தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசயக்குழந்தை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அதிசயக்குழந்தை  Empty அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 11, 2016 4:20 pm

அதிசய குழந்தை அவன் ...
ஆசான் நான் ...
என்னைவிட அவனே முன்னுக்கு " அ "
நான் "ஆ "

இந்த குழந்தை இப்படியெல்லாம் ....
பேசுமா....? சிந்திக்குமா ...?
நம்ப முடியவில்லை என்போர் ...
இந்த கவிதையை மூடிவிட்டு
போகலாம் ....!!!

இந்த குழந்தை என்னதான்
சொல்லப்போகிறது என்பதை ...
பார்க்க விரும்புவோர் ....
பொறுமையோடு காத்திருந்து ....
தொடராக வரும் வசனக்கவிதையை ....
பாருங்கள் .....!!!

அதிசயக்குழந்தை ....
எப்படி இருப்பான் ...?

ஆசான் நேரான சிந்தனையில் ...
பேசினால் அவன் எதிர் சிந்தனையில்
பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில்
பேசினால் அவன் நேர் நித்தனையில் ...
பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!!

ஆன்மீகம் பேசுவான்
அரசியில் பேசுவான்
இல்லறம் பேசுவான்
எல்லாமே பேசுவான்

இலக்கண தமிழில் உரைப்பான்
இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும்
பேசுவான் ....
கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ...
இனிப்பான பொய்களையும் சொல்வான் ...
மொத்தத்தில் அதிசய குழந்தை
இடையிடையே அதிர்ச்சியை ....
தருவான் என்பது மட்டும் உண்மை ....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 11, 2016 4:53 pm

அதிசயக்குழந்தை - பூதம்
-------
ஒட்டு துணிகூட இல்லாமல் ...
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ....
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ....
விளையாடிகொண்டிருந்தான் ....
அதிசயக்குழந்தை .......

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ...
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ....
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ...
என்றேன் ....

நீங்க மட்டும் அழுகில்லையோ...?
என்றான் அவன் - மேலும் சொன்னான் ....

ஆசானுக்கு நான் சொல்வதா ...?
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் ....
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!!

மனத்தின் அழுக்கை நீக்க
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் ....
உடலின் அழுக்கை நீக்கவும் ...
தண்ணீரால் கழுவுகிறீர்கள் ....
கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க ..
உள்ளத்தை துளைக்கும் சொல்லை ...
காற்றோடு கலக்கிறீங்க ....
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ...
அசுத்தமாக்கும் போது
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும்
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....?

என்றான் - அதியக்குழந்தை.....!!!

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன் .....

விழுந்து விழுத்து சிரித்தான் ....

ஏனடா சிரிகிறாய்....?

இயலாமையின் இறுதி கருவியே ....
அதிகாரம் என்றான் ...!

திகைத்து நின்றேன் ....!!!

தன் பகுத்தறிவால் விடைதராமல் ....
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும் ...
ஆசானே - உம்மில் குற்றமில்லை ....
" ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது "
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு
எனக்கு சரிவராது என்றான்

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 6:36 pm

அதிசயக்குழந்தை - உணவு
-----
சாப்பிடாயா என்று கேட்டேன் ....
சாப்பிடேன் என்றான் .....
அதிசய குழ்ந்தை .......!!!

என்ன சாப்பிட்டாய் ....?

என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் ....
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் ...
என்று சொன்னான் .....!!!

எப்படி சாப்பிட்டாய் ....?

அடித்து பறித்து சாப்பிட்டேன் ....

நீ அத்தனை கொடூரமானவனா ...?

நான் மட்டுமல்ல நீங்களும் ....
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!!

தன் இனத்தை பெருக்க வந்தத ....
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த ....
அத்தனை உயிரினத்தையும் ....
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை ....
பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!!

மாங்காய் தேங்காய் என்று ....
அவை முதுமை அடைய முன்னரே ....
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் .....

குடியோடு குடித்தனமாய் தூங்கும் ...
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே ....
கண்ணி வைத்து கொலை செய்து ....
சாப்பிடுகிறோம் ......

கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ....
பறவைகள் - சாரை சாரையாய் ...
அலைந்து திரியும் மீன்கள் ....
அத்தனைக்கும் வலைபோட்டு ....
வாழ்வுரிமையை சாப்பிடுகிறோம் ....!!!

எல்லாமே இறைவன் எமக்கே ....
படைத்தவன் என்று இறைவனை ....
பிணையாக வைத்து அத்தனையின் ....
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ....!!!

கேட்டால் அதுதான் உணவுசங்கிலி ....
என்று ஒரு கோட்பாட்டையும்
வைத்திருக்கிறோம் - சொல்லுங்கள் ....!!!

ஆசானே ....!!!!

சமைத்து சாப்பிட்டோமா ....?
சண்டையிட்டு - மனசமரசத்துடன்
சாப்பிட்டோமா ....?

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 19, 2016 7:56 pm

அதிசயக்குழந்தை - உறக்கம்
--------
ஏய்
குழந்தாய் நேரமாகி விட்டது
உறங்கவில்லையா ....?

உறக்கம் என்றால் என்ன ....?
நானே சொல்கிறேன் ஆசானே ....!!!

மூளை ஓய்வெடுப்பது உறக்கம் ....
மூளை செயல் இழப்பது மரணம் ....
கண்ணை மூடுவது உறக்கமில்லை....
கண் மூடுவது என்பது சாதாரண ...
விடயமும் இல்லை மிக கடின வேலை....!!!

அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...?

வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ...
கடினமில்லை .இரண்டு இமையும்
இணைத்தால் போது அது கண் மூடல் ...
என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் ....
தவறு கண்மூடினால் ஒன்றுமே ....
தெரியாமல் இருப்பது மட்டுமல்ல ....
ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே ....
உண்மை கண் மூடல் .....!!!

புருவத்தின் மத்தியில் நினைவை
கொண்டுவந்து கண்மூடி உள்ளே ...
பாருங்கள் உங்களை நீங்கள் ....
அறிவீர்கள் உங்களின் அத்துணை ...
குணமும் படமாய் ஓடும் .....
என்று அந்த படமெல்லாம் ஓடி ...
கலைத்து வெறும் திரை கண் முன் ...
வருகிறதோ அன்றே நீங்கள் ....
உண்மையான கண் மூடல்
அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் ....

வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ...
இப்படி கண்மூடிபாருங்கள் ....
சொர்க்கம் தெரியும் என்றான் ......!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 26, 2016 7:47 pm

அதிசயக்குழந்தை - பெயர்
---
ஏய் குழந்தாய்....
உன் பெயரென்ன ....?

அதிசயகுழந்தை....!!!

இது ஒரு பெயரா ...?

அப்போ சொல்லுங்கள் ...
ஆசானே.....
பெயர் என்றால் என்ன ...?

நீ தான்
வியாக்கியான வித்தகன்- சொல் ...!!!

அஃறிணையில் பிறந்த மனிதனை ...
" உயர்திணை" யாக்குவது ...
தான் பெயர் என்றான் ....!!!

புரியவில்லை என்றேன்....

விளக்கினான் இப்படி .....

நாய் ஓடியது (அஃறிணை)
பறவை பறக்கிறது (அஃறிணை)
கண்ணன் ஓடினான் (உயர்திணை)

இப்போது புரிகிறதா என்றான் ....?

புரிகிறது ஆனால் புரியல்ல ....

மேலும் சொன்னான் .....

மனிதன் பிறக்கும் போதும் ....
இறந்தபின்னும் அஃறிணை....!!!

இதோ என் விளக்கம் ....

குழந்தை அழுகிறது (அஃறிணை)
பிணம் எரிகிறது (அஃறிணை)
கண்ணன் அழுகிறான் ( உயர் திணை )

இப்போ பாருங்கள் ஆசானே ....
அஃறிணை பிறந்த மனிதன் ....
அஃறிணை இறக்கிறான் ....
இந்த இடைப்பட்ட காலத்தில் ....
மனிதனை உயர்திணையாக்கும்....
ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!!

என்று மனிதனுக்கு பெயர் ....
சூட்ட படுகிறதோ -அன்றே அவன் ....
உயர் திணையில் அழைக்கப்படுகிறான் ....!!!
மனிதனின் வாழ்க்கை காலத்தை ....
உயர் தினையாக்குவதே -பெயர் ....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 28, 2016 7:23 pm

அதிசயக்குழந்தை - கை
----
கை தட்டி ஆரவாரமாக ....
இருந்தான் அதிசயக்குழந்தை.....
என்ன அத்துணை மகிழ்ச்சியோ ....?
ஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....!!!

