தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதயம் காக்கும் இதயம்!

View previous topic View next topic Go down

இதயம் காக்கும் இதயம்! Empty இதயம் காக்கும் இதயம்!

Post by நாஞ்சில் குமார் Sat Nov 15, 2014 11:19 pm

இதயம் காக்கும் இதயம்! 2rm2l1e

சித்ரா விஸ்வநாதன்

700 பிளஸ் குழந்தைகளின் பெற்றோரின் ஆசீர்வாதங்களிலும் நன்றியுணர்ச்சியிலும் நாள்தோறும் நெகிழ்ந்து கொண்டிருக்கிறார் சித்ரா விஸ்வநாதன். பெங்களூரில் இயங்குகிற ‘ஐஸ்வர்யா டிரஸ்ட் - ரிதம் ஆஃப் ஹார்ட்’ அமைப்பின் மூலம் இதய நோய்களால் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து, உயிர்ப் பிழைக்கச் செய்கிற உன்னத சேவையின் பின்னால் நிற்பவர். சோகத்தின் உச்சத்தில் இருக்கும் ஒருவருக்கு சேவையைப் பற்றி யோசிக்கத் தோன்றுமா? சித்ராவுக்குத் தோன்றியிருக்கிறது!

‘‘எங்களுக்கு ரெண்டு மகள்கள். ஐஸ்வர்யா ரெண்டாவது மகள். அவ பிறந்த 40வது நாள்லயே அவளோட இதயத்துலேருந்து வினோதமான ஒரு சத்தம் வர்றதைக் கண்டுபிடிச்சோம். டெஸ்ட் பண்ணினதுல அவளுக்கு இதயத்துல பெரிய பிரச்னை இருக்கிறதா சொன்னாங்க டாக்டர்ஸ். ஐஸ்வர்யாவுக்கு முதல் பிறந்த நாள் கொண்டாடின நேரத்துல அவளோட இதயத்துல உள்ள நல்ல ரத்தமும், கெட்ட ரத்தமும் கலக்காம இருக்க, விபி ஷன்ட்டுனு ஒரு தற்காலிக அறுவை சிகிச்சை செய்தாங்க. மூன்றரை வயசு வரைக்கும் நல்லா இருந்தா. அப்ப என் ஹஸ்பெண்ட் லண்டன்ல வேலையில இருந்தார். ஐஸ்வர்யாவுக்கு ரெண்டாவது ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னதால, லண்டன்லயே பண்ணினோம்.

அந்த ஆபரேஷனுக்கு பிறகு அவளுக்கு நிறைய சிக்கல்கள்... கிட்டத்தட்ட 2 மாசம் ஐ.சி.யூவுல இருந்தா. அவளுக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட்ஸ் கொடுத்து நல்லா கவனிச்சோம். ஆனாலும், காப்பாத்த முடியலை...’’ - வருடங்கள் கடந்தும் குறையாத துக்கத்தில் வார்த்தைகள் சிக்குகின்றன சித்ராவுக்கு. வார்த்தைகளில் வெளிப்படும் சோகத்தை சட்டென மாற்றிக் கொள்ளத் தெரிந்தவருக்கு, வாழ்க்கையின் சோகத்தையும் மாற்றிக் கொள்ளத் தெரிந்திருக்கிறது. அதுதான் ‘ஐஸ்வர்யா டிரஸ்ட்’டாக மலர்ந்திருக்கிறது.‘‘ஐஸ்வர்யாவுக்கு ‘கன்ஜீனிட்டல் ஹார்ட் டிசீஸ்’னு சொல்ற பிரச்னை. இந்தியா உள்பட உலக நாடுகள்ல பலதுலயும், பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைங்க இறக்கறதுக்கு
இந்தப் பிரச்னை பிரதான காரணமா இருக்கு.

உலகளவுல 1000ல் ஒரு குழந்தையும், இந்தியாவுல 100ல ஒரு குழந்தையும் கன்ஜீனிட்டல் ஹார்ட் டிசீஸ் உடன் பிறக்கறாங்க. குழந்தை, தாயின் வயித்துல இருக்கும் போதே, அதோட இதயம் சரியா உருவாகாமலோ, ரத்தக்குழாய்கள் சரியில்லாத நிலையோ ஏற்படலாம். 20 வார கர்ப்பத்துலயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமா இந்தப் பிரச்னை இருக்காங்கிறதை உறுதிப்படுத்தலாம். பிறந்த சில நாட்கள்லயும் கண்டுபிடிக்கலாம். இந்தப் பிரச்னையோட பிறக்கிற எல்லாக் குழந்தைகளுக்குமே அறுவை சிகிச்சை அவசியப்படறதில்லை. 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு ஆபரேஷன் இல்லாமலே குணப்படுத்திட முடியும்.

ஆனா, அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வுங்கிற நிலைமையில உள்ள ஏழைக் குழந்தைகளோட நிலை யோசிக்க வச்சது. எங்களுக்கு வசதிகள் இருந்துமே நிறைய செலவழிச்சுமே எங்க மகளைக் காப்பாத்த முடியலை. வசதியே இல்லாத பெற்றோரோட நிலைமையை யோசிச்சுப் பார்த்தேன். எங்கப்பா நாகராஜன்கிட்ட பேசிட்டிருந்தப்ப, இந்த விஷயத்தைப் பத்தி சொல்லி வருத்தப்பட்டேன். அப்ப திடீர்னு டிரஸ்ட் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது. அப்பாகிட்ட சொன்னதும் முதல் ஆளா அதை வரவேற்றதோட, இன்னி வரைக்கும் டிரஸ்ட்டோட முதுகெலும்பா இருந்து பார்த்துக்கிறார். ‘கன்ஜீனிட்டல் ஹார்ட் டிசீஸை’ பொறுத்தவரை அதுக்கான செலவு ஒவ்வொரு குழந்தையோட கண்டிஷனை பொறுத்து வேறுபடும்.

இது ஆபரேஷனுக்கு அடுத்த ரெகவரி நிலையையும் பொறுத்தது. அப்படிப் பார்த்தா குறைஞ்சது 1 லட்சம் ரூபாய்லேருந்து, 4 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும். அந்த மாதிரி குழந்தைங்களுக்கு உதவணும்கிற நோக்கத்துலதான் ‘ஐஸ்வர்யா டிரஸ்ட்’ ஆரம்பிச்சோம். டிரஸ்ட்டுக்கான நிதி திரட்டறது ஆரம்பத்துல பெரிய சவாலா இருந்தது. சொந்தக்காரங்களும், நண்பர்களும் நிறைய உதவி பண்ணினாங்க. அப்புறம் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வந்தாங்க. சிகிச்சைக்காக வர்ற குழந்தைங்களுக்கு முதல்ல அரசு காப்பீட்டுத் திட்டத்தை அணுக வழிகாட்டுவோம். அதுல கிடைக்கிற தொகை போக, ஆபரேஷனுக்கு தேவையான மீதிப் பணத்தை எங்க டிரஸ்ட் மூலமா கொடுத்து உதவறோம்...’’ என்கிற சித்ரா, இந்த வினோத இதய நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதிலும் அதிக முனைப்பு காட்டுகிறார்.

‘‘தமிழ்நாட்டுல உள்ள பல மாவட்டங்கள்லயும் மாதம் ஒரு முறை ஸ்கிரீனிங் கேம்ப் நடத்தி பாதிப்புள்ள குழந்தைங்களைக் கண்டுபிடிக்கிறோம். தவிர, சின்னச் சின்ன அரசு மருத்துவமனைகள்லேருந்தும் எங்கக்கிட்ட சிகிச்சைக்காக குழந்தைங்களை அனுப்பறாங்க. புதுச்சேரி அரசு மருத்துவமனையில, பிறந்த குழந்தைங்களுக்கான இலவச ஸ்கிரீனிங் பண்றோம். சென்னையில சைதாப்பேட்டையிலயும், புளியந்தோப்புலயும் மாநகராட்சி மருத்துவமனைகள்லயும் பண்ணிட்டிருக்கோம். குழந்தைக்கு இதய நோய் இருக்கிறதை சொன்னதும் அவங்க பெற்றோருக்கு பயங்கரமான அதிர்ச்சியா இருக்கு. சிகிச்சைக்கான செலவு அதைவிடப் பெரிய அதிர்ச்சி.

