Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நொடிக்கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நொடிக்கதை
சரக்கு!
---------------
ரேசன்லே நூறு ரூபாயும் அரிசி சக்கரையும் கொடுக்கிறாங்க அந்த மனுஷன் போய் வாங்கிறதுக்குள்ளே நாம வாங்கிடனும் இல்லேன்னா பணத்தை கண்ணுலே பார்க்க முடியாது! வேக வேகமாக ரேசன் கடைக்குச் சென்று நூறு ரூபாயை வாங்கி சேலையில் முடிந்து கொண்ட காமாட்சி அரிசி, கரும்பு சர்க்கரையை வீட்டில் வீசிவிட்டு மடமடவென்று நுழைந்தாள் டாஸ்மாக்கினுள்!
நன்றி ;தளிர்
---------------
ரேசன்லே நூறு ரூபாயும் அரிசி சக்கரையும் கொடுக்கிறாங்க அந்த மனுஷன் போய் வாங்கிறதுக்குள்ளே நாம வாங்கிடனும் இல்லேன்னா பணத்தை கண்ணுலே பார்க்க முடியாது! வேக வேகமாக ரேசன் கடைக்குச் சென்று நூறு ரூபாயை வாங்கி சேலையில் முடிந்து கொண்ட காமாட்சி அரிசி, கரும்பு சர்க்கரையை வீட்டில் வீசிவிட்டு மடமடவென்று நுழைந்தாள் டாஸ்மாக்கினுள்!
நன்றி ;தளிர்
Re: நொடிக்கதை
இரக்கம்!
----
ஒவ்வொரு நாளும் ஒரு பிடி சோற்றுருண்டையை காக்கைக்கு வைப்பார் சண்முகம். காக்காவுக்கு சோறு வைக்காம சாப்பிட மாட்டோம் நாங்க! என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இந்த ஒரு பிடி சோத்தை ஒழுங்கா போட்டிருந்தா இன்னும் ஒரு வருசம் அப்பா இருந்திருப்பாரு… மனசுக்குள் ஒரு முள் அவரைக் குத்திக் கொண்டிருந்தது.
நன்றி ;தளிர்
----
ஒவ்வொரு நாளும் ஒரு பிடி சோற்றுருண்டையை காக்கைக்கு வைப்பார் சண்முகம். காக்காவுக்கு சோறு வைக்காம சாப்பிட மாட்டோம் நாங்க! என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இந்த ஒரு பிடி சோத்தை ஒழுங்கா போட்டிருந்தா இன்னும் ஒரு வருசம் அப்பா இருந்திருப்பாரு… மனசுக்குள் ஒரு முள் அவரைக் குத்திக் கொண்டிருந்தது.
நன்றி ;தளிர்
Re: நொடிக்கதை
ஜல்லிக்கட்டு!
-------------
நம்ம டிரெடிஷன் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் கேலியா போயிருச்சு! யாருய்யா அவன் பீட்டா! அவனுக்கு எந்த உரிமை இருக்கு ஜல்லிக்கட்டை தடுக்க! நம்ம அரசாங்கம் அவனுக்கு கைக்கூலியா வேலை பார்க்குது… இப்படியே போனா நம்ம கலாச்சாரமே அழிஞ்சு போயிரும்! ஜீன்ஸும் பெர்முடாஸும் அணிந்தபடி பீட்ஸா சுவைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் இரு இளைஞர்கள்.
நன்றி ;தளிர்
-------------
நம்ம டிரெடிஷன் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் கேலியா போயிருச்சு! யாருய்யா அவன் பீட்டா! அவனுக்கு எந்த உரிமை இருக்கு ஜல்லிக்கட்டை தடுக்க! நம்ம அரசாங்கம் அவனுக்கு கைக்கூலியா வேலை பார்க்குது… இப்படியே போனா நம்ம கலாச்சாரமே அழிஞ்சு போயிரும்! ஜீன்ஸும் பெர்முடாஸும் அணிந்தபடி பீட்ஸா சுவைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் இரு இளைஞர்கள்.
நன்றி ;தளிர்
Re: நொடிக்கதை
நன்றிகெட்ட மனுஷங்க!
----
இந்த மனுஷங்க ரொம்ப மோசம்பா! என்னை பத்தி கதை கதையா எழுதறாங்க? ஆனா கிட்டப் போனா துரத்திவிடறாங்க!
அவங்க நம்மளை வைச்சு எவ்ளோ சம்பாதிக்கிறாங்க ஆனா நமக்குன்னு ஒரு பைசா செலவழிச்சிருப்பாங்களா?
அட போப்பா! வேப்பிலையிலும் திருநீறிலேயும் நம்மை அடிக்காம இருந்தா போதாதா?
இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.
நன்றி ;தளிர்
----
இந்த மனுஷங்க ரொம்ப மோசம்பா! என்னை பத்தி கதை கதையா எழுதறாங்க? ஆனா கிட்டப் போனா துரத்திவிடறாங்க!
அவங்க நம்மளை வைச்சு எவ்ளோ சம்பாதிக்கிறாங்க ஆனா நமக்குன்னு ஒரு பைசா செலவழிச்சிருப்பாங்களா?
அட போப்பா! வேப்பிலையிலும் திருநீறிலேயும் நம்மை அடிக்காம இருந்தா போதாதா?
இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.
நன்றி ;தளிர்
Re: நொடிக்கதை
ஒப்பீடு!
வெற்றிலை பாக்கு பழங்கள் ஸ்வீட் காரத்தோடு தட்டில் வைத்து தனது மகனின் திருமண பத்திரிக்கையை கொடுத்தார் வேலாயுதம். அவசியம் வந்துடனும்! என்றார். கல்யாணத்திற்கு சென்று கவரையும் கொடுத்து திரும்பிய வேலாயுதம் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படியும் பத்திரிக்கை பூ பழம் நம்ம வீட்டுக்கு வந்தது என ஒரு ஐநூறு செலவாயிருக்கும். அதான் நான் ஆயிரமா மொய் வைச்சுட்டு வந்தேன். அங்கே சம்பந்தம் பேசிக்கொண்டிருந்தார். பத்திரிக்கை வைக்கவே எனக்கு ஆயிரம் செலவாச்சு! அதே ரூபாயை மொய்யா எழுதி இருக்கான் பிசாத்து பய…!
நன்றி ;தளிர்
வெற்றிலை பாக்கு பழங்கள் ஸ்வீட் காரத்தோடு தட்டில் வைத்து தனது மகனின் திருமண பத்திரிக்கையை கொடுத்தார் வேலாயுதம். அவசியம் வந்துடனும்! என்றார். கல்யாணத்திற்கு சென்று கவரையும் கொடுத்து திரும்பிய வேலாயுதம் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படியும் பத்திரிக்கை பூ பழம் நம்ம வீட்டுக்கு வந்தது என ஒரு ஐநூறு செலவாயிருக்கும். அதான் நான் ஆயிரமா மொய் வைச்சுட்டு வந்தேன். அங்கே சம்பந்தம் பேசிக்கொண்டிருந்தார். பத்திரிக்கை வைக்கவே எனக்கு ஆயிரம் செலவாச்சு! அதே ரூபாயை மொய்யா எழுதி இருக்கான் பிசாத்து பய…!
நன்றி ;தளிர்
Re: நொடிக்கதை
சிபாரிசு!
---------------
எனக்கு க்வாலிட்டிதான் முக்கியம்! சிபாரிசு பண்றவனுக்கு வேலை கொடுக்கிறது. கமிஷன் பார்க்கிறது இதெல்லாம் பிடிக்காது. உங்க மூணு பேர்ல யார் கொட்டேஷன் கம்மியா இருக்கோ அவங்களுக்குத்தான் இந்த கட்டிடம் கட்டற வேலை.. புரியுதா? மேஸ்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார் அந்த பில்டிங் ஒர்க் டெண்டரை சிபாரிசு மூலம் பெற்ற காண்ட்ராக்டர்.
நன்றி ;தளிர்
நொடிக்கதை
---------------
எனக்கு க்வாலிட்டிதான் முக்கியம்! சிபாரிசு பண்றவனுக்கு வேலை கொடுக்கிறது. கமிஷன் பார்க்கிறது இதெல்லாம் பிடிக்காது. உங்க மூணு பேர்ல யார் கொட்டேஷன் கம்மியா இருக்கோ அவங்களுக்குத்தான் இந்த கட்டிடம் கட்டற வேலை.. புரியுதா? மேஸ்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார் அந்த பில்டிங் ஒர்க் டெண்டரை சிபாரிசு மூலம் பெற்ற காண்ட்ராக்டர்.
நன்றி ;தளிர்
நொடிக்கதை
Re: நொடிக்கதை
சில்லறை!
-------------
அந்த குளிர்பான கடையில் பாதாம் மில்க் ஒன்றை அருந்திய ராம் இருபது ரூபாய் நோட்டை தர, சார் சில்லறை இல்லீங்களே! ஒரு சாக்லெட் தந்திடட்டுமா? என்ற கடைக்காரரிடம் என்ன சார் வியாபாரம் பண்றீங்க சில்லறை கூடவா மாத்தி வைச்சுக்க மாட்டீங்க சரி கொடுத்து தொலைங்க என்று எரிச்சலாக சாக்லேட்டை வாங்கி பையில் போட்டுக்கொண்ட ராம் நின்றிருந்த பேரூந்தில் ஏறினான். எல்லோரும் சரியா சில்லறை எடுத்து வைச்சுக்கங்க 50ம் நூறுமா நீட்டாதீங்க என்றான்.
நன்றி ;தளிர்
நொடிக்கதை
-------------
அந்த குளிர்பான கடையில் பாதாம் மில்க் ஒன்றை அருந்திய ராம் இருபது ரூபாய் நோட்டை தர, சார் சில்லறை இல்லீங்களே! ஒரு சாக்லெட் தந்திடட்டுமா? என்ற கடைக்காரரிடம் என்ன சார் வியாபாரம் பண்றீங்க சில்லறை கூடவா மாத்தி வைச்சுக்க மாட்டீங்க சரி கொடுத்து தொலைங்க என்று எரிச்சலாக சாக்லேட்டை வாங்கி பையில் போட்டுக்கொண்ட ராம் நின்றிருந்த பேரூந்தில் ஏறினான். எல்லோரும் சரியா சில்லறை எடுத்து வைச்சுக்கங்க 50ம் நூறுமா நீட்டாதீங்க என்றான்.
நன்றி ;தளிர்
நொடிக்கதை
Re: நொடிக்கதை
போதை!
-----------
எப்பப் பாரு போகோ சேனல், விட்டா டோரா… வேற எதுவும் பார்க்க மாட்டேங்கிறா? வோம் ஒர்க் கூட செய்யாம அப்படி என்ன டீவியோ…? அப்படியே அடிக்ட் ஆயிட்டா..
தன்னுடைய மகளை பற்றி இரண்டு மணி நேரமாய் பேஸ்புக் சாட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா..
நன்றி ;தளிர்
நொடிக்கதை
-----------
எப்பப் பாரு போகோ சேனல், விட்டா டோரா… வேற எதுவும் பார்க்க மாட்டேங்கிறா? வோம் ஒர்க் கூட செய்யாம அப்படி என்ன டீவியோ…? அப்படியே அடிக்ட் ஆயிட்டா..
தன்னுடைய மகளை பற்றி இரண்டு மணி நேரமாய் பேஸ்புக் சாட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா..
நன்றி ;தளிர்
நொடிக்கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|