தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி

View previous topic View next topic Go down

காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி Empty காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி

Post by நாஞ்சில் குமார் Fri Sep 12, 2014 10:38 pm

காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி Etzjg3


வெள்ள பாதிப்புகளில் இருந்து காஷ்மீர் மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அம்மாநிலத்தின் ஹைதர்பொரா மசூதி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள் அனைத்து மத மக்களுக்கும் அடைக்கலம் தரும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த ஹைதர்பொரா மசூதி இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் முகாமாகவும் இருக்கிறது.

காஷ்மீரின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஹைதர்பொரா பகுதி மட்டும் ஓரளவு தப்பியுள்ளது. பல பகுதிகளிலிருந்து வெள்ளத்தின் தாக்கத்தால் அடித்து செல்லப்பட்டு, மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டவர்கள் மனதில் வலியுடன் இந்த மசூதியில் தற்போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்து வருகின்றனர்.

துயரம் மிக்க அனுபவங்கள்:

நிலமாக இருந்த தங்கள் பகுதிகளை மழை-வெள்ளம் திடீரென சூழ்ந்து கடல் பரப்பாக மாற்றியதையும், இதிலிருந்து மீண்டுவிட முடியாது என்று இருந்த நிலையில், எல்லையிலிருந்து வந்த ராணுவ வீரர்கள் தங்களைக் காப்பாற்றிய விதத்தை இவர்களால் தற்போது யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அரசு பணியாளரான 58 வயது பஷீர் அகமது கூறும்போது, "நானும் எனது குடும்பத்தினரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை எங்களது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தோம். தண்ணீர் சூழ்ந்து கொண்டிருந்த வேகத்தில் எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அதுதான். அங்கிருந்து நேராக படகில் ஏறி இந்த மசூதிக்கு வந்து அடைந்தோம். இன்று வரை இங்குதான் இருக்கிறோம்" என்றார்.

கலீதா அக்தர். இவருக்கு வயது 60. தனது 6 குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு தெங்புராவில் மூழ்கிய தனது வீட்டை விட்டு இந்த மசூதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

"முதலில் நாங்கள் அருகே இருந்த மருத்துவமனையில்தான் தங்கினோம். ஆனால் அந்தக் கட்டிடமே இடிந்து விழக் கூடிய நிலையில் இருந்தது. அந்த அச்சத்திலேயே அங்கிருந்த பலரை, பல சமூகத்தினரை ஞாயிறு அன்று நள்ளிரவு ராணுவம் வந்து மீட்டு இங்கு அழைத்து வந்தது. இங்கு பாதுகாப்பான சூழலில் இருப்பதை பார்த்துதான் நாங்கள் பெருமூச்சிவிட்டோம். இருப்பிடம் இன்றி தவித்தவர்களுக்கு இடம் அளித்த மசூதி அதிகாரிகளுக்கு நன்றி கூற வேண்டும்" என்றார் கலீதா.

இடையே குறுக்கிட்ட கலீதாவின் மகன், "அந்த இரவு எங்களையும் சேர்த்து 2000 பேருக்கு ராணுவம் உதவி அளித்தது. காவல்துறையினருக்கு மிக பெரிய உதவியாக ராணுவத்தினர் எங்கிருந்தோ வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு எங்கள் உயிரையே காணிக்கையாக கொடுத்துவிடலாம் என்று இப்போது தோன்றுகிறது" என்றார்.

தொலைந்த உறவுகளை இணைத்த மசூதி

தச்சர் வேலை பார்க்கும் மோத் ஆஸிப் (26), தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாகில் உள்ள தனது உறவினரை பார்க்கச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பும்போது இது சாதாரணமான மழை இல்லை என்று அவருக்குத் தோன்றியது. உடனடியாக வீட்டிற்கு வந்து சேர நினைத்து புறப்பட்டால், அனைத்து சாலைகளும் மாயை போல தண்ணீரால் மூழ்கின. காட்டுப் பகுதியில் தனக்கு தெரிந்த வழியாக மூன்று நாட்கள் நடந்து தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார் ஆஸிப்.

ஆனால், திரும்பி வரும்போது தனது குடும்பத்தினர் யாரும் இல்லை. எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அங்கு சிக்கியிருந்த சிலர் மட்டும், "யாராவது காணாமல் போனால், ஹைதர்பொரா மசூதிக்கு சென்று தேடுங்கள். அதுதான் இப்போது பாதுகாப்பான பகுதி" என்றனர்.

ராணுவத்தினரின் உதவியோடு ஹைதர்பொரா மசூதிக்கு வந்து சேர்ந்த ஆஸிப், நூற்றுக்கும் அதிகமானோர்களில் தனது தந்தை, தாய் மற்றும் இரண்டு சகோதரிகளை கண்டுபிடித்தார். அடுத்த நாளில், மசூதியை சார்ந்து இருந்த நூற்றுக்கணக்கான எண்ணிக்கை ஆயிரக்கணக்காக மாறியுள்ளது.

தற்போது, இந்த மசூதியில் உள்ளூர் மக்களால் சமூக சமையலறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலரால் வழங்கப்படும் நிவாரண பொருட்கள், உடைகள் என அனைத்தையும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

தினமும் இங்கு சுமார் 2,400 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாகவும், இதில் பாராமுல்லா, குப்வாரா, சபூர் ஆகிய பகுதிகளின் பல்வேறு சமூக மக்கள் ஒன்றாக வசிப்பதாகவும் மசூதியின் நிர்வாகத் தலைவர் ஹாஜி குலாம் நபி தர் கூறுகிறார்.

"வெள்ளத்தின் அபாயகரத்தை கண்டு நாங்கள் இந்தச் சமூக சமையலறையை உருவாக்கினோம். இதில், அரசின் பங்கு ஒன்றுமே இல்லை. இதனால் மக்களுக்கு அரசின் மீது கோபம் குறையாமல் உள்ளது" என்றார் ஹாஜி குலாம்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி Empty Re: காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி

Post by b.rajan Sat Sep 13, 2014 12:40 pm

மதங்களை தாண்டியது மனித நேயம் கைதட்டல்
b.rajan
b.rajan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

Back to top Go down

காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி Empty Re: காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 1:20 pm

b.rajan wrote:மதங்களை தாண்டியது மனித நேயம் கைதட்டல்
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி Empty Re: காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி

Post by செந்தில் Sat Sep 13, 2014 1:26 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி Empty Re: காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum