Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைக்குள் இடி இடித்தால்!
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1 • Share
தலைக்குள் இடி இடித்தால்!
வலியும் வாழ்வும்
‘தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று ஒருவரை சித்தாந்தம் பேச வைக்கும் அளவுக்கு தலைவலியின் அனுபவம் பயங்கரமானது. இலங்கையில் என்ன காரணத்தாலோ ‘மண்டையிடி’ என்று தலைவலிக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தலைவலிக்காரர்களுக்கு சங்கம் கூட உண்டு. ஆன்மிக பத்திரிகைகள், சினிமா பத்திரிகைகள் போல் தலைவலிக்காகவே தனிப் பத்திரிகைகளும் வருகின்றன. Headache என்று தேடினால் பிரத்யேக இணைய தளங்கள் கூகுளில் வரிசை கட்டுகின்றன. இத்தனைக்கும் காரணம், தலைவலியின் கொடுமையான வில்லத்தனம்தான்!
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் தினேஷ் நாயக்கிடம் இதுபற்றிக் கேட்டபோது தலைவலியின் பல வகைகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் விளக்கினார். ‘‘சாதாரண தலைவலி முதல் ஆபத்தான தலைவலி வரை பல வகைகள் உண்டு. இவற்றை முதல்நிலைத் தலைவலி, இரண்டாம் நிலைத் தலைவலி என்று இரண்டாகப் பிரித்துவிடுவோம். பொதுவாக நம்மில் பலருக்கும் வருவது முதல் நிலைத் தலைவலிதான். மன அழுத்தம், போதுமான தூக்கம் இன்மை, வெயில், சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிதான் அதிகம். இவை முதல்நிலையைச் சேர்ந்தவை. இந்தத் தலைவலிகள் தொந்தரவு தருமே தவிர, வேறு பிரச்னைகள் இருக்காது. இரண்டாம் நிலைத் தலைவலிகள்தான் மிகவும் ஆபத்தானவை’’ என்று இடைவெளி விடுகிறார்.
‘‘இந்த முதல்நிலைத் தலை வலியில் வழக்கமாக வரும் டென்ஷன் தலைவலியுடன், சைனஸ் அறைகளில் அடைப்பு ஏற்படுவதால் வரும் சைனஸ் தலைவலி, மைக்ரேன் தலைவலி, க்ளஸ்டர் ஆகிய 3 தலைவலிகள் நம்மை அதிகம் பாதிப்பவை. இதில் டென்ஷன் தலைவலி வருவதற்கு அதிகம் யோசிப்பது, மன அழுத்தம், வேலைப்பளு, பதற்றம் போன்ற வாழ்க்கைமுறை குளறுபடிகள்தான் காரணம். 70 சதவிகிதம் பேருக்கு வந்துவிட்டுச் செல்வது இந்த டென்ஷன் தலைவலிதான். யோகா, தியானம் போன்ற ஆக்கப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டாலே இந்தத் தலைவலி நம்மை அண்டாது.
இதற்கு அடுத்து மைக்ரேன் தலைவலி அதிகம் பாதிக்கிறது. தலையின் ஒரு பக்கமாக வலி ஏற்படுவதால் ‘ஒற்றைத் தலைவலி’ என்றும் பெயர் உண்டு. ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்ற குறிப்பிட்ட உணவு வகைகள் ஏற்றுக் கொள்ளாதது, குளித்துவிட்டுக் கூந்தலை உலர்த்தாமல் இருப்பது, அதிக வெயில், உரிய நேரத்தில் சாப்பிடாதது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்தத் தலைவலி தூண்டப் படும். பெண்களுக்கே மைக்ரேன் தலைவலி அதிகம் வரும் என்பதால் ‘பெண்களின் தலைவலி’ என்றும் பெயர் உண்டு. மைக்ரேன் தலைவலி பெண்களுக்கு மட்டும் வருவதற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. குறிப்பிட்ட சூழல் தலைவலியை தூண்டுவதை கவனித்து, அந்தக் காரணங்களை தவிர்த்தாலே இதிலிருந்து தப்பிக்கலாம்.
