Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிங்கம் 2 – திரை விமர்சனம்.
Page 1 of 1 • Share
சிங்கம் 2 – திரை விமர்சனம்.
படத்தின் டிரைலரை பார்க்கும் போதே சற்று வயித்தை கலக்கியது. ஓவர் டோஸாகி பாக்கிறவன்லாம் தெறிச்சி ஓடப்போறான்னு நினைச்சேன். இதுல சூர்யா வேற வாங்கலேன்னு மிரட்டி கூப்பிட்டுக்கிட்டு இருந்தாரு.
மற்ற எல்லாத் திரையரங்கங்களிலும் முன்பதிவு ஆரம்பித்து இருக்க நேற்று மாலை 6 மணிவரை ஏஜிஎஸ்ஸில் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை. படம் போடலையோன்னு நினைச்சேன். 7 மணி வாக்கில தான் முன்பதிவு துவங்கியது. முதல் காட்சி 6 மணிக்கு என்றதும் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டேன். இருந்தாலும் சற்று பயமாகத் தான் இருந்தது.
காலையில் அரக்கப்பரக்க எழுந்து சென்றால் ஏஜிஎஸ்ஸில் உள்ள 5 திரையரங்கங்களிலும் காலை 6 மணிக்காட்சி இருந்ததால் 5.30 மணிக்கெல்லாம் தியேட்டரில் திருவிழாக் கூட்டம் தான்.
படத்திற்கு போவதற்கு முன் நான் என் மனதை ஒரு விஷயத்தில் நிறுத்திக் கொண்டேன். படம் பக்கா மசாலா தான். அதனால் லாஜிக், இப்படியெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. சி கிளாஸ் ரசிகன் போல் படத்தை பார்த்து ரசித்து கைதட்டி விசிலடித்து என்ஜாய் செய்ய வேண்டும் என முடிவு செய்து தான் இருக்கையில் அமர்ந்தேன்.
படத்தின் கதை என்ன அப்படியே சிங்கம் முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டு தூத்துக்குடிக்கு வருவார் இல்லையா. அப்படி வந்தவர் ஒரு பள்ளியில் என்சிசி ஆபீசராக வேலைக்கு சேர்கிறார்.
அப்படி இருந்தவாறே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல்களை கண்காணிக்கிறார். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என லிஸ்ட் எடுக்கிறார். போலீஸ் வேலையை விட்டதால் கோவமான அப்பா ராதாரவி சூர்யா அனுஷ்கா திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
சூர்யா வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிகா படிக்கிறார் (இந்தக் கொடுமையை எங்கப் போய் சொல்றது). பள்ளியில் வந்து சண்டை போடும் ரவுடியை போட்டு சூர்யா பொளப்பதை பார்க்கும் ஹன்சிகாவுக்கு சூர்யா மேல் காதல் வந்து விடுகிறது.
ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். ஹன்சிகாவின் சித்தப்பா ரகுமான். அவரின் அடுத்த நிலை குட்டி டானாக முகேஷ் ரிஷி (நம்ம வாசிம்கான் தான்). அவரின் கையாள் சகாயமாக நான் கடவுள் வில்லன் ராஜேந்திரன். இவர்களுக்கு பிரவுன் சுகர் சப்ளை பண்ணும் இன்டர்நேசனல் டான் டேனி.
இவர்களை எதிர்த்து சிங்கம் ஆடும் ஆட்டமே இந்த இரண்டாம் பாகம். இதிலும் கடைசி வரை அனுஷ்காவை திருமணம் செய்யவில்லை. அப்படினா மூன்றாம் பாகம் கூட வர சாத்தியக்கூறுகள் இருக்கு. (நம்ம கெரகம் அப்படி இருந்தா என்ன பண்ண முடியும்)
சூர்யா வழக்கம் போலவே முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். முதல் ஒரு மணிநேரம் சந்தானத்துடன் காமெடியில் சேர்ந்து கலக்குகிறார். தூத்துக்குடியின் டிஎஸ்பியாக பொறுப்பேற்றதும் பரபரப்பாகும் அவர் நம்மையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வில்லன்களை வேட்டையாடுகிறார்.
அனுஷ்காவை விட ஹன்சிகாவுக்கு அதிக நேரம் வரும் வாய்ப்பு. பள்ளி மாணவி என்னும் போதுதான் சற்று ஜெர்க்காகிறது. இவ்வளவு மொழு மொழு பள்ளி மாணவியை நான் பார்த்ததே இல்லை. ஒரு தலையாக காதலித்து பிறகு சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு.
அனுஷ்கா தான் ஜோடி. இரண்டு பாடல்களுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். சில காட்சிகள் வருகிறார். அவ்வளவு தான். சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார். பல இடங்களில் சூர்யாவின் உயரத்திற்கு ஈடுகொடுத்து குனிந்து குனிந்து ஆடுகிறார்.