எனக்கு ....
கை கூப்புவது பிடிக்காது .......
கை தட்டுவதே பிடிக்கும் என்றான் ....
கை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் ....
வருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி )
கிடைக்கும் என்றான் .....!!!

எல்லா மனித நரம்புகளும் ....
கையுடன் தொடர்புபடும் ....
கை தட்டினால் அனைத்து ....
மன அழுத்தமும் பறந்துவிடும் ....
தனித்து நின்று கை தட்டினால் ....
பித்தன் என்கிறார்கள் .....
கூட்டத்தோடு தட்டினால் ...
" பிரார்த்தனை" என்கிறார்கள் ....!!!

இன்னும் ஒன்றை கேளுங்கள்....!!!

கைகளை கொண்டு ....
போராடுங்கள் என்றது
மாக்சிஷம்....!
கைகளை ஆயுதமாக்கியது .....
பாசிஷம்.......!
இருகோட்பாடும் தோற்றுவிட்டது...
முதலாளிதுவத்திடம் .....!!!
இங்கு அலங்கார ஆடையுடன் ....
கை கூப்பியவன் ,கை குலுக்கியவன் ....
உலகினிலே நிமிர்த்து நிற்கிறான்  .....
எனக்கு கை கூப்பும் கொள்கை ....
பிடிக்காது ..............!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon Feb 01, 2016 9:33 pm

அதிசயக்குழந்தை - வீடு
------
எப்போதுமே ....
தெருகில் நிற்கிறாயே ....
உனக்கு வீடே இல்லையா ...?
குழந்தாய் ...?

எனக்கு சிறையில் ...
இருப்பது பிடிக்காது ...
என்றான் சட்டென்று ...!!!

வீட்டையேன் ...
சிறை என்கிறாய் ...?
அது பாதுகாப்பான ...
இடமல்லவா ....?
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் இருந்து ....
பாதுகாக்கிறதே.....
அது எப்படி சிறை ....?

ஆசானே ....
வாழ்நாள் முழுதும் ...
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் பேராடி ...
வாழும் மிருகத்துக்கு ...
எங்கே வீடு ....?

குழந்தாய் ....
அவை இவற்றிலிருந்து ....
வாழ்வதற்கான திறனில் ...
படைக்கப்பட்டுள்ளன ....
அவற்றுக்கு வீடு ......
தேவையில்லை ...!!!

அப்போ பலவீனமாக ....
படைக்கப்பட்ட மனிதனுக்கே ...
வீடு தேவைப்படுகிறது ....
அப்படிதானே ஆசானே ...?
பலவீனமாய் படைக்கபட்ட ...
மனிதனே இயற்கையை ....
அழித்தும் வாழ்கிறான் ....
எல்லா விடயத்திலும் ...
இருந்து வெளியில் வாருங்கள் ....
ஆசானே சுதந்திரமாய் ....
வாழ்வோம் .....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by முரளிராஜா Thu Feb 04, 2016 7:34 am

அருமை 
வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 04, 2016 9:18 am

முரளிராஜா wrote:அருமை 
வாழ்த்துக்கள்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by செந்தில் Thu Feb 04, 2016 11:04 am

சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 04, 2016 6:17 pm

செந்தில் wrote:சூப்பர்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon Feb 08, 2016 9:48 pm

அதிசயக்குழந்தை -எழுத்து
----------------
அழகான வர்ணம் பூசிய .....
ஒரு வீட்டின் வெளிப்புற ....
சுவரில் அதியக்குழந்தை....
கிறுக்கி விளையாடி....
கொண்டிருந்தான்.......!!!

டேய்
சுவரை அசிங்க படுத்தாதே....
என்று கொஞ்சம் கோபத்தோடு ...
ஆசான் என்ற போர்வையில் ....
அவனை அதட்டினேன் ....!!!

சிரித்த படியே .....
சொன்னான் - ஆசானே ....
நீங்கள் தானே சுவர் இருந்தால் .....
சித்திரம் வரையலாம் என்றீர்கள் ....
நான் அதைதானே செய்கிறேன் ...!!!

