Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
First topic message reminder :
நம் நிலம்... நம் பழங்கள்... நம் ஆரோக்கியம்!
மா, பலா, வாழை எனக் கனிகளைப் போற்றிக் கொண்டாடிய சமூகம் நாம். ஒவ்வொரு பகுதியிலும், அதன் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப விதவிதமான பழங்கள் விளைகின்றன. நம் ஊர் பழங்களுக்கு அயல்நாடுகளில் கிராக்கி அதிகரித்துக்கொண்டிருக்கும் காலம் இது. மறுபுறம், வெளிநாட்டுப் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை எனக் கூறப்பட்டு, இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஊருக்கும் தகுந்த மாதிரி காய்களையும் கனிகளையும் இயற்கை வாரி வழங்கியிருக்கும்போது, நாம் ஏன் அயல்நாட்டுப் பழங்களை வாங்க வேண்டும்?
‘உணவே மருந்து' என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம் ஊர் பழங்கள். ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொருவிதமான சத்து பொதிந்து கிடக்கிறது. பொதுவாக, பழங்கள் எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்டவை; நார்ச்சத்து மிகுந்தவை; பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கின்றன. வெவ்வேறு நிறத்தில் இருக்கும் பழங்களில் அரிய வகை ஃப்ளேவனாய்டு சத்துக்கள் இருக்கின்றன.
நம் நாட்டில் விளையும் பழங்களின் சிறப்புகளையும், எந்தெந்த கனிகளை யார் யார் சாப்பிட வேண்டும் என்பன குறித்தும் விளக்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சமோசா, இனிப்புப் பண்டங்கள், நொறுக்குத் தீனிகளை ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்துத் தருவதற்குப் பதிலாக, ஏதாவது ஒரு பழத்தைத் தினமும் சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொடுத்து அனுப்பவும். சிறு வயதிலிருந்தே பழங்களைச் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியம் மிளிரும் ஆயுள் கூடும்.
பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?
பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.
ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்
பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது.
பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.
பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.
எப்போது சாப்பிட வேண்டும்?
பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.
சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.
உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.
நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.
ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நம் நிலம்... நம் பழங்கள்... நம் ஆரோக்கியம்!
மா, பலா, வாழை எனக் கனிகளைப் போற்றிக் கொண்டாடிய சமூகம் நாம். ஒவ்வொரு பகுதியிலும், அதன் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப விதவிதமான பழங்கள் விளைகின்றன. நம் ஊர் பழங்களுக்கு அயல்நாடுகளில் கிராக்கி அதிகரித்துக்கொண்டிருக்கும் காலம் இது. மறுபுறம், வெளிநாட்டுப் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை எனக் கூறப்பட்டு, இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஊருக்கும் தகுந்த மாதிரி காய்களையும் கனிகளையும் இயற்கை வாரி வழங்கியிருக்கும்போது, நாம் ஏன் அயல்நாட்டுப் பழங்களை வாங்க வேண்டும்?
‘உணவே மருந்து' என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம் ஊர் பழங்கள். ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொருவிதமான சத்து பொதிந்து கிடக்கிறது. பொதுவாக, பழங்கள் எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்டவை; நார்ச்சத்து மிகுந்தவை; பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கின்றன. வெவ்வேறு நிறத்தில் இருக்கும் பழங்களில் அரிய வகை ஃப்ளேவனாய்டு சத்துக்கள் இருக்கின்றன.
நம் நாட்டில் விளையும் பழங்களின் சிறப்புகளையும், எந்தெந்த கனிகளை யார் யார் சாப்பிட வேண்டும் என்பன குறித்தும் விளக்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சமோசா, இனிப்புப் பண்டங்கள், நொறுக்குத் தீனிகளை ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்துத் தருவதற்குப் பதிலாக, ஏதாவது ஒரு பழத்தைத் தினமும் சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொடுத்து அனுப்பவும். சிறு வயதிலிருந்தே பழங்களைச் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியம் மிளிரும் ஆயுள் கூடும்.
பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?
பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.
ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்
பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது.
பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.
பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.
எப்போது சாப்பிட வேண்டும்?
பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.
சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.
உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.
நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.
ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
சாத்துக்குடி
அனைவரும் சாப்பிட ஏற்ற பழங்களில் சாத்துக்குடிக்கு முக்கியமான இடம் உண்டு. வைட்டமின் சி அதிகம் நிறைந்தது.
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. ஆனால், எடை குறைக்க விரும்புபவர்கள் சாத்துக்குடியைப் பழமாகவே உரித்து, சுளைகளை மென்று உண்ணுவது நல்லது. ஜூஸாக அருந்துவதைத் தவிர்க்கலாம்.
செரிமானக் கோளாறுகளைச் சரி செய்யும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை விரைவில் அதிகரிக்கும். சிகிச்சை முடிந்து மீள்பவர்களுக்கு சாத்துக்குடி சிறந்த மருந்து.
வயிற்றுப்புண்களை ஆற்றும். குறிப்பாக பெப்டிக் அல்சர் பிரச்னையைச் சரிசெய்யும்.
அனைவரும் சாப்பிட ஏற்ற பழங்களில் சாத்துக்குடிக்கு முக்கியமான இடம் உண்டு. வைட்டமின் சி அதிகம் நிறைந்தது.
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. ஆனால், எடை குறைக்க விரும்புபவர்கள் சாத்துக்குடியைப் பழமாகவே உரித்து, சுளைகளை மென்று உண்ணுவது நல்லது. ஜூஸாக அருந்துவதைத் தவிர்க்கலாம்.
செரிமானக் கோளாறுகளைச் சரி செய்யும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை விரைவில் அதிகரிக்கும். சிகிச்சை முடிந்து மீள்பவர்களுக்கு சாத்துக்குடி சிறந்த மருந்து.
வயிற்றுப்புண்களை ஆற்றும். குறிப்பாக பெப்டிக் அல்சர் பிரச்னையைச் சரிசெய்யும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது, ரத்தத்தை விருத்தி அடையச் செய்யும். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் தன்மை அத்திக்கு உண்டு என்பதால், சிறந்த டீடாக்ஸாகச் செயல்படும். மூல நோயைத் தடுக்கும் ஆற்றலும் அத்திக்கு உண்டு.
நா வறட்சி உள்ளவர்கள் அத்திப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். பேச்சு சரியாக வராமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு, அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுப்பது நல்லது.
நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது, ரத்தத்தை விருத்தி அடையச் செய்யும். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் தன்மை அத்திக்கு உண்டு என்பதால், சிறந்த டீடாக்ஸாகச் செயல்படும். மூல நோயைத் தடுக்கும் ஆற்றலும் அத்திக்கு உண்டு.
நா வறட்சி உள்ளவர்கள் அத்திப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். பேச்சு சரியாக வராமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு, அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுப்பது நல்லது.
நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
பழங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நல்ல வண்ணத்தில், எந்த அழுக்கும் இல்லாமல், பளபளவென இருக்கும் பழங்களை வாங்கக் கூடாது. ஆப்பிள் போன்ற பழங்களில் மெழுகு தடவி விற்பார்கள். அதை, அப்படியே சாப்பிடும் போது, மெழுகு உடலுக்குள் சென்று பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செயற்கை ரசாயனம் கலக்காத ஆர்கானிக் பழங்களை வாங்குவது நல்லது. எந்தப் பழத்தை வாங்கினாலும் வேகமாக வெளிவரும் குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும்.
பழங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நல்ல வண்ணத்தில், எந்த அழுக்கும் இல்லாமல், பளபளவென இருக்கும் பழங்களை வாங்கக் கூடாது. ஆப்பிள் போன்ற பழங்களில் மெழுகு தடவி விற்பார்கள். அதை, அப்படியே சாப்பிடும் போது, மெழுகு உடலுக்குள் சென்று பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செயற்கை ரசாயனம் கலக்காத ஆர்கானிக் பழங்களை வாங்குவது நல்லது. எந்தப் பழத்தை வாங்கினாலும் வேகமாக வெளிவரும் குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
மில்க்ஷேக் வேண்டாம்!
மில்க்ஷேக் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஜூஸாக சாப்பிடுவதற்கு பதில் பாலுடன் சேர்த்து மில்க்ஷேக்காகச் சாப்பிடுவது சத்து மிகுந்தது என பலர் நினைக்கின்றனர். ஆனால், பாலுடன் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம்.
பாலுடன் பழத்தைக் கலந்து, மில்க்ஷேக், தயிருடன் பழங்கள் சேர்த்து ஃப்ரூட் சாலட் செய்து சாப்பிடுவது போன்றவை தவறு. இது போன்ற தவறான உணவு காம்பினேஷன் காரணமாகவே பலருக்கு ஃபுட் பாய்சன், அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.
பாலில் இருக்கும் புரதச்சத்து செரிமானத்துக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். பழங்கள் எளிதில் செரிமானம் ஆகும் தன்மைகொண்டவை. இவை செரிமான மண்டலத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
உணவுடன் பழங்களைச் சேர்க்கக் கூடாது என்பதைப் போலவே, பாலுடனும் பழங்களை சேர்க்கக் கூடாது. ஓரிரு நாட்கள் பாலுடன் பழங்களைச் சேர்த்து சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் வராது. தொடர்ந்து நீண்ட நாட்கள் மில்க்ஷேக் சாப்பிடும்போதுதான், செரிமானக் கோளாறுகள் வரும்.
குழந்தைகளுக்கு தோலில் ஏற்படும் அரிப்புகள், அலர்ஜிகள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மில்க்ஷேக் அதிகம் அருந்துவதும் ஒரு மறைமுகக் காரணம். எனவே, பழத்தை தனியாகச் சாப்பிடவும், பாலை வேறொரு நேரத்தில் தனியாகக் குடிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.
மில்க்ஷேக் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஜூஸாக சாப்பிடுவதற்கு பதில் பாலுடன் சேர்த்து மில்க்ஷேக்காகச் சாப்பிடுவது சத்து மிகுந்தது என பலர் நினைக்கின்றனர். ஆனால், பாலுடன் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம்.
பாலுடன் பழத்தைக் கலந்து, மில்க்ஷேக், தயிருடன் பழங்கள் சேர்த்து ஃப்ரூட் சாலட் செய்து சாப்பிடுவது போன்றவை தவறு. இது போன்ற தவறான உணவு காம்பினேஷன் காரணமாகவே பலருக்கு ஃபுட் பாய்சன், அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.
பாலில் இருக்கும் புரதச்சத்து செரிமானத்துக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். பழங்கள் எளிதில் செரிமானம் ஆகும் தன்மைகொண்டவை. இவை செரிமான மண்டலத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
உணவுடன் பழங்களைச் சேர்க்கக் கூடாது என்பதைப் போலவே, பாலுடனும் பழங்களை சேர்க்கக் கூடாது. ஓரிரு நாட்கள் பாலுடன் பழங்களைச் சேர்த்து சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் வராது. தொடர்ந்து நீண்ட நாட்கள் மில்க்ஷேக் சாப்பிடும்போதுதான், செரிமானக் கோளாறுகள் வரும்.
குழந்தைகளுக்கு தோலில் ஏற்படும் அரிப்புகள், அலர்ஜிகள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மில்க்ஷேக் அதிகம் அருந்துவதும் ஒரு மறைமுகக் காரணம். எனவே, பழத்தை தனியாகச் சாப்பிடவும், பாலை வேறொரு நேரத்தில் தனியாகக் குடிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?
பழங்களில் எண்ணற்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பழங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் திறன் பெற்றவை. தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கும்.
உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் அரிசி சோற்றிலோ, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளிலோ கிடையாது, பழங்களில் தான் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான். பழங்களில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் தாரளாமாக தினமும் சாப்பிடலாம்.
பழங்கள் சாப்பிடுவதால் உடலில் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல, வெளித்தோற்றத்துகும் பயன் உண்டு. பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது தோல் பொலிவடையும், வயதான தோற்றம் இளமையிலேயே வருவது தடுக்கப்படும்.செயற்கை கிரீம்களை முகத்தில் தடவுவதற்கு பதில் பழம் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.
பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் முதலான நோய்கள் வருவதற்கான் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
பழங்களில் எண்ணற்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பழங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் திறன் பெற்றவை. தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கும்.
உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் அரிசி சோற்றிலோ, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளிலோ கிடையாது, பழங்களில் தான் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான். பழங்களில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் தாரளாமாக தினமும் சாப்பிடலாம்.
பழங்கள் சாப்பிடுவதால் உடலில் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல, வெளித்தோற்றத்துகும் பயன் உண்டு. பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது தோல் பொலிவடையும், வயதான தோற்றம் இளமையிலேயே வருவது தடுக்கப்படும்.செயற்கை கிரீம்களை முகத்தில் தடவுவதற்கு பதில் பழம் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.
பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் முதலான நோய்கள் வருவதற்கான் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
சர்க்கரை நோயாளிகளுக்கு...
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே எந்தப் பழமும் சாப்பிடக் கூடாது என்று வருந்தத் தேவை இல்லை. இனிப்புச் சுவை குறைந்த, கலோரி குறைந்த சில பழங்களை அளவாகச் சாப்பிடலாம்.
பழங்கள் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டவை என்பதால், இனிப்புச் சுவை மிகுந்த பழங்களைச் சாப்பிடும்போது பழச்சர்க்கரை விரைவில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் அவசியம். எனவே நெல்லிக்கனி, கொய்யா, எலுமிச்சை, ஆப்பிள், பேரிக்காய், பப்பாளி, நாவல் ஆகிய பழங்களை, சர்க்கரை நோயாளிகளும் அளவோடு சீரான இடைவெளிகளில் சாப்பிடலாம்.
நாவல்பழக் கொட்டையை மட்டும் எடுத்துக் காயவைத்து, பொடித்து, மோரில் கலந்து குடித்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
கொய்யாவை முழுப்பழமாகச் சாப்பிடுவதைவிட செங்காயாகச் சாப்பிடுவது சிறந்தது. நெல்லிக்கனி சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு நல்லது. மாதுளையை அளவோடு சாப்பிடலாம்.
சப்போட்டா, முக்கனிகள், திராட்சை, தர்பூசணி போன்றவற்றைச் சுவைக்காக எப்போதாவது ஒருமுறை மிகச்சிறிய அளவில் எடுத்துக்கொள்ளலாம். இயன்றவரை, தவிர்ப்பதே நல்லது.
http://www.friendstamilchat.com/
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே எந்தப் பழமும் சாப்பிடக் கூடாது என்று வருந்தத் தேவை இல்லை. இனிப்புச் சுவை குறைந்த, கலோரி குறைந்த சில பழங்களை அளவாகச் சாப்பிடலாம்.
பழங்கள் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டவை என்பதால், இனிப்புச் சுவை மிகுந்த பழங்களைச் சாப்பிடும்போது பழச்சர்க்கரை விரைவில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் அவசியம். எனவே நெல்லிக்கனி, கொய்யா, எலுமிச்சை, ஆப்பிள், பேரிக்காய், பப்பாளி, நாவல் ஆகிய பழங்களை, சர்க்கரை நோயாளிகளும் அளவோடு சீரான இடைவெளிகளில் சாப்பிடலாம்.
நாவல்பழக் கொட்டையை மட்டும் எடுத்துக் காயவைத்து, பொடித்து, மோரில் கலந்து குடித்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
கொய்யாவை முழுப்பழமாகச் சாப்பிடுவதைவிட செங்காயாகச் சாப்பிடுவது சிறந்தது. நெல்லிக்கனி சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு நல்லது. மாதுளையை அளவோடு சாப்பிடலாம்.
சப்போட்டா, முக்கனிகள், திராட்சை, தர்பூசணி போன்றவற்றைச் சுவைக்காக எப்போதாவது ஒருமுறை மிகச்சிறிய அளவில் எடுத்துக்கொள்ளலாம். இயன்றவரை, தவிர்ப்பதே நல்லது.
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
சிறப்பான உடல்நல/மருத்துவ பகிவுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பழங்கள்!- ஒரு கண்ணோட்டம்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கழுத்து வலி-கண்ணோட்டம்
» பொடுகு-ஒரு கண்ணோட்டம்
» கொய்யா இலை-ஒரு கண்ணோட்டம்
» பசு - ஒரு அறிவியல் கண்ணோட்டம்
» உடல்வலி - ஒரு கண்ணோட்டம்
» பொடுகு-ஒரு கண்ணோட்டம்
» கொய்யா இலை-ஒரு கண்ணோட்டம்
» பசு - ஒரு அறிவியல் கண்ணோட்டம்
» உடல்வலி - ஒரு கண்ணோட்டம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|