Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இளைய பாரதத்தின் எழுச்சி நாயகர்
Page 1 of 1 • Share
இளைய பாரதத்தின் எழுச்சி நாயகர்
[b style="margin: 0px; padding: 0px; font-weight: 700;"]‘‘நான்[/b] சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை ஆழ்ந்து படித்துள்ளேன். அவ்வாறு ஆழ்ந்து படித்ததனால் என்னுடைய தாய்த் திருநாட்டின் மீது உள்ள அன்பு கலந்த பக்தி ஆயிரம் மடங்கு பெருகிவிட்டது’’ என்று நெஞ்சு விம்மச் சொல்கிறார் சத்தியாகிரக சாதகர் மகாத்மா காந்திஜி.
‘‘சுவாமி விவேகானந்தர் தேசிய பக்தி மிகுந்த ஆன்மிகவாதி. அவர் மட்டும் இன்று உயிரோடு இருந்திருப்பாரேயானால் நான் அவரது காலடியில் அமர்ந்திருப்பேன்’’ - இது ஆயுதத்தின் மூலமே பாரத விடுதலை சாத்தியம் என்று போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழக்கம்.
-இப்படி இரண்டு துருவங்களாக இந்திய விடுதலைக்குப் போராடியவர்களை ஒருசேரக் கவர்ந்தவர் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரால் ஊக்கம் பெற்று தேசப் பணிக்கும் தெய்வீகப் பணிக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
1863, ஜனவரி 12 அன்று கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரன், பி.ஏ பட்டதாரி. கடவுளை நேருக்கு நேராகப் பார்க்க முடியுமா என்கிற கேள்வியோடு பகவான் ராமகிருஷ்ணரை சந்தித்து- அவர் மூலமாக இறை தரிசனம் பெற்று- ராமகிருஷ்ணரின் சீடராகி விவேகானந்தனாய் ஆன்மிக, சமுதாய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார்.
ராமகிருஷ்ணர் தம் அன்பிற்கினிய சீடனான விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டும்போது, ‘‘நரேன் தன்னுடைய மதி நுட்பத்தாலும் ஆன்மபலத்தாலும் உலகின் அடித்தளத்தையே ஆட்டுவிப்பான்’’என்றார். இந்த வார்த்தை மெய்யானது.
1893 செப்டம்பர் 11 அன்று, சிகாகோவில் சர்வ மத சபையில் இந்தியாவின் இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி கலந்துகொண்டு ஆற்றிய உரையில், உலகின் கதி மோட்சத்திற்கான ஆன்மிக சக்தி பாரதத்திடமே உள்ளது என அவர் செய்திட்ட கர்ஜனையால் இந்து சமயமும் இந்தியாவும் புத்தொளி பெற்றன. உலகமே இந்தியாவை கொஞ்சம் பொறாமையோடு பார்த்தது.
தாயகம் திரும்பிய விவேகானந்தர், ராமகிருஷ்ண மடத்தை தொடங்கினார். [b style="margin: 0px; padding: 0px; font-weight: 700;"]‘மக்கள் சேவையே மகேசன் சேவை’[/b] என்றால், ஆன்மிக நெறியில் ஆண்டவனுக்குத் தொண்டு புரிவதைவிட, வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கடைத்தேற்றும் முயற்சியே சரியான இறைச்சேவை என்பதை அனைவருக்கும் போதித்து தானும் அதன்படியே வாழ்ந்துகாட்டினார். அதன்படி செயல்பட்ட ராமகிருஷ்ண மடம் இன்று நாடெங்கும் ஆன்மிகம், கல்வி, மருத்துவம், கிராமப்புற மேம்பாடு என தனது சேவை விழுதுகளை நாடெங்கும் பரப்பி வருகிறது.
சுவாமி விவேகானந்தரின் 150 ஜெயந்தி விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் அவரது சிந்தனைகள், இளைய பாரதத்தை வீறு கொண்டு எழச் செய்யும் அமுதம் என்பது நிச்சயமான உண்மை.
நன்றி தினகரன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ள விரும்பாத, நம் முன்னோர்கள் கடைபிடித்த பழக்கவழக்கங்கள்
» மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?
» வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்
» இயற்கையெனும் இளைய கன்னி - (புகைப்படங்கள்) - பல்சுவை
» இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கம்
» மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?
» வருகிறது இளைய தளபதி டீ.வி சேனல்
» இயற்கையெனும் இளைய கன்னி - (புகைப்படங்கள்) - பல்சுவை
» இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|