Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடிய வித்தியாசமான வலிகள்!!!
Page 1 of 1 • Share
கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடிய வித்தியாசமான வலிகள்!!!
ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு என்பது கருவுறும் தருணம் தான். இந்நிலையில் ஒரு புதிய உயிர் கருவாகி, உருவாகி ஒன்பது மாதங்களில் குழந்தையாக மடியில் தவழப்போகிறது. ஆனால், சில சமயங்களில் கருவை சுமப்பதனால் ஏற்படும் வலிகளால் அவள் மிகவும் அவதியுற்று, நம்பிக்கை இழக்கும் சூழல் ஏற்படும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றிருக்கும் போது எதிர்கொள்ளும், வெவ்வேறு வகையான வலிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாய்மையடையும் போது சில வகையான வலிகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் இவ்வலிகள் கட்டாயம் ஏற்படும் என்பது இல்லை. ஆனால் இவ்வலிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் . ஏனென்றால், இவ்வலிகள் ஏற்படும் போது அடையாளம் காண வேண்டும் அல்லவா? அப்போது தான் வலிகளின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவரை உடனே கண்டு ஆலோசிக்க முடியும். ஒரு பெண் முதல் முறையாகக் கருவுற்றாலும், மூன்றாம் முறையாகக் கருவுற்றாலும் அனைத்தும் ஒன்றை போலவே இருப்பது இல்லை. இப்போது கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடிய வலிகளைப் பார்ப்போம்.
கருவுற்றிருக்கும் போது ஏற்படும் வலிகள்:
வலியுடன் கூடிய இரத்தக்கசிவு:
கருவுற்றிருக்கும் போது மாதவிலக்குச்சுழற்சி நின்றுவிடுகிறது. ஆனால் சில நேரங்களில் இரத்தக்கசிவு தென்படும். இது சகஜம் தான். ஆனால் இரத்தக்கசிவு வலியுடன் ஏற்படும். இத்தகைய தருணங்களில், உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
வயிற்று வலி:
கருப்பைக்குள் ஒரு புதிய உயிர் வளர, இடம் தேவைப்படுவதால், சிசுவானது தனக்குத் தேவையான இடத்தை உருவாக்கிக் கொள்கிறது. இம்மாதிரியான நேரங்களில், கருவுற்ற பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்படும். எனவே பெண்கள் தேவையான அளவு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய வலிகள் வந்தால், உடனே மறைந்துவிடும். ஆனால் அதே வலி நீண்ட நேரம் நீடித்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
பெருமளவு சுகவீனமும் களைப்பும்:
சில நேரங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் மிகுந்த களைப்பாக உணர்வார்கள். இத்தகைய தருணங்களில் பெண்களுக்கு எந்த வேலையையும் செய்யப் பிடிக்காது. நன்றாக ஓய்வெடுக்க தோன்றும். இதுபோன்ற நேரங்களில் தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையென்றால் இக்களைப்பு நீங்காது.
காரணமின்றி மார்பக வலி:
கருவுற்றிருக்கும் போது சில நேரங்களில் மார்பகங்களில் வலி உண்டாகலாம். கருவுற்றிருப்பதால், மார்பகம் தேவையான அளவு பெரிதாக வளர வேண்டியிருக்கும். இதன் காரணமாக வலியும் உண்டாகலாம். மார்பகங்களின் கனம் சில நேரங்களில் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் காரணமாகவும் வலி உண்டாகலாம்.
வீக்கமும் வலியும்:
கருவுற்ற சில வாரங்களுக்குப் பிறகு, உடலுறுப்புக்களில் குறிப்பாக, பாதங்களும், கால்களும் காரணமின்றி வீங்கத் தொடங்கும். அதன் காரணமாக வலி தோன்றும். சில நேரங்களில் வயிற்று வலி, தலை வலி கூட உண்டாகி அவஸ்தைக்குள்ளாக்கும்.
எனவே பெண்கள் எப்போதும் இத்தகைய வலிகளைக் கவனிக்க வேண்டும். வலிகளைப் பற்றிய ஐயங்களையும், பயத்தினையும் மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் சீரான இடைவெளிகளில் தவறாமல் மருத்துவரிடம் சென்று, உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/different-pains-pregnancy-003511.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய சில வலிகள்!!!
» கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!
» கர்ப்பமாக இருக்கும் போது உண்ண வேண்டிய உணவுகள்
» கர்ப்பமாக இருக்கும் பொழுது
» மாரடைப்பை தவிர்க்க ..
» கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!
» கர்ப்பமாக இருக்கும் போது உண்ண வேண்டிய உணவுகள்
» கர்ப்பமாக இருக்கும் பொழுது
» மாரடைப்பை தவிர்க்க ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|