தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நட்புக்காலம் 01

View previous topic View next topic Go down

நட்புக்காலம் 01 Empty நட்புக்காலம் 01

Post by தமிழ்நிலா Fri Nov 30, 2012 10:26 pm

இரவு விடிந்துகொண்டிருந்தது, நேரம் மூன்று மணியை தாண்டியும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான், தலையணை மட்டுமே அவனிடம் அடைக்கலமாய் கிடக்க சாமத்து கோழிகளை போல் மனம் கூவிக்கொண்டு இருந்தது. கண்களின் கண்ணீரை துடைக்கும் நண்பனாய் மாறிவிட்ட பொழுதில் அவன் கண்கள் மெல்ல அயர்கிறது. "டிங் டாங்" "டிங் டாங்" "டிங் டாங்" திடீர் என்ற ஒரு சத்தம் சுவர் மணிக்கூடு மூன்று மணி என்பதை கூறியது.

தனது இன்பங்களை எங்கோ தொலைத்துவிட்டு, சந்நியாசம் போன துறவியை போல் மீண்டும் எழுந்து அடுத்த நாளுக்கு ஆயத்தமாக மேசையின் உள்ள கொப்பியை பார்த்தபடி இருந்தவன், தான் யாருக்காக வாழ்ந்தானோ அவர்கள் தன்னை வெறுத்து விட்டார்கள் என்று மனம் வெதும்பியது. கொப்பிகளின் வசனங்களினுடே வேறோர் உலகை நோக்கி பயணித்தான்.

உயர்தரம் வந்த அவனுக்கு பலகனவுகள் குடிகொண்டிருந்தது. சாதாரண தரத்தில் இருந்த சந்தோசமான நண்பர்கள் நால்வரும் நாலு பக்கமும் சிதறி விட்டார்கள். அந்த நட்பு இனி என்றும் சிதையாது என்ற நம்பிக்கை மட்டும் சிதையாமல் இருந்தது. ஆனால் நடந்தது என்னவோ என்பதை நினைக்கையில் மட்டும் தலை சுத்துவதைப்போல் உணர்ந்தான். தனது வாழ்கையில் புதிதாக இணைந்ததில் ஒன்று இரண்டு நட்புகள் மட்டுமே மாறவில்லை என்ற சின்ன சந்தோசம் மட்டுமே நிம்மதியை தந்தது.

"டேய் என்னடா செய்கிறாய் ....."

என்ற அதட்டல் சத்தம் கேட்டு தன்னை மறந்த நிலையில் இருந்து மீண்டான். தந்தை தன் புராணத்தை பாட தொடங்கினார்.

"உன்னை பெத்து என்னத்தை கண்டேன் ..."

என்று நீள தாய் தன் ஆதரவையும் கொடுத்து தந்தையுடன் கூட்டணியிட்டு

"உனக்கு என்னடா குறைய வச்சோம்?"

என தொடங்க, வக்கீல் இல்லாத நிரபராதியை போல் தனக்காக தானே கதைக்க தொடங்கினான் ரவி.

"அம்மா வராத படிப்பை வா எண்டா என்னண்டு வரும், என்னால ஏலாது.... என்னை நிம்மதியா விடுங்கோ.."

யார் தான் கேப்பார்கள் இதை. எலோருடைய அதட்டலும் அவனை நிலைகுலைய வைத்தது. கண்களில் நீர் முத்தமிட அவன் மீண்டும் கட்டிலில் படுத்தான். அன்று காலை வகுப்புகளுக்கும் அவன் விடுமுறை குடுத்துவிட்டான்.

ஏன் தனக்கு எப்படி என்று எண்ணியவன் தனது பழைய சந்தோஷ வாழ்வுக்கு மெல்லமாக அடியை எடுத்துவைத்தான்.

அழகிய உலகத்தில் நிலையில்லா வாழ்க்கை வாழவந்த அவனுக்கு மட்டும் தான் எதுவுமே நிலையில்லாமல் போனது. சாதாரணத்தை சாதாரணமாக கழித்த அவனுக்கு உயர்தரம் ஆரம்பம் அமோக வரவேற்பு அளித்தது. தனது கற்பனைகளை நிஜமாக்கும் தொழிற்சாலை நோக்கிய பயணம் ஆரம்பம்.

முதல் நாள் முத்தான நாள். அனைவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூறி ஆரம்பித்த பயணத்தில் இவன் மட்டும் இடையில் இறக்கிவிடப்பட்டது ஏனோ ???

தான் தனிமை என்று அவனாகவே விளங்கிக்கொண்டான் அவனது நண்பர்களின் நடத்தைகளில் இருந்து. அவனாகவே அவர்களிடம் இருந்தும் விலத்த தொடங்கினான். இதை எதிர்பார்த்த அவர்களுக்கு சந்தோசம்.
ஒருவனின் வீழ்ச்சியில் சந்தோசப்படும் உலகம் அல்லவா இது. இது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

"நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும் எம் வாழ்க்கை பாதையில் என்றென்றும் நிழலை போலே தொடரும் நம் நட்பின் பெருமைகள்......."

தொலைபேசி அழைப்பு வருகின்றது. தனது கல்லுரி நண்பர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக அழைப்பு தொனியில் ஒரு நண்பன். தன்னை ஏதும் வேலைக்காரன் போல் நடத்துவான என நினைத்து பயந்து பதில் அளிக்காமல் நிறுத்தி விட்டான் ரவி. அந்த பாடல் கேட்ட நொடியில் வருடங்கள் நகர்ந்து தான் பழைய உலகுக்கு போய் விட்டான். அழகிய கல்லூரி நாட்கள், இனிமையான நண்பர்கள், ஆசிரியர்கள் நிறைந்த வாழ்வில் பூ ஆக நினைத்து மலர்ந்த மொட்டு அவன். பூக்கமுன் வாடிய பூவும் அதான்.

படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி கல்வி கற்ற அவனை சுற்றி நிறைய நண்பர்கள். எந்த பிரிவினையும் நட்புக்கு எல்லை இல்லை என கொள்கை கொண்டு வாழ்ந்த அவனுக்கும் நண்பர்களுக்கும் பெரும் சுவராக அந்த கல்வியே அமைந்தது. காரணம் அவன் செய்த ஒரே ஒரு தப்பு அந்த நட்பு. இருந்தாலும் என்றும் ஏரளமான நட்பு அவனுக்கா இருக்கும். முன்பெல்லாம் நண்பர்களுக்காக வீட்டில் சண்டை, இபோது அதையே வைத்து பெறோர் சண்டை.

"அவனுக்காக சண்டை..பிடிச்சாய்... பார் இப்ப உனோட யாரும் சேரேல... "
"படிப்பறிவில்லாத உனோட யார் தான் சேருவாங்கள்... .."

பாவம் அவன் என்ன செய்வான். எதனை செய்ய முடியும், இதை சொல்ல முடியுமா பெற்றோரிடம். தனுக்குள்ளே பூட்டி வைத்து வெதும்பினான்.

முன்பெல்லாம் பெண்கள் என்றால் எதிரிகளாய் பார்க்கும் அவனுக்கு கிடைத்த முதல் தோழி. அன்றுவரை இல்லாத ஒரு சொந்தம். எல்லா பெண்களும் தப்பானவர்கள் இல்லை, நல்லவர்களும் இருக்கிறார்கள் என கூறி வந்த அவளின் வரவு நல்வரவு. நல்ல தோழியாக வந்தவள் நெடுநாள் நிக்கவில்லை.

ஒரு முறை நண்பனின் பிறந்த நாளுக்கு செல்லும் சமயம் இராணுவத்தினரிடம் அப்கபட்ட போது, மிகவும் வருந்தியவள். பிற்காலத்தில் அவனை வருந்த வைத்தது விட்டு சென்றுவிட்டாள். அவளும் அவனுக்காகவே வாழ்ந்தாள், உண்மையான ஒரு நட்புக்காய் வாழ தொடங்கினான். அவள் ஒரு தாயை போல் பாசமாக இருந்தாள். அவனது நட்பும், அந்த நெருக்கமும் யாருக்கும் பிடிக்கவில்லை. அவனது நண்பர்களே எமனாயினர். நண்பர்களின் அழகான ஒரு பொய் சிதைத்தது அந்த நட்பை..

"ரவி அவளை லவ் பண்ணுறானாம் டா.."

"அவளும் தானாம் அவன்ர வகுப்பு பெடியள் சொன்னவங்கள்....."

அவளது நண்பிகளும் இப்படி அவளிடம் கேக்க மறுத்து விட்டாள். இரவு வந்த குறும்செய்தி. நட்பினை கூறியது.

"எங்க பிரண்ட்ஷிப் எங்களுக்கு தெரியும் தானேடா, யாருக்கும் ஏன் பயப்படுவான்.... நான் உனக்கு உண்மையா இருப்பன் என்னை நம்பு...."

தனக்குள் ஒரு கற்பனை. தன் நட்பு அழியாது என்று. இது வேதவாக்கு போல் எங்கும் நிறைந்திருந்தது. திரும்பிய இடம் எல்லாம் எதிரொலித்தது. எக்காலத்திலும் யாருக்காகவும் பிரியக்கூடா என்றும் சொன்னவள். ஒரு நொடி கூட யோசிக்காமல் முடிவை மாற்றினாள். அடுத்தடுத்த நாட்களில் வராத குறும் செய்திகள், கண்டும் சிரிக்காத முகம், அந்த மாற்றங்கள் பல உண்மைகளை கூறியது. நட்பினை புரிய வைக்க பட்ட வேதனைகள் எத்தனை. நெருப்பினால் காயம் இட்டு, தப்பான நட்பினை ஞாபக படுத்தி தடமாக்கி விட்டான், கல்லூரிக்குள் காலையில் கால் வைக்க நண்பர்கள் தொடுத்த கேள்விக்கணைகள் அம்பாக பாய, அவன் இதயம் சிதைந்தது..

"என்ன மச்சான் அவள் கோவமாம்..."

"என்ன பிரச்சனை......"

"சொல்லுடா நாங்க பாக்கிறம்..."

"லவ் பண்ணுறியாம் உண்மையா..??"

"சொல்லவே இல்லை..."

பிரிவதற்கு காரணமானவரின் அன்பான வார்த்தைகள். நயவஞ்சகர்களின் ஆறுதல்கள். சகிக்க முடியாமல் வகுப்புக்குள் கால் வைத்தான்..

(தொடரும்...)
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

நட்புக்காலம் 01 Empty Re: நட்புக்காலம் 01

Post by முரளிராஜா Sat Dec 01, 2012 6:37 am

கதை , படிக்க ஆவலை துண்டுகிறது சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நட்புக்காலம் 01 Empty Re: நட்புக்காலம் 01

Post by தமிழ்நிலா Sat Dec 01, 2012 9:01 pm

முரளிராஜா wrote:கதை , படிக்க ஆவலை துண்டுகிறது சூப்பர்
நன்றி பதிந்துள்ளேன்
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

நட்புக்காலம் 01 Empty Re: நட்புக்காலம் 01

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum