Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
‘‘‘பல் போனா சொல் போச்சு’
Page 1 of 1 • Share
‘‘‘பல் போனா சொல் போச்சு’
சிரிப்பை அழகாக காட்டும் பற்கள்!
‘‘‘பல் போனா சொல் போச்சு’ என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில், பற்கள்தான் ஆரோக்கியத்துக்கான வாசல்’’ என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில், பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.
‘‘பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக் காட்டும் பற்களை பாதுகாப்பது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
*பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும், பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர்டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன் படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலோசனை படி சுத்தம் செய்வது அவசியம்.
*பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரலில் பிரச்னை... இவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு துர்நாற்றம் வீசாது.
*பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக் கொள்ளலாம்.
சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும்.
*இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால், ஈறின் நிறம் மாறும் என்பதால், எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால், கிளிப் போடலாம் அல்லது இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம்’’ என்று சொல்லும் டாக்டர் தீபாலட்சுமி, பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.செய்யக் கூடியவை
*தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும்.
*இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை ‘பிளாஸ்’ கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.க்ஷஒவ்வொரு
*முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
*பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.
*எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
*கண் எரிச்சல், மூட்டு வலி, சரும பிரச்னை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.
செய்யக் கூடாதவை
*கடினமான உணவுப் பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக் கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
*பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக் கூடாது.புகை, பாக்கு, வெற்றிலை போடக்கூடாது.
*குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கும் போது, அவர்கள் சாப்பிட்ட பிறகு, உடனடியாக தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பற்களில் பாக்டீரியா தங்கி கரை படியும் வாய்ப்பு உள்ளது.
முகநூல்
‘‘‘பல் போனா சொல் போச்சு’ என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில், பற்கள்தான் ஆரோக்கியத்துக்கான வாசல்’’ என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில், பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.
‘‘பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக் காட்டும் பற்களை பாதுகாப்பது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
*பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும், பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர்டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன் படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலோசனை படி சுத்தம் செய்வது அவசியம்.
*பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரலில் பிரச்னை... இவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு துர்நாற்றம் வீசாது.
*பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக் கொள்ளலாம்.
சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும்.
*இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால், ஈறின் நிறம் மாறும் என்பதால், எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால், கிளிப் போடலாம் அல்லது இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம்’’ என்று சொல்லும் டாக்டர் தீபாலட்சுமி, பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.செய்யக் கூடியவை
*தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும்.
*இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை ‘பிளாஸ்’ கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.க்ஷஒவ்வொரு
*முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
*பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.
*எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
*கண் எரிச்சல், மூட்டு வலி, சரும பிரச்னை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.
செய்யக் கூடாதவை
*கடினமான உணவுப் பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக் கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
*பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக் கூடாது.புகை, பாக்கு, வெற்றிலை போடக்கூடாது.
*குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கும் போது, அவர்கள் சாப்பிட்ட பிறகு, உடனடியாக தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பற்களில் பாக்டீரியா தங்கி கரை படியும் வாய்ப்பு உள்ளது.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்
» கலி முத்தி போனா இப்படித்தானா?
» உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l
» ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்..
» உடலுழைப்பு குறைஞ்சு போச்சு
» கலி முத்தி போனா இப்படித்தானா?
» உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l
» ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்..
» உடலுழைப்பு குறைஞ்சு போச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|