க்ளஸ்டர் தலைவலி அதிகமாக ஆண்களையே பாதிக்கும் என்பதால், ‘ஆண்களின் தலைவலி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டுப் போகும். ஒரு மணி நேரம் என்றால் அந்த ஒருமணி நேரமும் பாடாகப்படுத்திவிடும். இந்தத் தலைவலி வந்தால் கண்களுக்குப் பின்னால் தாங்க முடியாத வலி ஏற்படும்... கண்ணீர் வரும்... கண் சிவக்கும்... ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். ஆனால், மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் வரும். மது, புகைப்பழக்கம், பருமன் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு ஏற்படும் தலைவலி என்பதால் தீய பழக்கங்களுக்குத் தடா போட்டாலே இதிலிருந்து விடுதலைகிடைத்துவிடும்.
இதில் இரண்டாம் நிலைத் தலைவலிகள் ஏற்படுவதற்கு ரத்த அழுத்தம் அதிகமாவது, கண் தொடர்பான குறைபாடுகள், மூளைக்காய்ச்சல், மூளையில் கட்டி, ரத்தக்குழாய் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற சீரியஸான பிரச்னைகள் காரணங்களாக இருக்கலாம். இந்த இரண்டாம் நிலைத் தலைவலியிலும் நிறைய வகைகள் உள்ளன. thunderclap headache ஏற்பட்டால் தலைக்குள் இடி இடிப்பது போல, மிக அதிகமான வலி உண்டாகும். மூளையில் ரத்தக் குழாய் வெடிக்கும்போது இது போல் அதீத வலி ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாக கை, கால் செயலிழப்பதும் நடக்கும். இப்படி திடீர் என்று அதீத தலைவலி ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். இப்போது லேஸர் தொழில்நுட்பம் வந்துவிட்டதால் இதயத்துக்கு
ஆஞ்சியோ சிகிச்சை செய்வது போல, வலி இல்லாமலேயே இந்த ரத்தக் குழாயின் வீக்கத்தை சரி செய்துவிடுவார்கள்.
சிலருக்கு தூக்கத்தில் திடீர் என தலைவலி ஏற்படும். தலைவலியுடன் தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். நீண்ட நாட்களாக இப்படி தலைவலியால் தூக்கம் கலைந்து அவதிப்படுகிறவர்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு களால் சிலருக்கு தலைவலி வரலாம். இதன் தொடர்ச்சியாக வலிப்பு, கை, கால்கள் செயலிழப்பது, பதற்றம் போன்றவையும் ஏற்படும். மதுவுக்கு அடிமையான ஆண்களுக்கும், பிரசவத்துக்குப் பிறகு 2 அல்லது 3 நாட்களில் பெண்களுக்கும் இந்தத்தலைவலி ஏற்படலாம். தலைவலியுடன் காய்ச்சலும் சேர்ந்து வருவதற்கு Meningitis என்ற மூளைக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம்.
நடுத்தர வயதினரில், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் Temporal arteritis என்ற ரத்தக்குழாயில் ஏற்படும் கோளாறால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும். இந்தக் குறைபாட்டை ரத்தப் பரிசோதனை செய்யும்போது ஈ.எஸ்.ஆர். என்ற முடிவின் மூலம் கண்டு பிடித்து விடுவார்கள். இந்தத் தலைவலிகளில் நமக்கு ஏற்படு வது சாதாரண முதல்நிலைத் தலை வலியா, ஆபத்தான இரண்டாம் நிலைத் தலைவலியா என்பதை ஒரு மருத்துவரால்தான் கண்டுபிடிக்க முடியும்.
அடிக்கடி தலைவலி வருகிறவர்கள், அதீத தலை வலியால் அவதிப்படுகிறவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது. இரண்டாம் நிலைத் தலைவலியாக இருக்கலாம் என்று மருத்துவர் சந்தேகிக்கும் பட்சத்தில் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் மூலம் அது எந்தத் தலைவலி என்பதை உறுதிப்படுத்திவிடுவார். அதனால், நாமே ஏதாவது மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டோ, சுய மருத்துவம் செய்து கொண்டோ அலட்சியப்படுத்துவது நல்லதல்ல!’’ என்று எச்சரிக்கிறார் தினேஷ் நாயக்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|