Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஊனம் !
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஊனம் !
நிறைமாதக் கர்ப்பிணியாய் ஒரு பக்கம் சாய்ந்தபடியே வந்து நின்ற அந்த பேரூந்தில் இருந்து ஒரு ஆறு பேர் இறங்க அதன் இரு மடங்காய் ஒரு கூட்டம் முட்டி மோதி தன்னை உள் நுழைத்துக் கொள்ள முக்கியபடியே ஒரு பெருமூச்சாய் உறுமிய படியே பேரூந்து தொடர்ந்தூரத் தொடங்கியது.உலகத்தின் ஒட்டுமொத்த வார்ப்புக்களும் தரங்களும் மனிதர்களாய் அதற்குள் அடுக்கப் பட்டிருந்தனர்.பிதுங்கிப் பிழியப்பட்ட வியர்வைகள் ஒட்டுமொத்த ஆறாகி ஜாதியொழிப்புக்கு கட்டியம் கூறியது .
அடைசல் ,வியர்வை,பசி,வயோதிபம் எல்லாம் கலந்த அந்த அம்மா நெரிசலில் நசுங்கிப் பிதுங்கி பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை கண்ட இருக்கை வாசிகளுக்கு தூக்கம் வந்து கண்ணை சுழட்ட பாவம் தூங்கிப் போனார்கள்.
பள்ளிப் பையை மடியில் வைத்து அமர்ந்திருந்த அந்த சிறுவன் பையை அருகிலிருந்தவரிடம் கொடுத்து விட்டு எழுந்து அந்த அம்மாவை அழைத்து அவனிருக்கையில் மிக சிரமப் பட்டு அமரவைத்து அவர் அருகில் இருக்கையை பிடித்தவாறு நின்று கொண்டான்.
அந்த அம்மா அவனைப் பார்த்த பார்வையில் நன்றி பொங்க சிறுவன் ஒரு சின்ன சிரிப்புடன் நின்றுகொண்டான்.
களைத்து தூங்கிய இருக்கை வாசிகளுக்கு இப்போது முழிப்பு வந்து விட்டது !
யன்னலுக்கு வெளியே, பேரூந்துள்ளே என் தம் கண்களை மேய விட்டு தாங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் என சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் !
அந்தப் பையன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மணியடித்து தன் பையையும் வாங்கித் தோளில் மாட்டிய படியே வாசலை நோக்கி நீந்தினான் !
அவனது நீச்சலில் நெரிசல் இன்னும் அதிகரிக்க நிற்பவர்கள் அமர்ந்தவர்கள் மேல் சாய ஏதோ அசூசை தம் மேல் பட்டவர்களாக அவர்கள் புறுபுறுத்து நெளிய திடீரென்று சிறுவன் அலறினான் ‘’ஐயோ என் கால்! கால்!’’
நெரிசலில் யாரோ அவன் காலை மிதித்து விட்டார்கள் என்று இருகை வாசிகளில் ஒரு கனவானுக்கு கோபம் வந்து விட ‘’கொஞ்சம் ஒதுங்கி வழி விடுங்களேன் !பாவம் பையன் இறங்க’’என்ற கத்தினார் .
மீண்டும் சிறுவன் ‘’என் கால் என் கால்’’ என்று கத்த நடத்துனர் எல்லோரும் இறங்கி இடம் கொடுங்கள் என்று கூறி நிற்பவர்கள் சிலரை கீழே இறக்க
நெரிசல் குறைந்து இடைவெளி ஏற்பட அதுவரை நெரிசலில் நசுங்கி நின்று கொண்டிருந்த பையன் பிடிமானம் இன்றி பொத்தென கீழே விழுந்தான்.
பார்த்தவர்கள் பதற பையனின் ஒருகால் கழன்று நெரிசலில் மிதி பட்டு நசுங்கிக் கிடக்க பையன் ஒற்றைக் காலுடன் கம்பியொன்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றான்.
கழன்று நசுங்கிக் கிடந்த தன் ஜெய்ப்பூர் காலினைப் பார்த்த சிறுவனின் கண்கள் குளமாக பொங்க இருக்கையில் கண் திறந்து தூங்கிய சுகவாசிகளுக்கு தலை குனிந்தது !
-தமிழினியன்-
அடைசல் ,வியர்வை,பசி,வயோதிபம் எல்லாம் கலந்த அந்த அம்மா நெரிசலில் நசுங்கிப் பிதுங்கி பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை கண்ட இருக்கை வாசிகளுக்கு தூக்கம் வந்து கண்ணை சுழட்ட பாவம் தூங்கிப் போனார்கள்.
பள்ளிப் பையை மடியில் வைத்து அமர்ந்திருந்த அந்த சிறுவன் பையை அருகிலிருந்தவரிடம் கொடுத்து விட்டு எழுந்து அந்த அம்மாவை அழைத்து அவனிருக்கையில் மிக சிரமப் பட்டு அமரவைத்து அவர் அருகில் இருக்கையை பிடித்தவாறு நின்று கொண்டான்.
அந்த அம்மா அவனைப் பார்த்த பார்வையில் நன்றி பொங்க சிறுவன் ஒரு சின்ன சிரிப்புடன் நின்றுகொண்டான்.
களைத்து தூங்கிய இருக்கை வாசிகளுக்கு இப்போது முழிப்பு வந்து விட்டது !
யன்னலுக்கு வெளியே, பேரூந்துள்ளே என் தம் கண்களை மேய விட்டு தாங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் என சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் !
அந்தப் பையன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மணியடித்து தன் பையையும் வாங்கித் தோளில் மாட்டிய படியே வாசலை நோக்கி நீந்தினான் !
அவனது நீச்சலில் நெரிசல் இன்னும் அதிகரிக்க நிற்பவர்கள் அமர்ந்தவர்கள் மேல் சாய ஏதோ அசூசை தம் மேல் பட்டவர்களாக அவர்கள் புறுபுறுத்து நெளிய திடீரென்று சிறுவன் அலறினான் ‘’ஐயோ என் கால்! கால்!’’
நெரிசலில் யாரோ அவன் காலை மிதித்து விட்டார்கள் என்று இருகை வாசிகளில் ஒரு கனவானுக்கு கோபம் வந்து விட ‘’கொஞ்சம் ஒதுங்கி வழி விடுங்களேன் !பாவம் பையன் இறங்க’’என்ற கத்தினார் .
மீண்டும் சிறுவன் ‘’என் கால் என் கால்’’ என்று கத்த நடத்துனர் எல்லோரும் இறங்கி இடம் கொடுங்கள் என்று கூறி நிற்பவர்கள் சிலரை கீழே இறக்க
நெரிசல் குறைந்து இடைவெளி ஏற்பட அதுவரை நெரிசலில் நசுங்கி நின்று கொண்டிருந்த பையன் பிடிமானம் இன்றி பொத்தென கீழே விழுந்தான்.
பார்த்தவர்கள் பதற பையனின் ஒருகால் கழன்று நெரிசலில் மிதி பட்டு நசுங்கிக் கிடக்க பையன் ஒற்றைக் காலுடன் கம்பியொன்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றான்.
கழன்று நசுங்கிக் கிடந்த தன் ஜெய்ப்பூர் காலினைப் பார்த்த சிறுவனின் கண்கள் குளமாக பொங்க இருக்கையில் கண் திறந்து தூங்கிய சுகவாசிகளுக்கு தலை குனிந்தது !
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஊனம் !
வாவ் நீங்கள் கதை எழுதுவதிலும் வல்லவர் என்பதை அறிந்தேன்.
பன்முக நிபுணர் போல.
நன்றி பதிவுக்கு.
பன்முக நிபுணர் போல.
நன்றி பதிவுக்கு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஊனம் !
நன்றி நண்பரே.நீங்கள் என் முன்னைய கதைகளை வாசிக்கவில்லையா.நேரமிருந்தால் வாசித்து கருத்திடுங்கள்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஊனம் !
கண்டிப்பா இனி வாசிப்பேன் அண்ணா.
கதை எழுதுவதில் கலக்குறீங்க.
நான் கூட கணினி கதை எழுதலாம் என இருக்கேன்.
உங்கள் அளவுக்கு முடியாது. பாராட்டுகள்
கதை எழுதுவதில் கலக்குறீங்க.
நான் கூட கணினி கதை எழுதலாம் என இருக்கேன்.
உங்கள் அளவுக்கு முடியாது. பாராட்டுகள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஊனம் !
பாராட்டுக்கு நன்றி நண்பரே! ஏதோ கொஞ்சம் முயற்சி செய்து ஒன்றிரண்டு கதைகள் எழுதியருக்கிறேன் அவ்வளவே,
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|