தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழாயிரம் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! .

View previous topic View next topic Go down

தமிழாயிரம் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! . Empty தமிழாயிரம் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! .

Post by eraeravi Sat Jun 22, 2013 9:09 pm

தமிழாயிரம் !
நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! .
வெளியீடு . திருவள்ளுவர் தவச்சாலை ,திருவளர்குடி( அல்லூர் ) திருச்சிராப்பள்ளி மாவட்டம் .620101 .தொலைப்பேசி 0431-2685328.
விலை ரூபாய் 120.

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் சிகரமாக விளங்கக் கூடியவர் புலவர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் .அவருக்கு எஸ் .ஆர் .எம் .பல்கலைக் கழகத்தின், தமிழ்ப் பேராயத்தின் சார்பில் வழங்கப்பட்ட  அய்ந்து லட்ச ரூபாயை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து அதில் இருந்து வரும் வட்டித் தொகையில் தொடர்ந்து நூல் வெளியிடுவது என்று முடிவு எடுத்து முதலில் வெளி வந்துள்ள நூல் இது .இந்த நூல் வெளியீட்டு விழா பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது . சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் நூல் அறிமுக விழா நடைபெற்றது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களின் கரங்களால் இந்த நூலைப் பெற்றேன் .நூல் அறிமுக விழாவில் மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள்  முதல்வரும் ,சைவ சித்தாந்த அறிஞருமான திரு .அருணகிரி இந்நூல பற்றி மிகச் சிறப்பான திறனாய்வுரை நிகழ்த்தினார்கள் .


திருக்குறளில் நன்கு புலமை மிக்க அய்யா தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் திருக்குறள் வடிவத்தில் ஒன்றே முக்கால் அடிகளில் தமிழ் பற்றிய ஆயிரம் குறள்களை உடைய  இந்த நூல் தமிழாயிரம் எனப்பட்டது .
.
முதல் அய்நூறு குறள்கள் ,அடிமுடி ( அந்தாதி ) வடிவிலும் ,பின் அய்நூறு குறள்கள் ,தனித்தனி நிற்பன. குறள் வடிவில்  தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் எழுதிய இந்நூல ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் .பல்லாயிரம் வயதாகியும் இன்றும் தமிழ் அழியாமல் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்  போன்றவர்களே .அடிமுடி ( அந்தாதி )  வடிவில் 500 பாடல்கள் எழுதவது எல்லாராலும் முடியாது . ஆனால் இரா .இளங்குமரனார் அவர்களால் முடிந்துள்ளது .


ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்தவர் .திருக்குறளைக்  கரைத்துக் குடித்தவர் .தமிழ் 
இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .அவரது பல்லாண்டு கால பட்டறிவின் வெளிப்பாடாக இந்நூல் வந்துள்ளது .சிலர் புதுக்குறள் என்ற பெயரில் தமிழ்க்கொலை செய்து வரும் காலத்தில் ,காலத்தால் அழியாத திருக்குறளை ஒட்டி மிகச் சிறப்பாக வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் என்பதால் மொழி அறிவு மிக்கவர் என்பதால் சுவைபட எழுதி உள்ளார்கள் .தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக உள்ளது .ஒவ்வொரு தமிழனும் தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்ளும் விதமாக எழுதி உள்ளார் .


"தமிழ் நூறு  "தொடங்கி "தொலைக்காட்சி" வரை 100 அதிகாரத்தில் தலா பத்து வீதம்  1000 உள்ளது.ஒரு அதிகாரத்திற்கு பத்துப்பாடல்கள் .குறளுக்கு அருகே சொல் விளக்கமும்  ,விளக்கவுரையும் இருப்பதால் எல்லோருக்கும் மிக எளிதாக விளங்கும் .தமிழ்ச்சொற்களை அறிந்து கொள்ளும் சொற்க்களஞ்சியமாக உள்ளது ..'என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழியில் "நன்கு உணர்த்தி  உள்ளார் .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
முதல் நூறு !
தமிழ்ப் பழமை !
1. கதிர்ப்பிறப்புக் காட்டும் கலைத்தமிழைக் கண் போல் 
    மதிக்கும் மதியே மதி !
  கதிர்ப்பிறப்பு- கதிரோன் தோன்றிய நாளில் தோன்றிய பிறப்பு ;கலைத்தமிழ் -   கலைமலிதமிழ் ; மதி -அறிவுடைமை .- 
கதிரவன்  தோன்றிய நாளில் தோன்றிய தமிழ் என்கிறார் .ஞாயிறு ,திங்கள் இரண்டும்  முதல் குறளில் வந்துள்ளது  .
சிலப்பதிகாரத்தில் 
திங்கள் போற்றுதும் ! ஞாயிறுபோற்றுதும் ! என்று ஏன் தொடங்கினார் இளங்கோ ஞாயிறுபோற்றுதும் ! திங்கள் போற்றுதும் ! என்றுதானே வர வேண்டும் மாற்றி எழுதியதன் காரணம் இது கண்ணகி காதை என்பதால்  திங்கள் போற்றுதும் ! முதலில் எழுதி கோவலனுக்காக ஞாயிறுபோற்றுதும் ! இரண்டாவது எழுதினார் .என்றார் .நூல் ஆசிரியர் இரா .இளங்குமரனார்.சிலப்பதிகாரம் படித்த பலருக்கும் புரியாத காரணத்தை புரிந்தவர் இரா .இளங்குமரனார் .

தொல்லைக்காட்சியாகி விட்ட  தொலைக்காட்சி பற்றியும் குறள் உள்ளது .கண்டனத்தை உரக்க்க குரல் கொடுக்கும் விதமாக குறள் உள்ளது .இதனைப் படித்தாவது அவர்கள் திருந்த வேண்டும் .
தொலைக்காட்சி பற்றிஇரண்டு அதிகாரத்தில்  20 குறள்கள்  உள்ளது .இரண்டு மட்டும் உங்கள் பார்வைக்கு !

பக்கத்துத் தங்கிப் பழி வாங்கும் நோக்கினர் 
கக்கத்தில் வைத்துள்ள கங்கு !
நமக்கு நெருக்கமாக இருந்து பழி வாங்கக் காத்திருக்கும் 
எண்ணத்தினர் கமுக்கூட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ள தீக்கங்கு !
தொலைக்காட்சி நம் வீட்டிற்குள் நம் அருகிலேயே இருப்பதால் தமிழைச் சிதைப்பதால் .தமிழ்ப்பண்பாட்டை சீரழிப்பதால் நம் கை இதுக்குள் வைத்துள்ள கங்கு (தீ ) என்கிறார் .

பெண்களே பெண்ணைப் படுத்தும் பெருங்கொடுமை காட்டவே 
கண்டான் கொல் காட்சிக் கதை !
பெண்களைச் சிறுமைப்படுத்தும் கொடுமையைக் 
காட்சியாகக்  காட்டவே தொலைக்காட்சி கண்டானோ ?
பெண்களை மிக கொடூரமாக மோசமாக தொலைக்காட்சியில் காட்டி வரும் அவலத்தை சூடு தரும் விதமாக நன்கு சுட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .


தமிழுக்கு தமிழர்க்கு பெருமை சேர்க்கும் விதமாக வந்துள்ள நூல் .ஆறில் இருந்து அறுபது வரை அனைவரும் படிக்க வேண்டிய நூல் .அற நெறி போதிக்கும் விதமாக, .தமிழ்ப் பகைவர்களுக்கு சாட்டை அடி தரும் விதமாக ,தமிழர்களுக்கு தமிழ் இன உணர்வு ஊட்டும் விதமாக .,உடல் நலம் ,மன நலம் கற்பிக்கும் விதமாக ,தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக, நேர்மறை சிந்தனை கற்றுத் தரும் விதமாக பல்வேறு கருத்துக்கள் உள்ளது .இந்த நூலைப்   படிப்பதோடு நின்று விடாமல் அதன் வழி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் 
நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் தொடர்ந்து இது போன்ற நூல்கள் எழுதி தமிழுக்கு அழகு சேர்க்க வேண்டும் .அணி சேர்க்க வேண்டும் .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் பிற்காலத்தில் தன்  கண் பார்வை மங்கி விட்டாலும் எழுதுவதை நிறுத்தக் கூ டாது என்பதற்காக வெளிச்சம் இல்லாமலே எழுதும் ஆற்றலை பயின்று வைத்துள்ளார்கள் .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு கண் பார்வை மங்கவே மங்காது தமிழ் காக்கும் என்பது உறுதி .


--
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum