Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இணையதளம் மூலம் ஒரு இணையற்ற சேவை: 9 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு ரத்ததானம்
Page 1 of 1 • Share
இணையதளம் மூலம் ஒரு இணையற்ற சேவை: 9 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு ரத்ததானம்
அக்டோபர் 1-ம் தேதி தேசிய ரத்த தான நாள். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற இளைஞர் 2005-ல் தொடங்கிய friends2support.org என்ற இணையதளத்தில் இந்தியா முழுமைக்கும் இதுவரை ஒன்றரை லட்சம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். எதற்காகத் தெரியுமா? ரத்த தானம் செய்வதற்காக.
இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகா தலைமையகங்கள், முக்கிய நகரங்கள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் உள்ள குருதிக் கொடையாளர்கள் பற்றிய விவரங்கள், ரத்த குரூப் வாரியாக அலைபேசி எண்ணுடன் இந்த இணையத்தில் இருக்கின்றன. இதன்மூலம், இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவர்களும் எந்த வகை குருதி கொடையாளர்களையும் (பிளட் டோனர்) இடைத்தரகர்கள் இல்லாமல் உடனடியாக தொடர்புகொண்டு ரத்த தானம் பெற முடியும்.
1.5 லட்சம் கொடையாளர்கள்
ஷெரீப் தனது நண்பர்கள் 200 பேரை வைத்து தொடங்கிய இந்த இணையதளத்தில் இப்போது சுமார் ஒன்றரை லட்சம் டோனர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசினார் இந்த இணையதளத்தின் தமிழகத்துக்கான ஒருங்கிணைப் பாளர் ராமநாதபுரம் சதீஷ்குமார். ‘‘ஒரு சமயத்தில், ஹைதராபாத்தில் தேவையான நேரத்துக்கு தேவையான பிரிவு ரத்தம் கிடைக்காமல் நிறைய உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இந்த அவலத்தைப் பார்த்துவிட்டுத்தான் இந்த இணையதளத்தைத் தொடங்கினார் ஷெரீப். பிறகு சமூக வலைதளங்கள் மூலமாக அதை பிரபலப்படுத்தினார். அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் இதில் இணைந்தார்கள்.
எங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரத்த தான அமைப்புகள் பெரும் உதவி செய்தார்கள். எங்கள் இணையதளம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதில் பதிவு செய்திருப்பவர்கள் ஒருமுறை ரத்தம் கொடுத்துவிட்டால் அதிலிருந்து 90 நாட்களுக்கு அவர்கள் பெயர் அதுவாகவே நீக்கப்பட்டுவிடும். அதேபோல், 90-வது நாள் அந்த நபருக்கு, ‘நாளை முதல் நீங்கள் ரத்த தானம் செய்யலாம்’ என குறுந்தகவல் போய் விடும்; இணையதளத்திலும் மீண்டும் அவர்கள் பெயர் வந்துவிடும்.
புதிய அப்ளிகேஷன்
பதிவு செய்துள்ள டோனர்கள் ரத்த தானம் கொடுக்க தயங்கினாலோ அல்லது வேறு ஏதாவது காரணம் சொல்லி ரத்த தானம் செய்வதைத் தட்டிக் கழித்தாலோ, இணையதளத்தில் ‘ரிப்போர்ட்’ என்ற பகுதியில் அந்த விபரத்தைப் பதிவு செய்யவும் இதில் வழி இருக்கிறது. இப்படிப் பதிவாகும் டோனர்களின் பெயர்கள் உடனடியாக லிஸ்ட்டில் இருந்து அகற்றப்படும்.
ஆண்ட்ராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் இந்த வசதியை பெறும் வகையில் கடந்த ஆண்டு புதிய இலவச அப்ளிகேஷன் ஒன்றையும் அறிமுகப்படுத்தினோம்.
கேரள மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் ஜஸ்டின்தான் இந்த அப்ளிகேஷனை உருவாக்கினார். கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் இதை அறிமுகப் படுத்தினோம். ரத்த தான சேவையை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமில் லாமல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.
சேவைக்காக சர்வதேச விருது
எங்களுடைய இந்த இணைய தள சேவைக்காக லிம்கா விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு உள்ளிட்ட சமூக சேவைகளை செய்யும் அமைப்புகளுக்கு ஆஸ்திரியாவில் உள்ள ‘வேல்டு யூத் சம்மிட்' (World Youth Summit) அமைப்பு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு அந்த விருது எங்களுக்குக் கிடைத்தது. இப்போது இந்த விருதுக்கான அமைப்புகளைத் தேர்வு செய்வதற்கு இந்தியாவுக்கான அம்பாசிடராக ஷெரீப்பை அங்கீகரித்திருக்கிறது அந்த அமைப்பு’’ பெருமிதத்துடன் சொன்னார் சதீஷ்குமார்.
வலைதள முகவரி http://friends2support.org/
- தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இணையதளம் மூலம் ஒரு இணையற்ற சேவை: 9 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு ரத்ததானம்
அவசியமான பயனுள்ள சேவை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இணையதளம் மூலம் ஒரு இணையற்ற சேவை: 9 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு ரத்ததானம்
மிகவும் பயனுள்ள சேவை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Similar topics
» முப்பது ஆண்டுகளில் 4,600 ஆயுள் கைதிகளை பட்டதாரிகளாக்கிய நோவா: ஓய்வுபெற்ற பேராசிரியரின் ஒப்பற்ற சேவை
» கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, 'நோட்டீஸ்'
» ரயில்வேயில் 10 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே அமைச்சர்
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
» எளிதாக ரத்ததானம் கொடுக்க/ பெற! ! ! !
» கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, 'நோட்டீஸ்'
» ரயில்வேயில் 10 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே அமைச்சர்
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
» எளிதாக ரத்ததானம் கொடுக்க/ பெற! ! ! !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|