Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனக்கவலையா மனைவியோடு அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
Page 1 of 1 • Share
மனக்கவலையா மனைவியோடு அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
மனக்கவலையா மனைவியோடு அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
மனக் கவலைக்கு காரணமே என் பொண்டாட்டி தான் என்பவரா நீங்க அப்போ இந்த பதிவு உங்களுக்கில்லை!!! அய்யோ.... இல்லிங்க சும்மா ஜோக்கா சொன்னேன் ஒகே...இப்ப விசயத்திற்கு போலாம்.
பொதுவாக கூறினால் கணவனும் மனைவியும் ஒளிவுமறைவில்லாமல் எந்த விசயத்தை பற்றியும் மனவிட்டு பேசினாலே அதன் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும். ஆனால் அவ்வாறு செய்வதில் மனைவிகளை விட கணவன்மார்கள் முன் வருவதில்லை. இதனாலேயே பல குடும்பங்களில் இன்று எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ஜீவனே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் அந்தக் காலத்தில் அதிலும் வேலைக்கு போகாத பெரும்பாலான மனைவிகள் வாழ்ந்த வீடுகளில் வேண்டுமானால் சரிபட்டு வந்தது ஆனால் இப்போது நிலைமையே வேறு, இந்தக் காலத்து பெண்கள் சுயமாக சம்பாரித்து யார் துணையும் இல்லாமலே செம்மையுடன் வாழும் நிலையை அடைந்து வருகின்றார்கள் அவர்களிடத்தில் இதுப் போன்ற ஏற்றத் தாழ்வு பார்க்கும், கெளரவம் பார்க்கும் வேலையெல்லாம் வேலைக்காகாது.
வெளியில் வேலை செய்யும் மனைவியாக இருந்தாலும் சரி வீட்டை பராமரிக்கும் வேலையை செய்பவராக இருந்தாலும் சரி அவளை ஒரு நல்ல ஆலோசகராக மந்திரியாக தோழியாக பார்ப்பவருக்கு வாழ்க்கை வெறுத்துப் போவதில்லை மேலும் குடும்ப வாழ்க்கையில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பது தான் உண்மை. எனவே இரண்டு கையும் தட்டினால் தானே ஓசை வரும் அததைப் போல் வாழ்க்கையில் மனைவியை சரிசமமாக கருதி அவளிடம் மனவிட்டு பேசி பழகுங்க இதைச் செய்தாலே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.இல்லாவிடில் சின்னச்சின்ன விசயங்கள் கூட பல குழப்பங்களை தோற்றுவித்து பின்பு விவாகத்து வரை செல்லும் அவலம் ஏற்பட்டுவிடும்.
பொதுவாக மனைவிமார்கள் கணவனின் பழைய வாழ்க்கையைப் பற்றி அதிகம் அக்கறை காட்ட மாட்டார்கள் ஆனால் திருமணத்திற்கு பின்பு அவனிடம் ஒழுக்கத்தையும் உயர்ந்த பண்பையும் எதிர்ப்பார்கள் அதை நிறைவேற்றுவதில் கணவனின் பங்கும் இருக்கிறது. மனைவி நல்லவளாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றவர் தானும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்வது எப்படி முக்கியமோ அதைப் போல் குடும்பமும் முக்கியம் என்பதை உணர வேண்டும். வேலை நிமித்தம் வீட்டிற்கு தாமதமாக செல்ல நேர்ந்தால்கூட அதை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் அதைவிடுத்து 'நான் ஊரா சுற்றிவிட்டு வருகிறேன்' என்று மனைவியைக் கோபப்படுவதில் அர்த்தமில்லை. அவ்வாறு நிஜமாகவே ஊர் சுற்ற வேண்டுமானால் கூட சொல்லிவிட்டு போவதால் எந்த மனைவியும் கோபப்பட போவதில்லை.
மேலும் சில கணவன்மார்கள் பண நஷ்ட்டத்தைப் பற்றியோ அல்லது வேலையிடத்தில் எதிர்க் கொள்ளும் பிரச்சனையைப் பற்றியோ அல்லது மனரீதியான பிரச்சனையைப் பற்றியோ அதை கூறினால் மனைவி கவலைப் படுவாள் என்று மறைக்க பார்ப்பார்கள் ஆனால் அது சில நேரத்தில் மேலும் பல சிக்கல்களை தோற்றுவித்து விடும் எதுக்குங்க வம்பு, பெண்கள் உடலால் தான் மென்மையானவர்களே தவிர மனத்தால் ஆண்களை காட்டிலும் தைரியமானவர்கள் ஆகவே எந்த விசயத்தைப் பற்றியும் மனைவிடம் மறைக்காமல் தாராளமாக கூறலாம் எந்த வித பிரச்சனையைப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யாமல் போனால் தான் பிரச்சனையே.