எங்க டிரஸ்டை சேர்ந்த டாக்டர்ஸ் ஒவ்வொரு பெற்றோர்கிட்டயும் இதயத்தோட படத்தை வரைஞ்சு காட்டி, பிரச்னை என்னங்கிறதை பொறுமையா விளக்குவாங்க. பணத்தைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லைனு சொல்லி, அரசுக் காப்பீட்டுத் திட்டத்தோட நிதி உதவியும், எங்க டிரஸ்ட்டோட உதவியும் அதைப் பார்த்துக்கும்னு சொல்லி சமாதானப்படுத்தறாங்க. சிகிச்சைக்கு முன்னாடி வரைக்கும் சில குழந்தைகளால சரியா பேச முடியாது. நடக்க முடியாது. ஆபரேஷனுக்கு பிறகு அந்தக் குழந்தைங்க பேசறதையும், நடக்கிறதையும் பார்க்கிற பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் மல்க எங்களுக்கு நன்றி சொல்றதைப் பார்க்கிறப்ப மனசு நிறையும்...’’ உவந்து சொல்கிற சித்ரா, தனது டிரஸ்ட்டின் மூலம் அடுத்து குழந்தைகளுக்கான இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான உதவிகளையும் தொடங்கியிருக்கிறார். இதுவரை 3 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

‘‘‘கன்ஜீனிட்டல் ஹார்ட் டிசீஸை’ பொறுத்தவரை எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை கொடுத்துக் காப்பாத்தலாம். கண்டுபிடிக்கிறதுலயே தாமதம் காட்டினா, பிறகு சிகிச்சைகளும் கஷ்டமாகி, அறுவை சிகிச்சையால கூட குணப்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு போகும். கேன்சருக்கும் ஹெச்.ஐ.விக்கும் உள்ள விழிப்புணர்வு இந்த நோய்க்கு இல்லை. பெங்களூரு, சென்னை, மும்பைல எங்களோட வாலன்டியர்ஸ் இருக்காங்க. அவங்க இந்த நோய் பத்தின விழிப்புணர்வைப் பரப்பற வேலை களைச் செய்திட்டிருக்காங்க. குழந்தைங்களோட உயிரைக் காப்பாத்தறதுதான் எங்க நோக்கம். குழந்தையை இழக்கறதோட வலியை இன்னமும் அனுபவிச்சிட்டிருக்கிறவ நான்.

அது வாழ்நாள் முழுக்க தொடரும் வலி. ஆனாலும், அதுலேருந்து என்னை மீட்டெடுத்தது என் டிரஸ்ட்டும், அதுல நான் பார்க்கிற குழந்தைங்களும்தான். இதுவரைக்கும் 700 குழந்தைங்களோட உயிரைக் காப்பாத்தியிருக்கோம். ஒவ்வொரு குழந்தையோட உருவத்துலயும் உயிர்லயும் என் ஐஸ்வர்யாவை நான் பார்க்கறேன். அவ இன்னும் என்கூடவே இருக்கானு நம்பறேன்...’’ - எட்டிப் பார்க்கிற கண்ணீரை மறைத்தபடி நம்பிக்கை வார்த்தைகள் பேசுகிறார் சித்ரா.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இதயம் காக்கும் இதயம்! Empty Re: இதயம் காக்கும் இதயம்!

Post by முரளிராஜா Mon Nov 17, 2014 1:53 pm

பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதயம் காக்கும் இதயம்! Empty Re: இதயம் காக்கும் இதயம்!

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 7:02 am

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் காக்கும் இதயம்! Empty Re: இதயம் காக்கும் இதயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum