தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகைக் கவரும் ஆயுர்வேதம்

View previous topic View next topic Go down

உலகைக் கவரும் ஆயுர்வேதம் Empty உலகைக் கவரும் ஆயுர்வேதம்

Post by முழுமுதலோன் Thu Jun 09, 2016 3:23 pm

நேகல் ஷாவை ஒரு `சர்வதேச இளைஞர்’ என்று கூறலாம். பெங்களூரில் வசிக்கும் இவர், ஒரு ஜப்பானிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். அயர்லாந்து பெண்ணை மணந்துள்ளார். ஜெர்மானிய கார்களில் பைத்தியமாக இருக்கிறார். ஆனால் மருத்துவம் என்று வருகிறபோது, ஆயுர்வேதத்தை நாடுகிறார். ஆம், 5 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்துக்கு தற்போது மதிப்பு அதிகரித்து வருகிறது.
படித்த நகர்ப்புற இளந்தலைமுறை, ஆயுர்வேதத்தை (ஆயுர்- உயிர், வேதம்- அறிவு) நாடத் தொடங்கியிருக்கிறது.
ஆயுர்வேதம் என்றாலே மசாஜ், மூலிகை ஷாம்புகள், இனிய மணமுள்ள மாய்சரைஸர்கள், பாட்டி வைத்தியம் என்பதைத் தாண்டி, ஆயுர்வேதத்தில் அனேக அதிசயங்கள் இருக்கின்றன என்பதைத் தற்போது உலக மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
தீவிர நோய்ப் பாதிப்புகள் எப்போதையும் விட அதிகரித்துள்ள தற்போதைய நிலையில், பலரும் ஆயுர்வேதத்தை மவுசுமிக்கதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் முதல் பல் வலி வரை பல்வேறு தீவிர, சாதாரண நோய்ப் பாதிப்புகளை ஆயுர்வேதம் குணப்படுத்தவும், தடுக்கவும் கூடும் என்று நம்புகின்றனர்.

உலகைக் கவரும் ஆயுர்வேதம் Massage

பலர், ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை தடுப்பு மருந்துகள் தவிர வேறு போதுமான நோய்த் தடுப்பு வழிகள் இல்லை என்று கருதுகின்றனர். ஆங்கில மருத்துவத்துடன் ஒப்பிடுகையில் ஆயுர்வேதம் மெதுவாகச் செயல்படும் என்றாலும், பக்க விளைவுகள் குறைவு என்பது இதன் சிறப்பு அம்சமாகி விடுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் நேரும் மரணங்களில் 53 சதவீதம், தீவிர நோய்ப் பாதிப்புகளால் ஏற்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டில் இறந்த 10 லட்சத்து 30 ஆயிரம் பேரில் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர், தீவிர நோய்ப் பாதிப்புகளால் மரணத்தைத் தழுவியவர்கள். இந்த எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 6 கோடியாக இருக்கும் என்கிறது ஒரு `பகீர்’ கணக்கு.
இந்நிலையில், தீவிரமான நோய்களுக்கு எதிராகவும் ஆயுர்வேதம் கவசமாக முடியும் என்று கருதப்படுகிறது.
“ஆயுர்வேதத்துக்கு இதற்கு முன் இந்தளவு அங்கீகாரம் கிடைத்ததில்லை, அதிகம் பேர் இந்தச் சிகிச்சை பெற்றதில்லை” என்கிறார், மணிப்பால் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இதய மருத்துவச் சிகிச்சை நிபுணருமான எம்.எஸ். வலியதன். “ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையால் மட்டும் அனைத்து உடல் பிரச்சினைகளையும் சரிப்படுத்திவிட முடியாது என்று மக்கள் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார் இவர்.
தீவிர நோய்ப் பாதிப்புகளைத் தடுக்கவும், குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தால் எந்த அளவு உதவ முடியும்?
“ஆயுர்வேதம், அதிசயம் எதையும் நிகழ்த்துவதில்லை” என்கிறார், பெங்களூரில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ மற்றும் ஆயுர்வேத நிறுவன மருத்துவ இயக்குநர் ஜி.ஜி. கங்காதரன். “உதாரணத்துக்கு, `டைப் 1′ நíரிழிவு நோய்க்கான எங்களின் சிகிச்சையில் பஞ்சகர்மா அல்லது விரேச்சனா போன்ற சுத்தப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் அப்யங்கா, தன்யம்லதாரா, உத்வர்த்தனா போன்ற மசாஜ் தெரபிகள் உள்ளன. இவை, உடம்பில் சேர்ந்துள்ள நச்சுகளை அகற்றி, உள் உடலமைப்பைச் சுத்தப்படுத்த உதவுகின்றன. ஐந்தாண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கூட இந்தச் சிகிச்சை பயன் கொடுக்கும். ஆயுர்வேத நடைமுறைகளை தவறாது கடைப்பிடித்தால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடலாம்” என்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளில் நம் நாட்டில், இதய நோய்ப் பாதிப்பு நகர்ப்புறங்களில் 6 மடங்கும், கிராமப்புறங்களில் 4 மடங்கும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3 கோடி இதய நோயாளிகள் இருக்கிறார்கள். “இவர்களுக்கு மருந்து மட்டும் உதவாது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் கூடிய ஆயுர்வேத வாழ்க்கைமுறைதான் வியாதியைக் கட்டுக்குள் வைக்க உதவும்” என்கிறார் வலியதன்.

உலகைக் கவரும் ஆயுர்வேதம் Oil_massage2

வருமுன் தடுப்பதுதான் ஆயுர்வேதத்தின் அடிப்படை அம்சம். ஆகாரம் (உணவு), விகாரம் (வாழ்க்கைமுறை), அவுஷதம் (மருந்து) மூன்றின் கூட்டணியே ஒருவரை நலமாக வாழ வைக்கும் என்கிறது ஆயுர்வேதம்.
ஆகாரம் என்பது சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாக அமைய வேண்டும். `வாழ்க்கைமுறை’யில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. நித்திரை (உறக்கம்) என்பது இரவில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாலை 3.30 மணி முதல் 5.30 வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிக்கவேண்டும்.
“நான் அறிந்தவரை, பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது அரிது” என்கிறார், பெங்களூர் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் டாக்டர் எம். ரமேஷ்.
“காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் போன்ற உடல் வேதிவினை மாற்றப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தினம் தவறாது அப்யங்கமும் (மசாஜ்), உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால், உடம்பில் `ஆமம்’ (நச்சுகள்) சேராது, பல உடல் வேதிவினை மாற்றக் குறைபாடுகள் தவிர்க்கப்படும்” என்று அடித்துக் கூறுகிறார், ரமேஷ்.
உடம்பின் நுண்ணிய மற்றும் பெரிய வாயில்களைச் சுத்தமாக வைத்திருந்தால் ஒருவரால் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும் என்பது ஆயுர்வேதத் தத்துவம்

மருத்துவம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum