Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
Current date/time is Mon May 20, 2024 10:52 am
Search found 3 matches for sriram_stories3
ஸ்ரீராமின் கதை நேரம் #1
5.
அடுத்த சில வினாடிகளில் நால்வரும் இறங்கி அந்த அம்பாசிடர் காரை நோக்கி விரைந்தார்கள். அந்த காரில் டிரைவர் மட்டும் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான். சிலர் வேகமாக காரை நோக்கி ஓடி வருவதை அரை இருளில் கவனித்த டிரைவர் முகத்தில் பயரேகை தெரிந்தது.சட்டன கண்ணாடியை ஏற்றி லாக் செய்துவிட்டு பக்கத்து வாட்டில் உள்ள சவுக்கு காட்டில் இறங்கி இருளில் மறைந்தான்.
அந்த அம்பாசிடர் காரை நெருங்கிய நால்வரும் கார் லாக் செய்யப்பட்டு இருப்பதை அறிந்தனர். அந்த நேரத்தில் ஒரு பேருந்து வெளிச்சத்தை செலுத்தியபடி கடந்து சென்றது. உடனே காரின் பின்னே மறைவில் மறைந்தவர்கள் பேருந்து சென்றதும் மறைவிலிருந்து மீண்டும் வெளிப்பட்டு துரிதமாக செயல்பட தொடங்கினர்.
டேய் பணம் உள்ளேதான் இருக்கு. முதல்ல இந்த அம்பாசிடர் காரை இந்த சவுக்கு காட்டுக்குள்ள கொஞ்ச தூரம் தள்ளிட்டு போவோம்டா, அப்புறம் மத்த விஷயத்தை அங்கே போய் பார்த்துக்கலாம் என்றான். அடுத்த சில வினாடிகளில் நால்வரும் காரை பக்கவாட்டில் உள்ளே தள்ள கார் விரைவாக நகர தொடங்கியது.
அந்த நேரத்தில் அந்த காரில் பயணித்த மற்றொருவர் வந்து வந்துவிட்டார்.
டேய் யாருடா நீங்கயெல்லாம்? டிரைவர் எங்கடா என்றார் நா தழு,தழுக்க.
அடுத்த வினாடி காரை அப்படியே விட்டு விட்டு நால்வரும் இவரை சூழ்ந்து கொண்டார்கள்.
யப்பா நான் வேணும்னா உங்க கால்ல விழுறேன் பணத்தை கொடுத்துடுங்க, அந்த பணம் என் பையன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அனுப்புனது, அடுத்த மாசம் என் இரண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் என்று கெஞ்ச தொடங்கினார்.
நால்வரும் பெரிதாக சிரித்தார்கள், அந்த சத்தம் நாலாபுரமும் எதிரொலித்தது.
------------------------------------------
6.
சதீஷ் பயணம் செய்த அந்த நள்ளிரவு நேரத்தில் அதிக அரவம் இல்லாத அந்த ரிங் ரோட்டில் சில கிலோ மீட்டர் பயணித்து இருப்பான் எதிரே லாரி ஒன்று தாறுமாறாக வந்தது. சதீஷ் என்னதான் மது அருந்தி இருந்தாலும் அவனை போல ட்ரைவ் செய்ய முடியாது என அவன் நண்பர்களே சொல்லி இருக்கிறார்கள். எதிரே லாரி ஒன்று படுவேகமாக வந்ததை கவனித்த சதீஷ் வண்டியை ரோட்டில் பக்கவாட்டில் திருப்பியபடியே பிரேக் அழுத்தும் போது திடீரெனே பிரேக் செயல் இழந்தது. அடுத்த சில வினாடிகளில் அந்த மாருதி செலிரியோ கார் ஒரு மரத்தில் மோதியாது. காரின் உள்ளே ஏசி இயங்கிக்கொண்டிருந்ததால் அடுத்த வினாடி தீ பிடித்து எரிய தொடங்கியது. சதீஷ் சாம்பலானன்.
அடுத்த 25வது நிமிடத்தில் ஸ்பாட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர் சரவணவேல் சம்பவம் நடந்த இடத்தை ஒரு முறை பார்த்தவர். கைரேகை நிபுணர்கள் மற்றும் போட்டோ கிராபர்களுக்கு தங்கள் வேலையை கவனிக்க உத்தரவிட்டார். அந்த நள்ளிரவு நேரத்திலும் கைரேகை நிபுணர்கள் தங்கள் பணியை செய்து கொண்டிருக்க, போட்டோகள் பளிச்சிட, பிரேத பரிசோதனனைக்கு உடலை எடுத்து செல்ல அம்புலென்ஸ் மற்றும் போலீஸ் ஜீப்களின் சத்தம் அந்த எரியாவை கிடுகிடுக்க செய்தது.
அதே நேரத்தில் அந்த வழியே ஒருவன் பல்சர் பைக்கில் வந்ததையோ, அந்த இடத்தை நின்று கவனித்து விட்டு சென்றதையோ யாரும் கவனிக்கவில்லை.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தில் மீண்டும் அடர் இருள் சூழ்ந்துக்கொண்டது.
