Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: பீர்பால் கதைகள்
Page 1 of 1 • Share
பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு
இன்னும்.... காலைச் சூரியன் மலரவில்லை. இருள் வெளிறி, மெல்லிய வெளிச்சம் தழைத்திருந்தது. பனித் தூறலில் நனைந்த காற்று, ஜில்லெனத் தவழ்ந்தது. அரண்மனைக்குள்ளிருந்து, கவர்ச்சியான ரோஜா நிறப் பட்டுப் போர்வையைப் போர்த்தியவாறு, வாசலுக்கு வந்த அரசரைக் கண்ட நொடியே- அழகிய வெண்ணிறக் குதிரைக்கு அருகில் நிற்கிற இரண்டு வீரர்கள், 'அஸ்ஸலாமு அலைக்கும், மஹாராஜ்!...' எனப் பணிவன்புடன் சலாமிட்டார்கள்.
பதிலுக்கு, 'வ அலேக்கும் ஸலாம்...' என்றவாறே குதிரையை நெருங்கிய ராஜா, 'பிஸ்மில்லாஹ்!... அல்லாஹூ அக்பர்!... என்றபடியே எம்பித் தாவிக் குதிரையில் ஏறி அமர்ந்தார். தலையை மெல்லச் சாய்த்து, வீரர்களைப் பார்த்தார். 'அமைச்சர் வந்தால்.... ஏரிக் கரைக்கு வரச் சொல்....' என்றவாறே கடிவாளத்தைச் சுண்டினார்.
குதிரை, புறப்பட்டது. 'டடக் டக்...டடக் டக்.....' அரண்மனைக் கட்டிடங்களைச் சுற்றிச் சூழ அமைந்திருக்கிற கருங்கல் மதிலையொட்டிய ஒரு சாலை. அகன்று பரந்த அந்த ராஜவீதியின் இருமருங்கிலும் காட்டு விருட்சங்கள் ஓங்கி வளர்ந்து அடர்ந்து செறுமிப் பரந்து கிடந்தன. வெள்ளைக் குதிரை, மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. பையக் குலுங்கியபடியே அங்கும் இங்குமாய் பராக்குப் பார்த்தவாறிருந்தார். மரப் பூச்சிகள் கீறிச்சிட்டன. பறவைகள் கூவிப் பறந்தன.
எங்கோவிருந்து ஒரு கழுதை ஓங்கிக் கத்தியது. மறு நொடியே- 'டளுக்! கெனக் குளத்தில் பாய்ந்து மூழ்கி மீனைக் கொத்துகிற பறவை மாதிரி- ராஜாவின் மனசு, கடந்த இரவு ஆழ்ந்த உறக்கத்தில் தோற்றிய விசித்திரக் கனவைக் கொத்திக் கவ்வியது!... 'இத்தகைய விசித்திரக் கனவுகள், தூக்கத்தில் தோற்றுவதற்குக் காரணம் என்ன? நினைவுகளும், கனவுகளுக்கும் தொடர்பு உண்டா...? ஏதேதோ எண்ணிக் குழம்பிய ராஜா' ஏரிக்கரை மணல் வெளியில், தன்னிச்சையாக நிற்கிற குதிரையிலிருந்து இறங்க.... 'டடக் டக்.... டடக் டக்.....'
குதிரையின் குளம்படிக் சப்தத்தைக் கேட்டுத் திரும்பிக் கவனித்தபடியே குதிரையை விட்டிறங்கிய ராஜா. குதிரையை விட்டு விலகி நடந்தார். ஓரிரு நொடிகளுக்குள், படு வேகமாகப் பாய்ந்தோடு வந்த குதிரையைக் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினார்.
குதிரையிலிருந்து மெல்லக் குதித்தார். அரசரை நோக்கி, 'நமஸ்தே பாதுஷா....' எனக் கை குவித்தவாறே பணிவன்பும் புன் சிரிப்புமாகச் சொல்லியபடியே வந்தார், அமைச்சர்.
'இன்றைக்கு என்ன தாமதம்....?' எனக் குறுநகையுடன் வினவினார், மன்னர்.
'ராஜாவே... மன்னிக்கவும். தூக்கம் கலைகிற நேரத்தில்.. ஒரு விசித்திரக் கனவு கண்டேன். அத....'மந்திரியின் பேச்சில் சடக்கெனக் குறுக்கிட்ட ராஜா, வியப்பும் விதிர்ப்புமாகக் கேட்டார்.
'இதென்ன விசித்திரம்!...நானும் அப்படித்தான்.. கோழி கூவும் நேரத்திற்குச் சற்று முன்னே... ஒரு விசித்திரச் சொப்பனத்தைப் பார்த்தேன்...' 'அப்படியா....?'என்றார், மந்திரி. 'ஆமாம்...'என்றார், அரசர். முதலில், தாங்கள் கண்ட கனவைச் சொல்லுங்கள். பிறகு, நான் பார்த்த கனவைச் சொல்லுகிறேன்....' என்றவாறே ஏரிக்கரையின் ஈர மணலில் ராஜாவுடன் பைய நடந்தார், அமைச்சர்.
ராஜா, பொறுமையாக ஞாபகப்படுத்திக் கொண்ட பின் - தெளிவாகக் கூறினார். 'பெரிய வாழைப்பூ மடல் மாதிரி, நெடிய காதுகள் அமைந்த ஒரு கழுதை. ஆமாம், கழுதை தான்...
ஆனால், முழுக் கழுதை அல்ல!... மனித உடலில், கழுதையின் தலை பொருந்திய அந்த விசித்திரப் பிறவிக்கு, வால் இருந்ததோ, இல்லையோ....? நான் கவனிக்கவில்லை.
அரண்மனைத் தோட்டத்திலுள்ள மாதுளமரத்தை நெருங்கி, ஒரு பழத்தை தொட்டேன். உடனே, ஒரு முரட்டுக் குரல் அதட்டியது. 'தொடாதே!' அதட்டலைக் கேட்டதும், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு தென்னை மரக் கிடைத் தூரத்திலுள்ள கொய்யா மரத்தடியில் நிற்கிற ஒரு கழுதை... இல்லை!... ஒரு மனிதன்... தப்பு... ஒரு மனிதக் கழுதை அல்லது ஒரு கழுதை மனிதன். 'இந்தத் தோட்டத்தின் காவல் பூதம் நான். என்னுடைய ஒப்புதல் இல்லாமல், இங்குள்ள எந்தப் பூவைப் பறித்து முகர்ந்தாலும், அது மணக்காது. நாறும். எந்தப் பழத்தைப் பறித்துத் தின்றாலும், அது இனிக்காது. கசக்கும்!...' எனக் கூறியது.
நொடி நேரம் தயங்கிய பின், 'உன்னுடைய ஒப்புதலைப் பெற, நான் என்ன செய்ய வேண்டும்...?' என்று அந்த கழுதைப் பூதத்தை நயமாகக் கேட்டேன். 'நான் கேட்கிற மூன்று கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறிவிட்டால் ஒப்புதலோடு, உயர்ந்த பரிசும் அளிப்பேன்!... எனக் குறுகுறுப்புடன் சொல்லியது, கழுதைப் பூதம். 'என்ன பரிசு....?' என்றேன். 'அடக்க முடியாதது எது....? கொடுக்க முடியாதது எது...? மறுக்க முடியாதது எது...? இம்மூன்று வினாக்களுக்கும் முத்தான விடையளித்து விட்டால், காணாமல் போயிருக்கும் உங்களுடைய நவரத்தின மாலையைக் கண்டெடுத்துக் கொடுப்பேன்!...' எனப் பூதம் சொல்லி முடித்த நொடியே- திடுக்கிட்டேன்!... தூக்கம் சிதறித் துடித்து எழுந்தேன்! கழுத்தைக் கவனித்தேன். பிறகு, ஆடை அணிமணிகளை வைக்கும் பெட்டியைத் திறந்து துழாவினேன்.
நான் வழக்கமாக அணியும் கழுத்தணிகளில் எனது மதிப்பிற்குரிய நவரத்தின மாலையைக் காணவில்லை!... எங்கே போயிற்று அது? நான்... ராஜாவாகப் பட்டம் சூட்டிக் கொண்ட நாளிலிருந்து அன்றாடம் அணிந்து பழகிய நவரத்தின மாலை - எப்படித் தொலைந்தது...?
யாருக்கேனும் பரிசுப் பொருளாக வழங்கி விட்டதாகக் கூட ஞாபகம் இல்லை! அந்த மதிப்பு மிக்க மணிமாலையை யாருக்கும் பரிசாகக் கொடுத்திருக்க மாட்டேன், அது நிச்சயம்' எனக் கூறிய ராஜா மனக் குழப்பத்துடன், அருகில் நடந்துவரும் அமைச்சரைப் பார்த்தார். மந்திரி, தலை கவிழ்ந்தவாறு, மெளனமாக நடந்து கொண்டிருந்தார்.
'அமைச்சரே!...என்றார் ராஜா.
மறுநொடியே, 'ராஜாவே'... என்றவாறே சுருக்கமாக நிமிர்ந்த அமைச்சர், ராஜாவைப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். 'நான்... திகைத்துத் திணறித் தத்தளிக்கிறேன். தாங்கள் ஊமையாக நடந்து வருகிறீரே...?' எனக் குழப்பத்துடன் கேட்டார் மன்னர். மந்திரி, குழப்பமும் தவிப்புமாகச் சொன்னார்.
'மகாராஜாவே...தாங்கள் கண்ட கனவும், அந்தக் கனவோடு தொடர்புள்ள மாதிரி, நான் கண்ட கனவும் சாதாரணக் கனவல்ல. அவை, யாராலும் விளக்கிக் கூறவியலாத ஜெகஜ் ஜாலப் புதிராகும்!'... 'ஓ... அப்படியா..? தாங்கள் கண்ட கனவைச் சொல்லுங்கள்'... என ஆவலோடு கேட்டார், அரசர். மந்திரி கூறினார்.
'கிழக்கு அடிவானத்தில் வடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கிற நேரத்தில் பாபுஜி! பாபுஜி!... உங்களுக்கு ஒரு நற்செய்தி.. எனும் இனிய குரலைக் கேட்டதும் எனது உறக்கம் கலைந்தது. கண்ணிமைகளைப் பிரித்துப் பார்த்தேன். வலது கைப் பக்கத்தில், சாளரத்திற்கு அருகே, உத்தரத்திலிருந்து தொங்குகிற தங்க வளையத்தில் அமர்ந்திருக்கிற வெண்ணிறக் கொண்டைக் கிளி, புத்துணர்வுடன் பேசியது. 'பாபுஜி...நமது வீட்டு வாசலில் உள்ள மாதுள மரத்தடியில், உங்களுக்கொரு அற்புதமான பரிசு காத்திருக்கிறது!... கிளியின் பேச்சைக் கேட்டதும்- திகைப்பும், துடிப்புமாக எழுந்தேன். பரபரப்புடன் போனேன். வீட்டு வாசலிலிருக்கும் மாதுள மரத்தடியை அணுகி ஆசையும் ஆவலுமாகப் பார்த்தேன். கிளியின் சொற்படியே, மாதுள மரத்தடியில்... பேசவதை நிறுத்தி, இறுக்க முடிந்த வேட்டியின் மடியிலிருந்து, அரசருடைய காணாமல் போன நவரத்தின மாலையை எடுத்து, மன்னரிடம் கொடுத்தார், அமைச்சர்.
அதைக் கண்டதும், காலை நேரத்துப் பொன் வெய்யிலில் தகதகவென டாலடிக்கிற நவரத்தின மாலையைப் பார்த்ததும்- கண்கள் மலர, கண்ணிமைகள் படபடக்க, உள்ளம் பதைபதைக்க, உணர்ச்சி கிறுகிறுக்க, மந்திரியின் கைகளிலிருந்து மணி மாலையைச் சுருக்கமாகப் பறித்த அரசர் பரபரப்புடன் சொன்னார். 'இது என்னுடைய மாலைதான்.' 'ஆமாம், ராஜாவே... உங்களுடைய மாலையேதான், எனத் தீர்க்கமாகச் சொன்னார், அமைச்சர்.
ஓரிரு நொடி நேரம்... எங்கேயோ பார்த்தபடி என்னவோ யோசித்த அரசர் சடக்கெனத் திரும்பினார். மந்திரியை நோக்கிக் குழப்பம் தெளிந்த குரலை உயர்த்திக் கூறினார். 'அமைச்சரே...ஆமாம், அப்படித்தான்... எனக்குத் தெளிவாகப் புரிகிறது. நேற்றைக்கு முன்தினம், நள்ளிரவு நேரத்தில்... தூக்கம் பிடிக்காமல் அவஸ்தைப்பட்டு... உங்களிடம் சற்று நேரம் ஆறுதலாகப் பேசிவிட்டு வரலாம் என்றெண்ணித் தங்கள் வீட்டுக்கு வந்தேன். வீட்டு வாசலில், மாதுள மரத்தடி இருளில் தயங்கி நிற்கையில்...வீதியில்..யாரோ இரண்டு பேர் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும். நான் சட்டென மரத்தடியில் உட்கார்ந்த சமயம்.. நெஞ்சிலிக்கிற மணி மாலைகள் மரக் கிளையில் சிக்கி... நவரத்தின மாலை அறந்து விழுந்ததைக் கவனிக்க வில்லை. அப்புறம் என்னவோ நினைப்புடன் அரண்மனைக்குத் திரும்பினேன்... இதைக் கேட்டதும், அமைச்சர் குறுஞ் சிரிப்புடன் கேட்டார். 'ஆமாம் ராஜாவே... நவரத்தினமாலை காணாமல் போன விஷயம், உங்களது கனவில் தோன்றிய கழுதை மனிதனுக்கு எப்படித் தெரியும்...?'
ராஜா வெடுக்கென கேட்டார். 'காணாமல் போன நவரத்தின மாலை, மாதுள மரத்தடியில் கிடப்பது உங்களுடைய கொண்டைக் கிளிக்கு எப்படித் தெரியும்...?' மந்திரியும், ராஜாவும் குலுங்கிச் சிரித்தார்கள்!... 'இத்தகைய மகா விசித்திரங்கள் மனிதனுடைய பகுத்தறிவுக்குப் புரிபடாதவை!... எனப் புன்சிரிப்புடன் சொல்லிய ராஜா, நவரத்தின மாலையை அமைச்சரிடம் கொடுத்தவாறே புன்னகையுடன் சொன்னார்.
'எனது அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள்....' மாலையைப் பெற்றுக் கொண்ட மந்திரி, 'ராஜாவே..இன்றிரவு.. அந்தக் கழுதை மனிதன் உங்கள் கனவில் வந்து, எனது புதிர்க் கேள்விகளுக்குப் பதில் என்ன? - எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்...?' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார்.
'ஆமாம்...அந்தக் கழுதையின் கேள்விகளுக்கு என்ன விடை அளிப்பது...?' எனப் புன்னகையுடன் கேட்டார், அரசர். அமைச்சர் நிதானமாகக் கூறினார். 'கழுதை மனிதனின் முதல் கேள்வி இது, அடக்க முடியாதது எது...? பதில் இது, அடக்க முடியாதது கடல் அலை. இரண்டாவது கேள்வி, கொடுக்க முடியாதது எது...? தன்னிச்சையாக விட்டுவிடலாம் ஆனால் மற்றவருக்குக் கொடுக்க முடியாதது, உயிர்.! மறுக்க முடியாதது எது...? எனும் மூன்றாவது வினாவுக்கு விடை இதுதான் மரணம்...! மதி மந்திரியின் விடையைக் கேட்டதும், 'சபாஷ்!...' என மகிழ்ச்சிப் பொங்கக் கூவினார், ராஜா.
