Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புத்திசாலியான திருடன்
Page 1 of 1 • Share
புத்திசாலியான திருடன்
திருடர்கள் பலவிதம். ஒவ்வொரு திருடரும் ஒவ்வொரு விதம். திருடர்களை அறிந்து கொள்வதற்கு முன்னர் 'திருட்டு' என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். 'ஒருவருக்குச் சொந்தமான ஒன்றை அவரது அனுமதி இன்றி உடமை கொள்ளல் திருட்டு' ஆகும்.
இங்கே அனுமதி என்பது கொடுப்பவரின் உரிமை மாற்றம். அதாவது ஒன்றை நாம் எமது சொந்தம் ஆக்குவதற்கு அதன் உரிமையாளர் அதன் மீதான தனது உரிமையை எமக்கு மாற்றம் செய்தல் வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படாமல் நாம் உடமை கொள்ளும் அனைத்தும் திருட்டுத்தான்.
திருட்டு இரண்டு வகையானது. ஒன்று நேரடியான திருட்டு. மற்றையது மறைமுகமான திருட்டு. நேரடியான திருட்டு என்பது மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒன்றை நாம் உரிமை மாற்றம் செய்யப்படாமல்
சொந்தமாக்கியிருத்தலாகும்.. மறைமுகமான திருட்டானது ஒன்றை நாம் சொந்தம் கொள்வதற்கு அதற்கான வெகுமதியைக் கொடுத்தாலும் அந்தப் பொருளை எமக்குக் கொடுத்தவருக்கு அதன் மீது உரிமை இல்லாவிடின் அதுவும் களவு தான். அதாவது,
திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுப் பொருள் என நாம் அறியாமல் திருடியவரிடம் விலை கொடுத்து வாங்கினாலும் அதுவும் திருட்டுத்தான். ஏனெனில் அந்தப் பொருளின் மீதான உரிமை அதன் உண்மையான உரிமையாளரிடம் இருந்து மாற்றப்படவில்லை என்பதனாலாகும்.
திருடர்கள் பலவிதமானவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரண்டு வகைக்குள் உள்ளடக்கலாம். உங்களை (மனதை)த் திருடுபவர்கள் ஒரு வகை. உடைமைகளைத் திருடுபவர்கள் இன்னொரு வகை. உண்மையில் நாம் எல்லோரும் திருடர்கள் தான். ஏனெனில் இந்த இரண்டு வகைத் திருட்டில் ஏதாவது ஒன்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தத் திருடர்களில் அசையும் அசையாச் சொத்துக்களைத் திருடுபவர்கள் சட்டத்தால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு திருட்டின் தன்மைக்கும் திருடப்படும் சொத்தின் பெறுமதிக்கும் ஏற்றவாறு தண்டனையின் தன்மை அமையும்.
மாறாக மனதைத் திருடுபவர்கள் சமுதாய ஒழுக்க விதிகளுக்கு முரண்படாமல் திருடுவார்களாயின் அவர்கள் தண்டிக்கப் படாமல் தட்டிக்கொடுக்கப்படுகிறார்கள். இந்தத் திருடர்கள் அன்பு, அறிவு, அமைதி ஆகிய மூன்றையும் தமது திருட்டுக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திருட்டு சிலருக்கு ஒருதொழில். சிலருக்கு ஒரு கலை. திருடர்கள் திறமைசாலிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. இவர்களால் ஒருவரிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் திருட முடியாது.
ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாமல் அங்கு இங்கு என்று புதைத்து வைத்திருக்கும் சொத்துக்களையோ , ஒருவரிடம் உள்ள தொட்டுணர முடியாத கல்வி, புத்திக் கூர்மை , அனுபவம் போன்ற சொத்துக்களையோ திருட முடியாது. ஆனால் எந்தவித மட்டுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் இடங்கொடாத ஒரேயொரு திருடன் இருக்கிறான்.
இந்தத் திருடன் தான் புத்திசாலியான திருடன். யார் இந்தத் திருடன்? இந்தப் புத்திசாலியான திருடன் எம்முடன் சேர்ந்தே இருப்பான். ஒரு கணப் பொழுதேனும் எம்மை விட்டுப் பிரியமாட்டான். எம்மால் சேகரிக்கப்படும் அனைத்தும் இந்தத் திருடனின் பார்வையிலும் பதிவிலும் இருந்து தப்புவதில்லை.
நாம் ஒவ்வொருவரும் எமக்கே உரித்தான பிரத்தியேகமான வாழ்க்கை முறையைக் (exclusive living system) கொண்டவர்கள். . நாம் வாழ்வது போல் இன்னொருவர் வாழ்ந்ததுமில்லை, வாழப் போவதுமில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறையை நாம் ஒவ்வொரும் நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச் சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான். தனக்குச் சாதகமான ஒரு
சந்தர்ப்பத்தில் இந்தப் பிரத்தியேகமான வாழ்க்கை முறைக்கு, எமது நகர்வுக்கு ஓரு முற்றுப்புள்ளி வைக்கும் ‘மரணம்’ தான் அந்தத் திருடன். முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் நாம் சேர்த்து வைத்த அனைத்தையும் எமது அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லும்
அந்தத் திருடன்தான் (கூற்றுவன், காலன், இயமன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்) 'மரணம்'. மரணத்தைப் போல் எவருமே திருட முடியாது. உலகில் அதீத திறமைமிக்க திருடனிடம் கூட இந்தப் புத்திசாலியான திருடன் திருடிவிடுவான்.
நன்றியுடன் - KG Master
இங்கே அனுமதி என்பது கொடுப்பவரின் உரிமை மாற்றம். அதாவது ஒன்றை நாம் எமது சொந்தம் ஆக்குவதற்கு அதன் உரிமையாளர் அதன் மீதான தனது உரிமையை எமக்கு மாற்றம் செய்தல் வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படாமல் நாம் உடமை கொள்ளும் அனைத்தும் திருட்டுத்தான்.
திருட்டு இரண்டு வகையானது. ஒன்று நேரடியான திருட்டு. மற்றையது மறைமுகமான திருட்டு. நேரடியான திருட்டு என்பது மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒன்றை நாம் உரிமை மாற்றம் செய்யப்படாமல்
சொந்தமாக்கியிருத்தலாகும்.. மறைமுகமான திருட்டானது ஒன்றை நாம் சொந்தம் கொள்வதற்கு அதற்கான வெகுமதியைக் கொடுத்தாலும் அந்தப் பொருளை எமக்குக் கொடுத்தவருக்கு அதன் மீது உரிமை இல்லாவிடின் அதுவும் களவு தான். அதாவது,
திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுப் பொருள் என நாம் அறியாமல் திருடியவரிடம் விலை கொடுத்து வாங்கினாலும் அதுவும் திருட்டுத்தான். ஏனெனில் அந்தப் பொருளின் மீதான உரிமை அதன் உண்மையான உரிமையாளரிடம் இருந்து மாற்றப்படவில்லை என்பதனாலாகும்.
திருடர்கள் பலவிதமானவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரண்டு வகைக்குள் உள்ளடக்கலாம். உங்களை (மனதை)த் திருடுபவர்கள் ஒரு வகை. உடைமைகளைத் திருடுபவர்கள் இன்னொரு வகை. உண்மையில் நாம் எல்லோரும் திருடர்கள் தான். ஏனெனில் இந்த இரண்டு வகைத் திருட்டில் ஏதாவது ஒன்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தத் திருடர்களில் அசையும் அசையாச் சொத்துக்களைத் திருடுபவர்கள் சட்டத்தால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு திருட்டின் தன்மைக்கும் திருடப்படும் சொத்தின் பெறுமதிக்கும் ஏற்றவாறு தண்டனையின் தன்மை அமையும்.
மாறாக மனதைத் திருடுபவர்கள் சமுதாய ஒழுக்க விதிகளுக்கு முரண்படாமல் திருடுவார்களாயின் அவர்கள் தண்டிக்கப் படாமல் தட்டிக்கொடுக்கப்படுகிறார்கள். இந்தத் திருடர்கள் அன்பு, அறிவு, அமைதி ஆகிய மூன்றையும் தமது திருட்டுக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திருட்டு சிலருக்கு ஒருதொழில். சிலருக்கு ஒரு கலை. திருடர்கள் திறமைசாலிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. இவர்களால் ஒருவரிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் திருட முடியாது.
ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாமல் அங்கு இங்கு என்று புதைத்து வைத்திருக்கும் சொத்துக்களையோ , ஒருவரிடம் உள்ள தொட்டுணர முடியாத கல்வி, புத்திக் கூர்மை , அனுபவம் போன்ற சொத்துக்களையோ திருட முடியாது. ஆனால் எந்தவித மட்டுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் இடங்கொடாத ஒரேயொரு திருடன் இருக்கிறான்.
இந்தத் திருடன் தான் புத்திசாலியான திருடன். யார் இந்தத் திருடன்? இந்தப் புத்திசாலியான திருடன் எம்முடன் சேர்ந்தே இருப்பான். ஒரு கணப் பொழுதேனும் எம்மை விட்டுப் பிரியமாட்டான். எம்மால் சேகரிக்கப்படும் அனைத்தும் இந்தத் திருடனின் பார்வையிலும் பதிவிலும் இருந்து தப்புவதில்லை.
நாம் ஒவ்வொருவரும் எமக்கே உரித்தான பிரத்தியேகமான வாழ்க்கை முறையைக் (exclusive living system) கொண்டவர்கள். . நாம் வாழ்வது போல் இன்னொருவர் வாழ்ந்ததுமில்லை, வாழப் போவதுமில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறையை நாம் ஒவ்வொரும் நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச் சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான். தனக்குச் சாதகமான ஒரு
சந்தர்ப்பத்தில் இந்தப் பிரத்தியேகமான வாழ்க்கை முறைக்கு, எமது நகர்வுக்கு ஓரு முற்றுப்புள்ளி வைக்கும் ‘மரணம்’ தான் அந்தத் திருடன். முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் நாம் சேர்த்து வைத்த அனைத்தையும் எமது அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லும்
அந்தத் திருடன்தான் (கூற்றுவன், காலன், இயமன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்) 'மரணம்'. மரணத்தைப் போல் எவருமே திருட முடியாது. உலகில் அதீத திறமைமிக்க திருடனிடம் கூட இந்தப் புத்திசாலியான திருடன் திருடிவிடுவான்.
நன்றியுடன் - KG Master
Similar topics
» சீடனான திருடன்.
» பல நாள் திருடன்
» திருடன் - ஒரு பக்க கதை
» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
» பல நாள் திருடன்
» திருடன் - ஒரு பக்க கதை
» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|