படத்தின் முதல் ஒரு மணிநேரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு பரபரப்பான காட்சிகளின் இறுக்கத்தை குறைக்கும் வேலையையும் செவ்வனே செய்கிறார். சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம்.
முகேஷ் ரிஷியை பித்தளை குழாய் மூக்கன் என்று கலாய்க்கும் போது தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. தப்பு செய்து விட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என்று மண்டியிட்டு பேண்ட்டை கழட்டும் போது தியேட்டர் அதிர்கிறது.
கடைசியில் கிரேன் மனோகரைப் பார்த்து டபுள் மீனிங்கில் கப்பல் தரை தட்டிருச்சி என்று கலாய்க்கும் போது அர்த்தம் புரிந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். அறிமுகமாகும் காட்சியில் எந்திரன் ரஜினியையும் இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம் கமலையும் இமிட்டேட் செய்து கலாய்க்கிறார்.
முதல் பாகத்தின் கன்டினியுட்டிக்காக விவேக் இந்த படத்திலும் இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் முயற்சிக்கிறார். நமக்குத் தான் வரவில்லை.
வில்லன்கள் போடும் திட்டமும் அதனை அறிந்து சாமர்த்தியமாக எதிர் திட்டம் தீட்டி சூர்யா சமாளிப்பதும் தான் படத்தின் விறுவிறுப்புக்கு மூலகாரணம். பெண்ணை கடத்தும் காட்சியில் அதனை சரியாக திட்டமிட்டு சரிப்படுத்தும் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் இறுதி வரை செல்கிறது. அது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறது.
படம் பார்த்த விமர்சகர்கள், சில பதிவர்கள் படத்தினைப் பற்றி ஆயிரம் குற்றம் குறை சொன்னாலும் அதனைப் பற்றி சினிமா ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்ற சி கிளாஸ் ரசிகர்கள் விசிலடித்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்கள், அது தான் இந்த படத்தின் பெரு வெற்றிக்கு அடித்தளம்.
லாஜிக் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கும் மேல்தட்டு ரசிகர்களுக்கான படம் இது இல்லை. மற்றபடி மசாலா சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான விருந்து
ஆரூர் மூனா செந்தில்
http://www.ampalam.com/
மற்ற எல்லாத் திரையரங்கங்களிலும் முன்பதிவு ஆரம்பித்து இருக்க நேற்று மாலை 6 மணிவரை ஏஜிஎஸ்ஸில் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை. படம் போடலையோன்னு நினைச்சேன். 7 மணி வாக்கில தான் முன்பதிவு துவங்கியது. முதல் காட்சி 6 மணிக்கு என்றதும் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டேன். இருந்தாலும் சற்று பயமாகத் தான் இருந்தது.
காலையில் அரக்கப்பரக்க எழுந்து சென்றால் ஏஜிஎஸ்ஸில் உள்ள 5 திரையரங்கங்களிலும் காலை 6 மணிக்காட்சி இருந்ததால் 5.30 மணிக்கெல்லாம் தியேட்டரில் திருவிழாக் கூட்டம் தான்.
படத்திற்கு போவதற்கு முன் நான் என் மனதை ஒரு விஷயத்தில் நிறுத்திக் கொண்டேன். படம் பக்கா மசாலா தான். அதனால் லாஜிக், இப்படியெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. சி கிளாஸ் ரசிகன் போல் படத்தை பார்த்து ரசித்து கைதட்டி விசிலடித்து என்ஜாய் செய்ய வேண்டும் என முடிவு செய்து தான் இருக்கையில் அமர்ந்தேன்.
படத்தின் கதை என்ன அப்படியே சிங்கம் முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டு தூத்துக்குடிக்கு வருவார் இல்லையா. அப்படி வந்தவர் ஒரு பள்ளியில் என்சிசி ஆபீசராக வேலைக்கு சேர்கிறார்.
அப்படி இருந்தவாறே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல்களை கண்காணிக்கிறார். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என லிஸ்ட் எடுக்கிறார். போலீஸ் வேலையை விட்டதால் கோவமான அப்பா ராதாரவி சூர்யா அனுஷ்கா திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
சூர்யா வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிகா படிக்கிறார் (இந்தக் கொடுமையை எங்கப் போய் சொல்றது). பள்ளியில் வந்து சண்டை போடும் ரவுடியை போட்டு சூர்யா பொளப்பதை பார்க்கும் ஹன்சிகாவுக்கு சூர்யா மேல் காதல் வந்து விடுகிறது.
ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். ஹன்சிகாவின் சித்தப்பா ரகுமான். அவரின் அடுத்த நிலை குட்டி டானாக முகேஷ் ரிஷி (நம்ம வாசிம்கான் தான்). அவரின் கையாள் சகாயமாக நான் கடவுள் வில்லன் ராஜேந்திரன். இவர்களுக்கு பிரவுன் சுகர் சப்ளை பண்ணும் இன்டர்நேசனல் டான் டேனி.
இவர்களை எதிர்த்து சிங்கம் ஆடும் ஆட்டமே இந்த இரண்டாம் பாகம். இதிலும் கடைசி வரை அனுஷ்காவை திருமணம் செய்யவில்லை. அப்படினா மூன்றாம் பாகம் கூட வர சாத்தியக்கூறுகள் இருக்கு. (நம்ம கெரகம் அப்படி இருந்தா என்ன பண்ண முடியும்)
சூர்யா வழக்கம் போலவே முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். முதல் ஒரு மணிநேரம் சந்தானத்துடன் காமெடியில் சேர்ந்து கலக்குகிறார். தூத்துக்குடியின் டிஎஸ்பியாக பொறுப்பேற்றதும் பரபரப்பாகும் அவர் நம்மையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வில்லன்களை வேட்டையாடுகிறார்.
அனுஷ்காவை விட ஹன்சிகாவுக்கு அதிக நேரம் வரும் வாய்ப்பு. பள்ளி மாணவி என்னும் போதுதான் சற்று ஜெர்க்காகிறது. இவ்வளவு மொழு மொழு பள்ளி மாணவியை நான் பார்த்ததே இல்லை. ஒரு தலையாக காதலித்து பிறகு சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு.
அனுஷ்கா தான் ஜோடி. இரண்டு பாடல்களுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். சில காட்சிகள் வருகிறார். அவ்வளவு தான். சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார். பல இடங்களில் சூர்யாவின் உயரத்திற்கு ஈடுகொடுத்து குனிந்து குனிந்து ஆடுகிறார்.
படத்தின் முதல் ஒரு மணிநேரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு பரபரப்பான காட்சிகளின் இறுக்கத்தை குறைக்கும் வேலையையும் செவ்வனே செய்கிறார். சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம்.
முகேஷ் ரிஷியை பித்தளை குழாய் மூக்கன் என்று கலாய்க்கும் போது தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. தப்பு செய்து விட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என்று மண்டியிட்டு பேண்ட்டை கழட்டும் போது தியேட்டர் அதிர்கிறது.
கடைசியில் கிரேன் மனோகரைப் பார்த்து டபுள் மீனிங்கில் கப்பல் தரை தட்டிருச்சி என்று கலாய்க்கும் போது அர்த்தம் புரிந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். அறிமுகமாகும் காட்சியில் எந்திரன் ரஜினியையும் இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம் கமலையும் இமிட்டேட் செய்து கலாய்க்கிறார்.
முதல் பாகத்தின் கன்டினியுட்டிக்காக விவேக் இந்த படத்திலும் இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் முயற்சிக்கிறார். நமக்குத் தான் வரவில்லை.
வில்லன்கள் போடும் திட்டமும் அதனை அறிந்து சாமர்த்தியமாக எதிர் திட்டம் தீட்டி சூர்யா சமாளிப்பதும் தான் படத்தின் விறுவிறுப்புக்கு மூலகாரணம். பெண்ணை கடத்தும் காட்சியில் அதனை சரியாக திட்டமிட்டு சரிப்படுத்தும் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் இறுதி வரை செல்கிறது. அது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறது.
படம் பார்த்த விமர்சகர்கள், சில பதிவர்கள் படத்தினைப் பற்றி ஆயிரம் குற்றம் குறை சொன்னாலும் அதனைப் பற்றி சினிமா ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்ற சி கிளாஸ் ரசிகர்கள் விசிலடித்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்கள், அது தான் இந்த படத்தின் பெரு வெற்றிக்கு அடித்தளம்.
லாஜிக் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கும் மேல்தட்டு ரசிகர்களுக்கான படம் இது இல்லை. மற்றபடி மசாலா சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான விருந்து
ஆரூர் மூனா செந்தில்
http://www.ampalam.com/
Re: சிங்கம் 2 – திரை விமர்சனம்.
அப்ப கண்டிப்பா பார்க்கலாமுணு சொல்லுங்க மொதலுக்கு மோசம் போகாது போல் தெரிகிறது
Similar topics
» திரை விமர்சனம்: இறைவி
» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
» இரும்புத்திரை திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: தேவி
» திரை விமர்சனம்: றெக்க
» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
» இரும்புத்திரை திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: தேவி
» திரை விமர்சனம்: றெக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|