குழந்தாய் ...
அந்த சுவர் என்றது ....
உடம்பை குறிக்குமடா....
ஆரோக்கியம் இருந்தாலே ....
சாதிக்கலாம் என்பதாகும் .....!!!

ஆசானே ....
உடம்பும் ஒரு கலவைதானே ....
அது இருக்கட்டும் ஆசானே ....

உணர்வுகளின் ஓசை மொழி ....
ஓசையின் பரிமாணம் பாஷை....
பாசையின் அலங்காக வடிவம் ....
எழுத்து - எழுத்தின் " கரு" கிறுக்கல் ...
அதேயே செய்தேன் ஆசானே ....
கிறுக்கியது தவறு இல்லை ....
உங்களுக்கு புதிய சுவர் ...
என்பதுதானே கவலை ....
மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue Feb 16, 2016 3:08 pm

அதிசயக்குழந்தை - எண்ணம்
------------
எண்ணும் எழுத்தும் ....
கண்ணெனத்தகும் ....!!!

அதிசய குழந்தை
வாய்க்குள் உச்சரித்து ...
கொண்டிருந்தான் ...!!!

என்னடா
புது பழமொழியோ ...?

இல்லை ஆசானே ....
எதுவுமே புதியது இல்லை ....
எல்லாமே முன்னோர் சொன்ன ....
பொதுமை மொழிகள் ....
அதிலிருந்தே இனிமேல் ...
எல்லோரும் எடுக்க வேண்டும் ....
இது எனது இது நான் சொன்னது ....
என்று யாரும் உரிமை ....
கொண்டாடுவதில் பயனில்லை ...!!!

எண்ணமே ஒருவனின் உருவம் ....
எண்ணமே ஒருவனின் வாழ்க்கை....
எண்ணமே ஒருவனின்முடிவும் ....

அடுத்து சொன்னான் குழந்தை ......

சொர்க்கமும் நகரமும் ....
ஒருவனுடைய எண்ணமே .....
துயில் எழும்பும் போது ....
நல்ல சிந்தனையுடன் எழுபவன் ....
அன்று முழுதும் சொர்க்கத்தில் ....
வாழ்கிறான் ......!!!

நேற்றைய பகையை ...
முன்னைய இழப்பை ....
பொறாமையை துயில் ....
எழும்போது நினைப்பவன்
அன்று முழுதும் நரகத்தில் ....
வாழ்கிறான் ......!!!

குப்பத்தில் இருப்பவனை ...
கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ...
இருப்பவனை குப்பத்துக்கும் ....
மாற்றுவது தலையெழுத்தல்ல ....
அவரவர் எண்ணமே எண்ணமே....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by rammalar Wed Feb 17, 2016 8:23 am


குப்பத்தில் இருப்பவனை ...
கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ...
இருப்பவனை குப்பத்துக்கும் ....
மாற்றுவது தலையெழுத்தல்ல ....
அவரவர் எண்ணமே எண்ணமே....!!!

-
சூப்பர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 17, 2016 2:56 pm

rammalar wrote:
குப்பத்தில் இருப்பவனை ...
கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ...
இருப்பவனை குப்பத்துக்கும் ....
மாற்றுவது தலையெழுத்தல்ல ....
அவரவர் எண்ணமே எண்ணமே....!!!

-
சூப்பர்

அன்பு வணக்கம்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 18, 2016 8:35 pm

அதிசயக்குழந்தை -வறுமை
*******
வீதியில்
நின்ற வறிய வயோதிபர்....
வீதியில் வந்த பணக்காரனை ....
உதவி கேட்டார் - அவர் பணம் ....
கொடுக்கவில்லை - கோபமடைந்த ...
வயோதிபர் வாய்க்கு வந்தபடி ....
திட்டினார் ....!!!

இதை
அவதானித்த அதிசய குழந்தை .....
வயோதிபரிடம் என்ன தாத்தா ...
என்று ஆரம்பித்ததும் ....
அவர் மேலும் திட்டினார் .........!!!

பணம்
படைத்தவர்கள் தீயவர்கள் .....
கயவர்கள் கள்வர் இரக்கம்...
அற்றவர்கள் நயவஞ்சகர்கள் ....
திட்டிக்கொண்டே போனார் ....
நிலை குலைந்த தாத்தாவுடன் ....
பேசி பயனில்லை என்றறிந்த ....
அதிசயக்குழந்தை விலகியது .....!!!

