Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அன்னதானத்தின் மகிமை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
அன்னதானத்தின் மகிமை
கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும்
கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாகக்
கொடுத்தவன்.
தானத்தின் அடையாளம் அவன்.
தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன்.
ஒருசமயம் , கர்ணன் தானம் தரும் பொருட்களைத் தன்
உள்ளங்கையில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
யாசகம் பெற வந்தவர்கள் கர்ணனின் உள்ளங்கையில்
இருந்த பொருட்களைத் தாமே எடுத்துக் கொண்டனர்.
அங்கு வந்த கிருஷ்ணன், “கர்ணா! தானம் தருபவர்கள்
கை மேலேதான் இருக்கும். தானம் வாங்குபவர்கள் கை
கீழே இருக்கும். இதுதானே வழக்கம். நீ ஏன் இவ்வாறு
செய்கிறாய் ?” என்று கேட்டார்.
“ கிருஷ்ணா! நான் தானம் செய்வது புகழுக்காக அல்ல.
எத்தனை பிறவி எடுத்தாலும் இதைப் போல தானம்
செய்வதற்கு வல்லமை தா! என்று என் கைகளைக் கீழே
வைத்து இறைவனை வேண்டி தானம் செய்கிறேன்.
நீயே சொல்! புண்ணியம் வேண்டுபவர்கள் கை கீழேதானே
இருக்க வேண்டும்?” என்று கேட்க, கண்ணன் ஆமோதித்தான் .
கர்ணன் இறந்ததும் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டான். அங்கு
சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ
பசி மட்டும் அடங்கவேயில்லை. எப்பொழுதும் பசி இருந்து
கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப்
போனான். பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்று
கேட்டான்.
“நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன். எனக்கு
ஏன் இக்கொடிய தண்டனை? எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது?”
எனக் கேட்டான்.
சுவர்க்கத்தின் தலைவன், “கர்ணா! நீ பூவுலகில் வாழ்ந்த
காலத்தில் பொன்னும், பொருளும், மணியும் ஏன் உன்னுயிரும்
தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன்.
ஆனால் சிந்தித்துச் சொல். எப்போழுதாவது யாருக்காவது
அன்னதானம் செய்திருக்கிறாயா?” எனக் கேட்டான்.
கர்ணனுக்கு அன்னதானம் செய்ததாக நினைவே இல்லை.
“அப்படியானால் இதற்கு என்னதான் வழி?” எனக் கேட்ட
போது, “ உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில்
வைத்துக் கொள்… பசி அடங்கி விடும்!” என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. சந்தேகம் இருந்தாலும்
வேறு வழி இல்லை என்பதால் கை ஆள் காட்டி விரலை
வாயில் வைத்துச் சப்பினான். உடனே பசி அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன், “இது என்ன மாய மந்திரம்?”
எனக் கேட்க அதற்கு சொர்க்கத்தின் தலைவன் காரணம்
உரைத்தான்.
“அன்பான கர்ணா! நீ பூவுலகில் வாழும் போது பசியுடன் வந்த
ஒருவன் அன்னதானச் சத்திரம் எங்கு இருக்கிறதென்று வழி
கேட்டான். நீயும் உனது வலதுகை ஆள்காட்டி விரலால்
சத்திரத்தின் திசையைக் காட்டினாய்.
அந்த புண்ணியச் செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது”
எனக் கூறினான்.
–
———————————–
நா. புனிதவல்லி
தி இந்து
கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாகக்
கொடுத்தவன்.
தானத்தின் அடையாளம் அவன்.
தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன்.
ஒருசமயம் , கர்ணன் தானம் தரும் பொருட்களைத் தன்
உள்ளங்கையில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
யாசகம் பெற வந்தவர்கள் கர்ணனின் உள்ளங்கையில்
இருந்த பொருட்களைத் தாமே எடுத்துக் கொண்டனர்.
அங்கு வந்த கிருஷ்ணன், “கர்ணா! தானம் தருபவர்கள்
கை மேலேதான் இருக்கும். தானம் வாங்குபவர்கள் கை
கீழே இருக்கும். இதுதானே வழக்கம். நீ ஏன் இவ்வாறு
செய்கிறாய் ?” என்று கேட்டார்.
“ கிருஷ்ணா! நான் தானம் செய்வது புகழுக்காக அல்ல.
எத்தனை பிறவி எடுத்தாலும் இதைப் போல தானம்
செய்வதற்கு வல்லமை தா! என்று என் கைகளைக் கீழே
வைத்து இறைவனை வேண்டி தானம் செய்கிறேன்.
நீயே சொல்! புண்ணியம் வேண்டுபவர்கள் கை கீழேதானே
இருக்க வேண்டும்?” என்று கேட்க, கண்ணன் ஆமோதித்தான் .
கர்ணன் இறந்ததும் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டான். அங்கு
சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ
பசி மட்டும் அடங்கவேயில்லை. எப்பொழுதும் பசி இருந்து
கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப்
போனான். பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்று
கேட்டான்.
“நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன். எனக்கு
ஏன் இக்கொடிய தண்டனை? எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது?”
எனக் கேட்டான்.
சுவர்க்கத்தின் தலைவன், “கர்ணா! நீ பூவுலகில் வாழ்ந்த
காலத்தில் பொன்னும், பொருளும், மணியும் ஏன் உன்னுயிரும்
தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன்.
ஆனால் சிந்தித்துச் சொல். எப்போழுதாவது யாருக்காவது
அன்னதானம் செய்திருக்கிறாயா?” எனக் கேட்டான்.
கர்ணனுக்கு அன்னதானம் செய்ததாக நினைவே இல்லை.
“அப்படியானால் இதற்கு என்னதான் வழி?” எனக் கேட்ட
போது, “ உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில்
வைத்துக் கொள்… பசி அடங்கி விடும்!” என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. சந்தேகம் இருந்தாலும்
வேறு வழி இல்லை என்பதால் கை ஆள் காட்டி விரலை
வாயில் வைத்துச் சப்பினான். உடனே பசி அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன், “இது என்ன மாய மந்திரம்?”
எனக் கேட்க அதற்கு சொர்க்கத்தின் தலைவன் காரணம்
உரைத்தான்.
“அன்பான கர்ணா! நீ பூவுலகில் வாழும் போது பசியுடன் வந்த
ஒருவன் அன்னதானச் சத்திரம் எங்கு இருக்கிறதென்று வழி
கேட்டான். நீயும் உனது வலதுகை ஆள்காட்டி விரலால்
சத்திரத்தின் திசையைக் காட்டினாய்.
அந்த புண்ணியச் செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது”
எனக் கூறினான்.
–
———————————–
நா. புனிதவல்லி
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|