடுத்து அதில் வேளைக்கு 50மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் வாதசுரம், சீதளச்சுரம் போகும்.
காதில் சீழ் வடிதலை போக்க நல்லவேளை இலை சாற்றை ஒன்று அல்லது இரண்டு சொட்டு விடலாம். இலையை குழம்பு, சாம்பார் செய்து சாப்பிட்டால் வாயு நோய் போகும். பூவை நெய் விட்டு வதக்கி துவையல் செய்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் கபம், கணை மாந்தம், சளி நிறைந்து மூச்சுத்திணறல், சுரம் நீர்க்கோவை ஆகியவற்றுக்கு பூவின் சாற்றை எடுத்து மெல்லிய துணியில் வடிகட்டி பாலாடை அளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்கலாம். சீழ் பிடித்த கட்டிகள் உடையாமல் இருந்தால் இலையை அரைத்து பற்றுபோட்டால் கட்டி உடைந்து ஆறும்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பெரிதும் தொல்லை கொடுக்ககூடியது தட்டை புழுக்கள். மலக்குடலில் உள்ள இவை ஆசன வாய் வழியாக வெளியேறும் போது கடும் அவஸ்தை ஏற்படுத்தும். அதற்கு நல்லவேளை விதையை நெய் விட்டு வதக்கி பொடித்து சிறுவர்களுக்கு அரை கிராம், பெரியவர்களுக்கு 4கிராம் அளவில் காலை மாலை கொடுக்க வேண்டும். 4ம் நாள் அதிகாலையில் விளக்கெண்ணெயை பேதிக்கு கொடுக்க குடலில் உள்ள தட்டை புழுக்கள் அழியும். சில புண்கள் ஆறாமல் புழு வைத்து துன்பப்படுவார்கள் அதற்கு விதையை அரைத்து எலுமிச்சை சாறு விட்டு புற்றுபோட புழுக்கள் மடிந்து புண் ஆறும்.
நல்லவேளை மூலிகை நன்மையை தரக்கூடிய மூலிகையாகும்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: முன்னோர் வழங்கிய மூலிகை: நல்ல வேளை
புதிய தகவல்.பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» முன்னோர் வழங்கிய மூலிகை: நாய் வேளை
» முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை
» முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்
» முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி
» முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி
» முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை
» முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்
» முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி
» முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|