பதிலுக்கு, 'வ அலேக்கும் ஸலாம்...' என்றவாறே குதிரையை நெருங்கிய ராஜா, 'பிஸ்மில்லாஹ்!... அல்லாஹூ அக்பர்!... என்றபடியே எம்பித் தாவிக் குதிரையில் ஏறி அமர்ந்தார். தலையை மெல்லச் சாய்த்து, வீரர்களைப் பார்த்தார். 'அமைச்சர் வந்தால்.... ஏரிக் கரைக்கு வரச் சொல்....' என்றவாறே கடிவாளத்தைச் சுண்டினார்.
குதிரை, புறப்பட்டது. 'டடக் டக்...டடக் டக்.....' அரண்மனைக் கட்டிடங்களைச் சுற்றிச் சூழ அமைந்திருக்கிற கருங்கல் மதிலையொட்டிய ஒரு சாலை. அகன்று பரந்த அந்த ராஜவீதியின் இருமருங்கிலும் காட்டு விருட்சங்கள் ஓங்கி வளர்ந்து அடர்ந்து செறுமிப் பரந்து கிடந்தன. வெள்ளைக் குதிரை, மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. பையக் குலுங்கியபடியே அங்கும் இங்குமாய் பராக்குப் பார்த்தவாறிருந்தார். மரப் பூச்சிகள் கீறிச்சிட்டன. பறவைகள் கூவிப் பறந்தன.
எங்கோவிருந்து ஒரு கழுதை ஓங்கிக் கத்தியது. மறு நொடியே- 'டளுக்! கெனக் குளத்தில் பாய்ந்து மூழ்கி மீனைக் கொத்துகிற பறவை மாதிரி- ராஜாவின் மனசு, கடந்த இரவு ஆழ்ந்த உறக்கத்தில் தோற்றிய விசித்திரக் கனவைக் கொத்திக் கவ்வியது!... 'இத்தகைய விசித்திரக் கனவுகள், தூக்கத்தில் தோற்றுவதற்குக் காரணம் என்ன? நினைவுகளும், கனவுகளுக்கும் தொடர்பு உண்டா...? ஏதேதோ எண்ணிக் குழம்பிய ராஜா' ஏரிக்கரை மணல் வெளியில், தன்னிச்சையாக நிற்கிற குதிரையிலிருந்து இறங்க.... 'டடக் டக்.... டடக் டக்.....'
குதிரையின் குளம்படிக் சப்தத்தைக் கேட்டுத் திரும்பிக் கவனித்தபடியே குதிரையை விட்டிறங்கிய ராஜா. குதிரையை விட்டு விலகி நடந்தார். ஓரிரு நொடிகளுக்குள், படு வேகமாகப் பாய்ந்தோடு வந்த குதிரையைக் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினார்.
குதிரையிலிருந்து மெல்லக் குதித்தார். அரசரை நோக்கி, 'நமஸ்தே பாதுஷா....' எனக் கை குவித்தவாறே பணிவன்பும் புன் சிரிப்புமாகச் சொல்லியபடியே வந்தார், அமைச்சர்.
'இன்றைக்கு என்ன தாமதம்....?' எனக் குறுநகையுடன் வினவினார், மன்னர்.
'ராஜாவே... மன்னிக்கவும். தூக்கம் கலைகிற நேரத்தில்.. ஒரு விசித்திரக் கனவு கண்டேன். அத....'மந்திரியின் பேச்சில் சடக்கெனக் குறுக்கிட்ட ராஜா, வியப்பும் விதிர்ப்புமாகக் கேட்டார்.
'இதென்ன விசித்திரம்!...நானும் அப்படித்தான்.. கோழி கூவும் நேரத்திற்குச் சற்று முன்னே... ஒரு விசித்திரச் சொப்பனத்தைப் பார்த்தேன்...' 'அப்படியா....?'என்றார், மந்திரி. 'ஆமாம்...'என்றார், அரசர். முதலில், தாங்கள் கண்ட கனவைச் சொல்லுங்கள். பிறகு, நான் பார்த்த கனவைச் சொல்லுகிறேன்....' என்றவாறே ஏரிக்கரையின் ஈர மணலில் ராஜாவுடன் பைய நடந்தார், அமைச்சர்.
