தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

View previous topic View next topic Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by Admin Mon May 18, 2015 5:04 pm

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு:அம்மா. என்று கொடுத்து இருந்தோம் வழக்கம் போலவே கவிஞர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கு கொண்டு அம்மா கவிதைகளை அழகாக பதிவு செய்தனர் 


அம்மாவை பற்றி சில அழகான வரிகள் 
 
“அம்மா என்பது தமிழ் வார்த்தை அது தான் குழந்தையின் முதல் வார்த்தை”


“இறைவன் ஆக்குவான் காப்பான் அழிப்பான்
அன்னை ஆக்குவாள் காப்பாள் அழிக்க மாட்டாள்
அதனால் அன்னை இறவனிலும் மேலான இறைவன்
அன்னை மடி தவழச் சிவனுக்கும் பாக்கியமில்லை”

 
“சொர்க்கம் எங்கே எனக் கேட்டதற்கு
நபி நாயகம் கொடுத்த விடை
சொர்க்கம் அன்னையில் காலடியில்” 

 
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

 
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது


பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா...

 
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் 
  
 
 
இப்போது நாம் விருதுக்கான கவிதையை பார்ப்போம் 
 
இரா.சந்தோஷ் குமார் தன்னுடைய அம்மா கவிதையில் 
 
கதறித்துடித்து 
யுத்தமொன்று நடத்தி
குருதி சிதறித்தெளித்து. 
உன்னையே உன்னை
மரணிக்கவைத்து
என்னோடு நீயும்
பிரசவமான அந்த நொடியில்
நான் அழுதேன் என்பதாலா
நீயும் அழுதாய் அம்மா ?
என்ன தந்து அம்மா
நீயெனை பெற்றக்கடனை
நான் தீர்க்கமுடியும் ? என்று குறிப்பிட்டு பெற்ற கடனை தீர்க்க முடியுமா ? என்று வினவி உள்ளார் 

 
 
 
-தமிழினியன்- தன்னுடைய அம்மா கவிதையில் 
என் எண்ணம்
உன் மனதில்!
என் மறதி
உன் நினைவில்!
என என்தேவை
நீயுணர்ந்து !
எனக்கு முன்
உனக்குத் தெரிவதால்
தான்
எனக்கு எல்லாமே
அம்மாவாய்
எந்நாளும்
நீயுள்ளாய்!
 
என்பிள்ளை 
பெற்றெடுக்க 
என்னவள்
பட்ட பாட்டை 
அருகிருந்து
பார்த்த பின் தான் 
நீ என்னைப் 
பெற்றெடுக்க 
பெற்ற துன்பம் 
கற்றறிந்தேன்!

பொறுத்தருள்
தாயே! 
என்னைப் 
பொறுத்தருள்!

 
 
உன் பூமுகம் 
சாய்த்தென் மடியில் 
தலை தடவி 
நீ தந்த சுகம் 
தந்துன்னை 
தூங்க வைத்து 
என் 
கடன் கொஞ்சம் 
கழிப்பதற்கு 

ஒருமுறை 
ஒரேயொருமுறை 
மறுபடி நீ 
வரமாட்டாயா!?

என்றெல்லாம் சிறப்பாக அம்மாவை அழகாக வர்ணித்து மீண்டும் ஒரு முறை வரமாட்டாயா என்று சொல்லிய விதம் அழகாக இருந்தது  

 
 
கவிஞர் முஹம்மத் ஸர்பான் வழக்கம் போலவே தனது அழகு நடையில் அம்மாவை அழகுற படம் பிடித்து கட்டி உள்ளார் 
பிரசவ வலியில் துடிதுடித்து சுவனச்சோலை
வாசலடிக்குச் சென்று மறுஜென்மம் 
பிறப்பெடுத்து என்னை ஈன்றவளே.....!!!!!!!

நீ அணியும் செருப்பும் உனக்கு 
நன்றிக்குரியது உன் எடையோடு சுமந்த 
நான்தான் நன்றி மறந்தவனம்மா!
நீ பட்ட வேதனையறிய மறுஜென்மத்தில் 
நான் உன் தாயாக 
உனைச் சுமக்கனுமம்மா.

