தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லதை ஏன் செய்ய வேண்டும்?

View previous topic View next topic Go down

நல்லதை ஏன் செய்ய வேண்டும்? Empty நல்லதை ஏன் செய்ய வேண்டும்?

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 12:33 pm

நல்லதை ஏன் செய்ய வேண்டும்?

ஒரு இளம்பெண்ணிடம் தன் மனதைப் பறி கொடுக்கிறான் இளைஞன். அவளுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அவளும் அவனிடம் இருந்த ஏதோ ஒரு நல்ல விஷயத்தில் ஈர்க்கப்பட்டு அவனது நட்பை ஏற்றுக் கொள்கிறாள். இது ஒரு புறம்!

இன்னொரு புறம், வேலையில் சேர விண்ணப்பித்தவரிடம் உள்ள நல்ல பழக்கத்தைப் பார்க்கும் நிறுவனத்தார் அவரை வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர். அதேபோல் அந்த நிறுவனத்தாரிடம் உள்ள நல்ல விஷயங்களைக் காணும் அவரும், அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்ததை கிடைத்தற்கரிய பெரும்பேறாக எண்ணி மகிழ்கிறார்.

எல்லா உறவுகளுமே இப்படி நல்ல நட்புறவு அணுகுமுறையின் அடிப்படையிலேயே அமைகின்றன..

நம்மிடம் நல்ல குணம் இருப்பதால் தான் நாம் சேவை செய்கிறோம். அதேபோல் மற்றவர்களிடமும் நலம் காணநேரும் நற்குணங்கள் நம்மை சேவையின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சேவை சிந்தனை, நற்குணம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

“வார்த்தைகளில் உள்ள நன்மை, நம்பிக்கையை உருவாக்குகிறது. சிந்தனைகளில் உள்ள நன்மை, ஆழத்தை உருவாக்குகிறது. சேவையில் உள்ள நன்மை அன்பை உருவாக்குகிறது” என்கிறார், அறிஞர் லாவோட்சே.

நாம் அனுமதித்தால் போதும். மனித ஆத்மா உன்னதத்தை அடைந்து விடும். நமக்குப் பின்விளைவுகள் இல்லாதபோது மற்றவர்களுடைய துன்பங்களை நீக்குவதில் கஷ்டமே இல்லை. அந்தத் துன்பங்களைக் கண்டு வருந்தி பணத்தாலோ, உடல் உழைப்பாலோ உதவவும் செய்கிறோம். ஆனால், நமக்குப் பின்விளைவுகள் வந்தால், நமது மனோபாவம் மாறிவிடும். நமது உதவிக்கு நன்றி கிடைக்காவிட்டால் கூட, நாம் வருத்தப்படுவோம்.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான் ஒரு சிறுவன். இதைப்பார்த்த இளைஞன் ஒருவன் ஆற்றில் பாய்ந்தான். உயிரைப் பணயம் வைத்து அந்த சிறுவனை காப்பாற்றினான். அன்று மாலையே அவன் இருப்பிடம் தேடி வந்தனர் பையனின் பெற்றோர். வந்தவர்கள் யாரென தெரிந்து கொண்ட இளைஞன், அவர்களிடம் இருந்து தனக்கு பெரியஅளவில் பாராட்டு நிச்சயம் என்று எண்ணினான்.

ஆனால் நடந்தது வேறு. வந்தவர்களோ இளைஞனிடம் `எங்கள் மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்படும்போது அவன் விரலில் மோதிரம் இருந்தது. நீங்கள் காப்பாற்றி கரை சேர்த்த நேரத்திற்குள் அது காணாமல் போயிருக்கிறது’ என்றார்களே பார்க்கலாம்.

உண்மையான உதவிக்கு இப்படியான எதிர்மறை அனுபவங்கள் கிடைக்கும்போது தான் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் கூட ஓதுங்கிப் போகிறார்கள்.

எந்த மாதிரி மனநிலைக்கு நாம் பக்குவப்பட்டிருந்தால் நம் உதவும் குணம் இன்னும் மேம்படும்?உங்களுக்கான தீர்மானமாக பின்வருவனவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

* என்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல வலுவான நட்பு கொண்டுள்ளேன். நல்ல விஷயங்களையே இனம் பிரித்துக் காணும் பழக்கத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

* என்னிடமுள்ள தீய, பலவீனமான விஷயங்களை மற்றவர்கள் காண்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

* நல்ல அறிவுரையை கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

* என்னை மற்றவர்கள் மன்னிக்காவிட்டாலும், மற்றவர்களிடமுள்ள தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

இந்த மனநிலைக்குள் வந்துவிட்டால் எந்த சூழலிலும் நல்ல மனநிலை மட்டுமே உங்களில் இயங்கிக் கொண்டிருக்கும். நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக எழும் எதிர்மறை எண்ணங்களையும் நம் மனங்களை விட்டு நாம் விலக்கி விட வேண்டும். பிறகு அதுவே, மிக உயர்ந்த குணமாகி விடும்.

தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லதை ஏன் செய்ய வேண்டும்? Empty Re: நல்லதை ஏன் செய்ய வேண்டும்?

Post by mohaideen Sun May 19, 2013 4:05 pm

அனைத்து கருத்துக்களும் அருமை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நல்லதை ஏன் செய்ய வேண்டும்? Empty Re: நல்லதை ஏன் செய்ய வேண்டும்?

Post by ரானுஜா Sun May 19, 2013 4:25 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நல்லதை ஏன் செய்ய வேண்டும்? Empty Re: நல்லதை ஏன் செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum