Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தளிர் நடை
Page 1 of 1 • Share
தளிர் நடை
தளிர் நடை
கருவாகி உருவாகி
கரமேறி கழுத்தணைந்து
காதோரம் கணண்ற உன்
சுவாசம் உணர்ந்தவன் நான்
என் மல்லாந்த நெஞ்சேறி
உன் நெஞ்சணைத்து உறங்கையிலுன்
உள்ளிதய தாளமதை
உணர்ந்தவன் நான்
தரையிறங்கித்
தவழ்ந்துழன்று
தள்ளாடி
தடம்புரண்டு
மல்லாந்து பல்லில்லா
பொக்கை பூக்கவுன்
பொங்கி மகிழ்ந்தவன் நான்
ஆடியடங்கி நீ
அயர்ந்துறங்கையில்
அருகிருந்துவுன்
கனவுச்சிரிப்பினில்
கரைந்து போனவன் நான்
தவழ்ந்தெழுந்து நீ
தள்ளாடி சுவர்பிடித்து
தலைதிருப்பி இறுமாந்து
சிரித்த அந்நொடியில் சிகரமாயுணர்ந்தவன் நான்
பிடிமானமெதுவுமின்றி
அடியொன்றெடுத்து வைத்து
தள்ளாடித் தொப்பென்று
தடுமாறி விழுகையில் நீ
உள்ளம் பதறி
அள்ளியெடுத்தவன் நான்
மெல்லென நிலை பெற்று
ஓரடி ஈரடி யாய்
காலடி எடுத்து வைத்து
நிமிர்ந்து நீ நிற்கையிலே
அகிலம் வென்றவனாய்
கிரீடம் சூடிக்கொண்டேன்
விரல்பிடித்தென் விழாமல் அடிதொடர்ந்து
மெல்ல நீ நடக்கையிலே உன்
துணையாய் தோழனாய்
பதவிமாறிக்கொண்டேன் நான்
விரல் விட்டென்
துணையுதறி நீ
தனியே அடியெடுத்து
தள்ளாடி நடக்கையிலே
கண்ணம்மா
கண்கலங்கி நின்றேன் நான்
இன்று தளிர்
நடை போட்டு
நடக்குமுன்
அழகு கண்டு
நாளையுண்
உலகையுணக்கு
கட்டித்தர வேண்டுமென்ற
கட்டாய கடமையுணர்ந்து
இன்றே கனவு கொண்டேன்
கண்ணம்மா நீதானேயென்
கண்ணம்மா
-தமிழினியன் பிரபாகரன்-
கருவாகி உருவாகி
கரமேறி கழுத்தணைந்து
காதோரம் கணண்ற உன்
சுவாசம் உணர்ந்தவன் நான்
என் மல்லாந்த நெஞ்சேறி
உன் நெஞ்சணைத்து உறங்கையிலுன்
உள்ளிதய தாளமதை
உணர்ந்தவன் நான்
தரையிறங்கித்
தவழ்ந்துழன்று
தள்ளாடி
தடம்புரண்டு
மல்லாந்து பல்லில்லா
பொக்கை பூக்கவுன்
பொங்கி மகிழ்ந்தவன் நான்
ஆடியடங்கி நீ
அயர்ந்துறங்கையில்
அருகிருந்துவுன்
கனவுச்சிரிப்பினில்
கரைந்து போனவன் நான்
தவழ்ந்தெழுந்து நீ
தள்ளாடி சுவர்பிடித்து
தலைதிருப்பி இறுமாந்து
சிரித்த அந்நொடியில் சிகரமாயுணர்ந்தவன் நான்
பிடிமானமெதுவுமின்றி
அடியொன்றெடுத்து வைத்து
தள்ளாடித் தொப்பென்று
தடுமாறி விழுகையில் நீ
உள்ளம் பதறி
அள்ளியெடுத்தவன் நான்
மெல்லென நிலை பெற்று
ஓரடி ஈரடி யாய்
காலடி எடுத்து வைத்து
நிமிர்ந்து நீ நிற்கையிலே
அகிலம் வென்றவனாய்
கிரீடம் சூடிக்கொண்டேன்
விரல்பிடித்தென் விழாமல் அடிதொடர்ந்து
மெல்ல நீ நடக்கையிலே உன்
துணையாய் தோழனாய்
பதவிமாறிக்கொண்டேன் நான்
விரல் விட்டென்
துணையுதறி நீ
தனியே அடியெடுத்து
தள்ளாடி நடக்கையிலே
கண்ணம்மா
கண்கலங்கி நின்றேன் நான்
இன்று தளிர்
நடை போட்டு
நடக்குமுன்
அழகு கண்டு
நாளையுண்
உலகையுணக்கு
கட்டித்தர வேண்டுமென்ற
கட்டாய கடமையுணர்ந்து
இன்றே கனவு கொண்டேன்
கண்ணம்மா நீதானேயென்
கண்ணம்மா
-தமிழினியன் பிரபாகரன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|