தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாவீரன் பூலித்தேவன்

View previous topic View next topic Go down

மாவீரன் பூலித்தேவன் Empty மாவீரன் பூலித்தேவன்

Post by முரளிராஜா Tue Jun 04, 2013 8:55 am

[You must be registered and logged in to see this image.]

இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.

கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர்.

சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது.

தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம்.

ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி.

அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர்.

இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும்.

அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள்.

வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம்.

இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன்.

அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் .

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.

அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான்.

ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.

ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை.

எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.

புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவனின் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன்.

--
நன்றி emperorksb.blogspot
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாவீரன் பூலித்தேவன் Empty Re: மாவீரன் பூலித்தேவன்

Post by பித்தன் Tue Jun 04, 2013 11:47 am

அந்த அரண்மனை மற்றும் சில பதிவுகளை இன்றும் அவர்களின் வம்ச வழியினர் போன்றோரை அணுகும் போது அறியபெறலாம். அவர்கள் சொல்லி கதை கேட்கையில் மிகவும் சிறப்பாக இருக்கும் .
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மாவீரன் பூலித்தேவன் Empty Re: மாவீரன் பூலித்தேவன்

Post by மகா பிரபு Tue Jun 04, 2013 12:52 pm

ஆறாம் வகுப்பு பயின்ற போது அரண்மனைக்கு சென்று உள்ளேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவீரன் பூலித்தேவன் Empty Re: மாவீரன் பூலித்தேவன்

Post by Muthumohamed Tue Jun 04, 2013 10:16 pm

தெரியாத தகவல் நன்றி முரளி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

மாவீரன் பூலித்தேவன் Empty Re: மாவீரன் பூலித்தேவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum