Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குட்டிக் கதை - எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
குட்டிக் கதை - எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
ஒரு ஊரில் ”எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்று ஒருவன் இருந்தான்.
உண்மையிலேயே அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் தனக்கு பல விஷயங்கள்
தெரியும் என்று அவன் நினைத்ததாலும், அப்பாவி ஊர் மக்களும் அப்படியே
நம்பியதாலும் தன்னை பெரிய “அறிவாளி” ஆக அவன் நினைத்துக் கொண்டான். ’எல்லாம்
தெரிந்த ஏகாம்பரம்’ என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டான்.
ஒருமுறை வயலில் சில உழவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக
வழிதவறிய கழுதை ஒன்று வந்தது. அந்த மக்கள் அதுவரை கழுதையைப்
பார்த்திராததால் ஆச்சரியத்துடன் அதனை நோக்கினர். திடீரென கழுதை கத்திக்
கொண்டே வேகமாக ஓடியது. அப்போது அதன் முதுகில் கட்டியிருந்த மூட்டை
அவிழ்ந்து விழுந்தது. அதில் இருந்த பூசணிக்காய்கள் விழுந்து உடைந்து
சிதறின. அதைப் பார்த்த மக்கள் பயந்து போயினர். ஏனென்றால் அவர்கள் அதுவரை
பூசணியையும் பார்த்ததில்லை என்பதால். உடனே ’எல்லாம் தெரிந்த ஏகாம்பர’த்தை
அங்கே அழைத்து வந்தனர். நடந்ததை விவரித்தனர். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’
தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி தலையை ஆட்டி” இது ஒண்ணுமில்லைப்பா; இது
குதிரையோட முட்டை. நீங்க பார்த்தது அந்த குதிரையோட குட்டி” என்றான்.
மக்களும் அவனை, “ஆஹா.. ஆஹா… எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்று போற்றிப்
புகழ்ந்தனர்.
மற்றொருநாள் விடியற்காலை ஊருக்கு வெகு தொலைவில் யானை
ஒன்று ஆடி அசைந்து செல்வதைப் பார்த்தனர் மக்கள். அதுவரை யானையை அவர்கள்
பார்த்திராததால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை வரவழைத்துக் காண்பித்தனர்.
உடனே ஏகாம்பரம், “அட, பயப்படாதீங்கய்யா! இது ஒண்ணுமில்லை. அந்தா சூரியன்
வந்தவுடனே போகுதில்ல இருட்டு. அதோட மீதிதான் இது. சூரியன் வாரவும் வேகமாப்
போவுது” என்றான்.
சில நாட்கள் சென்றன. வயலில் மக்கள் வேலை செய்து
கொண்டிருந்தனர். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ அங்கே மேற்பார்வையிட்டுக்
கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு பாம்பு வந்தது. அது கூட்டத்தில்
புகுந்து வளைந்து, நெளிந்து வேகமாகச் சென்றது.
அதைப் பார்த்து
பயந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். ’எல்லாம் தெரிந்த
ஏகாம்பர’த்திடம் வந்து ’ஆத்தி, எங்களுக்கு ரொம்பப் பயந்து வருதே! என்ன
அது?’ என்று கவலையுடன் கேட்டனர்.
உடனே ஏகாம்பரம் நெஞ்சை
நிமிர்த்தி, தலையை உயர்த்தி, குரலை எழுப்பி “ அது ஒண்ணுமில்லீங்கய்யா.. அது
ஒரு பூச்சி. அது பேரு கோணக்க மாணக்க தையக் குட்டி” என்றான் கன கம்பீரமாக .
உடனே மக்கள், ”ஆஹா.. ஓஹோ..” என்று கரவொலி எழுப்பி அவனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினர்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால் நிறைந்தது இவ்வுலகம்
வாழ்க, எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்!!