 
பிறப்புறுப்பை கிழித்து உதிரமுலாம் பூசி 
பத்து திங்களிலே ஜீவன் வெளிவர 
'அய்யோ அம்மா'என்று வேதனையால் துடித்து 
கடவுளிடம் சேயையும் எமனிடம் தன்னையும் 
அடகு வைத்த கண்கண்ட தெய்வம் ஆத்தா. 

 
என்று அருமையாக பதிவு செய்து பிரசவ வலியையும் மறு ஜென்மத்தையும் எடுத்து சொன்ன விதம் மிகவும் அருமை 
 
 
கவிப்புயல் இனியவன் தன்னுடைய அம்மா கவிதையில் 
வீட்டில் படைத்தல் காத்தல் அருளல் ...
உறவுவில் அன்பு கருணை இரக்கம்.....
அத்தனை இறைபணியையும் நீவீர் ....
பெற்றிருந்த போதும் தெய்வத்தைதேடி ....
ஊர் தாண்டி தேசம் தாண்டி கோயில் .....
சென்ற என்னை மன்னித்துவிடுங்கள் ...
அம்மா ....!!!

 
 
என்ன அற்புதம் ....?
ஆறறிவு மனிதனும் ....
ஐந்தறிவு  பசுவும் அழைக்கும் ...
ஒரே ஒரு சொல்  " அம்மா" .....!!!

 
வீட்டில் ஒரு தெய்வம் {அம்மா}இருக்கும் போதே வெளியில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் சென்று வந்தேன் மன்னியுங்கள் என்றும் ஆறறிவு மனிதனும் ....ஐந்தறிவு  பசுவும் அழைக்கும் ...ஒரே ஒரு சொல்  " அம்மா" என்றும் பதிவு செய்தது அழகாக இருந்தது
 
ஓட்டு மொத்தமாக பார்க்கும் போது எல்லோரும் அம்மாவை பற்றி அழகாக பதிவு செய்து இருந்தாலும் மறுஜென்மம் எடுத்து தன்னை ஈன்றதையும் அம்மா பட்ட கஷ்டங்களை எல்லாம் ஈடு செய்யும் பொருட்டு மறு பிறவியில் தான் அம்மாவாக பிறப்பெடுத்து உன்னை பெருமை படுத்த வேண்டும் என்றும் மின்மினி பூச்சி போல தாயோடு தானும் இறந்து மண்ணறையில் தாய் மடியில் தூங்க வேண்டும் என்று சிறப்பாக பதிவு செய்த......
கவிஞர் முஹம்மத் ஸர்பான் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்வு செய்யபடுகிறார் 

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Cup11


கவிஞர் முஹம்மத் ஸர்பான் அவர்களுக்கு பாராட்டுக்கள்
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by மகா பிரபு Mon May 18, 2015 8:20 pm

வாழ்த்துக்கள்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by முழுமுதலோன் Tue May 19, 2015 10:17 am

கவிஞர் முஹம்மத் ஸர்பான்அவர்களுக்கு வாழ்த்துக்களும் 
பாராட்டுக்களும் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by mohammed sarfan Tue May 19, 2015 2:23 pm

வாழ்த்து பூக்களை தூவிய என் நண்பர்கள் அனைவருக்குமாய்
வருகையால் மனம் 
மகிழ்ந்தேன்.உமது 
கருத்தால் கவிக்கு 
உயிர் கொடுத்தேன் 
பல்லாயிரம் கோடி 
நன்றிகள் நட்பே!!!

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு என்ன?
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by முரளிராஜா Tue May 19, 2015 2:58 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் [size=24]கவிஞர் முஹம்மத் ஸர்பான் [/size]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by thamiliniyan Tue May 19, 2015 5:37 pm

வாழ்த்துக்கள் கவிஞரே !
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by கவிப்புயல் இனியவன் Wed May 20, 2015 8:33 am

கவிஞர்
முஹம்மத் ஸர்பான்அவர்களுக்கு
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]  Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum