Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இரத்தச் சுவடுகள் - வித்யாசாகர்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
இரத்தச் சுவடுகள் - வித்யாசாகர்!
தலையில் அச்சு பதிய
புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில்
புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு;
கிழிந்து கிழிந்துப் போன
புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே
மனதிற்குள் கிழியும் உணர்வுகளின்
அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்;
ஆங்காங்கே -
எதை எதையோ நினைத்து
வலிக்கிறது மனசு..
உள்ளே வேகமாய் புகுந்தோடி
வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம்,
பயந்து பயந்து பரிட்சையெழுதிய
அதே படபடப்பு,
தேவையற்றதை வேறு வழியின்றி
மனப்பாடம் செய்ததைப் போன்ற
வேறு வழியற்ற அதே வாழ்க்கை,
இன்னும் -
என்னென்ன இருக்கோ; அப்பா; அம்மா;
மரணமென..
எல்லாம் வழிநெடுக்க முட்கள்.. முட்கள்..
முட்கள் மனம்தைக்கும் பாதைதானா
வாழ்க்கை?
எல்லாவற்றையும் மிதித்துக்கொண்டே
நடக்கிறேன்,
ரத்தக் கரைகளில் எனது கால்தடம்
வழியெங்கும் பதிந்துகொண்டே வருகிறது..
பதியப் பதிய
சிவப்பு உறுத்தும்
கண்களை அகலவிரித்து நடக்கிறேன்..
நடக்க நடக்க இன்னும்
வலிக்குமென்பது தெரியும்
வலிக்கட்டும் -
நன்கு வலிக்கட்டும் -
நாளை எனது ரத்தச் சுவடுகள்
யாருக்கேனும் வாழ்வின் வழியைக் காட்டுமெனில் -
புத்தகப்பை கனக்கும் மனதை
தூக்கிக்கொண்டு
இன்னும் கொஞ்ச நாள் நடக்கலாம்..
ரத்தச் சுவடுகள் இன்னும் சற்று தூரத்திற்கு
நீளலாம்..
------------------------------------------------------
வித்யாசாகர்
புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில்
புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு;
கிழிந்து கிழிந்துப் போன
புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே
மனதிற்குள் கிழியும் உணர்வுகளின்
அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்;
ஆங்காங்கே -
எதை எதையோ நினைத்து
வலிக்கிறது மனசு..
உள்ளே வேகமாய் புகுந்தோடி
வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம்,
பயந்து பயந்து பரிட்சையெழுதிய
அதே படபடப்பு,
தேவையற்றதை வேறு வழியின்றி
மனப்பாடம் செய்ததைப் போன்ற
வேறு வழியற்ற அதே வாழ்க்கை,
இன்னும் -
என்னென்ன இருக்கோ; அப்பா; அம்மா;
மரணமென..
எல்லாம் வழிநெடுக்க முட்கள்.. முட்கள்..
முட்கள் மனம்தைக்கும் பாதைதானா
வாழ்க்கை?
எல்லாவற்றையும் மிதித்துக்கொண்டே
நடக்கிறேன்,
ரத்தக் கரைகளில் எனது கால்தடம்
வழியெங்கும் பதிந்துகொண்டே வருகிறது..
பதியப் பதிய
சிவப்பு உறுத்தும்
கண்களை அகலவிரித்து நடக்கிறேன்..
நடக்க நடக்க இன்னும்
வலிக்குமென்பது தெரியும்
வலிக்கட்டும் -
நன்கு வலிக்கட்டும் -
நாளை எனது ரத்தச் சுவடுகள்
யாருக்கேனும் வாழ்வின் வழியைக் காட்டுமெனில் -
புத்தகப்பை கனக்கும் மனதை
தூக்கிக்கொண்டு
இன்னும் கொஞ்ச நாள் நடக்கலாம்..
ரத்தச் சுவடுகள் இன்னும் சற்று தூரத்திற்கு
நீளலாம்..
------------------------------------------------------
வித்யாசாகர்
Similar topics
» மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும் - வித்யாசாகர்
» மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்க - வித்யாசாகர்
» வித்யாசாகர் கவிதைகள்
» ஞானமடா நீயெனக்கு(17) - வித்யாசாகர்
» தொட்டில் ஆடாத வயிறு - வித்யாசாகர்!
» மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்க - வித்யாசாகர்
» வித்யாசாகர் கவிதைகள்
» ஞானமடா நீயெனக்கு(17) - வித்யாசாகர்
» தொட்டில் ஆடாத வயிறு - வித்யாசாகர்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|