Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அஜீரணமா?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1 • Share
அஜீரணமா?
[You must be registered and logged in to see this image.]
உணவே மருந்து. நமது முன்னோர்கள் உணவு பழக்கத்தை இயற்கையோடு இணைத்து ஆரோக்கியம் கலந்தே வைத்திருந்தனர். உவர்ப்பு, துவர்ப்பு, எரிப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு என வகைப்படுத்தியே வைத்திருந்தனர். தற்போதும் கூட திருமண வீடுகள் மற்றும் திருவோண விருந்தில் இந்த அறுசுவை விருந்தை காணலாம். இதுபோன்ற உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு காய்கறியும், சமையலில் சேர்க்கும் உணவு மூலப் பொருட்களும் ஜீரண சக்தி, சிறுநீரகம் செயல்பாடு, கண், எலும்பு வலிமை, ரத்த சுத்திகரிப்பு, மூளை வளர்ச்சி, சுறுசுறுப்பு, கண் பார்வை, தாது உற்பத்தி என ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்களை கொண்டு இருக்கும்.
மேலும் உணவு உட்கொள்ளும் போதும் பருப்பு, சாம்பார், புளிசேரி, ரசம், பாயாசம், மோர் என ஜீரணத்தை மையப்படுத்தியே உண்ணும் முறை இருக்கும். காய்கறி கூட்டும் இதேபோன்று இலைகளில் வைக்கப்படும். உணவை பதட்டமின்றி நிதானமாக மென்று தின்ன வேண்டும். ஆனால் தற்போது இதில் எதையும் நாம் பின்பற்றுவதில்லை. கால மாற்றம் காரணமாக நாம் தற்போது உண்ணும் உணவிலும் துரிதம் கருதி துரித உணவுகளை பழக்கத்தில் கொண்டு வந்து விட்டோம்.உடலுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற துரித உணவுகள் காரணமாக நமது ஆரோக்கியம் கெட்டு அவஸ்தைகளை, அனுபவித்து ஆயுளையும் நமக்கு நாமே குறைத்து விடுகிறோம்.
ரெடிமேட் தோசை மாவு, பாக்கெட்டில் பதப்படுத்தப்பட்ட சப்பாத்தி, புரோட்டா, மாமிசம், நூடுல்ஸ் என சில நிமிடங்களில் சமைத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு பறக்கும் காலமாக மாறி விட்டது. குழந்தைகளும் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சிப்ஸ்கள், பேக்கரிகளில் விற்கப்படும் பீட்சா, பர்கர், ஹாட்டாக் போன்ற துரித உணவுகளை உண்பதால் சின்னஞ்சிறு வயதிலேயே சர்க்கரை, உடல் பருமன் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இதேபோல் வயது வித்தியாசமின்றி அனைவரின் தினசரி மெனுவாக புரோட்டா உள்ளது.
தற்போது புரோட்டாவின் மூலப் பொருளாக மைதா தயாரிப்பும், மெல்ல கொல்லும் வெள்ளை விஷமான மைதா பற்றி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், மது போதை போல் நம்மில் பலரும் புரோட்டாவிற்கு அடிமையாக கிடக்கிறோம். இதற்கேற்ப கிராமப்புறங்களில் இட்லி கடைகளுக்கு பதிலாக புரோட்டா கடைகளே மிகுந்து காணப்படுகின்றன.இதுபோன்ற தவறான உணவு பழக்கத்தால் வயிற்றுவலி மட்டுமின்றி சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், உறக்கமின்மை என பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு சிறு வயதிலேயே ஆட்படுகிறோம். இதனால் ஆயுள் முழுவதும் நோயுடன் காலம் தள்ள வேண்டிய துர்பாக்கியத்தை நாமே உருவாக்கி கொள்கிறோம்.
சில நேரங்களில் இதற்காக சாப்பிடுகின்ற மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதுபற்றி ஆயுர்வேத மருத்துவகல்லூரி உதவி பேராசிரியர் கிளரான்ஸ் டேவியிடம் கேட்ட போது, உணவு ஜீரணத்தை ஆயுர்வேதம் 7ஆக பிரித்துள்ளது. நாம் உண்ணும் உணவு உடலில் அக்னியில் எரிந்து சத்தாக ரத்தம், சதை, எலும்பில் சேருவதையும், கழிவாகவும் பிரிதலே ஜீரணம் என்கிறோம். முதலில் ரசமாகவும், பின்னர் ரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி(எலும்பு), மஜ்ஜா, சுக்கிலம் என 7 ஆக வரிசையாக பிரிகிறது.
இதில் தவறான உணவுகளால் மேதஸ் பகுதியில்தான் பிரச்னை உருவாகும். இதனால் வயிறு பெருமல், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகளும், முற்றிய நிலையில் வயிற்று புண், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூலம் போன்ற பல்வேறு நோய்கள் உருவாகின்றன.ஆரம்ப கால அறிகுறியாக வாய் துர்நாற்றம், நாக்கில் வெள்ளை படிதல், கழிவறையில் மலம் கழிக்கும் போது தண்ணீரில் உடனடியாக அடியில் போதல், கழிவறை கோப்பையில் மலம் ஒட்டிக் கொண்டிருத்தல் போன்றவையும் ஆரம்ப அறிகுறிகள் தான். ஆயுர்வேதத்தை பொறுத்தவரை, ருத்வர்த்தனம் என்ற மருந்து பொடியை கொண்டு மசாஜ், நீராவி குளியல் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சையும், வயிற்றினை சுத்தம் செய்து அதன்பின் மருந்துகள் உட்கொள்ள தந்து குணமாக்குவது போன்றவை உள்ளது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|