தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’

View previous topic View next topic Go down

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’ Empty முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 12:54 pm

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’


ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகவுரவம் உண்டு. அது தான் அவனை தன்னம்பிக்கையோடு வழிநடத்திச் செல்ல உதவுகிறது.

ஒரு பழைய கதை உண்டு. அதாவது, ஒரு விளக்கில் அடைபட்டுக் கிடந்த பூதமானது, அந்த விளக்கை துடைத்து. தன்னை விடுதலை செய்பவனின் விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாக கூறியது. இந்தச்சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால். நீ என்ன கேட்பாய்?

ஒரு கார் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது ஏராளமான செல்வம் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது தனக்கு கவலையே இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கேட்பாயா?

அல்லது நீ உன்னைப் பற்றியே சுயமாகச் சிந்திக்காமல் இருந்தால் வேறு என்ன கேட்பாய்?

உனது நண்பர்களுக்காகவும், நீ விரும்புகிறவர்களுக்காவும், நீ உன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும், நீ என்ன வரம் கேட்பாய்?

உனது சுய கவுரவத்தை பாதிக்காத வகையில், மிகவும் திருப்தி அளிக்கக்கூடிய சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும் கேட்டால், அது எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.

மற்றவர்கள் உன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லுவது சுய கவுரவம் ஆகாது. நீ விலை மதிப்பற்றவன் என்பதை நீயே உணர்ந்து கொள்ளுவது தான் சுயகவுரவம்.

நீ முழுமையாக குற்றமற்றவன் என்று நினைத்தால் மட்டும் போதாது. நீ குற்றமற்றவன் என்பதை, உன்னை நேசிக்கிற மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சுயகவுரவம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அது அவன் முன்னேற தூண்டுகோலாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவைகள் ஏராளமாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சுய கவுரவம் என்று அமெரிக்க மனோதத்துவ நிபுணர் ஆபிரகாம் மஸ்லோ கூறுகிறார்.

சுய கவுரவத்தை இரண்டு வகையாகச் சொல்வது உண்டு. ஒன்று நம்மை நாமே மதிப்பது. இன்னொன்று, மற்றவர்கள் நம்மை மதிக்கும்படி நடந்து கொள்வது.

நமது உள்மனதின் மதிப்பீடு தான் சுயகவுரவம். இது தான் நிரந்தரமானது. மற்றவர்கள் நம்மை அங்கீகரிப்பது, நமது தகுதியை ஏற்றுக்கொண்டு பாராட்டுவது என்பது நிரந்தரமானது அல்ல.

சுயகவுரவத்தை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

நம்மை நோக்கி வரக்சுடிய துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது தான் உனது சிந்தனையாக இருக்க வேண்டும்.

உனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய 3 விஷயங்களை மனதில் நிறுத்திக் கொள்.

நம்மால் முடியும் என்று நீயே உன்னை பாராட்டிக் கொள்.

தவறு செய்யும்போது தான், நீ மேலும் உறுதியாக வளர அதிக அளவில் வாய்ப்பு ஏற்படும்.

குற்றங்களை ஒத்துக் கொள். காரணம், குற்றம் செய்யாதவர்களே இல்லை. தவறு தான் நமது வாழ்க்கையின் படிப்பினை ஆக அமைகிறது.

உன்னுடைய திறமைகளை எல்லாம் நீ பரிசோதித்துப் பார். அப்போது தான் உனக்குள் இருக்கும் புதிய திறமைகள் வெளிப்படும்.

உன்னால் முடியாத இலக்கை நிர்ணயிக்காதே. ஆனால் பெரிய இலக்குகளை, சிறிது சிறிதாக நிறைவேற்ற வேண்டும். அப்போது உனக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.

நடந்த நல்லவற்றையே நினைவில் வைத்துக் கொள். வாழ்க்கையில் உன்னை விட உயர்ந்தவர்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்க்காதே.

உனக்குச் சமமாக இருப்பவர்களை கவனி. பலரது வாழ்க்கையில் குறைபாடுகளும், பிரச்சினைகளும் இருப்பதை நீ புரிந்து கொள்வாய்.

அப்போது உன் மனதில் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, உன்னை விட்டு, காலைப்பனி போல மறைந்து விடும்.

உனக்கு ஏற்றத் தாழ்வுகள் வரும்போது கூட, உன்னைப் பாராட்டுபவர்களும், உனக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியவர்களும் உன்னைச் சுற்றி இருக்குமாறு வைத்துக் கொள்.

சுய கவுரவம் உள்ளவர்களே வெற்றி பெறுபவர்களாக திகழ்கிறார்கள். எனவே சுய கவுரவத்தையே உனது குறிக்கோளாக வைத்துக் கொள்.உன்னைப்பற்றி நீ நல்ல விதமாக உணர்ந்தால், வெற்றி உன்னைத் தானாகத்தேடி வரும்.

தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’ Empty Re: முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’

Post by செந்தில் Sat May 18, 2013 12:57 pm

கைதட்டல் பயன் மிக்க தன்னம்பிக்கை பகிர்வு,நன்றி ஐயா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum