Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஏழை அப்பன்கள்..!
Page 1 of 1 • Share
ஏழை அப்பன்கள்..!
ஏழை அப்பன்கள்..!
----------------------------
இரண்டு நாட்களுக்கு முன் மாலை அலுவலகம் முடிந்து அயனாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். கெல்லீஸ் சிக்னலை தாண்டியதும் பாலம் ஏறி இறங்கினால் இடதுபக்கம் HBI கல்லூரி இருக்கிறது. அதன் நடைப்பாதையில் ஒரு சிறு கூட்டம்.
என்னவென்று எட்டிப்பார்த்தால் ஒரு பழைய சைக்கிளைப் பிடித்தவாரு எலும்பும் தோலுமாக 35 வயது மதிக்கத்தக்க லுங்கி கட்டிய நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சைக்கிள் கேரியரில் அவரது 4 வயது மகன் பெரும் குரலெடுத்து அழுதபடி அமர்ந்திருந்தான். கண்ணீர் வற்றாமல் வடிந்து கொண்டிருந்தது. அவனது குதிகாலின் பின்பகுதியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தோற்றத்திலேயே குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.
``என்னாச்சு சார்..” என்றேன்.
``எனக்கு பின்னாடி வேகமா வந்த பைக்காரன் சைக்கிளை இடிக்கிற மாதிரி ஓவர் டேக் பண்ணான் சார். பையன் பயந்துபோய் காலை சைக்கிள் சக்கரத்துக்குள்ள விட்டுட்டான்..” என்றார் சோகமாக. பையனை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அந்த ரோட்டை ஒட்டியே கல்லூரியின் சிறிய மருத்துவமனை இருக்கிறது. ``சரி.. இந்த ஆஸ்பிட்டல்ல காட்டுங்க..” என்று கூறியவாரு வண்டியை நகர்த்தினேன்.
ஆனால் அவர் அதை காதில் வாங்காமல் பையனை பின்னாடி உட்கார வைத்தபடியே சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.
எனக்கு கொஞ்சம் கடுப்பாகிவிட்டது. ``சார்.. பையனுக்கு ரத்தம் வடியுது.. பக்கத்துலயே கிளீனிக் இருக்கு.. காட்டுங்கன்னா.. கண்டுக்காம போறீங்க..” என்று கோபத்தில் கொஞ்சம் சத்தமாக சொல்லி முடிக்கவில்லை... `` பணமில்ல சார்..” என்றார் பரிதாபமாக.
அப்படியொரு பதிலை நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.. அதைக் கேட்டதுமே எனக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது.
அவரே தொடர்ந்து ``இங்க நெறைய காசு கேட்பாங்க.. அதான் வீட்ல போய் மஞ்சள் வச்சு கட்டு போடலாம்னு போறேன்..” என்று சொல்லியவாறு மீண்டும் சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.
அவரைப் பிடித்து நிறுத்தி சிறுவனைக் கிளீன்க்கிற்குள் கூட்டிப்போய்.. சிகிச்சை அளிக்க வைத்து அனுப்பி வைத்தேன். சிறுவன் போகும்போது சிநேகமாய் ஒரு சிரிப்பு சிரித்தான்.
வீடு வந்து சேர்ந்த பின்னரும்... ``பணமில்ல சார்..” என்ற அவரின் வார்த்தையும் அந்த இயலாமை முகமும் தொந்தரவுப் பண்ணியபடியே இருந்தது. ஒரு கணம் அந்த ஏழை தந்தையாக நானும்.. ரத்தம் சொட்ட அமர்ந்திருந்த சிறுவனாக இளமாறனையும் நினைத்துப் பார்த்தேன்.. அந்த கற்பனையே பெரும் துன்பமாக இருந்தது.
அம்பானிகளும் டாடா பிர்லாக்களும் வாழும் இந்த புண்ணிய பூமியில்..
நீங்கள் கார்களிலும் பல்ஸர்களிலும் பறக்கும் இதே சாலைகளில்..
கையில் பணமில்லாமல் சைக்கிளில் குழந்தைகளுடன் பயணிக்கும் எண்ணற்ற ஏழை அப்பன்களும், பயணிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.. அவர்களும் வாழ்ந்துவிட்டு போகட்டும்..
நன்றி -கார்ட்டூனிஸ்ட்.பாலா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|