என்ன குழந்தாய் அதிகம் ...
ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....?

ஆசானே .....
வறுமை என்பது ஒரு நோய் .....
நோய்க்கு நாம் மருந்தெடுத்து ....
மாற்றுகிறோமோ அதுபோல் ...
வறுமையையும் நாம் மாற்றலாம் ....
வறுமையோடு வாழ்பவன் நோயோடு ....
இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!!

வறுமைக்கு காரணம் பணம் ....
படைத்தவர்கள் மோசமானவர்கள் ...
என்ற மன விரக்தியும் தாமும் ....
பணம் படித்தால் அவ்வாறே மாறி ....
விடுவோம் என்ற மனப்பயமுமே ....
ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் ....
வறுமையை நீக்கணும் என்றால் ....
பணம் படைத்தவரை மதிக்கணும் .....
அவன் எப்படி பணத்தை தேடினான் ...
என்று சிந்திக்கணும் இதை விட்டு ....
அவனில் குறைகாணும் மனிதர் ....
யாரும் பணம் படைத்தவனாக ....
வரவே முடியாது என்று ஒரு நீண்ட ...
கருத்தை சொன்னான் அதிசய குழந்தை ....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 10:16 am

அதிசயக்குழந்தை - முதுமை
----------
பக்கத்து வீட்டில் தாத்தா ....
பேரனை திட்டியபடி இருந்தார் ....
தனது அனுபவத்தையெல்லாம் ....
அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் .....
பேரனோ காதில் விழுத்தாமல் ....
எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ...
கோபமடைந்த தாத்தா அடிக்க கை ....
ஓங்கினார்.................................................
அப்போது அதிசய குழந்தை ....!!!

தாத்தா
நிறுத்துங்க... நிறுத்துங்க ....
உங்களுக்கு அறிவுரை செய்ய ...
நான் பெரும் அறிவானவன் இல்லை ...
என்றாலும் கூறதொடங்கினான்.....!!!

முதுமையில் எல்லோரும் -தம் ....
அனுபவத்தை அறிவாக நினைத்து ....
அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ...
அனுபவம் வேறு அறிவு வேறு .....!
உங்களது அனுபவம் மற்றவனுக்கு ....
தேவைப்படாது ,பொருத்தமற்றது ....
முதுமையில் அதை நீங்கள் பிறர் ....
மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!!

வயது கூடியவர்கள் அறிவாளிகள் ....
வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் ....
நாங்களே அனுபவசாலிகள் ...
உங்களுக்கு அனுபவம் போதாது ....
என்றெல்லாம் முதியோர் நினைப்பது ....
தப்பு தாத்தா தப்பு .....!!!

முதுமையின் ஒத்தகருத்து பொறுமை .....
தேவையற்றவற்றில் தலையிடாமல் .....
தேவையானவற்றில் தலையிட்டு ....
எல்லோரும் எமக்கு மதிப்பு தரனும் ....
என்று நினைப்பது தப்பில்லை ....
எல்லாமே எனக்கு தான் தெரியும் ...
என்று நினைபப்து தப்பு தாத்தா ....!!!

அடிக்க கையோங்கிய தாத்தா .....
நிதானமானார் ...................................
அதிசய குழந்தையின் ....
அபாரத்தை அவர்களுக்கு தெரியாமல் ...
கேட்ட ஆசான் நானும் திகைத்தேன் ...
எனக்கும் முதுமை வயது தானே ....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 20, 2016 8:53 pm

அதிசயக்குழந்தை - ஆசை
----------
உன்
ஆசை என்ன என்று கேட்டேன் ...
அதிசயக்குழந்தையிடம்.....?

ஆசையில்லாமல் இருக்கவே ...
ஆசை என்றான் ஒரே வரியில் ....!!!

என்னப்பா சொல்கிறாய் ....?
ஆமா ஆசானே .....!!!

ஆசையே அனைத்து துன்பத்துக்கும் ....
மூல காரணி ......!!!
நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே ....
கோபம் ,,,,,,,,,,,,!!!
கோபத்தின் வெளிப்பாடே ....
கொடூரம் ...........!!!
கோபத்தை குறையுங்கள் .....
என்பது தவறு - ஆசையை ....
குறையுங்கள் என்பதே சரியானது .....!!!

பெண் ஆசை ....
நடத்தையை கெடுக்கும் ......
மண் ஆசை .....
நாட்டை கெடுக்கும் ......
பொன் ஆசை ......
பெண்ணையே கெடுக்கும் .......!!!

ஆசையை குறைப்பது எளிதல்ல ....
ஆசையை வரிசைப்படுத்துங்கள் ....
அந்த வரிசையில் இயலுமையை ....
பாருங்கள் நிறைவேறக்கூடிய ....
அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 25, 2016 7:56 pm

அதிசயக்குழந்தை - இறக்கம்
-------
அதிசயக்குழந்தை .....
ஏணியில் ஏறுவதும் ....
இறங்குவதுமாய் விளையாடிக் ...
கொண்டிருந்தான் ....!!!

அந்தவழியால் வந்த நான் ....
என்னடா செய்கிறாய் என்று ....
கேட்டேன் .....!!!

ஏறுவதும் இறங்குவதுமாய் ....
இருக்கிறேன் தெரியவில்லையா ...?
என்றான் ....?

உனக்கு
ஏற்றம் பிடிக்குமா .....?
இறக்கம் பிடிக்குமா ....?

எனக்கு இறக்கம் தான் ...
பிடிக்கும் ஆசானே ....
ஏன்டா உனக்கு எப்போதும் ....
எதிர் மறையாகதான் பிடிக்குமா ...?

இல்லை
ஆசானே எதிர் மறையின் ...
நன்மையை உணரமாட்டேன் ..
என்கிறீர்களே ....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் ....
தோல்விகள் இல்லை ....
வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!!

மலை
ஏறுபவன் இறங்கினால்-தான்
மலை ஏறியதின் சாதனை ...
தெரியவரும் .....!
பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான்
நீரின் மகிமை புரியும் ....!

அப்பில் பழம் கீழே விழுந்ததால் ...
நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் ....
வானத்து நீர் கீழே விழுந்தால் தான் ....
பூமி பசுமை அடைகிறது ....!
இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் ....
வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் .....
இழிவானவையல்ல எல்லா ....
செயல்களிலும் புரட்சிகரமானவை ...!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 01, 2016 1:05 pm

அதிசயக்குழந்தை - அநாதை
-----

அதிசயக்குழந்தையிடம் ....
உன் அப்பா பெயர் என்ன ...?
உன் அம்மா பெயர் என்ன ...?
உனக்கு உடன் பிறப்புக்கள் ...
எத்தனை பேர் .....?

எனக்கு யாருமே இல்லையே ...
என்றான் ....!!!

அப்போ நீ அநாதையா...?
என்று கேட்டேன்....
யாருமே இல்லை என்றுதானே ...
சொன்னேன் அநாதை ...
என்று சொன்னேனா என்றான் ...!!!

என்ன உளறுகிறாய் ....?

சொல்ல தொடங்கினான் அவன்
கருத்தை .....................!!!!!!!!!!!!

உங்கள் ....
அம்மா அப்பா இப்போ ....
இருகிறார்களா ....?
இல்லையே ....!!!

அப்போ நீங்கள் ...

அநாதையா ....?
இல்லையே ....!!!

உங்கள் பெற்றோர் இறந்தவுடன் ...
உங்களுக்கென ஒரு குடும்பத்தை ...
அமைத்து மனைவி குழந்தை....
மாமனார் மாமியார் என்று ஒரு ...
உறவை வளர்த்தீர்களே......
உங்களை யாரும் அநாதை ..
என்று அழைத்தார்களா ....?

உங்களின் தவறு என்ன தெரியுமா ...?
நீங்கள் பிறரை காப்பாற்றுவதாக ....
நினைப்பதும் நீங்கள் இல்லையென்றால் ...
அவர்கள் அனாதையாகிவிடுவர் ....
என்ற உங்கள் தப்பான எண்ணமே ....!!!

நான்
ஒரு அநாதை எனக்கு உதவுங்கள் ....
என்று சொல்பவர்கள் அநாதை ...
என்ற சொல்லை தம் ஆயுதமாய் ....
எடுத்து தம்மீது எல்லோரும் இரக்கப்பட...
பயன்படுத்தும் தந்திரம் .....
உழைத்து உண்பவனுக்கும் ...
நம்பிக்கை உள்ளவனுக்கும் ....
அநாதை சொல் அருவருப்பான ....
சொல்லாகும் ஆசானே என்றான் ....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 11:50 am

தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:24 pm

அதிசயக்குழந்தை - அன்பு
-------------------
அளவுக்கு மிஞ்சினால்.....
அமிர்தமும் நஞ்சு.........
அன்புக்கும் பொருந்தும்.....!

என்னடா உளருகிறாய்.....?
என்று கேட்டேன் அவனிடம்....
ஆசான் எனும் தோறணையில்......
ஆமாம் ஆசானே எதுவும்.....
அளவோடு இருக்கனும்.....
இல்லையேல் அதுவே நஞ்சு.........!

பணத்தின் மீது அதிக அன்பு......
உடலை கெடுக்கும் உளத்தை......
மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........
பிள்ளைகள் மீது அதிக பாசம்.....
எதிர்பார்பை கூட்டும்......
நிறைவேறாதபோது குடும்ப.....
சண்டையாக மாறுகிறது........!

துணைமீது அதிக காதல்......
கோழையாக்கிவிடுகிறது......
சுயசிந்தனையை இழக்க வைக்கிறது......
தன்மானத்தை இழக்கவைக்கிறது.......
தனிமையாகினால் முதுமையை.....
துயரமடைய வைக்கிறது.................!

சமூக அக்கறை அதிகமானால்........
அதிக பதவி ஆசை வருகிறது......
பதவி வரும் போது எல்லவற்றையும்....
கண் மறைக்கிறது........!

அப்போ எதையும் விரும்ப கூடாது
என்கிறாயா.......?
இல்லை இல்லை ஆசானே.......
எல்லவற்றையும் விரும்புங்கள்.....
எல்லாம் உங்களால் தான் ......
நடைபெறுகிறது என்பதை மட்டும்....
மறந்துவிடுங்கள்.........!


^^^^^^^^^
அதிசயக்குழந்தை 15
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 12, 2017 3:52 pm

அதிசயக்குழந்தை -எழுத்து
----------------
அழகான வர்ணம் பூசிய .....
ஒரு வீட்டின் வெளிப்புற ....
சுவரில் அதியக்குழந்தை....
கிறுக்கி விளையாடி....
கொண்டிருந்தான்.......!!!

டேய்
சுவரை அசிங்க படுத்தாதே....
என்று கொஞ்சம் கோபத்தோடு ...
ஆசான் என்ற போர்வையில் ....
அவனை அதட்டினேன் ....!!!

சிரித்த படியே .....
சொன்னான் - ஆசானே ....
நீங்கள் தானே சுவர் இருந்தால் .....
சித்திரம் வரையலாம் என்றீர்கள் ....
நான் அதைதானே செய்கிறேன் ...!!!

குழந்தாய் ...
அந்த சுவர் என்றது ....
உடம்பை குறிக்குமடா....
ஆரோக்கியம் இருந்தாலே ....
சாதிக்கலாம் என்பதாகும் .....!!!

ஆசானே ....
உடம்பும் ஒரு கலவைதானே ....
அது இருக்கட்டும் ஆசானே ....

உணர்வுகளின் ஓசை மொழி ....
ஓசையின் பரிமாணம் பாஷை....
பாசையின் அலங்காக வடிவம் ....
எழுத்து - எழுத்தின் " கரு" கிறுக்கல் ...
அதேயே செய்தேன் ஆசானே ....
கிறுக்கியது தவறு இல்லை ....
உங்களுக்கு புதிய சுவர் ...
என்பதுதானே கவலை ....
மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 22, 2017 7:49 pm

தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 23, 2017 4:22 pm

உன்னை
பார்த்து நான்கு பேர்
திட்டும் கடன்காரனாக
இல்லாமலும்....!

நீ நான்கு .....
பேரை பார்த்து திட்டும்....
குடிகாரனகவும் .....
இல்லாமல் இருந்தால்.......
நீ ராஜ வாழ்க்கை........
வாழ்கிறாய்.............!

&
கவிப்புயல், கவிநாடியரசர்
***********இனியவன்.............
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum