தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நரகத்திலிருந்து காக்கும் கேடயம்!

View previous topic View next topic Go down

நரகத்திலிருந்து காக்கும் கேடயம்! Empty நரகத்திலிருந்து காக்கும் கேடயம்!

Post by நாஞ்சில் குமார் Thu Jul 24, 2014 10:35 pm

நரகத்திலிருந்து காக்கும் கேடயம்! 6r7ehg


புண்ணியம் பூத்துக் குலுங்கும் கண்ணியம் மிக்க ரமலான் மாதம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

ரமலான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாக விளங்குவதோடு, நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது.

எனவே, “”உங்களில் எவர் இஸ்லாம் மதத்தை அடைகிறீர்களோ அவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்” என்று திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ளது.

“”ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப் படுகின்றன. சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன” என்றார் நபி (ஸல்).

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில், ஓர் இரவு “லைலத்துல் கத்ர் இரவு’ என அழைக்கப்படுகிறது. இந்த இரவில்தான் முதல் முறையாக திருக்குர்ஆன் அருளப்பட்டது. “அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்’ என இறைவன் தனது திருமறையின் 97ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.

“ரமலான் மாதக் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றைப் படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ என்றார் நபி(ஸல்) அவர்கள்.

ரமலான் மாதம், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நான்கினைச் செவ்வனே நிறைவேற்றும் சிறப்பான மாதம். அதுமட்டுமின்றி வறியவர்களுக்கு வாழ்வளிக்கும் வளமான மாதம் இது. இறையருள் கிட்டும் இனிய மாதம். மேலும் இம்மாதத்தில் திருக்குர்ஆனை அருளியதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு நோன்பை இறைவன் கட்டாயக் கடமையாக்கி உள்ளான்.

முதியவர்கள், முதுமையின் காரணமாக நோன்பை நிரந்தரமாக விட்டுவிடவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதியவர்களில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியமாகும். வசதியற்ற முதியவர்கள் ஏழைக்கு உணவு வழங்கத் தேவையில்லை.

“”இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோர் ஆகலாம்” என்கிறது திருக்குர் ஆன்.

நோன்பு நோற்பதன் நோக்கம் பற்றி இறைவன் குறிப்பிடுகையில், “”மனிதனின் உடலும், உள்ளமும் தூய்மையடைந்து இறையச்சமுடையவனாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” என்கிறான்.

தீய நடத்தைகளில் இருந்து மனிதனைத் தடுப்பது இறை அச்சம். மனிதன் மன இச்சைகளுக்கு அடிமைப்பட்டு, தான் விரும்பியவாறெல்லாம் வாழ நினைக்கிறான். மனிதனின் மனதைப் பயிற்றுவிப்பதும், சீர்படுத்துவதும் கஷ்டமான காரியம். நோன்பு என்பது மனிதனின் எண்ணங்களையும் கிளர்ச்சி மனப்பான்மையையும் அடக்கி, ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது.

குழப்பத்தின் இரு வாயில்களான வாயையும், வெட்க உறுப்பையும் நோன்பு கட்டுப்படுத்துகிறது. வம்புச் சண்டைக்கு வருபவரிடம், “”நான் நோன்பாளி” எனக் கூறி ஒதுங்குவதன் மூலம் பொறுமைக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அற்புதங்கள் நிகழ்த்துவது ஆன்மீக வளர்ச்சி அல்ல! உள்ளங்களில் உதித்தெழும் மனோ இச்சைகளை அடக்கி, உடலின் திறமைகளை, சிந்தனை ஆற்றலை சரி வரப் பயன்படுத்துவதே உண்மையான ஆன்மீக வளர்ச்சி ஆகும்.

“”நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும்”
“”சொர்க்கத்தில் “ரய்யான்’ என்ற வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் மட்டும் அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறார்களோ அவர்களுக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது”

மேற்சொன்ன நபிமொழிகள் நோன்பின் சிறப்புகளை உணர்த்துகின்றன.

நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நரகத்திலிருந்து காக்கும் கேடயம்! Empty Re: நரகத்திலிருந்து காக்கும் கேடயம்!

Post by ஸ்ரீராம் Fri Jul 25, 2014 7:05 pm

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum