தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தந்தை பெரியாரை கொன்றது யார்?

View previous topic View next topic Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by பித்தன் Sun Jun 16, 2013 1:01 am

தந்தை பெரியார் என்பவர் ஏதோ வெங்கடப்பருக்கு மகனாக மட்டும் பிறந்து, வியபாரியாக மட்டும் இருந்து இருந்தால் அவரை பற்றி யாரும் சிந்திப்பதற்கான அவசியமே இருந்து இருக்காது. பகுத்தறிவு ஞானியான பிறகு அவரை என்றைக்கும் அவரின் சிந்தனைகளுக்கு மதிப்பு தர வேண்டியது நமது கடமைகளில் அவசியமானது ஆகிறது.

சரி பித்தன் தலைப்புக்கு வருகிறான்,

தந்தை பெரியார் என்பவர் வெறும் உடல் என சொன்னால், பித்தனால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அழகிய சித்தாந்தம்.

1.உருவ வழிபாடு என்பது கூடாது  என கூறிய பெரியாருக்கு சிலை வைத்து அவரின் சிலை வைத்து அவரை (சித்தாந்தத்தை) கொன்றது யார்?

2.பூ, மாலை வைத்து போற்றி என சொல்லும் சித்தாந்தத்தை எதிர்த்த பெரியாருக்கு மாலை இட்டு போற்றி துதி பாடி கொன்றது யார்?

3. ”நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்க வேண்டாம்”  நீங்கள் உங்கள் பகுத்தறிவால் சிந்தித்து பிறகு சரியெனப்படுவதை ஏற்றுக்கொள்ளுங்கள், என சொன்ன பெரியாரின் பாசறை பிள்ளைகள் ஒரு தலைவனின் கீழ் (அவன் ஊழல் பிழை கொண்ட போதும்)ஆட்டு மந்தையென தொண்டர்கள் செல்லும் போது அவரின் சித்தாந்தத்தை
கொன்றது யார்?

4.உடல் நலம் குன்றியிருந்த போது கூட, திரு நெல்வேலியில் உரை நிகழ்த்த போயிருந்த போது ஒரு சிறு குழந்தை   அவரை கண்டதும் எழுந்து நின்று வணக்கம் சொன்ன போது, தன் உதவியாளரிடம் தன்னை துக்கி விட சொல்லி எழுந்து நின்று மீண்டும் வணக்கம் சொல்லி, சிறு குழந்தையின் சுய மரியாதையை கூட மதித்த தந்தை பெரியாரின் வழிவந்தொர் காலில் விழும் கலாசாரம் கொண்டு வந்த போது சுய மரியாதை சித்தாந்தம் கொல்லப்பட்டதே, அப்போது அவரின் சித்தாந்தத்தை கொன்றது யார்?

5. காந்தியின் நல்ல சீடனாக கள்ளுக்கடை மரியலுக்காக தனது தோப்பினை அழித்த தலைவனின் தொண்டர்கள்,
தானே சாரயக்கடை நடத்தி ஏழை மக்களின் குடி கெடுக்கும் போது அவரின் மது ஒழிப்பு சித்தாந்தம் கொல்லப்பட்டதே, அப்போது அவரின் சித்தாந்தத்தை கொன்றது யார்?

6. தன் சொத்து முழுதும் மக்களுக்கே செலவிட்ட அந்த தலைவனின் வாரிசு என சொல்லிக்கொள்ளும்(கொல்லும்)
கழகத்தினர் குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் போது அவரின் சித்தாந்தம் கொல்லப்பட்டதே, அப்போது அவரின் சித்தாந்தத்தை கொன்றது யார்?

7. கடவுள் என்பது ஏமாற்று வேலை என சொல்லி விட்டு, வாக்கு வங்கிக்கு என எமது இசுலாமிய, கிருத்துவ சமூகத்தின் விழா கொண்டாடும் போது பாசறை பிள்ளைகள் சேர்ந்து விழா கொண்டாடிய போது, தந்தை பெரியாரின் அடிப்படை சித்தாந்தமான கடவுள் மறுப்பு கொள்கை கொல்லப்பட்டதே, அப்போது அவரை கொன்றது யார்?

    எண்ணத்துவங்கினால் எண்ணிக்கை அதிகமாகும், இயற்கை வேண்டுமானால் அவரின் உடலை நம்மிடம் இருந்து பிரித்து இருக்கலாம். அவரின் சித்தாந்தம் எனும் பகுத்தறிவு பொக்கிஷத்தை நம்மிடம் இருந்து பிரித்து அழித்தது யார்?


பெரியாரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம், உங்கள் பகுத்தறிவால் பகுத்து சிந்தித்து உஙகளுக்கு சரியெனப்படுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் பகுத்தறிவு சொல்லட்டும் பெரியாரை கொன்றது யார்?

( உபரியாக - கடவுளை விடாது நம்பிய ராஜாஜி, கடவுளை நம்பாது இருந்த பெரியாரும் நெருங்கிய நண்பர்கள், மறக்க, மறுக்க முடியாது)
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jun 16, 2013 9:29 am

இப்போது உங்கள் பகுத்தறிவு சொல்லட்டும் பெரியாரை கொன்றது யார்?
-
பெரியாரை அனைத்து கட்சிகளும் சொந்தம் கொண்டாடுகின்றன...

இன்று அரசியல் நடத்துபவர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை... அப்படி கொள்கையை கையில் பிடித்துக்கொண்டு திரிபவர்களுக்கு நாம் ஓட்டும் போடுவது இல்லை...

மாற்று கட்சியாக வந்தவரை நாம் வாழ வைக்கவும் - வளர்க்கவும் தயாராகவே இல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by பித்தன் Mon Jun 17, 2013 10:06 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
இன்று அரசியல் நடத்துபவர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை... அப்படி கொள்கையை கையில் பிடித்துக்கொண்டு திரிபவர்களுக்கு நாம் ஓட்டும் போடுவது இல்லை...
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by veeramurasu Mon Jun 17, 2013 10:55 am

கொல்லவில்லை... கொன்றுகொண்டே இருக்கிறோம்..
veeramurasu
veeramurasu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by Muthumohamed Mon Jun 17, 2013 1:29 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்போது உங்கள் பகுத்தறிவு சொல்லட்டும் பெரியாரை கொன்றது யார்?
-
பெரியாரை அனைத்து கட்சிகளும் சொந்தம் கொண்டாடுகின்றன...

இன்று அரசியல் நடத்துபவர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை... அப்படி கொள்கையை கையில் பிடித்துக்கொண்டு திரிபவர்களுக்கு நாம் ஓட்டும் போடுவது இல்லை...

மாற்று கட்சியாக வந்தவரை நாம் வாழ வைக்கவும் - வளர்க்கவும் தயாராகவே இல்லை...

மறுக்க முடியாத உண்மை தான்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by பித்தன் Mon Jun 17, 2013 2:06 pm

veeramurasu wrote:கொல்லவில்லை... கொன்றுகொண்டே இருக்கிறோம்..




உண்மைதான் ................கண்ணீர் வடிகண்ணீர் வடிகண்ணீர் வடி
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by ஸ்ரீராம் Mon Jun 17, 2013 5:32 pm

மிக நல்ல கட்டுரை. தற்போதுதான்  கண்ணில்பட்டது. 

தந்தைப் பெரியார் பற்றிய மேலும் சில தகவல்கள்.


பெரியாரின் சாதனைப் பயணம்
தந்தைப் பெரியார் நம் வாழ்நாளில் சுற்றுப்பயணம் செய்த தொலைவு 8,20,000 மைல்கள். இது பூமியின் சுற்றளவைப் போல் மூன்று மடங்கு பெரியது. தன்னுடைய வாழ்நாளில் 58 சதவீதம் பயணத்தில் கழித்துள்ளார். அதாவது சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்கள் = 30,000 நாட்கள்... 8,200 பேசிய கூட்டங்கள், பொது கூட்டங்கள், மாநாடுகளில் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் ஆகும். பெரியார் நேர மேலாண்மையை சரியான முறையில் பயன்படுத்தி தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by பித்தன் Mon Jun 17, 2013 8:22 pm

நக்கல்:D:D
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by மகா பிரபு Tue Jun 18, 2013 7:30 am

உண்மை உண்மை. பெரியார் ஒரு குறிப்பட்ட சமூகத்தின் அடையாளமாக்கப்பட்டது இன்னும் வேதனை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தந்தை பெரியாரை கொன்றது யார்? Empty Re: தந்தை பெரியாரை கொன்றது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum