தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரிசி தரும் அரிதான நன்மைகள்

View previous topic View next topic Go down

அரிசி தரும் அரிதான நன்மைகள் Empty அரிசி தரும் அரிதான நன்மைகள்

Post by முழுமுதலோன் Tue Jul 26, 2016 4:16 pm


இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாட்டு மக்களுக்கும் ஆதார உணவாக இருப்பது அரிசிதான். அரிசி உடலுக்கு தேவையான மாவு சத்தை அளிப்பதுடன், மற்ற முக்கிய விட்டமின் சத்துக்களாக தயாமின், நியாசின், ஃபோலேட், கோலின் போன்றவைகளை கொண்டுள்ளது. இதைத்தவிர மாங்கனீஸ், செலீனியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க் போன்ற தாதுக்களும் இதில் இருக்கிறது.
அரிசியில் கார், வாலான், மணக்கத்தை போன்ற குறுவை வகைகளும், சீரகச்சம்பா, மிளகுச்சம்பா, கோரைச்சம்பா, நெல்லூர் சம்பா பாஸ்மதி போன்ற சம்பா ரகங்களும் இருக்கின்றன. எந்த ரக அரிசியாக இருந்தாலும் அதை சாதமாகவோ, மாராகரே சமைத்து சாப்பிடும்போது பல நன்மைகளை தருகிறது. நீரிழிவு நோயோ, உடல் பருமனோ இருப்பவர்கள் அரிசி சாப்பிடக்கூடாது என்பதும் தேவையில்லாத பயமே. கஞ்சியை வடித்த சாதத்தை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நன்மையை மட்டுமே அது அளிக்கும். அரிசியை கஞ்சியாகவோ, மாவாக அரைத்தும், அவலாக இடித்தும், பொரியாக பொரித்தும், பொங்கலாக குழைத்தும் சாப்பிடலாம்.
கஞ்சி வகைகள்: உலையில் சாதம் கொதிக்கும் போது அதிலிருந்து ஒரு கரண்டி எடுத்து அதில் வெண்ணையே, நெய்யோ கலந்து சாப்பிட்டால் குடல் வறட்சி, நீர் சுருக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவை சரியாகும். சாதம் வடித்த பின்பு கிடைக்கும் கஞ்சியை உடலிலும், தலைமுடிக்கும் தேய்த்துக் குளித்தால் தோலின் வரட்சி நீங்கும். தலைமுடி அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஜுரம் போன்ற நோய் இருப்பவர்களுக்கு புழுங்கலரிசியை வறுத்தோ, ரவையாக உடைத்தோ கஞ்சி காய்ச்சி அதில் சிறிதளவு பாலும் சேர்த்துக் கொடுத்தால் சுலபமாய் ஷீரணமாவதுடன் நோயை தாங்குவதற்கான பலமும் கிடைக்கும்.
புழுங்கலரிசியுடன் சிறிதளவு கோதுமை மற்றும் பச்சை பயிரை சேர்த்து வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் உடலின் வலிமை கூடும்.
ஏற்கனவே வடித்த சாதத்தை மீண்டும் வடித்து, அதை நன்கு கடைந்து கொடுத்தால் ஜுரம், பசியின்மை, ஷீரணம், சோர்வு, அம்மை நோய்கள் போன்றவற்றிற்கு நல்லது.
அவல்: அரிசியை நெல்லுடன் ஈரமாக்கி வறுத்து தட்டையாக தட்டி பிறகு நெல் உமியை பிரித்தெடுத்து வருவதுதான் அவல். அவலை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம். அவலை பால் மற்றும் வெல்லம் சேர்த்தோ, வெல்லம் மற்றும் நெய்யுடன் சேர்த்தே சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்ல சத்துணவாக இருக்கும். அவலை வேக வைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் சீதபேதி போன்ற நோய்களுக்கும் நல்லது.
நெல் பொரி: நெல்லை பொரித்து உமியை நீக்கி விட்டால் அதுதான் நெற்பொரி. நெற்பொரி அதிக சத்து சுலபமாய் ஷீரணமாககூடிய ஒன்றாகும். நெல் பொரியை குழைய வேக வைத்து கஞ்சியாக வயிற்றுப் போக்கு மற்றும் கடுமையான ஜுரம் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். வாந்தி, வயிற்றுப்புண், மயக்கம், சோர்வு, வயிற்று போக்கு, விக்கல் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு தயிர், பழச்சாறு போன்வற்றில் நெல் பொரியை கலந்து கொடுக்கலாம்.
அரிசி மாவு: அரிசியை ஊற வைத்து, காயவைத்து பொடியாக்கி பின்பு அதை நன்கு ஆவியில் வேக வைத்து வெயிலில் காய் வைத்துக் கொண்டால் பல மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதில் செய்யும் இடியாப்பம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு சுலபமாய் ஷீரணமாகக்கூடியது.
அரிசியை ஊற வைத்து அரைத்த மாவுடன் உளுந்து மாவு கலந்து தயாரிக்கும் இட்லி தோசை போன்றவை நல்ல சத்துள்ள ஆரோக்கியமான சரிவிகித உணவாகும். வாதம், பித்தம், சிலோத்தமம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய ஆற்றல் ஆவியில் வேக வைக்கும் இட்லிக்கு இருக்கிறது. அரிசி மாவு புட்டு உடலுக்கு வலிமையை தருகிறது.


அரிசி தரும் அரிதான நன்மைகள் 13615218_1137004449655202_7791231369743091375_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிசி தரும் அரிதான நன்மைகள் Empty Re: அரிசி தரும் அரிதான நன்மைகள்

Post by செந்தில் Wed Jul 27, 2016 6:18 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» பழுப்பு நிறத்தில் இருக்கும் கைக்குத்தல் அரிசி உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்!
» நுங்கு தரும் நன்மைகள் பல
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» அதிகதூக்கம் அழிவை தரும் , குறைவான தூக்கம் வாழ்வில் பொலிவை தரும் !!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum