Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
வீடு கட்ட அவசியமான கட்டுமானப் பொருட்களின் விலை குறித்து அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறோம். விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். எங்கே விலை மலிவாக உள்ளது எனப் பல இடங்களில் விசாரிக்கிறோம். விலை குறைவாக இருந்தால் எவ்வளவு தூரம் என்றாலும் பரவாயில்லை அங்கேயிருந்து கட்டுமானப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து விடுகிறோம். பொருளாதார ரீதியாகப் பார்த்தால் இது சரிதான். ஆனால் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இது சிக்கலானது என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். ஏனெனில் கட்டுமானப் பொருட்களை அதிக தூரத்திலிருந்து வாங்கும்போது அந்தப் பொருட்களைக் கொண்டுவர போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயற்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனத் தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள்.
உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் எந்தப் பகுதிக்கும் பொருட்களைக் கொண்டுசெல்லலாம் என்ற வாய்ப்பின் காரணமாக உள்ளூர் பொருட்களை யாரும் பெரிதாகக் கொள்வதில்லை. கட்டுமானப் பொருட்களை வெளியில் இருந்து வாங்கி வீட்டைக் கட்டும் செலவைக் குறைத்துவிட்டால் போதும் என்று செயல்படும்போது சுற்றுச்சூழலைக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறோம். இது சரியான செயலல்ல என எச்சரிக்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள். ஏனெனில் கட்டுமானப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து தொலைதூரத்திலுள்ள மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு அதிகப்படியான வேலைகள் தேவைப்படுகின்றன. அவற்றை பேக்கிங் செய்ய வேண்டும், வாகனங்களில் அனுப்ப வேண்டும், சந்தைப்படுத்த வேண்டும், அதற்குரிய பணியாளர்கள், இணையத்தின் மூலம் பெற்றால் அது தொடர்பான பணிகள் என அநேகர் அந்தப் பணியுடன் தொடர்புபடுவார்கள். இதற்குத் தேவைப்படும் மொத்த சக்திக்கான செலவை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது ஒருவேளை உள்ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையைவிட வெளியிலிருந்து வாங்கும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாக ஆகலாம். ஆனால் தற்போது நம்மிடம் இருக்கும் வழிமுறைகள் மூலம் இந்த மொத்த ஆற்றலையும் அதற்கான செலவையும் சரிவரக் கணக்கிட முடியவில்லை.
தொலைதூரத்திலிருந்தோ அல்லது வெளிநாட்டி லிருந்தோ கட்டுமானப் பொருட்களை வாங்கும் போது இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஓரிடத்தின் தட்பவெப்ப நிலை சார்ந்த பொருட்கள் அந்தப் பகுதியிலேயே கிடைக்கும். அதைவிடுத்து அந்தத் தட்பவெப்பத்திற்குத் தொடர்பு இல்லாத கட்டுமானப் பொருட்களை விலை மலிவு என்பதற்காக வாங்கினால் அதனால் தீங்கு ஏற்படக் கூடும். வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் உள்ள பொருட்கள் குளிர் மிகுந்த பகுதியின் கட்டுமானப் பொருள்களை விலை குறைவு என்று வைத்துக்கொள்ளுங்கள்.
விலை மலிவு என்பதற்காக வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களை வாங்கிக் குளிர் நிலவும் பகுதியில் வீடு கட்டினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
உலகமயமாக்கல் காரணமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் கிடைக்கும் பொருளை விலை மலிவு என்பதற்காக நாம் வாங்கத் தொடங்கினால் நம்மையே நம்பி உள்ளூரில் கட்டுமானப் பொருட்களை உற்பத்திசெய்வோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் உள்ளூர்த் தொழில் சரிவடையும், தேசத்திற்கு அது பாதிப்பு ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு உள்ளூர் பொருட்களை வாங்கும்போது மட்டுமே நம்மால் இயற்கைக்கு சேதாரமற்ற வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். பசுமைக் கட்டிடத்தை அமைக்க 600 கி.மீ. தூரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்தே கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டும் எனச் சுற்றுச்சூழலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகவே நீடித்து நிற்க வேண்டிய நமது கட்டிடத்திற்கு அதிக ஆயுளை வழங்கக்கூடிய வகையில் தயாராகும் உள்ளூர்க் கட்டுமானப் பொருட்களை நாம் ஆதரிக்க வேண்டிய தருணம் இது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
அருமை
தகவலுக்கு நன்றி நண்பரே
தகவலுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
அடேங்கப்பா .. அருமையான தகவல்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
பலபேரை பலி கொடுத்த பின்னர்தான் ஞானம் உதயமாகிறது மனிதனுக்கு...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
வணக்கம் ஜேக்ஜேக் wrote:பலபேரை பலி கொடுத்த பின்னர்தான் ஞானம் உதயமாகிறது மனிதனுக்கு...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கண் வலி கவனம் தேவை
» மொபைல் போன் கவனம் தேவை
» கடன் வாங்குவதில் கவனம் தேவை!
» நகப் பராமரிப்பு: கவனம் தேவை
» இதில் எல்லாம் கவனம் தேவை!
» மொபைல் போன் கவனம் தேவை
» கடன் வாங்குவதில் கவனம் தேவை!
» நகப் பராமரிப்பு: கவனம் தேவை
» இதில் எல்லாம் கவனம் தேவை!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|