Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!
Page 1 of 1 • Share
எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!
மனித முகங்கள்:
இன்னைக்கு தேதியில நாம், பல சூழ்நிலைகளில் வாழ்க்கை முறையை மாத்திட்டே இருக்கோம். நமக்குன்னு ஒரு நிலையான வாழ்க்கை முறையை அமைச்சுக்க முடியல. அதுக்கு, நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வாழ பழகியதும் ஒரு காரணம். இந்த நெளிவு சுளிவு தான் நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மத்தவங்ககிட்ட காட்ட வைக்குது. ஏன்னா நம்முடைய வெளித்தோற்றமே நம்முடைய ஸ்டேடசை காட்டுது. வீட்டில், உறவினர்களுக்கு மத்தியில் நமது பேச்சும், பழக்க வழக்கமும் ஒரு விதமாகவும் காட்றோம். ஆனால், வெளியுலகில், நண்பர்களிடத்தில் நமது பேச்சும், பழக்க வழக்கங்களும் வேறுவிதமாகவும், வேலை செய்கிற இடத்திலும், நமக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் கிட்ட ஒரு விதமாகவும், நமக்கு கீழே வேலை பாக்கறவங்க கிட்ட இன்னொரு விதமாகவும் நாம் பேச்சையும், பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளோம்.
அரசியல் சாக்கடை:
அரசியல் இன்னைக்கு சாக்கடை என்ற பெயரிலே நாம் அழைக்கிறோம். அரசியலில் உண்மை, உறுதி, பண்பாடு, சத்தியம், இன்னும் எல்லாவகையான நம்பகத்தன்மையும் சாக்கடை குழியில் மூழ்கிட்டே இருக்கு. எந்த அரசியல்வாதியா இருந்தாலும், அரசியல் கட்சியா இருந்தாலும் மக்களால் தான் நாம் முன்னேறினோம், பதவிக்கு வந்தோம் என்ற அடிப்படை விசயத்தையே மறந்துட்டாங்க. பதவி மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தால் மக்களிடம் தங்களின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்குகிறார்கள். இந்த கட்சி, அரசியல்வாதி நல்லவனா? அந்த கட்சி, அரசியல்வாதி நல்வனா என மக்கள் பார்க்கும் பார்வை இன்னைக்கு மறஞ்சு போச்சு. யார் மக்களுக்கு சாதகமா இலவச அறிவிப்பு தராங்களோ அந்த கட்சியே ஆட்சியை பிடிக்கும் அவலம் இன்றைய சமூகத்தில் இருக்கு. அந்த இலவசத்திற்கு அடிமையாகி அடுத்த தேர்தலுக்கும் இன்னும் அதிகபடியான இலவசத்தை எதிர்பார்க்கும் அவல நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காதுன்னே நினைக்கிறேன்.
பாலியல் குற்றங்கள்:
இன்றைய தேதியில் செய்தித்தாள்களின் அநேகமான பக்கத்தை பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகளே ஆக்கிரமிக்கின்றன. பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது, கடைசியில் கொலை என்ற கொடிய செயல் வரை சென்று விடுகிறது. கடந்த ஏழெட்டு மாதங்களில் நாம் அறிந்த பாலியல் குற்றங்கள் அனைத்தும், வக்கிரம் பிடித்த கூட்டங்களால் நடத்தப்பட்டு உள்ளது. அந்த வக்கிரங்களில் சிலரின் வயது மைனர். மைனர் வயது பையன்கள் பாலியல் குற்றம் புரிய காரணமாக இணையம், டிவி நிகழ்சிகள், சினிமாக்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் தினமும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக புள்ளிக் கணக்கு சொல்கிறது. பெண்களும் ஆண்களுக்கு இணையாக எல்லாவிதத்திலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வரும் நாளில், அவர்களை முடக்கி போடும் விசயமாக பாலியல் குற்றங்கள் உள்ளது. பெண்களுக்கெதிரான வன்கொடுமையை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது. அந்த சட்டங்கள் கடுமையான தண்டனையை உள்ளடக்கி இருக்க வேண்டும். பார்ப்போம் பாலியல் பலாத்காரத்தை தடுக்க, ஒழிக்க அரசு இயந்திரம் எவ்வாறு செயல்பட போகிறது என?
ஊழல், பண மோசடி:
பாலியல் குற்றங்கள் போலவே ஊழலும் மன்னிக்க முடியாத குற்றங்களாக நாட்டில் பெருகி விட்டது. எதெற்கெடுத்தாலும் ஊழல், அரசு இயந்திரம் முதல் தனியார் இயந்திரம் வரை கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலின்றி அணுவும் அசையாது என்ற நிலையில் ஹவாலா மோசடி, கருப்பு பணம் பதுக்கல், போலி ஆவணங்கள் மோசடி, சுடுகாட்டு கூரை ஊழல், நிலக்கரி ஊழல், போபர்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல் என ஊழல் குற்றங்களை அடுக்கலாம். இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தாலும் அவர்களை தண்டிக்க முடியாத நிலையில் நமது நாட்டு சட்டம் வலுவாக இல்லையென்றே கருதுகிறேன். குழந்தை பிறக்கும் போதே பிறப்பு சான்றிதழ் வழியாக லஞ்ச ஊழல் அக்குழந்தையை பாதிக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
இன்னும் எத்தனை எத்தனை சமூக அவலங்களை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்?
# குழந்தைகள் அடியெடுத்து வைக்கும் அடிப்படை கல்வியை கூட இன்று பணத்தால் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
# தற்காலிக வேலைக்கும் கூட லஞ்சம் தர வேண்டிய அவலம்,
# முக்கிய சான்றிதழ் பெற வேண்டிய அரசு அலுவலர்களிடம் லஞ்சம்.
நாமும் நமக்கு சாதகமாக செயல்திட்டங்கள் அமைய லஞ்சம் என்ற அவலத்தையே பயன்படுத்துகிறோம். நம்மிடமிருந்தே லஞ்சம், ஊழல், பண மோசடி ஆரம்பமாகிறது என்றே கருதுகிறேன்.
நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என கடுகளவே பதிந்திருக்கிறேன். இத்தகைய சமூக அவலங்களை நம்மால் சீர்படுத்த முடியாது. ஆனால் தவிர்க்க இயலும் என்றே கருதுகிறேன்.
நன்றி -தமிழ்வாசி
இன்னைக்கு தேதியில நாம், பல சூழ்நிலைகளில் வாழ்க்கை முறையை மாத்திட்டே இருக்கோம். நமக்குன்னு ஒரு நிலையான வாழ்க்கை முறையை அமைச்சுக்க முடியல. அதுக்கு, நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வாழ பழகியதும் ஒரு காரணம். இந்த நெளிவு சுளிவு தான் நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மத்தவங்ககிட்ட காட்ட வைக்குது. ஏன்னா நம்முடைய வெளித்தோற்றமே நம்முடைய ஸ்டேடசை காட்டுது. வீட்டில், உறவினர்களுக்கு மத்தியில் நமது பேச்சும், பழக்க வழக்கமும் ஒரு விதமாகவும் காட்றோம். ஆனால், வெளியுலகில், நண்பர்களிடத்தில் நமது பேச்சும், பழக்க வழக்கங்களும் வேறுவிதமாகவும், வேலை செய்கிற இடத்திலும், நமக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் கிட்ட ஒரு விதமாகவும், நமக்கு கீழே வேலை பாக்கறவங்க கிட்ட இன்னொரு விதமாகவும் நாம் பேச்சையும், பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளோம்.
அரசியல் சாக்கடை:
அரசியல் இன்னைக்கு சாக்கடை என்ற பெயரிலே நாம் அழைக்கிறோம். அரசியலில் உண்மை, உறுதி, பண்பாடு, சத்தியம், இன்னும் எல்லாவகையான நம்பகத்தன்மையும் சாக்கடை குழியில் மூழ்கிட்டே இருக்கு. எந்த அரசியல்வாதியா இருந்தாலும், அரசியல் கட்சியா இருந்தாலும் மக்களால் தான் நாம் முன்னேறினோம், பதவிக்கு வந்தோம் என்ற அடிப்படை விசயத்தையே மறந்துட்டாங்க. பதவி மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தால் மக்களிடம் தங்களின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்குகிறார்கள். இந்த கட்சி, அரசியல்வாதி நல்லவனா? அந்த கட்சி, அரசியல்வாதி நல்வனா என மக்கள் பார்க்கும் பார்வை இன்னைக்கு மறஞ்சு போச்சு. யார் மக்களுக்கு சாதகமா இலவச அறிவிப்பு தராங்களோ அந்த கட்சியே ஆட்சியை பிடிக்கும் அவலம் இன்றைய சமூகத்தில் இருக்கு. அந்த இலவசத்திற்கு அடிமையாகி அடுத்த தேர்தலுக்கும் இன்னும் அதிகபடியான இலவசத்தை எதிர்பார்க்கும் அவல நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காதுன்னே நினைக்கிறேன்.
பாலியல் குற்றங்கள்:
இன்றைய தேதியில் செய்தித்தாள்களின் அநேகமான பக்கத்தை பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகளே ஆக்கிரமிக்கின்றன. பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது, கடைசியில் கொலை என்ற கொடிய செயல் வரை சென்று விடுகிறது. கடந்த ஏழெட்டு மாதங்களில் நாம் அறிந்த பாலியல் குற்றங்கள் அனைத்தும், வக்கிரம் பிடித்த கூட்டங்களால் நடத்தப்பட்டு உள்ளது. அந்த வக்கிரங்களில் சிலரின் வயது மைனர். மைனர் வயது பையன்கள் பாலியல் குற்றம் புரிய காரணமாக இணையம், டிவி நிகழ்சிகள், சினிமாக்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் தினமும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக புள்ளிக் கணக்கு சொல்கிறது. பெண்களும் ஆண்களுக்கு இணையாக எல்லாவிதத்திலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வரும் நாளில், அவர்களை முடக்கி போடும் விசயமாக பாலியல் குற்றங்கள் உள்ளது. பெண்களுக்கெதிரான வன்கொடுமையை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது. அந்த சட்டங்கள் கடுமையான தண்டனையை உள்ளடக்கி இருக்க வேண்டும். பார்ப்போம் பாலியல் பலாத்காரத்தை தடுக்க, ஒழிக்க அரசு இயந்திரம் எவ்வாறு செயல்பட போகிறது என?
ஊழல், பண மோசடி:
பாலியல் குற்றங்கள் போலவே ஊழலும் மன்னிக்க முடியாத குற்றங்களாக நாட்டில் பெருகி விட்டது. எதெற்கெடுத்தாலும் ஊழல், அரசு இயந்திரம் முதல் தனியார் இயந்திரம் வரை கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலின்றி அணுவும் அசையாது என்ற நிலையில் ஹவாலா மோசடி, கருப்பு பணம் பதுக்கல், போலி ஆவணங்கள் மோசடி, சுடுகாட்டு கூரை ஊழல், நிலக்கரி ஊழல், போபர்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல் என ஊழல் குற்றங்களை அடுக்கலாம். இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தாலும் அவர்களை தண்டிக்க முடியாத நிலையில் நமது நாட்டு சட்டம் வலுவாக இல்லையென்றே கருதுகிறேன். குழந்தை பிறக்கும் போதே பிறப்பு சான்றிதழ் வழியாக லஞ்ச ஊழல் அக்குழந்தையை பாதிக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
இன்னும் எத்தனை எத்தனை சமூக அவலங்களை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்?
# குழந்தைகள் அடியெடுத்து வைக்கும் அடிப்படை கல்வியை கூட இன்று பணத்தால் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
# தற்காலிக வேலைக்கும் கூட லஞ்சம் தர வேண்டிய அவலம்,
# முக்கிய சான்றிதழ் பெற வேண்டிய அரசு அலுவலர்களிடம் லஞ்சம்.
நாமும் நமக்கு சாதகமாக செயல்திட்டங்கள் அமைய லஞ்சம் என்ற அவலத்தையே பயன்படுத்துகிறோம். நம்மிடமிருந்தே லஞ்சம், ஊழல், பண மோசடி ஆரம்பமாகிறது என்றே கருதுகிறேன்.
நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என கடுகளவே பதிந்திருக்கிறேன். இத்தகைய சமூக அவலங்களை நம்மால் சீர்படுத்த முடியாது. ஆனால் தவிர்க்க இயலும் என்றே கருதுகிறேன்.
நன்றி -தமிழ்வாசி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!
சமூக நலனில் அக்கறைகொண்டு கூறியிருக்கிற◌ார்.
ஆனால் இதை தவிர்க்க முடியாதது.
என் மகனின் பிறப்பு சான்றிதழில் ஒரு எழுத்து தவறாக விட்டது. அதை பணம் கொடுக்காமல் இருந்தபோது என்னை அலைக்கழித்துவிட்டார்கள்.
ஆனால் இதை தவிர்க்க முடியாதது.
என் மகனின் பிறப்பு சான்றிதழில் ஒரு எழுத்து தவறாக விட்டது. அதை பணம் கொடுக்காமல் இருந்தபோது என்னை அலைக்கழித்துவிட்டார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!
இத்தகைய சமூக அவலங்களை நம்மால் சீர்படுத்த முடியாது. ஆனால் தவிர்க்க இயலும் என்றே கருதுகிறேன்.
நிச்சயமாகத் தவிர்க்கலாம்....
Re: எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!
அனைவருக்குமே நிச்சயம் இந்த அனுபவம் கிடைத்திருக்கும்!ஆனால் இதை தவிர்க்க முடியாதது.
என் மகனின் பிறப்பு சான்றிதழில் ஒரு எழுத்து தவறாக விட்டது. அதை பணம் கொடுக்காமல் இருந்தபோது என்னை அலைக்கழித்துவிட்டார்கள்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இப்படியான கேடுகெட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.....
» எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
» இதில் நீங்கள் எந்த வகை?
» பெற்றோரில் நீங்கள் எந்த வகை?
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
» இதில் நீங்கள் எந்த வகை?
» பெற்றோரில் நீங்கள் எந்த வகை?
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|