நன்றி: முகநூல்
உண்மையிலேயே அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் தனக்கு பல விஷயங்கள்
தெரியும் என்று அவன் நினைத்ததாலும், அப்பாவி ஊர் மக்களும் அப்படியே
நம்பியதாலும் தன்னை பெரிய “அறிவாளி” ஆக அவன் நினைத்துக் கொண்டான். ’எல்லாம்
தெரிந்த ஏகாம்பரம்’ என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டான்.
ஒருமுறை வயலில் சில உழவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக
வழிதவறிய கழுதை ஒன்று வந்தது. அந்த மக்கள் அதுவரை கழுதையைப்
பார்த்திராததால் ஆச்சரியத்துடன் அதனை நோக்கினர். திடீரென கழுதை கத்திக்
கொண்டே வேகமாக ஓடியது. அப்போது அதன் முதுகில் கட்டியிருந்த மூட்டை
அவிழ்ந்து விழுந்தது. அதில் இருந்த பூசணிக்காய்கள் விழுந்து உடைந்து
சிதறின. அதைப் பார்த்த மக்கள் பயந்து போயினர். ஏனென்றால் அவர்கள் அதுவரை
பூசணியையும் பார்த்ததில்லை என்பதால். உடனே ’எல்லாம் தெரிந்த ஏகாம்பர’த்தை
அங்கே அழைத்து வந்தனர். நடந்ததை விவரித்தனர். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’
தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி தலையை ஆட்டி” இது ஒண்ணுமில்லைப்பா; இது
குதிரையோட முட்டை. நீங்க பார்த்தது அந்த குதிரையோட குட்டி” என்றான்.
மக்களும் அவனை, “ஆஹா.. ஆஹா… எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்று போற்றிப்
புகழ்ந்தனர்.
மற்றொருநாள் விடியற்காலை ஊருக்கு வெகு தொலைவில் யானை
ஒன்று ஆடி அசைந்து செல்வதைப் பார்த்தனர் மக்கள். அதுவரை யானையை அவர்கள்
பார்த்திராததால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை வரவழைத்துக் காண்பித்தனர்.
உடனே ஏகாம்பரம், “அட, பயப்படாதீங்கய்யா! இது ஒண்ணுமில்லை. அந்தா சூரியன்
வந்தவுடனே போகுதில்ல இருட்டு. அதோட மீதிதான் இது. சூரியன் வாரவும் வேகமாப்
போவுது” என்றான்.
சில நாட்கள் சென்றன. வயலில் மக்கள் வேலை செய்து
கொண்டிருந்தனர். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ அங்கே மேற்பார்வையிட்டுக்
கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு பாம்பு வந்தது. அது கூட்டத்தில்
புகுந்து வளைந்து, நெளிந்து வேகமாகச் சென்றது.
அதைப் பார்த்து
பயந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். ’எல்லாம் தெரிந்த
ஏகாம்பர’த்திடம் வந்து ’ஆத்தி, எங்களுக்கு ரொம்பப் பயந்து வருதே! என்ன
அது?’ என்று கவலையுடன் கேட்டனர்.
உடனே ஏகாம்பரம் நெஞ்சை
நிமிர்த்தி, தலையை உயர்த்தி, குரலை எழுப்பி “ அது ஒண்ணுமில்லீங்கய்யா.. அது
ஒரு பூச்சி. அது பேரு கோணக்க மாணக்க தையக் குட்டி” என்றான் கன கம்பீரமாக .
உடனே மக்கள், ”ஆஹா.. ஓஹோ..” என்று கரவொலி எழுப்பி அவனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினர்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால் நிறைந்தது இவ்வுலகம்
வாழ்க, எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்!!
நன்றி: முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: குட்டிக் கதை - எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
மகா பிரபுவதானே சொல்றிங்கமகா பிரபு wrote:நம் தளத்திலும் இப்படி ஒருவர் இருக்கிறார்
Similar topics
» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
» குட்டிக் கதை - துறவி
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
» குட்டிக் குழந்தைகளின் பெற்றோருக்கு...
» சிந்தனைக்கு
» குட்டிக் கதை - துறவி
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
» குட்டிக் குழந்தைகளின் பெற்றோருக்கு...
» சிந்தனைக்கு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|