ராஜா, பொறுமையாக ஞாபகப்படுத்திக் கொண்ட பின் - தெளிவாகக் கூறினார். 'பெரிய வாழைப்பூ மடல் மாதிரி, நெடிய காதுகள் அமைந்த ஒரு கழுதை. ஆமாம், கழுதை தான்...
ஆனால், முழுக் கழுதை அல்ல!... மனித உடலில், கழுதையின் தலை பொருந்திய அந்த விசித்திரப் பிறவிக்கு, வால் இருந்ததோ, இல்லையோ....? நான் கவனிக்கவில்லை.
அரண்மனைத் தோட்டத்திலுள்ள மாதுளமரத்தை நெருங்கி, ஒரு பழத்தை தொட்டேன். உடனே, ஒரு முரட்டுக் குரல் அதட்டியது. 'தொடாதே!' அதட்டலைக் கேட்டதும், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு தென்னை மரக் கிடைத் தூரத்திலுள்ள கொய்யா மரத்தடியில் நிற்கிற ஒரு கழுதை... இல்லை!... ஒரு மனிதன்... தப்பு... ஒரு மனிதக் கழுதை அல்லது ஒரு கழுதை மனிதன். 'இந்தத் தோட்டத்தின் காவல் பூதம் நான். என்னுடைய ஒப்புதல் இல்லாமல், இங்குள்ள எந்தப் பூவைப் பறித்து முகர்ந்தாலும், அது மணக்காது. நாறும். எந்தப் பழத்தைப் பறித்துத் தின்றாலும், அது இனிக்காது. கசக்கும்!...' எனக் கூறியது.
நொடி நேரம் தயங்கிய பின், 'உன்னுடைய ஒப்புதலைப் பெற, நான் என்ன செய்ய வேண்டும்...?' என்று அந்த கழுதைப் பூதத்தை நயமாகக் கேட்டேன். 'நான் கேட்கிற மூன்று கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறிவிட்டால் ஒப்புதலோடு, உயர்ந்த பரிசும் அளிப்பேன்!... எனக் குறுகுறுப்புடன் சொல்லியது, கழுதைப் பூதம். 'என்ன பரிசு....?' என்றேன். 'அடக்க முடியாதது எது....? கொடுக்க முடியாதது எது...? மறுக்க முடியாதது எது...? இம்மூன்று வினாக்களுக்கும் முத்தான விடையளித்து விட்டால், காணாமல் போயிருக்கும் உங்களுடைய நவரத்தின மாலையைக் கண்டெடுத்துக் கொடுப்பேன்!...' எனப் பூதம் சொல்லி முடித்த நொடியே- திடுக்கிட்டேன்!... தூக்கம் சிதறித் துடித்து எழுந்தேன்! கழுத்தைக் கவனித்தேன். பிறகு, ஆடை அணிமணிகளை வைக்கும் பெட்டியைத் திறந்து துழாவினேன்.
நான் வழக்கமாக அணியும் கழுத்தணிகளில் எனது மதிப்பிற்குரிய நவரத்தின மாலையைக் காணவில்லை!... எங்கே போயிற்று அது? நான்... ராஜாவாகப் பட்டம் சூட்டிக் கொண்ட நாளிலிருந்து அன்றாடம் அணிந்து பழகிய நவரத்தின மாலை - எப்படித் தொலைந்தது...?
யாருக்கேனும் பரிசுப் பொருளாக வழங்கி விட்டதாகக் கூட ஞாபகம் இல்லை! அந்த மதிப்பு மிக்க மணிமாலையை யாருக்கும் பரிசாகக் கொடுத்திருக்க மாட்டேன், அது நிச்சயம்' எனக் கூறிய ராஜா மனக் குழப்பத்துடன், அருகில் நடந்துவரும் அமைச்சரைப் பார்த்தார். மந்திரி, தலை கவிழ்ந்தவாறு, மெளனமாக நடந்து கொண்டிருந்தார்.
'அமைச்சரே!...என்றார் ராஜா.
மறுநொடியே, 'ராஜாவே'... என்றவாறே சுருக்கமாக நிமிர்ந்த அமைச்சர், ராஜாவைப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். 'நான்... திகைத்துத் திணறித் தத்தளிக்கிறேன். தாங்கள் ஊமையாக நடந்து வருகிறீரே...?' எனக் குழப்பத்துடன் கேட்டார் மன்னர். மந்திரி, குழப்பமும் தவிப்புமாகச் சொன்னார்.
'மகாராஜாவே...தாங்கள் கண்ட கனவும், அந்தக் கனவோடு தொடர்புள்ள மாதிரி, நான் கண்ட கனவும் சாதாரணக் கனவல்ல. அவை, யாராலும் விளக்கிக் கூறவியலாத ஜெகஜ் ஜாலப் புதிராகும்!'... 'ஓ... அப்படியா..? தாங்கள் கண்ட கனவைச் சொல்லுங்கள்'... என ஆவலோடு கேட்டார், அரசர். மந்திரி கூறினார்.
'கிழக்கு அடிவானத்தில் வடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கிற நேரத்தில் பாபுஜி! பாபுஜி!... உங்களுக்கு ஒரு நற்செய்தி.. எனும் இனிய குரலைக் கேட்டதும் எனது உறக்கம் கலைந்தது. கண்ணிமைகளைப் பிரித்துப் பார்த்தேன். வலது கைப் பக்கத்தில், சாளரத்திற்கு அருகே, உத்தரத்திலிருந்து தொங்குகிற தங்க வளையத்தில் அமர்ந்திருக்கிற வெண்ணிறக் கொண்டைக் கிளி, புத்துணர்வுடன் பேசியது. 'பாபுஜி...நமது வீட்டு வாசலில் உள்ள மாதுள மரத்தடியில், உங்களுக்கொரு அற்புதமான பரிசு காத்திருக்கிறது!... கிளியின் பேச்சைக் கேட்டதும்- திகைப்பும், துடிப்புமாக எழுந்தேன். பரபரப்புடன் போனேன். வீட்டு வாசலிலிருக்கும் மாதுள மரத்தடியை அணுகி ஆசையும் ஆவலுமாகப் பார்த்தேன். கிளியின் சொற்படியே, மாதுள மரத்தடியில்... பேசவதை நிறுத்தி, இறுக்க முடிந்த வேட்டியின் மடியிலிருந்து, அரசருடைய காணாமல் போன நவரத்தின மாலையை எடுத்து, மன்னரிடம் கொடுத்தார், அமைச்சர்.
அதைக் கண்டதும், காலை நேரத்துப் பொன் வெய்யிலில் தகதகவென டாலடிக்கிற நவரத்தின மாலையைப் பார்த்ததும்- கண்கள் மலர, கண்ணிமைகள் படபடக்க, உள்ளம் பதைபதைக்க, உணர்ச்சி கிறுகிறுக்க, மந்திரியின் கைகளிலிருந்து மணி மாலையைச் சுருக்கமாகப் பறித்த அரசர் பரபரப்புடன் சொன்னார். 'இது என்னுடைய மாலைதான்.' 'ஆமாம், ராஜாவே... உங்களுடைய மாலையேதான், எனத் தீர்க்கமாகச் சொன்னார், அமைச்சர்.
ஓரிரு நொடி நேரம்... எங்கேயோ பார்த்தபடி என்னவோ யோசித்த அரசர் சடக்கெனத் திரும்பினார். மந்திரியை நோக்கிக் குழப்பம் தெளிந்த குரலை உயர்த்திக் கூறினார். 'அமைச்சரே...ஆமாம், அப்படித்தான்... எனக்குத் தெளிவாகப் புரிகிறது. நேற்றைக்கு முன்தினம், நள்ளிரவு நேரத்தில்... தூக்கம் பிடிக்காமல் அவஸ்தைப்பட்டு... உங்களிடம் சற்று நேரம் ஆறுதலாகப் பேசிவிட்டு வரலாம் என்றெண்ணித் தங்கள் வீட்டுக்கு வந்தேன். வீட்டு வாசலில், மாதுள மரத்தடி இருளில் தயங்கி நிற்கையில்...வீதியில்..யாரோ இரண்டு பேர் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும். நான் சட்டென மரத்தடியில் உட்கார்ந்த சமயம்.. நெஞ்சிலிக்கிற மணி மாலைகள் மரக் கிளையில் சிக்கி... நவரத்தின மாலை அறந்து விழுந்ததைக் கவனிக்க வில்லை. அப்புறம் என்னவோ நினைப்புடன் அரண்மனைக்குத் திரும்பினேன்... இதைக் கேட்டதும், அமைச்சர் குறுஞ் சிரிப்புடன் கேட்டார். 'ஆமாம் ராஜாவே... நவரத்தினமாலை காணாமல் போன விஷயம், உங்களது கனவில் தோன்றிய கழுதை மனிதனுக்கு எப்படித் தெரியும்...?'
ராஜா வெடுக்கென கேட்டார். 'காணாமல் போன நவரத்தின மாலை, மாதுள மரத்தடியில் கிடப்பது உங்களுடைய கொண்டைக் கிளிக்கு எப்படித் தெரியும்...?' மந்திரியும், ராஜாவும் குலுங்கிச் சிரித்தார்கள்!... 'இத்தகைய மகா விசித்திரங்கள் மனிதனுடைய பகுத்தறிவுக்குப் புரிபடாதவை!... எனப் புன்சிரிப்புடன் சொல்லிய ராஜா, நவரத்தின மாலையை அமைச்சரிடம் கொடுத்தவாறே புன்னகையுடன் சொன்னார்.
'எனது அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள்....' மாலையைப் பெற்றுக் கொண்ட மந்திரி, 'ராஜாவே..இன்றிரவு.. அந்தக் கழுதை மனிதன் உங்கள் கனவில் வந்து, எனது புதிர்க் கேள்விகளுக்குப் பதில் என்ன? - எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்...?' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார்.
'ஆமாம்...அந்தக் கழுதையின் கேள்விகளுக்கு என்ன விடை அளிப்பது...?' எனப் புன்னகையுடன் கேட்டார், அரசர். அமைச்சர் நிதானமாகக் கூறினார். 'கழுதை மனிதனின் முதல் கேள்வி இது, அடக்க முடியாதது எது...? பதில் இது, அடக்க முடியாதது கடல் அலை. இரண்டாவது கேள்வி, கொடுக்க முடியாதது எது...? தன்னிச்சையாக விட்டுவிடலாம் ஆனால் மற்றவருக்குக் கொடுக்க முடியாதது, உயிர்.! மறுக்க முடியாதது எது...? எனும் மூன்றாவது வினாவுக்கு விடை இதுதான் மரணம்...! மதி மந்திரியின் விடையைக் கேட்டதும், 'சபாஷ்!...' என மகிழ்ச்சிப் பொங்கக் கூவினார், ராஜா.
Re: பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு
இப்படி ஒரு கதையே இல்லையே. என்னமோ ராணி காமிக்ஸ் கதை மாதிரி தெரியுது?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பீர்பால் கதைகள்
» பீர்பால் கதைகள் 4 - கசையடி
» பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.
» பீர்பால் கதைகள் 2-பீர்பாலும் புகையிலையும்
» அக்பரிடம் சவால் - பீர்பால் கதைகள்.
» பீர்பால் கதைகள் 4 - கசையடி
» பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.
» பீர்பால் கதைகள் 2-பீர்பாலும் புகையிலையும்
» அக்பரிடம் சவால் - பீர்பால் கதைகள்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: பீர்பால் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|