Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இயேசுவின் பார்வையில் பெண்கள்
Page 1 of 1 • Share
இயேசுவின் பார்வையில் பெண்கள்
ஒரு சில சமயங்களைத் தவிர, உலகிலுள்ள பெரும்பான்மை சமயங்கள் பிரபஞ்ச நாயகன் என்ற ஏக இறைவனையே சென்று அடைகின்றன. கிறிஸ்தவம் அந்த ஏக இறைவனை யெகோவா என்ற பெயரால் அழைக்கிறது. யெகோவா தேவன் தன்னையே மனித குலத்தின் மீட்புக்காக மேற்கொண்ட இறைமகன் அவதாரமே இயேசு கிறிஸ்து என்கிறது கிறிஸ்தவத்தின் தாய் மதமான கத்தோலிக்கம். ஏக இறைவனாகிய தந்தை யெகோவா என்றாலும் அவரது அவதாரமாகிய இயேசு கிறிஸ்து என்றாலும் தந்தை, மகன் ஆகிய இவர்களது பார்வையில் பெண்களை எப்படிக் கருதினார்கள் என்பதற்கு இயேசுவின் வாழ்விலிருந்து நாம் பல உதாரணங்களைக் காணலாம். அவர் பெண்களிடம் பழகிய விதமும், பெண்கள் மீதான அவரது கனிவும், மதிப்பும், கருணையும் சமத்துவம் நிறைந்த அணுகுமுறையும் இதை எடுத்துக்காட்டும். ஏனெனில் இயேசு என்பவர் ‘தேவனுடைய தற்சொரூபமாகவும்,' ஒவ்வொரு விஷயத்திலும், கடவுள் எப்படி நடந்திருப்பாரோ, அப்படியே நடந்துகொள்பவராகவும் இருக்கிறார்' (கொலோசெயர் 1:15) என்ற வசனங்களை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த வசனங்களின்படியே இயேசு நடந்து கொண்டதையும் அவரது வாழ்வு நமக்குக் காட்டுகிறது.
கிணற்றடியில் இயேசு
மனு மகன் இயேசு ஊரின் பொதுக் கிணற்றின் தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் பேசிய சம்பவத்தைப் பாருங்கள். சமாரியா நாட்டாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள், இயேசு அவளை நோக்கி தாகத்துக்குத் தண்ணீர் கொடு என்றார் என்பதாக யோவான் நற்செய்தி கூறுகிறது. யூதர்களில் பெரும்பாலும் சமாரியர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அது அன்றைய யூதேயாவில் நிகழ்ந்த சாதிய ஏற்றத்தாழ்வு அடுக்குமுறையின் தாக்கமாக இருக்கலாம். ஒரு சமாரியப் பெண்மணியிடம் பொது இடத்தில் பேச இயேசு தயங்கவில்லை. ஆனால் பொது இடத்தில் ஒரு பெண்ணுடன் பேசுவதை வெட்கங்கெட்ட செயலாக பழமைவாத யூதர்கள் கருதினார்கள். ஆனால் துருப்பிடித்த பழமையைக் காலில் போட்டு மிதிக்க வந்த இயேசு, பெண்களை மரியாதை யுடன் நடத்தினார். மேலும் சாதி மற்றும் இன வேறுபாடு காட்டவில்லை. மிக முக்கியமாக அவர் ஆண் - பெண் பாகுபாடே பார்க்கவில்லை.
மகளென்ற உறவு
மற்றொரு சம்பவத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளாகக் கடும் இரத்தப்போக்கால் துயர வாழ்வு வாழ்ந்து வந்த ஒரு பெண், இயேசு வீதியில் வருவதைப் பார்த்து, ஓடிச் சென்று அவரைத் தொடுகிறாள். அந்த வினாடியே அவள் குணமடைந்தாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடம்கொள், உன் நம்பிக்கை உன்னை மீட்டது என்றார். (மத்தேயு 9:22) யூத மண்ணில் அன்று நிலவிய பொதுச்சட்டத்தின்படி, மாதவிலக்கு ஒரு நோய்க்கூறாகி அவதிப்படும் பெண்கள், மக்கள் நடமாடும் பொது இடங்களுக்கு வரக் கூடாது, தவறி வர நேர்ந்தால் யாரையும் தொடக் கூடாது. ஆனால், பொது இடத்தில் தன்னைத் தொட்டு குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு கோபப்படவில்லை. மாறாக, ஆறுதலாய்ப் பேசி, அவளைக் கனிவுடன் “மகளே” என்று அழைத்தார். அந்த வார்த்தை ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தில் ஒருத்தியாய் இருந்த அந்தப் பெண்மணிக்கு எத்தனை ஆறுதலைத் தந்திருக்கும்!
முதல் காட்சி பெண்ணினதுக்கே!
இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வு மரணத்தை அவர் வெற்றி கொண்டது. தாம் சொன்னபடியே சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார். அவ்வாறு உயிர்த்தெழுந்த பின் மகதலேனா மரியாள் என்ற பெண்ணுக்கும் ‘மற்ற மரியாள்' என விவிலியம் குறிப்பிடும் ஒரு பெண்ணுக்கும் முதல் காட்சியைத் தருகிறார். அவரது முதன்மைச் சீடர்கள் என்று கருதப்படும் பேதுருவுக்கோ யோவானுக்கோகூட அவர் தனது முதல் தரிசனத்தைத் தந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. தனது உயிர்த்தெழுதலை முதலில் காணும் வாய்ப்பைப் பெண்களுக்குத் தருவதன் மூலம் இயேசு அவர்களைக் கௌரவப்படுத்தினார்.
காட்சிதந்த இயேசு அந்தப் பெண்கள் இருவரையும் நோக்கி, 'நீங்கள் போய், என் சகோதரருக்குச் சொல்லுங்கள்' என்று அந்தப் பெண்களிடம் சொன்னார் (மத்தேயு 28:1, 5-10). நீதிமன்றத்தில் பெண்கள் சாட்சி சொன்னால் அதை யூதச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது. பெண்களை இத்தனை பாகுபாட்டுடன் நடத்திய அதே யூத இனத்தில் தோன்றியே இயேசுவே பெண்களை தேவசாட்சிகளாய் மாற்றி ஆணுக்கு இணையானவள் பெண் என்று காட்டுகிறார். நாம் நமது தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, தோழியை, சக பெண்களை எப்படிப் பார்க்கிறோம்? இதுவரை இது குறித்து சிந்திக்கா விட்டால், இனி சிந்திக்கவும் செயல்படவும் இதை ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள். இயல்பாகவே நீங்கள் பெண்களை மதிப்பவர் எனில் நீங்கள் இறைவனின் கரங்களில் பத்திரமாய் இருப்பவர்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர்கள்
» இயேசுவை ஒரு முறை கூட பார்த்திராமல் இயேசுவின் சீடராக இருந்தவர்
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» அபு தாபி – ஒரு பறவையின் பார்வையில்
» மதுப்பழக்கம்---மருத்துவர்களின் பார்வையில்.
» இயேசுவை ஒரு முறை கூட பார்த்திராமல் இயேசுவின் சீடராக இருந்தவர்
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» அபு தாபி – ஒரு பறவையின் பார்வையில்
» மதுப்பழக்கம்---மருத்துவர்களின் பார்வையில்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|