Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுற்றுலா அனுபவம்.
Page 1 of 1 • Share
சுற்றுலா அனுபவம்.
சுற்றுலா அனுபவம்
நானும் எனது நண்பர்கள் குடும்பமாக 27 பேர் வட இந்திய சுற்றுலா சென்றிருந்தோம். ஆண்கள் அனைவரும் பெண்களில் சிலரும் அறுபது வயதைக் கடந்தவர்கள். புது டில்லி சுற்றிப் பார்த்துவிட்டு இரவில் புகைவண்டியில் அலகாபாத் பயணமானோம். இரவு சுமார் இரண்டு மணியளவில் நண்பர் ஒருவர் என்னை எழுப்பி ஆறுமுகம் என்கிறவர் எப்படியோ வருகிறார், உடனே வாருங்கள் என்று கூறினார். நான் போய் பார்த்த போது அவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார், அதையும் ஒரு கண்ணாடி உறையில் பிடித்துக் கொண்டிருந்தார். அவரை நன்கு விசாரித்த போது அவருக்கு தூக்கம் வர வில்லை, வாந்தியாக வந்து கொண்டிருக்கிறது, நெஞ்சிலும் லேசாக வலிக்கிறது என்று கூறினார். தூங்கிக் கொண்டிருந்த பயணச்சீட்டு பரிசோதகரை அழைத்து வந்து இவருக்கு உடனடியாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று கூறினோம். அடுத்து வருகிற கான்பூர் நிலையத்தில் ஒரு மருத்துவரை தயார் நிலையில் இருப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
கான்பூர் வந்ததும் மிருத்துவர் புகை வண்டியின் உள்ளே வர மறுத்து, நண்பர் ஆறுமுகத்தை வண்டியை விட்டு இறங்குமாறு கூறினார். வண்டியை விட்டு இறங்கியதும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் நன்றாக இருப்பது போல் தான் தெரிகிறது, உணவு செரிக்காமல் இருப்பதானாலும் நெஞ்சு கரிப்பது போல் இருக்கலாம் என்று கூறினார். தீவிர பரிசோதனையில் தான் உண்மை நிலை தெரியும் என்று கூறி மருத்துவ மனைக்கு அழைத்தார். எனக்கு ஒன்றுமில்லை என்று கூறி ஆறுமுகம் வண்டியினுள் ஏறி அமர்ந்து கொண்டார். வேறு வழி தெரியாமல் நாங்களும் அலகாபாத் போய் சேர்ந்தோம்.
அலகாபாத்தை சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் விடுதிக்கு வந்தவுடன் மீண்டும் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். நான் அவரையும் அவரது மனைவியையும் அருகாமையில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன். பணியில் இருந்த மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு ECG எடுத்த பின்பு அவருக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் இருப்பது போல் தெரிகிறது, எனவே Heart Care Centre என்கிற மருத்துவ மனைக்கு அழைத்துப் போகச் சொன்னார். வாகனம் ஒன்று ஏற்பாடு செய்து அந்த மருத்துவ மனைக்குச் சென்று அவரை பரிசோதித்த போது அங்குள்ள சிறப்பு மருத்துவர் அவருக்கு லேசாக மாரடைப்பு வந்திருக்கிறது, அவரை உடனடியாக மருத்துவ மனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார். தர்ம சங்கடமான நிலை. அவரை தங்க வைத்தால் சுற்றுலா குழு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அவரையும் காப்பாற்ற வேண்டும். ஆறுமுகமோ தான் நன்றாகத்தான் இருக்கிறேன், ஆகவே தங்க வேண்டாம் என்று கூறுகிறார்.
சில நிமிடங்கள் மனதை ஒருநிலைப் படுத்தி ஆலோசித்து மருத்துவரை அணுகி எங்கள் தர்ம சங்கடமான நிலையை எடுத்து கூறி அவருக்குத் தேவையான அத்யாவசிய மருந்துகளைத் தந்து மருத்துவ மனையை விட்டு வெளியே செல்ல அனுமதி கேட்டேன். சில நிமிட விவாதங்களுக்குப் பிறகு எங்கள் கட்டாயத்தின் பேரில் தான் வெளியே அனுப்புவதாகவும், உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மருத்துவ மனை பொறுப்பல்ல என்றும் எழுதி வாங்கிக் கொண்டு சில மருந்துகளைக் கொடுத்து அனுப்பினார்கள்.
சுற்றுலா முடிந்து வீடு வந்து சேர்வது வரையிலும் உரிய நேரத்தில் அவருக்கு மருந்துகள் கொடுத்து, தேவையான உணவு கொடுத்து அவரைப் பார்த்துக் கொள்வது எனது வேலையாக எடுத்துக் கொண்டேன். பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தோம்.
ஊருக்கு வந்த பின்பு மீண்டும் அவர் ஒரு பரிசோதனைக்குச் சென்ற போது அவருக்கு இரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சையும் செய்து விட்டார்கள். இப்போது நலமாக இருக்கிறார்.
சுற்றுலாவின் போதோ, வழியிலோ அவருக்கு ஏதாவது ஆகியிருந்தால் ................... என்று நினைக்கிற பொது மனதுக்குள் கொஞ்சம் கனமாகத்தான் இருக்கிறது.
நானும் எனது நண்பர்கள் குடும்பமாக 27 பேர் வட இந்திய சுற்றுலா சென்றிருந்தோம். ஆண்கள் அனைவரும் பெண்களில் சிலரும் அறுபது வயதைக் கடந்தவர்கள். புது டில்லி சுற்றிப் பார்த்துவிட்டு இரவில் புகைவண்டியில் அலகாபாத் பயணமானோம். இரவு சுமார் இரண்டு மணியளவில் நண்பர் ஒருவர் என்னை எழுப்பி ஆறுமுகம் என்கிறவர் எப்படியோ வருகிறார், உடனே வாருங்கள் என்று கூறினார். நான் போய் பார்த்த போது அவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார், அதையும் ஒரு கண்ணாடி உறையில் பிடித்துக் கொண்டிருந்தார். அவரை நன்கு விசாரித்த போது அவருக்கு தூக்கம் வர வில்லை, வாந்தியாக வந்து கொண்டிருக்கிறது, நெஞ்சிலும் லேசாக வலிக்கிறது என்று கூறினார். தூங்கிக் கொண்டிருந்த பயணச்சீட்டு பரிசோதகரை அழைத்து வந்து இவருக்கு உடனடியாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று கூறினோம். அடுத்து வருகிற கான்பூர் நிலையத்தில் ஒரு மருத்துவரை தயார் நிலையில் இருப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
கான்பூர் வந்ததும் மிருத்துவர் புகை வண்டியின் உள்ளே வர மறுத்து, நண்பர் ஆறுமுகத்தை வண்டியை விட்டு இறங்குமாறு கூறினார். வண்டியை விட்டு இறங்கியதும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் நன்றாக இருப்பது போல் தான் தெரிகிறது, உணவு செரிக்காமல் இருப்பதானாலும் நெஞ்சு கரிப்பது போல் இருக்கலாம் என்று கூறினார். தீவிர பரிசோதனையில் தான் உண்மை நிலை தெரியும் என்று கூறி மருத்துவ மனைக்கு அழைத்தார். எனக்கு ஒன்றுமில்லை என்று கூறி ஆறுமுகம் வண்டியினுள் ஏறி அமர்ந்து கொண்டார். வேறு வழி தெரியாமல் நாங்களும் அலகாபாத் போய் சேர்ந்தோம்.
அலகாபாத்தை சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் விடுதிக்கு வந்தவுடன் மீண்டும் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். நான் அவரையும் அவரது மனைவியையும் அருகாமையில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன். பணியில் இருந்த மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு ECG எடுத்த பின்பு அவருக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் இருப்பது போல் தெரிகிறது, எனவே Heart Care Centre என்கிற மருத்துவ மனைக்கு அழைத்துப் போகச் சொன்னார். வாகனம் ஒன்று ஏற்பாடு செய்து அந்த மருத்துவ மனைக்குச் சென்று அவரை பரிசோதித்த போது அங்குள்ள சிறப்பு மருத்துவர் அவருக்கு லேசாக மாரடைப்பு வந்திருக்கிறது, அவரை உடனடியாக மருத்துவ மனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார். தர்ம சங்கடமான நிலை. அவரை தங்க வைத்தால் சுற்றுலா குழு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அவரையும் காப்பாற்ற வேண்டும். ஆறுமுகமோ தான் நன்றாகத்தான் இருக்கிறேன், ஆகவே தங்க வேண்டாம் என்று கூறுகிறார்.
சில நிமிடங்கள் மனதை ஒருநிலைப் படுத்தி ஆலோசித்து மருத்துவரை அணுகி எங்கள் தர்ம சங்கடமான நிலையை எடுத்து கூறி அவருக்குத் தேவையான அத்யாவசிய மருந்துகளைத் தந்து மருத்துவ மனையை விட்டு வெளியே செல்ல அனுமதி கேட்டேன். சில நிமிட விவாதங்களுக்குப் பிறகு எங்கள் கட்டாயத்தின் பேரில் தான் வெளியே அனுப்புவதாகவும், உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மருத்துவ மனை பொறுப்பல்ல என்றும் எழுதி வாங்கிக் கொண்டு சில மருந்துகளைக் கொடுத்து அனுப்பினார்கள்.
சுற்றுலா முடிந்து வீடு வந்து சேர்வது வரையிலும் உரிய நேரத்தில் அவருக்கு மருந்துகள் கொடுத்து, தேவையான உணவு கொடுத்து அவரைப் பார்த்துக் கொள்வது எனது வேலையாக எடுத்துக் கொண்டேன். பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தோம்.
ஊருக்கு வந்த பின்பு மீண்டும் அவர் ஒரு பரிசோதனைக்குச் சென்ற போது அவருக்கு இரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சையும் செய்து விட்டார்கள். இப்போது நலமாக இருக்கிறார்.
சுற்றுலாவின் போதோ, வழியிலோ அவருக்கு ஏதாவது ஆகியிருந்தால் ................... என்று நினைக்கிற பொது மனதுக்குள் கொஞ்சம் கனமாகத்தான் இருக்கிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுற்றுலா அனுபவம்.
கடவுள் உங்களை கைவிடவில்லை.
வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் நண்பரே.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
» கண்ணதாசனின் அனுபவம்
» அனுபவம் - ஒரு பக்க கதை
» 'புதிய அனுபவம்' - மார்க்கெட்டிங்
» வாழ்க்கை என்பது ஓர் அனுபவம்.
» கண்ணதாசனின் அனுபவம்
» அனுபவம் - ஒரு பக்க கதை
» 'புதிய அனுபவம்' - மார்க்கெட்டிங்
» வாழ்க்கை என்பது ஓர் அனுபவம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|