தொடர்வேன்....
#sriram_stories3
- on Sat Jul 04, 2015 6:58 pm
- Search in: கதைக் களம்
- Topic: ஸ்ரீராமின் கதை நேரம் #1
- Replies: 22
- Views: 1005
ஸ்ரீராமின் கதை நேரம் #1
3.
அந்த ஸ்கார்பியோ கார் மேலும் வேகமாக சீறி பாய்ந்தது. அது கிழக்கு கடற்கரை சாலை என்பதால் காரை வேகமாக செலுத்த வசதியாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே மாயாஜால் தாண்டி சில கிலோ மீட்டர் தூரத்தில் அந்த அம்பாசிடர் காரை பிடித்தனர் அந்த காரும் கொஞ்சம் அதிகமான வேகத்திலேயே சென்றது. இருப்பினும் காரை மடக்கி பிடிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்து பாலோ செய்து சென்றுக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் அந்த நால்வரின் முகத்திலும் மகிழ்ச்சி, அச்சம், எச்சரிக்கை எல்லாம் கலந்து காணப்படாது.
அந்த தருணம் அவர்களுக்கு மிக விரைவாகவே கிட்டியது. ஆம் அந்த அம்பாசிடர் கார் இப்ப வேகம் குறைந்து மெல்ல ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்பட்டது. காரில் டிரைவர் மட்டும் அவர் இருக்கையில் அமர்ந்து இருக்க மற்றொருவர் காரை விட்டு இறங்கி ரோட்டில் இருந்து சற்று தூரம் கீழே இறங்கி சென்றார். இயற்கை உபாதை கழிக்க என்பது தெரிந்தது,
இப்போது ஸ்கார்பியோ காரிலிருந்த நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அதில் ஒருவன் "டேய் மீண்டும் இது போல வாய்ப்பு கிடைக்காதுடா சீக்கிரம் இறங்குங்கடா என என்றான் ஒருவன்.
அடுத்த சில வினாடிகளில் நால்வரும் இறங்கி அந்த அம்பாசிடர் காரை நோக்கி விரைந்தார்கள்.
4.
சதீஷ் கார் பூந்தமல்லி சாலையில் திரும்பி வேகமெடுத்தது. தன்னை சுற்றி பல அபாயங்கள் சூழ்ந்து இருப்பதை பற்றியும் பல சதி வேலைகள் நடப்பதை பற்றியும் அப்போது அவன் அறிந்து இருக்கவில்லை. அப்படி அறிந்து இருந்தால் விழிப்புடன் இருந்து இருப்பான். பீட்ஸா சென்டரில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது ஒருவன் தன்னை வேவு பார்ப்பதையும் பின்னர் எதிரே உள்ள ஹோட்டலில் சென்று இருளில் மறைந்ததையும் கவனித்து இருக்கலாம். விதி யாரைதான் விட்டது?
இப்போது சதீஷ் மதுரை வாயல் தாண்டி இந்திரா நகரை வந்தடைந்தான். அங்கே தன்னுடைய நண்பன் வீட்டு வாசலில் காரை நிறுத்தி வீட்டின் உள்ளே சென்றவன் ஒன்றரை மணி நேரம் கழித்துதான் வெளியே வந்தான், வரும்போதே சற்று தடுமாறினான், மது அருந்தி இருக்கிறான் என்பது தெரிந்தது. மெதுவாக காரை கிளப்பிக்கொண்டு பூந்தமல்லி சாலையிலிருந்து ரிங் ரோட்டில் திரும்பி தன் வீடு இருக்கும் குன்றத்தூர் ஏரியா நோக்கி விரைந்தான்.
அந்த நள்ளிரவு நேரத்தில் அதிக அரவம் இல்லாத அந்த ரோட்டில் சில கிலோ மீட்டர் பயணித்து இருப்பான் எதிரே லாரி ஒன்று தாறுமாறாக வந்தது. அப்போது...
தொடர்வேன்....
#sriram_stories3
- on Wed Jul 01, 2015 6:24 pm
- Search in: கதைக் களம்
- Topic: ஸ்ரீராமின் கதை நேரம் #1
- Replies: 22
- Views: 1005
ஸ்ரீராமின் கதை நேரம் #1
இதோ நானும் நண்பர் ஜேக் போலவே என் கற்பனை குதிரையை தட்டிவிடு ஆரவாரமாக தொடங்கி இருக்கிறேன். என்னால் தினம் எழுத முடியாது. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் எழுதுவேன்.
என் இந்த கதையை பொறுமையுடன் படிக்க தொடங்கிய உங்களை மனதார நன்றி சொல்லி தொடங்குகிறேன். என் மூன்றாவது கதையின் தலைப்பு: இருள் வரும் நேரம்.
---------------------------------
இருள் வரும் நேரம் - குறுந்தொடர்.
1.
அந்த முன்னிரவு நேரத்தில் ஒரு ஸ்கார்பியோ கார் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரியை நோக்கி விரைந்துக்கொண்டு இருந்தது. (பாண்டிசேரியா? சரக்கடிக்கவா என உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல ) அந்த ஸ்கார்பியோ காரில் நான்கு ஆஜானுபாகுவான இளைஞர்கள் குதூகலத்துடன் பயணம் செய்கிறார்கள். அவர்கள் நான்கு பேரும் ஏதோ ஒரு விஷயத்தை பற்றி காரசாரமாக பேசுகிறார்கள்.
நீ சொல்வது உண்மையாடா?
ஆமாடா...! என்னைய நம்பு நான் என் கண்ணால பார்த்தேன்.
என்னத்த பார்த்தே...
இங்க இருந்து வெளி நாட்டுக்கு போன எவனோ ஒருத்தன் 36 லக்சம் ரூபா பணத்தை உண்டியல் முறையில் அனுப்பி இருக்கான். அந்த பணத்தை கைமாற்றிவிட திருவான்மியூர்ல உள்ள ஒரு புரோக்கர் மூலம் ஏற்பாடு செய்து இருக்கான். இன்னைக்கு சாயந்திரம் நான் ஏதோயோச்சையா அந்த பக்கம் போனப்பதான் பார்த்தேன். பணத்தை வாங்க ஒரு அம்பாசிடர் கார்ல ரெண்டு பேர் மட்டும் வந்து இருந்தாங்கடா. கண்டிப்பா அது கருப்பு பணமாகதான் இருக்கணும். பாண்டிச்சேரிக்குதான் போனதா கேள்விப்பட்டேன். வேகமாக போனால் பிடிச்சிடலாம்டா என்றான்.
அப்ப வேகமா போனால் பிடிச்சிடலாம்னு சொல்றீயா? என்றான் மூன்றாமவன்.
கண்டிப்பாடா அவன் மாயாஜால் கூட தாண்டி இருக்க மாட்டான். சீக்கிரம் போனால் பிடிச்சிடலாம். நாம நாலு பேர் இருக்கோம். அவனுங்களை அடிச்சு விரட்டி விட்டு பணத்தை எடுத்துக்கிட்டு நாம அப்படியே சிதம்பரம் போயிடலாம். அவனிங்க போலீஸ் கூட போக முடியாதுடா என்றான்.
நால்வரின் முகத்திலும் குதூகலம் தெரிந்தது. அந்த ஸ்கார்பியோ கார் மேலும் வேகமாக சீறி பாய்ந்தது.
**********
2.
இரவு 9 மணி.
சென்னை மேற்கு அண்ணா நகரின் இரண்டாவது அவன்யூவில் ஒரு பிரபல பீட்ஸா சென்டரில் சதீஷ் தனக்கு பிடித்த சிக்கன் & ஸ்வீட் கார்ன் பிட்சாவை ஆர்டர் செய்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான். சதீஸ்க்கு தன்னை ஒருவன் எதிர் புறம் உள்ள ஹோட்டலில் இருந்து உற்று நோக்கிக்கொண்டு இருப்பது தெரிய வாய்ப்பே இல்லை. அவன் தன்னை இருளிடம் இருந்து முடிந்த அளவுக்கு மறைத்து இருந்தாலும் அந்த வழியே செல்லும் பேருந்துகளின் ஹெட் லைட் வெளிச்சம் இருளை சற்று நீக்கி காட்டிக்கொண்டுதான் இருந்தது.
சதீஷ் சாப்பிட்டு முடித்தவுடன் பேரரிடம் பில்லையும் பணத்தை கொடுத்து மீதியை நீயே எடுத்துக்கோ என சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்தவன் தன்னுடைய மாருதி செலிரியோ காரை கிளப்பிக்கொண்டு பேருந்து நெரிசலில் கலந்து நகர தொடங்கினான்.
சதீஷ் கார் கிளம்பி சென்ற ஒரு சில நிமிடங்களில் எதிரே உள்ள ஹோட்டலில் வெளியே வந்தவன். யாருக்கோ போன் செய்து தகவல் சொன்னவன், அதன் பிறகு தன்னுடைய பல்சர் பைக்கை ஸ்டார்ட் செய்து எதிர் புறம் என்று மறைந்தான்.
சதீஷ் கார் பூந்தமல்லி சாலையில் திரும்பி வேகமெடுத்தது. அதுதான் சதிஷ்க்கு இறுதி பயணம் என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.
தொடர்வேன்....
@முழுமுதலோன் @முரளிராஜா, @செந்தில், @mohaideen, @ஜேக், @ரானுஜா, @kanmani singh
#sriram_stories3
- on Tue Jun 30, 2015 12:36 pm
- Search in: கதைக் களம்
- Topic: ஸ்ரீராமின் கதை நேரம் #1
- Replies: 22
- Views: 1005
|
|