Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
Page 1 of 1 • Share
செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
செந்தமிழ் நாடெனும் போதினிலே.. இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று வானொலியில் இனிமையான குரல் ஒலித்துக் கொண்டிருக்க இதைக் கவனிக்காமல் கடந்து செல்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். உடனே இவன் செவிடனாக இருப்பானோ? என்று மனத்திற்குள் கேள்வி எழும்பும். கேள்வி எழும்பும் போதே இவர்களின் உலகம் எப்படியிருக்கும் ? என்று அறிய ஆர்வமாகிறோம். அத்துடன் இவர்களுக்கு நவீன மருத்துவம் எம்மாதிரியான தீர்வைத் தந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளவும் ஆவலாகிறோம். காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆ.கருணாகரன் இது குறித்து தரும் விளக்கம்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே.. இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று வானொலியில் இனிமையான குரல் ஒலித்துக் கொண்டிருக்க இதைக் கவனிக்காமல் கடந்து செல்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். உடனே இவன் செவிடனாக இருப்பானோ? என்று மனத்திற்குள் கேள்வி எழும்பும். கேள்வி எழும்பும் போதே இவர்களின் உலகம் எப்படியிருக்கும் ? என்று அறிய ஆர்வமாகிறோம். அத்துடன் இவர்களுக்கு நவீன மருத்துவம் எம்மாதிரியான தீர்வைத் தந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளவும் ஆவலாகிறோம். காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆ.கருணாகரன் இது குறித்து தரும் விளக்கம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
செல்போனை தொடர்ந்து உபயோகித்தால் காதுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்கிறார்களே உண்மையா? இதனைத் தவிர்க்க ஹாண்ட்ஸ் ப்ரீயைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்களே. இதனை ஏற்கலாமா?
ஒரு நாளுக்கு எட்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ வாரத்தின் அனைத்து நாட்களிலும் செல்போனை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினாலோ காதில் பாதிப்பு ஏற்படும். ஹாண்ட்ஸ் ப்ரீ பயன்படுத்தினால் இவ்வகையான பாதிப்பில் பத்து முதல் இருபது சதவீதம் குறையுமே தவிர பாதிப்பு உறுதி. தற்போது சந்தையில் விற்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஆசிய நாட்டின் தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் கேட்கும் சக்தி குறித்த பாதிப்பு நிச்சயம் என்று ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே செல்போனை ஹாண்ட்ஸ் ப்ரீயின் உதவியுடன் அளவாகப் பயன்படுத்துவதே நலம்.
ஒரு நாளுக்கு எட்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ வாரத்தின் அனைத்து நாட்களிலும் செல்போனை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினாலோ காதில் பாதிப்பு ஏற்படும். ஹாண்ட்ஸ் ப்ரீ பயன்படுத்தினால் இவ்வகையான பாதிப்பில் பத்து முதல் இருபது சதவீதம் குறையுமே தவிர பாதிப்பு உறுதி. தற்போது சந்தையில் விற்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஆசிய நாட்டின் தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் கேட்கும் சக்தி குறித்த பாதிப்பு நிச்சயம் என்று ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே செல்போனை ஹாண்ட்ஸ் ப்ரீயின் உதவியுடன் அளவாகப் பயன்படுத்துவதே நலம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
காதுகளை நாமாகச் சுத்தம் செய்யக் கூடாது என்று அதற்குரிய மருத்துவ நிபுணர்கள் சுத்தம் செய்தாலும் காதில் தங்கியிருக்கும் “வேக்ஸை’ முழுமையாக அகற்றமாட்டார்கள் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது சரியா?
வேக்ஸ் எனப்படும் திரவப் பொருள் பொதுவாக அனைவரின் காதுகளிலும் இருக்கும். இது காற்றில் உள்ள வாயுக்களினால் திடப்பொருளாக மாறி காதுகளில் கறுப்பு நிறத்திலோ அல்லது பழுப்பு வண்ணத்திலோ தங்குகிறது. நீராடும் போது இயல்பாகவே இவை வெளியேறிவிடும். ஒரு சிலருக்கு இவை வெளியேறாமல் அங்கேயே தங்கி கட்டியாகி விடுகிறது.இதுபோன்று இருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவர்களை அணுகி காதுகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை நாமாக பட்ஸ் எனப்படும் பஞ்சு முனையால் அகற்ற முயற்சிக்கக் கூடாது. காதில் ஈரத் தன்மை இருந்தாலோ அல்லது காதில் சீழ் வடிந்தாலோ தான் பட்ஸை உபயோகப்படுத்த வேண்டும். மற்ற எதற்காகவும் பட்ஸைப் பயன்படுத்தக் கூடாது.
வேக்ஸ் எனப்படும் திரவப் பொருள் பொதுவாக அனைவரின் காதுகளிலும் இருக்கும். இது காற்றில் உள்ள வாயுக்களினால் திடப்பொருளாக மாறி காதுகளில் கறுப்பு நிறத்திலோ அல்லது பழுப்பு வண்ணத்திலோ தங்குகிறது. நீராடும் போது இயல்பாகவே இவை வெளியேறிவிடும். ஒரு சிலருக்கு இவை வெளியேறாமல் அங்கேயே தங்கி கட்டியாகி விடுகிறது.இதுபோன்று இருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவர்களை அணுகி காதுகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை நாமாக பட்ஸ் எனப்படும் பஞ்சு முனையால் அகற்ற முயற்சிக்கக் கூடாது. காதில் ஈரத் தன்மை இருந்தாலோ அல்லது காதில் சீழ் வடிந்தாலோ தான் பட்ஸை உபயோகப்படுத்த வேண்டும். மற்ற எதற்காகவும் பட்ஸைப் பயன்படுத்தக் கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
காதில் சீழ் வடிதலுக்கு எம் மாதிரியான சிகிச்சை சிறந்தது?
காதில் சீழ் வடிவதற்கான காரணத்தைக் கண்டறிந்து தான் முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இது ஆரம்பக் கட்டத்தில் இருப்பின் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த இயலும். காதில் சீழ் வடிதலுக்கு காரணமான கிருமியினை கண்டறிந்தும் அதற்குரிய சிகிச்சையை வழங்கலாம். இம்மாதிரியான சிகிச்சைகளில் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சல் போன்ற சிகிச்சைகளுடன் இதனை ஒப்பிடக் கூடாது. மூக்கு தண்டு வடபாதிப்பு, சைனஸ் தொல்லை, டொன்சில்ஸ், அண்ண சதைப் பிரச்சினை போன்ற தொல்லைகளும் உடனிருந்து காதில் சீழ் வடிவது நெடுநாளாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலமே குணப்படுத்த இயலும். ஒரு சிலருக்கு காதில் இருக்கும் சவ்வு கிழிந்து கூட சீழ் வரலாம். இவர்களுக்கு கிழிந்த சவ்வினை அடைப்பதற்கான அறுவை கிகிச்சையை செய்து குணப்படுத்த வேண்டும். ஒரு சில தருணங்களில் காதில் இருக்கும் சவ்வின் ஓட்டை காதின் மேல்பாகத்திலோ அல்லது பின்பாகத்திலோ உள்ள எலும்பையொட்டி ஏற்பட்டுவிடும். அத்தகையோருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலமாக மட்டுமே சிகிச்சை வழங்க வேண்டும். இல்லையெனில் இவை மூளைப் பகுதிக்குப் பரவி மூளைக் கட்டி அல்லது முக நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படும் அபாயமுண்டு.
காதில் சீழ் வடிவதற்கான காரணத்தைக் கண்டறிந்து தான் முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இது ஆரம்பக் கட்டத்தில் இருப்பின் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த இயலும். காதில் சீழ் வடிதலுக்கு காரணமான கிருமியினை கண்டறிந்தும் அதற்குரிய சிகிச்சையை வழங்கலாம். இம்மாதிரியான சிகிச்சைகளில் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சல் போன்ற சிகிச்சைகளுடன் இதனை ஒப்பிடக் கூடாது. மூக்கு தண்டு வடபாதிப்பு, சைனஸ் தொல்லை, டொன்சில்ஸ், அண்ண சதைப் பிரச்சினை போன்ற தொல்லைகளும் உடனிருந்து காதில் சீழ் வடிவது நெடுநாளாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலமே குணப்படுத்த இயலும். ஒரு சிலருக்கு காதில் இருக்கும் சவ்வு கிழிந்து கூட சீழ் வரலாம். இவர்களுக்கு கிழிந்த சவ்வினை அடைப்பதற்கான அறுவை கிகிச்சையை செய்து குணப்படுத்த வேண்டும். ஒரு சில தருணங்களில் காதில் இருக்கும் சவ்வின் ஓட்டை காதின் மேல்பாகத்திலோ அல்லது பின்பாகத்திலோ உள்ள எலும்பையொட்டி ஏற்பட்டுவிடும். அத்தகையோருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலமாக மட்டுமே சிகிச்சை வழங்க வேண்டும். இல்லையெனில் இவை மூளைப் பகுதிக்குப் பரவி மூளைக் கட்டி அல்லது முக நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படும் அபாயமுண்டு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
காது கேளாமை என்பது பிறவிக் கோளாறா? மரபணுக் கேளாறா? அல்லது விபத்து அதிர்ச்சி, கருச்சிதைவு ஆகியவற்றின் பின்விளைவா?
மரபணுக் கேளாறு காரணமாக பிறவியிலேயே காதுகேளாமை ஏற்படுவது சாத்தியம். ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் வீரியமிக்க வலி நிவாரணிகள், வீரியமிக்க மருந்துகள், ரேடியேஷன் சிகிச்சை, அம்மை போன்ற தொற்று நோய்கள் ஆகியவற்றின் பாதிப்புகளால் காதில் நரம்பு பாதிக்கப்பட்டு பிறக்கும் குழந்தைக்குக் காது கேளாமை ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பாலும் காதுகேளாமை ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு. ஒரு சில தருணங்களில் பிறக்கும் குழந்தைகளின் காது நரம்புகள் அசைவதில் ஏற்படும் தடைகளால் கூட காது கேளாமை நிகழும். விபத்தின் போது காதுப் பகுதிகளில் அடிபடுதல், காதை இயக்கும் மூன்று எலும்புகள் தங்களுக்குள்ள தொடர்பை விட்டுவிட்டாலோ கூட காதுகேளாமை உண்டாகும். பாடசாலைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும் போது (காதைத் திருகுதல், கன்னத்தில் அறைதல், காதில் கிள்ளுதல்) கூட இவை நிகழ வாய்ப்புண்டு.
மரபணுக் கேளாறு காரணமாக பிறவியிலேயே காதுகேளாமை ஏற்படுவது சாத்தியம். ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் வீரியமிக்க வலி நிவாரணிகள், வீரியமிக்க மருந்துகள், ரேடியேஷன் சிகிச்சை, அம்மை போன்ற தொற்று நோய்கள் ஆகியவற்றின் பாதிப்புகளால் காதில் நரம்பு பாதிக்கப்பட்டு பிறக்கும் குழந்தைக்குக் காது கேளாமை ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பாலும் காதுகேளாமை ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு. ஒரு சில தருணங்களில் பிறக்கும் குழந்தைகளின் காது நரம்புகள் அசைவதில் ஏற்படும் தடைகளால் கூட காது கேளாமை நிகழும். விபத்தின் போது காதுப் பகுதிகளில் அடிபடுதல், காதை இயக்கும் மூன்று எலும்புகள் தங்களுக்குள்ள தொடர்பை விட்டுவிட்டாலோ கூட காதுகேளாமை உண்டாகும். பாடசாலைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும் போது (காதைத் திருகுதல், கன்னத்தில் அறைதல், காதில் கிள்ளுதல்) கூட இவை நிகழ வாய்ப்புண்டு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
சைனஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபெஸ் என்ற நவீன சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பலன் என்ன? யாருக்கு இது பொருந்தும்?
சைனஸ் என்பது இயல்பாக அதற்குரிய பாதை வழியாக நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. மூக்கு வழியாக சுவாசிக்கின்ற காற்று அதன் வழியாக உள்ளே செல்லும். காற்று இயல்பாக உள்ளே செல்லவில்லை என்றாலோ அல்லது உள்ளே இக்கின்ற நீரானது வெளியே வரவில்லை என்றாலோ தான் சைனஸ் தொல்லை உருவாகிறது. முதலில் இதற்கு தற்காலிக தீர்வாக மருந்து மாத்திரைகளே இருந்து வந்தன. பின்னாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சைனஸின் அடிப்பாகத்தில் ஒரு துளையை உருவாக்கி அதன் மூலமாக உள்ளேயிருக்கும் நீரையும் சளியையும் உறிஞ்சி எடுத்தார்கள். ஆனால் இதனால் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் செயற்கையாக உறிஞ்சி எடுக்கப்பட்டாலும் சைனஸ் தனக்குரிய இயல்பான பாதை வழியே வெளியேறுவதை உறுதி செய்து கொண்டனர். இதன் பின் சைனஸின் ஓட்டையை பெரிதாக்கினால் உள்ளேயிருக்கும் நீரும் சளியும் விரைவில் வெளியேறும் என்பதைக் கண்டறிந்தனர். இந்த ஓட்டையைப் பெரிதாக்கும் சிகிச்சையே ஃபெஸ் எனப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சிகிச்சைக்குப் பின் 90 முதல் 95 சதவீதம் வரை சைனஸ் தொல்லை இல்லாமல் இருந்தது.
http://kattankudymirror.wordpress.com/
சைனஸ் என்பது இயல்பாக அதற்குரிய பாதை வழியாக நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. மூக்கு வழியாக சுவாசிக்கின்ற காற்று அதன் வழியாக உள்ளே செல்லும். காற்று இயல்பாக உள்ளே செல்லவில்லை என்றாலோ அல்லது உள்ளே இக்கின்ற நீரானது வெளியே வரவில்லை என்றாலோ தான் சைனஸ் தொல்லை உருவாகிறது. முதலில் இதற்கு தற்காலிக தீர்வாக மருந்து மாத்திரைகளே இருந்து வந்தன. பின்னாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சைனஸின் அடிப்பாகத்தில் ஒரு துளையை உருவாக்கி அதன் மூலமாக உள்ளேயிருக்கும் நீரையும் சளியையும் உறிஞ்சி எடுத்தார்கள். ஆனால் இதனால் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் செயற்கையாக உறிஞ்சி எடுக்கப்பட்டாலும் சைனஸ் தனக்குரிய இயல்பான பாதை வழியே வெளியேறுவதை உறுதி செய்து கொண்டனர். இதன் பின் சைனஸின் ஓட்டையை பெரிதாக்கினால் உள்ளேயிருக்கும் நீரும் சளியும் விரைவில் வெளியேறும் என்பதைக் கண்டறிந்தனர். இந்த ஓட்டையைப் பெரிதாக்கும் சிகிச்சையே ஃபெஸ் எனப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சிகிச்சைக்குப் பின் 90 முதல் 95 சதவீதம் வரை சைனஸ் தொல்லை இல்லாமல் இருந்தது.
http://kattankudymirror.wordpress.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செல்போனை அளவோடு பாவித்தால் காதுகளைப் பாதுகாக்கலாம்!
அவசியமான தகவல் பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» காதுகளைப் பாதுகாப்போம்
» காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
» எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்
» சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.
» சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.
» காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
» எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்
» சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.
» சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|