ஆகவே எந்த விசயமானாலும் மனைவியிடம கலந்து பேசுங்கள்.
பணவிசயத்திலும் அவளின் கருத்தை கேளுங்கள்
அவளின் நிர்வாக திறமையை பாராட்டுங்கள் தவறு இருப்பின் அதை சுட்டி காட்டி திருத்துங்கள்
மனைவியின் நலத்திலும் அக்கறை காட்டுங்கள்
குழந்தை வளர்ப்பில் முரண்பாடு காட்டாமல் இருவருமாக ஒன்றிணைந்து செயல் படுங்கள்
குழதைகள் முன்பு மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள்
மனைவியை கேலி செய்வதைக் குறைத்து அவளோடு சேர்ந்து சிரிக்க பழகுங்கள்.
மனைவிக்கு பிடித்த பிடிக்காத விசயங்களை கேட்டறிந்துக் கொள்ளுங்கள்
மனைவியோடு சேர்ந்து டிவி பாருங்க
மனைவியை குறைக் கூறுவதை விடுத்து அவளின் குறைநிறைகளை சரி செய்ய ஆலோசனைக் கூறுங்கள்
முக்கியமாக மனைவியோடு வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே செல்லாதீர்கள் நீங்க திரும்பி வரும் வரை அவள் ஜீவன் அவளிடத்தில் இருக்காது.
திருமண வாழ்க்கை என்பது மிகவும் இனிமையான ஒன்று அதை சரிவர அனுபவிக்காமல் பிறர் கூறினதைக் கேட்டும் மற்றவரின் அனுபவத்தைக் கொண்டும் ஒரு முடிவுக்கு வருவது தவறு. குடும்பங்களில் என்றென்றும் குதூகலமும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டுமென்றால் அது மனைவியின் கையில் தான் உள்ளது என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது அது கணவன் மனைவியாகிய இருவரும் சேர்ந்து அக்குடும்பத்தை கையாளும் விதத்தில் தான் உள்ளது
மனோஹரி மன்றம்
மனக் கவலைக்கு காரணமே என் பொண்டாட்டி தான் என்பவரா நீங்க அப்போ இந்த பதிவு உங்களுக்கில்லை!!! அய்யோ.... இல்லிங்க சும்மா ஜோக்கா சொன்னேன் ஒகே...இப்ப விசயத்திற்கு போலாம்.
பொதுவாக கூறினால் கணவனும் மனைவியும் ஒளிவுமறைவில்லாமல் எந்த விசயத்தை பற்றியும் மனவிட்டு பேசினாலே அதன் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும். ஆனால் அவ்வாறு செய்வதில் மனைவிகளை விட கணவன்மார்கள் முன் வருவதில்லை. இதனாலேயே பல குடும்பங்களில் இன்று எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ஜீவனே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் அந்தக் காலத்தில் அதிலும் வேலைக்கு போகாத பெரும்பாலான மனைவிகள் வாழ்ந்த வீடுகளில் வேண்டுமானால் சரிபட்டு வந்தது ஆனால் இப்போது நிலைமையே வேறு, இந்தக் காலத்து பெண்கள் சுயமாக சம்பாரித்து யார் துணையும் இல்லாமலே செம்மையுடன் வாழும் நிலையை அடைந்து வருகின்றார்கள் அவர்களிடத்தில் இதுப் போன்ற ஏற்றத் தாழ்வு பார்க்கும், கெளரவம் பார்க்கும் வேலையெல்லாம் வேலைக்காகாது.
வெளியில் வேலை செய்யும் மனைவியாக இருந்தாலும் சரி வீட்டை பராமரிக்கும் வேலையை செய்பவராக இருந்தாலும் சரி அவளை ஒரு நல்ல ஆலோசகராக மந்திரியாக தோழியாக பார்ப்பவருக்கு வாழ்க்கை வெறுத்துப் போவதில்லை மேலும் குடும்ப வாழ்க்கையில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பது தான் உண்மை. எனவே இரண்டு கையும் தட்டினால் தானே ஓசை வரும் அததைப் போல் வாழ்க்கையில் மனைவியை சரிசமமாக கருதி அவளிடம் மனவிட்டு பேசி பழகுங்க இதைச் செய்தாலே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.இல்லாவிடில் சின்னச்சின்ன விசயங்கள் கூட பல குழப்பங்களை தோற்றுவித்து பின்பு விவாகத்து வரை செல்லும் அவலம் ஏற்பட்டுவிடும்.
பொதுவாக மனைவிமார்கள் கணவனின் பழைய வாழ்க்கையைப் பற்றி அதிகம் அக்கறை காட்ட மாட்டார்கள் ஆனால் திருமணத்திற்கு பின்பு அவனிடம் ஒழுக்கத்தையும் உயர்ந்த பண்பையும் எதிர்ப்பார்கள் அதை நிறைவேற்றுவதில் கணவனின் பங்கும் இருக்கிறது. மனைவி நல்லவளாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றவர் தானும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்வது எப்படி முக்கியமோ அதைப் போல் குடும்பமும் முக்கியம் என்பதை உணர வேண்டும். வேலை நிமித்தம் வீட்டிற்கு தாமதமாக செல்ல நேர்ந்தால்கூட அதை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் அதைவிடுத்து 'நான் ஊரா சுற்றிவிட்டு வருகிறேன்' என்று மனைவியைக் கோபப்படுவதில் அர்த்தமில்லை. அவ்வாறு நிஜமாகவே ஊர் சுற்ற வேண்டுமானால் கூட சொல்லிவிட்டு போவதால் எந்த மனைவியும் கோபப்பட போவதில்லை.
மேலும் சில கணவன்மார்கள் பண நஷ்ட்டத்தைப் பற்றியோ அல்லது வேலையிடத்தில் எதிர்க் கொள்ளும் பிரச்சனையைப் பற்றியோ அல்லது மனரீதியான பிரச்சனையைப் பற்றியோ அதை கூறினால் மனைவி கவலைப் படுவாள் என்று மறைக்க பார்ப்பார்கள் ஆனால் அது சில நேரத்தில் மேலும் பல சிக்கல்களை தோற்றுவித்து விடும் எதுக்குங்க வம்பு, பெண்கள் உடலால் தான் மென்மையானவர்களே தவிர மனத்தால் ஆண்களை காட்டிலும் தைரியமானவர்கள் ஆகவே எந்த விசயத்தைப் பற்றியும் மனைவிடம் மறைக்காமல் தாராளமாக கூறலாம் எந்த வித பிரச்சனையைப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யாமல் போனால் தான் பிரச்சனையே.
ஆகவே எந்த விசயமானாலும் மனைவியிடம கலந்து பேசுங்கள்.
பணவிசயத்திலும் அவளின் கருத்தை கேளுங்கள்
அவளின் நிர்வாக திறமையை பாராட்டுங்கள் தவறு இருப்பின் அதை சுட்டி காட்டி திருத்துங்கள்
மனைவியின் நலத்திலும் அக்கறை காட்டுங்கள்
குழந்தை வளர்ப்பில் முரண்பாடு காட்டாமல் இருவருமாக ஒன்றிணைந்து செயல் படுங்கள்
குழதைகள் முன்பு மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள்
மனைவியை கேலி செய்வதைக் குறைத்து அவளோடு சேர்ந்து சிரிக்க பழகுங்கள்.
மனைவிக்கு பிடித்த பிடிக்காத விசயங்களை கேட்டறிந்துக் கொள்ளுங்கள்
மனைவியோடு சேர்ந்து டிவி பாருங்க
மனைவியை குறைக் கூறுவதை விடுத்து அவளின் குறைநிறைகளை சரி செய்ய ஆலோசனைக் கூறுங்கள்
முக்கியமாக மனைவியோடு வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே செல்லாதீர்கள் நீங்க திரும்பி வரும் வரை அவள் ஜீவன் அவளிடத்தில் இருக்காது.
திருமண வாழ்க்கை என்பது மிகவும் இனிமையான ஒன்று அதை சரிவர அனுபவிக்காமல் பிறர் கூறினதைக் கேட்டும் மற்றவரின் அனுபவத்தைக் கொண்டும் ஒரு முடிவுக்கு வருவது தவறு. குடும்பங்களில் என்றென்றும் குதூகலமும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டுமென்றால் அது மனைவியின் கையில் தான் உள்ளது என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது அது கணவன் மனைவியாகிய இருவரும் சேர்ந்து அக்குடும்பத்தை கையாளும் விதத்தில் தான் உள்ளது
மனோஹரி மன்றம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனக்கவலையா மனைவியோடு அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
பயன்மிக்க பகிர்வுக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தெரிந்து கொள்ளுங்கள் #4
» தெரிந்து கொள்ளுங்கள் .....
» தெரிந்து கொள்ளுங்கள் #6
» தெரிந்து கொள்ளுங்கள் #7
» தெரிந்து கொள்ளுங்கள் #8
» தெரிந்து கொள்ளுங்கள் .....
» தெரிந்து கொள்ளுங்கள் #6
» தெரிந்து கொள்ளுங்கள் #7
» தெரிந்து கொள்ளுங்கள் #8
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|